Nuraichcholai boys

Nuraichcholai boys Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nuraichcholai boys, Digital creator, Puttalam.
(1)

Nuraichcholai Boys
நுரைச்சோலை இளைஞர்களின் குரலும், சமூகத்தின் ஊக்கமும்.ஊர் செய்திகள் | நிகழ்வுகள் | சமூக சேவைகள் இணையுங்கள் உண்மையையும் ஒற்றுமையையும் எடுத்துச்சொல்வோம்!

15/10/2025

இயற்கையின் அதிசயம்!
ஒரே நேரத்தில் ஒரு பக்கம் மழை பெய்குது…
அதே நேரம் இன்னொரு பக்கம் மழை இல்ல!
ஆனா ஒரு அழகான அமைதி மட்டும் ❤️

*ரிஷாட்டுக்கு எதிரான வில்பத்து வழக்கு தள்ளுபடி !*வட மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக 2018ஆம் ஆண்டு...
15/10/2025

*ரிஷாட்டுக்கு எதிரான வில்பத்து வழக்கு தள்ளுபடி !*

வட மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக 2018ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, நாகலந்த கொடிதுவக்கு மற்றும் மலிந்த செனவிரத்ன ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று (15.10.2025) தள்ளுபடி செய்யப்பட்டது.

ஏழு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கில்
பலமுறை நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டதன் பின்னரும் வழக்குத்
தாக்கல் செய்தவர்கள் நடைமுறைப்படி வழக்கை முன்னெடுக்காமையால் தீர்ப்பின்றி நீடித்து இவ்வழக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இந்த வழக்கிற்கு சட்ட அடிப்படை எதுவும் இல்லை என்றும், உண்மையான சட்டக் காரணங்களுக்காக அல்லாமல் ஊடக கவனத்தை பெறுவதற்காகவே தொடரப்பட்டதாக முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நீதிமன்றத்தில் வாதிட்டார்.

மேலும் மனுதாரர்கள் தொடர்ந்து வழக்கை முன்னெடுக்கத் தவறியதால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்த நிலையில், அந்த சமர்ப்பிப்பதற்கு இணங்க, இன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் இவ் ரிட் மனுவை தள்ளுபடி செய்தது.

மனுதாரர்களுக்காக வழக்கறிஞர் சுகந்திகா ஆஜராகியதுடன். 1 முதல் 3ஆம் பிரதிவாதிகளுக்காக உப சட்ட மா அதிபர் மனோஹரா ஜயசிங்க ஆஜராகியிருந்தார். பசில் ராஜபக்ஷவுக்கு வழக்கறிஞர் ருவந்த குரே ஆஜரானார்கள்,.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சார்பாக சட்டத்தரணிகளான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் ஷிபான் மஹ்ரூப் ஆஜரானார்கள்.

நீண்ட நாட்களாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக எழுந்த இக்குற்றச்சாட்டு மூலம் அவர் மீது இனவாத அரசியல் மேற்கொள்ளப்பட்டதுடன், வடக்கு மக்களின் மீள் குடியேற்றத்துக்கு எதிராகவும் பல்வேறான இனவாத செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

15/10/2025

Congratulations sahana

இலங்கை கடற்படை தென் கடல் பகுதியில் 839 கிலோகிராம் கஞ்சா, ஹெரோயின் மற்றும் ஐஸ் (மெத்தாம்பெட்டமின்) ஆகியவற்றை கைப்பற்றியது...
15/10/2025

இலங்கை கடற்படை தென் கடல் பகுதியில் 839 கிலோகிராம் கஞ்சா, ஹெரோயின் மற்றும் ஐஸ் (மெத்தாம்பெட்டமின்) ஆகியவற்றை கைப்பற்றியது

இலங்கை கடற்படை நாட்டில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க உறுதியுடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க என்ற தன் தளராத உறுதிப்பாட்டின் அடிப்படையில், நம்பகமான தகவலின் பேரில், 2025 அக்டோபர் 14ஆம் திகதி காலை தென் கடல் பகுதியில் சிறப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது. இதில் கடலில் கைவிடப்பட்டிருந்த 51 மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் மொத்தம் 839 கிலோகிராம் ஹெரோயின், மெத்தாம்பெட்டமின் (ஐஸ்) மற்றும் ஹாஷிஷ் இருந்தன. இந்தப் பொருட்கள் தங்காலை மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்ட பின், பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகரா மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சனா பனகொடா ஆகியோர் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை பார்வையிட்டனர்.

