02/03/2026
நீதி மற்றும் தேசிய ஒற்றுமை பாட்டு அமைச்சின் கீழ் இயங்கும்
கிராமிய சக வாழ்வுச் சங்கத்தின் 2026 ஆண்டு புதிய நிர்வாக சபை தெரிவும் முதல் ஆண்டு பொதுக்கூட்டமும்!
செய்தி நிருபர்: முபாறக் அஸ்லம்
நீதி மற்றும் தேசிய ஒற்றுமை பாட்டு அமைச்சின் கீழ், ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள கிராம சேவகர் பிரிவுகளில் இயங்கும் கிராமிய சக வாழ்வுச் சங்கத்தின் 2026ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபைத் தெரிவும் முதல் ஆண்டு பொதுக்கூட்டமும் 2-3-2026 திங்கட்கிழமை சங்கத் தலைவர் முபாறக் அஸ்லம் அவர்களின் தலைமையில், அவருடைய இல்லத்தில் நடைபெற்றது.
மேலும், 2025ஆம் ஆண்டு கருவாட்டுக்கள் 2 சக வாழ்வுச் சங்கத்தின் சங்க அமர்வுகளுக்கான கூட்ட அறிக்கையும் இந்நிகழ்வில் சமர்ப்பிக்கப்பட்டதுடன்
இவ் நிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர் ஏ. எம். வாஜித் அலி, கருவாட்டுக்கள் 2 கிராம நிலதாரி நிஹாத், அபிவிருத்தி உத்தியோகத்தர் நழிபா மற்றும் ஏனைய உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்தக் கூட்டத்தில் இந்தக் கூட்டத்தில் 2026ஆம் ஆண்டிற்கான எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக:
• சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் திட்டங்கள்
• பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள்
• கிராம மட்ட அபிவிருத்தி திட்டங்கள்
• சமுதாய ஒற்றுமையை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நிகழ்வுகள்
போன்ற முக்கிய
எதிர்கால செயல்திட்டங்கள், சமூக நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான முக்கிய தீர்மானங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை
தலைவர் – முபாறக் அஸ்லம்
செயலாளர் – அஸ்மியா
பொருளாளர் – றினோ
உப தலைவர் – றனிசா
உப செயலாளர் – தாஜூதின்
📌 செயற்குழு உறுப்பினர்கள்
1. UL அவ்வா உம்மா
2. AL ஜுனைதா
3. சிபானா
4. MM பாயிசா
5. B ஹில்மியா
6. B ஹிதாயா
7. சபானா
புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவரும் 2026ஆம் ஆண்டில் சங்கத்தின் நோக்கங்களையும் சமூகப் பணிகளையும் மேலும் வலுப்படுத்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வு சமூக ஒற்றுமையையும் சக வாழ்வு பண்பையும் மேம்படுத்தும் முக்கியமான கட்டமாக அமைந்தது.