Thiran TV

Thiran TV முடியும் வரை முயற்சிப்போம்

*சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நோயாளர் அடையாள கைப்பட்டி முறை நாளை முதல் அமுல்*நோயாளர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும...
02/06/2026

*சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நோயாளர் அடையாள கைப்பட்டி முறை நாளை முதல் அமுல்*

நோயாளர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் முதல் முறையாக நோயாளர் அடையாளம் காணும் கைப்பட்டி (Patient Identification Wristband) அணிவிக்கும் திட்டத்திற்கான பயிற்சிப்பட்டறை இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வு, வைத்தியசாலையின் முதல்வர் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டி. பிரபா சங்கர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பிரபல சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் அன்டன் சுவர்ணன், கைப்பட்டி முறையின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார். நோயாளிகளுக்கு ஏதேனும் மருந்து அல்லது உணவு ஒவ்வாமை (Allergy) இருப்பின் அதனை உடனடியாக அடையாளம் காண இந்த முறை உதவும் என்றும், தவறான சிகிச்சைகள் மற்றும் அவசர நிலைமைகளைத் தவிர்த்து பல உயிர்களை பாதுகாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த புதிய நோயாளர் அடையாள கைப்பட்டி முறை நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளர் பாதுகாப்பு, சிகிச்சைத் தரம் மற்றும் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் பல்வேறு முன்மாதிரி வேலைத்திட்டங்களை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை தொடர்ச்சியாக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Thiran TV Thiranoli Thiranoli Media Nowshad A Careem Ansath Ansath

ஹஜ் கடமைக்காக சவூதி அரேபியாவிற்கு 850,000-க்கும் அதிகமான யாத்ரீகர்கள் வருகைஇவ்வருடத்திற்கான ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொள்...
15/05/2026

ஹஜ் கடமைக்காக சவூதி அரேபியாவிற்கு 850,000-க்கும் அதிகமான யாத்ரீகர்கள் வருகை

இவ்வருடத்திற்கான ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொள்வதற்காக இதுவரை 850,000-க்கும் அதிகமான யாத்ரீகர்கள் சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ளதாக அந்நாட்டு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் மே 25 முதல் 30 வரையிலான காலப்பகுதியில் ஹஜ் கடமைகள் நடைபெறவுள்ள நிலையில், மக்கா நகரில் இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இஸ்லாமிய நாட்காட்டியின் இறுதி மாதமான துல் ஹஜ் (Dhu Al Hijja) மாதத்தில் நிகழும் இந்தப் புனிதப் பயணம், தற்போதைய பிராந்திய அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும் பெரும் உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது.

வருகை குறித்த புள்ளிவிபரங்கள்:
சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் தவ்பிக் அல்-ரபியா (Tawfiq Al Rabiah) வெளியிட்ட தகவலின்படி:

விமானம் மூலம்: 820,000 பேர் (இதில் 240,000 பேர் 'மக்கா வழித்தட' திட்டத்தின் கீழ் வந்துள்ளனர்).

தரைவழி: சுமார் 35,000 பேர்.

கடல்வழி: 4,000 பேர்.

மேம்படுத்தப்பட்ட சேவைகள் மற்றும் தொழில்நுட்பம்
யாத்ரீகர்களின் வசதிக்காக சவூதி அரசு பல நவீன திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது:

மக்கா வழித்தடத் திட்டம் (Makkah Route Initiative): யாத்ரீகர்கள் தங்களது சொந்த நாடுகளிலேயே குடிவரவு (Immigration) மற்றும் அதிகாரப்பூர்வ நடைமுறைகளை எளிதாக முடிக்க இத்திட்டம் உதவுகிறது.

சுமையற்ற ஹஜ் (Hajj Without Luggage): யாத்ரீகர்களின் உடைமைகளை நேரடியாக அவர்கள் தங்கும் இடத்திற்கே அனுப்பி வைப்பதன் மூலம், விமான நிலைய காத்திருப்பு நேரம் 120 நிமிடங்களில் இருந்து 15 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் வசதிகள்: 'நுசுக்' (Nusuk) தளம் மூலம் 51 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் முன்பதிவு சேவைகளைப் பெற்று வருகின்றனர். புனிதத் தலங்கள் முழுவதும் 5G இணைய வசதி மற்றும் 4,200 தொழில்நுட்பப் பணியாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள்
கடந்த ஆண்டு 2 மில்லியனுக்கும் அதிகமானோர் ஹஜ் கடமையை நிறைவேற்றிய நிலையில், இந்த ஆண்டும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திரம் (Permit) இன்றி எவரும் புனிதத் தலங்களுக்குள் நுழைவதைத் தடுக்க தீவிர சோதனைகள் நடத்தப்படுகின்றன.