“போதைப்பொருள் இல்லா நாடு – ஆரோக்கியமான குடிமக்கள் வாழ்க்கை” என்ற அரசின் நோக்கத்துடன் இணைந்து, கடற்படை உள்ளூர் மற்றும் சர்வதேச நுண்ணறிவு அமைப்புகள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் இணைந்து கடல் வழி சட்டவிரோத நடவடிக்கைகள், குறிப்பாக போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றைத் தடுக்க விரிவான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

நுண்ணறிவு அமைப்புகள் வழங்கிய நம்பகமான தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படை கிழக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளின் கப்பல்கள் மற்றும் படகுகளை உள்ளடக்கிய பலநாள் தீவிர நடவடிக்கையை ஆரம்பித்தது. இந்த நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான சில மூட்டைகள் கடலில் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றைச் சோதனை செய்தபோது, மொத்தம் 51 மூட்டைகளில் போதைப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவை தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, போதைப்பொருள் தடுப்பு பிரிவு நிபுணர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் 670 கிலோ 676 கிராம் மெத்தாம்பெட்டமின், 156 கிலோ 542 கிராம் ஹெரோயின் மற்றும் 12 கிலோ 36 கிராம் ஹாஷிஷ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஊடகங்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை துணை அமைச்சர், எதிர்கால தலைமுறையைப் போதைப்பொருள் ஆபத்திலிருந்து காக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் உறுதியான நடவடிக்கைகளை வலியுறுத்தினார். மேலும், நாட்டிலிருந்து போதைப்பொருள் ஆபத்தை முற்றிலுமாக ஒழிக்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள “රටම එකට (Ratama Ekata) – தேசிய நடவடிக்கை” திட்டத்தை விளக்கினார்.

அத்துடன், நுண்ணறிவு சேவை, மூவாயிரம் படைகள், இலங்கை காவல் துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு, சிறப்பு பணிக்குழு, கடலோர பாதுகாப்புப் படை உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளும் ஒருங்கிணைந்து, சுயாதீனமாக செயல்பட அனுமதிக்கப்பட்டதால், பல முக்கியமான போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடந்துள்ளதாக குறிப்பிட்டார்.

கடல் வழியாக போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க இலங்கை கடற்படை காட்டிய அர்ப்பணிப்பையும் மற்ற அமைப்புகளுடன் இணைந்து செய்த சிறப்பான பணியையும் அவர் பாராட்டினார். போதைப்பொருள் பரவல் ஒரு தேசிய அச்சுறுத்தல் என அரசாங்கம் கருதுவதாகவும், நாட்டை போதைப்பொருள் இல்லாத தேசமாக மாற்றுவதில் உறுதியுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், பொது மக்களின் முக்கிய பங்களிப்பு மற்றும் தகவல் வழங்கும் ஒத்துழைப்புக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதால், கடல் வழியாக எந்தவிதமான சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கும் வாய்ப்பு இல்லை. மீன்பிடி நடவடிக்கையின் பெயரில் போதைப்பொருள் கடத்த முயலும் யாரையும் கடுமையாகத் தடுக்கப்படும் என்றும், இதுபோன்ற குற்றச்செயல்கள் மீதான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தொடரும் என்றும் உறுதியளித்தார்.

கடற்படை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளால், போதைப்பொருள் கடத்தலாளர்கள் தங்களது சரக்குகளை கடலில் கைவிட நேரிட்டது. பின்னர், இந்த பெருமளவிலான போதைப்பொருட்கள் சட்டநடவடிக்கைக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு (PNB) ஒப்படைக்கப்பட்டன.

15/10/2025

நுரைச்சோலை பள்ளித் தலைவர் பாஜில் ஹாஜி அவர்கள், புறாக்களுக்கு அன்புடன் உணவளிக்கும் இந்தக் காட்சி, கருணையும் மனிதநேயமும் நிறைந்த ஒரு அழகான தருணம்.

கல்பிட்டி கூட்டுறவு சங்கத்திற்கு வெண்கலப் பதக்கம்! அபிவிருத்தி அடைந்து வரும் கூட்டுறவு சங்கங்களின் பட்டியலில், கல்பிட்டி...
15/10/2025

கல்பிட்டி கூட்டுறவு சங்கத்திற்கு வெண்கலப் பதக்கம்!

அபிவிருத்தி அடைந்து வரும் கூட்டுறவு சங்கங்களின் பட்டியலில், கல்பிட்டி கூட்டுறவு சங்கம் பெருமையுடன் இடம்பிடித்து, வெண்கலப் பதக்கம் கைப்பற்றியுள்ளது.

இது கல்பிட்டி மக்களுக்கும், நிர்வாகத்திற்கும் ஒரு பெருமைமிகு தருணம்!
கூட்டுறவின் மூலம் சமூக முன்னேற்றம் நோக்கி இன்னும் பல வெற்றிகள் தொடரட்டும்.

#கல்பிட்டி #வெண்கலப்பதக்கம்

14/10/2025

Pole Star Sports Club

தமது மைதானத்திற்கு நிரந்தரமாக லைட் பொருத்தும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இப்பணிக்காக எமது ஊரைச் சேர்ந்த மக்கள் – ஊரிலிருந்தும் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் நம் சகோதரர்களிடமிருந்தும் – ஆதரவுகள் கிடைத்து வருகின்றன.

