SAMMANTHURAI NEWS

SAMMANTHURAI NEWS Sammanthurai Official Number 1 News Media Official Hot🔥News 📰
0763443860
Since 26/9/2019

நீதி மற்றும் தேசிய ஒற்றுமை பாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் கிராமிய சக வாழ்வுச் சங்கத்தின் 2026 ஆண்டு புதிய நிர்வாக சபை தெ...
02/03/2026

நீதி மற்றும் தேசிய ஒற்றுமை பாட்டு அமைச்சின் கீழ் இயங்கும்
கிராமிய சக வாழ்வுச் சங்கத்தின் 2026 ஆண்டு புதிய நிர்வாக சபை தெரிவும் முதல் ஆண்டு பொதுக்கூட்டமும்!

செய்தி நிருபர்: முபாறக் அஸ்லம்

நீதி மற்றும் தேசிய ஒற்றுமை பாட்டு அமைச்சின் கீழ், ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள கிராம சேவகர் பிரிவுகளில் இயங்கும் கிராமிய சக வாழ்வுச் சங்கத்தின் 2026ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபைத் தெரிவும் முதல் ஆண்டு பொதுக்கூட்டமும் 2-3-2026 திங்கட்கிழமை சங்கத் தலைவர் முபாறக் அஸ்லம் அவர்களின் தலைமையில், அவருடைய இல்லத்தில் நடைபெற்றது.

மேலும், 2025ஆம் ஆண்டு கருவாட்டுக்கள் 2 சக வாழ்வுச் சங்கத்தின் சங்க அமர்வுகளுக்கான கூட்ட அறிக்கையும் இந்நிகழ்வில் சமர்ப்பிக்கப்பட்டதுடன்

இவ் நிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர் ஏ. எம். வாஜித் அலி, கருவாட்டுக்கள் 2 கிராம நிலதாரி நிஹாத், அபிவிருத்தி உத்தியோகத்தர் நழிபா மற்றும் ஏனைய உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்தக் கூட்டத்தில் இந்தக் கூட்டத்தில் 2026ஆம் ஆண்டிற்கான எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக:
• சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் திட்டங்கள்
• பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள்
• கிராம மட்ட அபிவிருத்தி திட்டங்கள்
• சமுதாய ஒற்றுமையை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நிகழ்வுகள்
போன்ற முக்கிய
எதிர்கால செயல்திட்டங்கள், சமூக நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான முக்கிய தீர்மானங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை

தலைவர் – முபாறக் அஸ்லம்
செயலாளர் – அஸ்மியா
பொருளாளர் – றினோ
உப தலைவர் – றனிசா
உப செயலாளர் – தாஜூதின்

📌 செயற்குழு உறுப்பினர்கள்
1. UL அவ்வா உம்மா
2. AL ஜுனைதா
3. சிபானா
4. MM பாயிசா
5. B ஹில்மியா
6. B ஹிதாயா
7. சபானா

புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவரும் 2026ஆம் ஆண்டில் சங்கத்தின் நோக்கங்களையும் சமூகப் பணிகளையும் மேலும் வலுப்படுத்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வு சமூக ஒற்றுமையையும் சக வாழ்வு பண்பையும் மேம்படுத்தும் முக்கியமான கட்டமாக அமைந்தது.

அம்பாறை மாவட்ட SJB இளைஞர் சக்தி அணி வாக்களிப்பு மூலம் தெரிவு!செய்தி நிருபர்: முபாறக் அஸ்லம்ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB)...
12/02/2026

அம்பாறை மாவட்ட SJB இளைஞர் சக்தி அணி வாக்களிப்பு மூலம் தெரிவு!