மக்காவின் துணை அமீர் இளவரசர் சவுத் பின் மிஷால் (Prince Saud bin Mishaal), வசதிகள் மற்றும் தயார்நிலை குறித்து நேரடி ஆய்வு செய்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள 126-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள், இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையான ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கா மற்றும் மதினாவில் ஒன்றுகூடி வருகின்றனர். இம்முறை 150-க்கும் மேற்பட்ட ஊடகங்கள் இந்த நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Thiran TV Thiranoli Media Nowshad A Careem Ansath Ansath Thiranoli

சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்​சம்மாந்துறை பிரதேச செயலக அ...
12/05/2026

சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

​சம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (12) ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.எம் தாஹீர், எம்.எஸ் உதுமாலெப்பை, கே.கோடிஸ்வரன், எம்.எஸ் வாஸீத் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம் மாஹீர், மாவட்ட பிரதம கணக்காளர் ஏ.எல் மஹ்ரூப், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஏ முனாஸீர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம், கணக்காளர் எஸ்.எல் சர்தார் மிர்ஸா ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றுப் பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் குறித்து ஆராய்ந்தனர்.

இக்கூட்டத்தில், பிரஜா சக்தி கிராம மட்ட செயற்திட்டங்களுக்கான அங்கீகாரம், அங்காடி வியாபாரிகளுக்கான வியாபார அனுமதி, பஸ் டிப்போ அபிவிருத்தி மற்றும் விளினையடி வீதிச் சமிக்ஞை நிறுவுதல் தொடர்பான விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, வளத்தாப்பிட்டி குளத்தின் மேற்குப் பக்கமாக யானை வேலி அமைத்தல், சம்மாந்துறை MPCS-க்கு சொந்தமான SP/16 கிளைக் காணியினை மின்சார சபைக்கு வழங்கும் தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் சம்மாந்துறை வைத்தியசாலை காணி விவகாரம் ஆகியவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

மேலும், செந்நெல் கிராமம் மற்றும் மல்வத்தை பிரதேச வைத்தியசாலைகளின் பிரச்சினைகள், சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப பாடத்தினை ஆரம்பிப்பது, வீரமுனை இந்து மயானப் பிரச்சினைக்கான தீர்வு மற்றும் சம்மாந்துறை கல்வி வலய பாடசாலைகளின் பௌதீகத் தேவைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அத்துடன், நீர்ப்பாசனப் பிரச்சினைகள், புனரமைக்கப்படாமல் உள்ள வீதிகள் மற்றும் விவசாயக் காணி தொடர்பான முறைப்பாடுகளுக்கு உரிய தீர்வுகளை எட்டுவது எனப் பல முக்கிய தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்பட்டன.

Thiran TV Thiranoli Thiranoli Media Ansath Ansath Nowshad A Careem

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் தாதியர் தின நிகழ்வு!சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் தாதியர் தின விழா இன்று (12) வெகு ச...
12/05/2026

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் தாதியர் தின நிகழ்வு!

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் தாதியர் தின விழா இன்று (12) வெகு சிறப்பாக வைத்தியசாலை பொறுப்பதிகாரி Dr D. பிரபா சங்கர் தலைமையில் வைத்தியசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இன்று உலக தாதியர் தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுகின்றது. புகழ்பெற்ற தாதியர் Florence Nightingale அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படும் இந்நாளில் நவீன தாதியர் துறையின் முன்னோடியாகவே கருதப்படுகின்றார். நோயாளி பராமரிப்பில் அவரது பங்களிப்பு உலகளவில் புரட்சியை ஏற்படுத்தியமைக்காக 1965 ஆம் ஆண்டு முதல் மே 12 அன்று உலக தாதியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தாதியர்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்பை மதிப்பிடும் சிறப்பு நாளாகும்.

உலக தாதியர் தினத்தினை முன்னிற்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் தாதியர்களுக்கான பாராட்டு மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் இங்கு தாதியராக கடமையாற்றி மரணித்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்ஞலி செலுத்தப்பட்டதுடன் ஓய்வு பெற்ற தாதியர்களும் நினைவு கூறப்பட்டது.