நேற்று இரவு ஒரு லைட் பொருத்தி பரிசோதனை செய்யப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டது!
இதற்காக அயராது உழைத்து வரும் போலீசார் டீம் உறுப்பினர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்.

இன்னும் இந்த சமூக முயற்சிக்கு பங்குதாரராக விரும்பும் அனைவரும் இணைந்து கொள்ளலாம்.
வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிக்கான முன்னேற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
மழை இல்லாமல் இருந்தால், போட்டி திட்டமிட்ட தேதியிலேயே நடைபெறும்.

நன்றி மற்றும் வாழ்த்துகள்!
Pole Star Sports Club

கஞ்சா கலந்த மதனமோதக வில்லைகளை பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து மிகவும் இரகசியமாக விற்பனை செய்த மருந்து விற்பனை நிலைய ஊழியர...
14/10/2025

கஞ்சா கலந்த மதனமோதக வில்லைகளை பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து மிகவும் இரகசியமாக விற்பனை செய்த மருந்து விற்பனை நிலைய ஊழியரை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த மருந்து விற்பனை நிலையத்திற்கு அருகிலுள்ள பாடசாலை மாணவர்கள் அடிக்கடி வந்து செல்வதாகவும், அவர்கள் ரகசியமாக ஒருவகை மாத்திரையை வாங்கி கடையை விட்டு வெளியேறும்போது இந்த மாத்திரைகளை வாயில் போட்டுக் கொள்வதாகவும், நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொறுப்பதிகாரி திருமதி என்.எஸ். ஹசீமுக்கு தகவல் கிடைத்தது.

*BREAKING NEWS*இலங்கையில் தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபளாத்தில் கைது!*14.10.2025*கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்பு...
14/10/2025

*BREAKING NEWS

*இலங்கையில் தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபளாத்தில் கைது!
*14.10.2025*

கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிசார் தெரிவிக்கின்றனர்

சிலை பேசாது… ஆனால் சிந்திக்க வைக்கும் மௌனத்தில் கூட ஒரு வரலாறு ஒலிக்கிறது…கற்றல் என்ற பயணம் எப்போதும் சிந்தனைக்கே வழிவகு...
13/10/2025

சிலை பேசாது… ஆனால் சிந்திக்க வைக்கும்
மௌனத்தில் கூட ஒரு வரலாறு ஒலிக்கிறது…
கற்றல் என்ற பயணம் எப்போதும் சிந்தனைக்கே வழிவகுக்கும்.”

13/10/2025

மலையகத்தில் காற்சட்டையுடன் காலை நேர உடற்பயிற்சி ஈடுபட்ட எங்கள் நாட்டு ஜனாதிபதி

விடியல் செய்திமடல் வெளியீட்டு விழா – வெற்றிகரமாக நடைபெற்றது நுரைச்சோலை முஸ்லீம் மகா வித்யாலயத்தில் நடைபெற்ற “விடியல் செய...
13/10/2025

விடியல் செய்திமடல் வெளியீட்டு விழா – வெற்றிகரமாக நடைபெற்றது

நுரைச்சோலை முஸ்லீம் மகா வித்யாலயத்தில் நடைபெற்ற “விடியல் செய்திமடல்” வெளியீட்டு விழா நேற்று (12.10.2025) இரவு 8.30 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கியவர்
M.T.M. நபீல் – மாவட்டப் பணியாளர், A/C YMMA புத்தளம் மாவட்டம்.

புதிய YMMA நுரைச்சோலை கிளைத் தலைவர் அப்தால் அவர்களின் தலைமையில் விழா சிறப்பாக நடைபெற்றது.
இதில் பள்ளித் தலைவர், செயலாளர், நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பல இளைஞர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

YMMA பற்றி சிறிது

YMMA (Young Men’s Muslim Association) என்பது 1950 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலங்கையின் பழமையான சமூக மற்றும் இளைஞர் அமைப்புகளில் ஒன்றாகும்.
இது கல்வி, சமூக சேவை, இளைஞர் வழிகாட்டுதல், மற்றும் மத ஒற்றுமையை ஊக்குவிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.
YMMA-வின் நோக்கம் இளைஞர்களை அறிவு, ஒழுக்கம் மற்றும் பொறுப்புடன் வளர்த்து சமூக முன்னேற்றத்தில் ஈடுபடச் செய்வதாகும்.

இத்தகைய நிகழ்வுகள் நம் இளைஞர்களை ஊக்குவிக்கும் சிறந்த முயற்சிகளாகும்.
நுரைச்சோலை YMMA-க்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

#விடியல் #செய்திமடல்வெளியீடு

Address

Puttalam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nuraichcholai boys posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share