செய்தி நிருபர்: முபாறக் அஸ்லம்

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) அம்பாறை மாவட்ட இளைஞர்களுக்கான “சமகி” பயிற்சி பட்டறையும், மாவட்ட இளைஞர் அணி நிறுவும் நிகழ்வும் 08.02.2026 அன்று அம்பாறை விடுதி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வு, ஐக்கிய மக்கள் சக்தியின் கௌரவ தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் ஆலோசனையின் பேரில் நாடளாவிய அளவில் முன்னெடுக்கப்படும் இளைஞர் அணி அமைக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டன அவ் நிகழ்வில்

பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசாத் சிரிவர்தன (இளைஞர் சக்தியின் தவிசாளர்) மற்றும் சுரங்க ரத்னாயக ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இளைஞர்களின் அரசியல் பங்களிப்பு, ஜனநாயக விழிப்புணர்வு, எதிர்கால செயற்பாடுகள், தலைமைத்துவ மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

நிகழ்வின் முக்கிய அம்சமாக, வாக்களிப்பு முறையின் மூலம் அம்பாறை மாவட்ட இளைஞர் அணியின் நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

தெரிவு செய்யப்பட்ட நிர்வாகிகள்:

தலைவர் – எம்.ஐ. பௌசுல்லா (சம்மாந்துறை)

செயலாளர் – முபாறக் அஸ்லம் (சம்மாந்துறை)

பொருளாளர் – என்.எம். ஜெஸ்ரான் (சம்மாந்துறை)

இணைப்பாளர்
Tvah . Dulanji
நாமல்ஓயா

உப தலைவர்
Lahiru lakshan
தெஹியத்த கண்டி

உப இணைப்பாளர் – எஸ்.எல். ஆகிப் (சம்மாந்துறை)

உப செயலாளர்
Gs. Subhashani Gurusinha
நாமல்ஓயா

உப பொருளாளர்
Dissanayaka
தெஹியத்த கண்டி

Mohan Prakash
உப இணைப்பாளர்
வளத்தாபிட்டி

போன்றோர் வாக்களிப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டனர்
மேலும் சம்மாந்துறை பிரதேசத்தில் இருந்து மாவட்ட முக்கிய நிர்வாக பதவிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட நபர்கள்
சம்மாந்துறை பிரதேச சபை கௌரவ உறுப்பினர் ஹாதிக் இப்றாஹிம் அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை கீழ் வெற்றி பெற்றனர்

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிய நிர்வாகத்திற்கு, எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணிக்காக இளைஞர்களை இணைக்கும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கல்வி, தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இளைஞர்களை வழிநடத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு, அம்பாறை மாவட்டத்தில் ஜனநாயக அடிப்படையிலான இளைஞர் நிர்வாக அமைப்பை உருவாக்கும் முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) அம்பாறை மாவட்ட இளைஞர் அணிக்கு சம்மாந்துறை பிரதேசத்தில் இருந்து தலைவர் செயலாளர் பொருளாளர் உ...
09/02/2026

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) அம்பாறை மாவட்ட இளைஞர் அணிக்கு
சம்மாந்துறை பிரதேசத்தில் இருந்து தலைவர் செயலாளர் பொருளாளர் உப இணைப்பாளர் வாக்களிப்பு மூலம் தெரிவு!

செய்தி நிருபர்: முபாறக் அஸ்லம்

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) அம்பாறை மாவட்ட இளைஞர்களுக்கான சமகி பயிற்சி பட்டறை மற்றும் மாவட்ட இளைஞர் அணி நிறுவும் நிகழ்வு இன்று (08.02.2026) அம்பாறை விடுதி வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசாத் சிறிவர்தன மற்றும் சுரங்க ரத்னாயக ஆகியோரின் தலைமையில் நடைபெற்றதுடன், கட்சியின் இளைஞர் பங்களிப்பு, அரசியல் விழிப்புணர்வு, எதிர்கால செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் கௌரவ தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் ஆலோசனையின் பேரில், இலங்கை முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் இளைஞர் அணி நிறுவும் பணியின் முதல் கட்டமாக இந்த திட்டம் இன்று அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக, வாக்களிப்பு முறையின் மூலம் அம்பாறை மாவட்ட இளைஞர் அணியின் நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

அதன்படி,

அம்பாறை மாவட்ட இளைஞர் அணி தலைவர் : சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஐ. பௌசுல்லா

மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த: முபாறக் அஸ்லம்

பொருளாளர் சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த:: என்.எம். ஜெஸ்ரான்

உப இணைப்பாளர் சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த:: எஸ்.எல். ஆகிப்

ஆகியோர் வாக்களிப்பு மூலம் வெற்றி பெற்றனர்.

இதனுடன், உப தலைவர், உப செயலாளர், உப பொருளாளர் தெஹியத்த கண்டி நாமல் ஓயா வளத்தாபிட்டி பதியத்தலாவ உஹன அம்பாறை உள்ளிட்ட பிரதேச உறுப்பினர்கள் பிற நிர்வாக பதவிகளுக்கும் தகுதியான இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த நிகழ்வு, அம்பாறை மாவட்ட இளைஞர்களுக்கு அரசியல் பயிற்சி, தலைமைத்துவ வளர்ச்சி மற்றும் ஜனநாயக அடிப்படையிலான நிர்வாக அமைப்பை உருவாக்கும் நோக்கில் அமைந்த ஒரு முக்கிய கட்டமாக அமைந்தது.

🇱🇰 78வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! 🇱🇰எமது அன்புத் தாய்நாடு இலங்கை,ஒற்றுமை, அமைதி, சமத்துவம்மற்றும் முன்னேற்றம் நிறை...
04/02/2026

🇱🇰 78வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! 🇱🇰

எமது அன்புத் தாய்நாடு இலங்கை,
ஒற்றுமை, அமைதி, சமத்துவம்
மற்றும் முன்னேற்றம் நிறைந்த
ஒளிமயமான எதிர்காலம் நோக்கி
பயணிக்க வாழ்த்துக்கள்!

நாம் அனைவரும் ஒரே தாய் நாட்டின்
மக்கள் — தமிழ், சிங்கள, முஸ்லிம்,
கிறிஸ்தவர் என எந்த வேறுபாடும் இன்றி,
அனைத்து இனங்களும் அனைத்து மதங்களும்
ஒற்றுமையோடு கை கோர்த்து
முன்னேற வேண்டிய தருணம் இதுவே.

சுதந்திரத்தின் உண்மையான அர்த்தம்
அனைவருக்கும் நீதி, மரியாதை
மற்றும் மனிதநேயம் கிடைப்பதே.
அந்த உயர்ந்த இலட்சியத்தை
ஒன்றிணைந்து நிறைவேற்றுவோம். ✨

ஒற்றுமையே எமது பலம் – அதுவே இலங்கையின் எதிர்காலம். 🇱🇰

ஜனாஸா அறிவித்தல்
27/01/2026

ஜனாஸா அறிவித்தல்

சம்மாந்துறையில் வீட்டுடன் கூடிய கடை விற்பனை அறிய சந்தர்ப்பம் யாரும் தவற விட வேண்டாம் 🏡 House & Shop for Sale – Prime Loc...
25/01/2026

சம்மாந்துறையில் வீட்டுடன் கூடிய கடை விற்பனை அறிய சந்தர்ப்பம் யாரும் தவற விட வேண்டாம்
🏡 House & Shop for Sale – Prime Location, Sammanthurai Town 🏪

Property Type:
✔️ 3-Bedroom House with

1 Shop
Land Size:
📏 3.8 Perches

House Details:
• 2 Bedrooms with wooden
flooring
• Fully tiled house
• Approx. 15 years old
• Water & electricity facilities available

Excellent Location Advantages:
📍 Only 70m from Sammanthurai Seylan Bank

📍 150m from Sammanthurai Clock Tower

📍 150m from Sammanthurai Town Hall

✨ Ideal for residential or business purposes in the heart of Sammanthurai town.
📞 Contact: 0763443860 /072 260 2700

Price:2.20C and negotiable

📲 Call for more details and viewing arrangements.

பழுதடைந்த தெரு விளக்குகள் சீரமைப்பு மற்றும் புதிய மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் கட்டம் கட்டமாக நிறைவு!செய்தி நிருபர்...
22/01/2026

பழுதடைந்த தெரு விளக்குகள் சீரமைப்பு மற்றும் புதிய மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் கட்டம் கட்டமாக நிறைவு!

செய்தி நிருபர்: முபாறக் அஸ்லம்

பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளுக்கு அமைய, மத்திய வட்டாரத்தில் பழுதடைந்திருந்த அனைத்து தெரு விளக்குகளும் 22/1/2026 இன்று சீரமைக்கப்பட்டு, தேவையான இடங்களில் புதிய மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் கட்டம் கட்டமாக வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

மத்திய வட்டாரத்தின் கௌரவ பிரதேச சபை உறுப்பினர் ஹாதிக் இப்ராஹிம் அவர்களின் நேரடி வேண்டுகோளுக்கு இணங்க, சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ. எல். எம். மாஹிர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில் இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை முதன்மையாகக் கொண்டு, அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இத்தகைய அபிவிருத்திப் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்றும், மக்களின் ஒத்துழைப்புடன் மேலும் பல அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்காலத்தில் நிறைவேற்றப்படும்
என்பது குறிப்பிடத்தக்கது

ஊடக பிரிவு

சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மஹா வித்தியாலய பழைய மாணவர் ஒன்றிய பொதுக்கூட்டம் மற்றும் நிர்வாகத் தெரிவு!சம்மாந்துறை கமு/சது/ தா...
14/01/2026

சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மஹா வித்தியாலய பழைய மாணவர் ஒன்றிய பொதுக்கூட்டம் மற்றும் நிர்வாகத் தெரிவு!

சம்மாந்துறை கமு/சது/ தாறுஸ்ஸலாம் மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் எதிர்வரும் 17.01.2026 ஆம் திகதி மாலை 7.30 மணிக்கு பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தின் போது, பழைய மாணவர் ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதுடன், ஒன்றியத்தின் புதிய நிர்வாகக் குழுவும் தெரிவு செய்யப்படவுள்ளது. பாடசாலையின் கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் மாணவர் நலன் தொடர்பான வளர்ச்சி நடவடிக்கைகளில் பழைய மாணவர்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இக்கூட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது.

அனைத்து பழைய மாணவர்களும் தங்களது பெறுமதியான நேரத்தை ஒதுக்கி, தவறாமல் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பிக்குமாறு பாடசாலை அதிபர் அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இப்படிக்கு,
பாடசாலை அதிபர்
கமு/சது/ தாறுஸ்ஸலாம் மஹா வித்தியாலயம்

தாருல் ஹஸனாத் குர்ஆன் மனன கலாசாலை மற்றும் கலாசார நிலையம் திறப்பு விழா!செய்தி நிருபர் : முபாறக் அஸ்லம்சம்மாந்துறை தாருல் ...
12/01/2026

தாருல் ஹஸனாத் குர்ஆன் மனன கலாசாலை மற்றும் கலாசார நிலையம் திறப்பு விழா!

செய்தி நிருபர் : முபாறக் அஸ்லம்

சம்மாந்துறை தாருல் ஹஸனாத் குர்ஆன் மனன கலாசாலை மற்றும் கலாசார நிலையத்தின் புதிய கட்டிடத்தின் திறப்பு விழா 11-1-2026 ஞாயிற்றுக்கிழமை தாறுல் ஹஸனாத் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மத அறிஞர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள். பிரதேச உறுப்பினர்.பள்ளிவாசல் மு அத்தின் இமாம். ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர். புனித குர்ஆன் ஓதலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், புதிய கட்டிடத்தின் மூலம் மாணவர்களுக்கு சிறந்த கல்வி வசதிகள் பௌதீக சூழல்கள் சரியாக அமையப்பெற்றது என்றும் தெரிவிக்கப்பட்டது

மேலும் குறிப்பாக, குர்ஆன் மனன கல்வி, இஸ்லாமிய அறிவு வளர்ச்சி மற்றும் கலாசார செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இந்த கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது

Movie shooting Sammanthurai 
09/01/2026

Movie shooting Sammanthurai 

மக்களோடு தினசரி சந்திப்பு  நம்பிக்கையுடன் கடமை ஆற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஹாதிக் இப்றாஹிம்!செய்தி நிருபர்: முபாறக் அஸ...
06/01/2026

மக்களோடு தினசரி சந்திப்பு நம்பிக்கையுடன் கடமை ஆற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஹாதிக் இப்றாஹிம்!

செய்தி நிருபர்: முபாறக் அஸ்லம்

சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் ஹாதிக் இப்றாஹிம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மழைக்காலங்களில் நீர் தடையின்றி வடிந்து ஓடுவதற்காக வடிகான்களில் படிந்து கிடந்த மண் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் சம்மாந்துறை பிரதேச சபை ஊழியர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு, மழைநீரால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கும் நோக்கில் விரைவாக செயல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், கௌரவ உறுப்பினர் ஹாதிக் இப்றாஹிம் அவர்கள் தனது 6-ஆவது வட்டாரத்தில் தொடர்ச்சியாக மக்களுக்காக தன்னால் முடிந்த சேவைகளை செய்து வருவதோடு, மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் பிரச்சினைகள் என்ன என்பதை நேரடியாக அறிந்து கொள்ளும் நோக்கில் ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் தனது வட்டாரத்திற்கு விஜயம் செய்து, மக்களோடு கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகின்றார்.
அதுமட்டுமன்றி, தனது வட்டாரம் என்ற எல்லைக்குள் மாத்திரம் சேவையைச் சுருக்காமல், முழு சம்மாந்துறை பிரதேச மக்களுக்கும் தன்னால் முடிந்தவரை சேவை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடன் பல்வேறு சமூக மற்றும் அடிப்படை வசதி சார்ந்த பணிகளை முன்னெடுத்து வருகின்றார். தேவையுள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகளை தயக்கமின்றி செய்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தன்னை வாக்களித்து தெரிவுசெய்த மக்களிடம் கொண்டுள்ள நம்பிக்கையையும், பொது பொறுப்புணர்வையும் அடிப்படையாக கொண்டு, அமானிதத்துடனும் நேர்மையுடனும் தனது கடமைகளை ஆற்றிவரும் கௌரவ உறுப்பினர் ஹாதிக் இப்றாஹிம் அவர்களின் சேவைகள் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது

வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிதி உதவி மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் வழங்கல்செய்தி நிருபர் : முபா...
15/12/2025

வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிதி உதவி மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் வழங்கல்

செய்தி நிருபர் : முபாறக் அஸ்லம்

வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர உதவும் நோக்கில், கற்றலுக்கான உபகரணங்கள் பெறுவதற்கான நிதி உதவி மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் வழங்கும் நிகழ்வு 2025.12.14 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இந்த நிகழ்வு, சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவத் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன், கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அரநாயக்க பௌத்த தேவாலய வளாகத்தில் அமைந்துள்ள முகாமில் தற்காலிகமாக தங்கியிருக்கும் வெள்ளப் பாதிப்புக்குள்ளான பாடசாலை மாணவர்களுக்காக, கற்றல் உபகரணங்கள் வாங்குவதற்கான காசோலைகளும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கிய நீரை வெளியேற்ற பயன்படும் நீர் இறைக்கும் இயந்திரமும் இந்நிகழ்வின் போது கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வின் மூலம், இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட மக்களின் மீளுருவாக்க நடவடிக்கைகளுக்கும் உதவியாக அமைந்தது.

Address

Sammanthurai

Alerts

Be the first to know and let us send you an email when SAMMANTHURAI NEWS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SAMMANTHURAI NEWS:

Share