இந் நிகழ்வில் சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையினுடைய திட்டமிடல் வைத்திய அதிகாரி Dr.A.R.நியாஸ் அஹ்மத், பிரதம தாதிய பரிபாலகி Mrs. சாஜிதா M. ஜமீல்,தாதிய பரிபாலகி Mrs. M. C. S. சமாயிலா தாதியசங்கச் செயலாளர் Mrs. M.C.M. பரீஸ் , தர முகாமைத்துவ பிரிவு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் M. I. M. அஸ்ஹர் ,விடுதி முகாமையாளர்களான Mr. P. சந்திரகுமார ,Mrs. R. S. இஸ்முனா ஆகியோருடன் மட வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாக ஊழியர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Thiran TV Thiranoli Thiranoli Media Nowshad A Careem Ansath Ansath

 #சம்மாந்துறை  #பிரதேச  #சபை  #உறுப்பினர்களின்  #மனிதாபிமான  #முன்னெடுப்பு: ​​சம்மாந்துறையில் மே (9) திகதி சனிக்கிழமை  உ...
12/05/2026

#சம்மாந்துறை #பிரதேச #சபை #உறுப்பினர்களின் #மனிதாபிமான #முன்னெடுப்பு:

​சம்மாந்துறையில் மே (9) திகதி சனிக்கிழமை உணர்வுப்பூர்வமாக நடைபெற்ற இரத்த தான முகாமில், சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்கள் முன்னுதாரணமாகத் திகழ்ந்து தமது குருதியை வழங்கி இந்த மனிதாபிமானப் பணியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

​சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலைகளின் அவசர தேவைகளை கருத்திற் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விசேட முகாமில், அதிதிகளாகக் கலந்து கொண்ட மக்கள் பிரதிநிதிகள் வெறும் உரைகளுடன் மாத்திரம் நின்றுவிடாமல், தாமே முன்வந்து இரத்த தானம் செய்தமை அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.

​ "மக்களின் சேவகர்களாக நாம் எப்போதும் களத்தில் இருப்போம்" என்பதை இந்த உன்னத செயலின் மூலம் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

​​அம்பாறை மாவட்ட உயிர் காக்கும் மற்றும் அவசரகால மீட்புக் குழுவினால் இடம்பெற்ற இந்த முகாமில் பெருமளவிலான இளைஞர்களும் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Thiran TV Thiranoli Thiranoli Media Ansath Ansath Nowshad A Careem

18 வயதை எட்டியவுடன்  #முதலாவது  #இரத்ததானம்:  #சம்மாந்துறை  #மாணவி  #மனிதாபிமான  #முன்மாதிரிஇன்றைய இளைய சமுதாயத்திற்கு ம...
09/05/2026

18 வயதை எட்டியவுடன் #முதலாவது #இரத்ததானம்: #சம்மாந்துறை #மாணவி #மனிதாபிமான #முன்மாதிரி

இன்றைய இளைய சமுதாயத்திற்கு முன்மாதிரியாக, சம்மாந்துறை அல்-மர்ஜான் பாடசாலையைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது 18 ஆவது வயதைப் பூர்த்தி செய்தவுடன் முதலாவது இரத்ததானத்தை வழங்கி பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர இரத்தத் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில், அம்பாறை மாவட்ட உயிர் காப்பு மற்றும் அவசரகால மீட்பு குழுவின் ஏற்பாட்டில் இன்று சம்மாந்துறையில் மாபெரும் மனிதாபிமான இரத்ததான முகாம் நடைபெற்றது.

இம்முகாமில், அல்-மர்ஜான் பாடசாலையில் உயிரியல் பிரிவில் கல்வி கற்று வரும் குறித்த மாணவி, இரத்ததானம் செய்யத் தகுதியான 18 வயதை அடையும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்து, இன்று தனது முதலாவது இரத்ததானத்தை வழங்கினார்.

மேலும், இரத்ததானத்திற்கு அவசியமான குறைந்தபட்ச 50 கிலோ உடல் எடையை எட்டிய பின்னரே ஆரோக்கியமான முறையில் இரத்ததானத்தில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
பெண்களின் பங்கேற்பு குறைவாகக் காணப்படும் இரத்ததான முகாம்களில், சமூகப் பொறுப்புணர்வுடன் முன்வந்து மனிதாபிமான சேவையில் ஈடுபட்ட இம்மாணவியை பலரும் “இளம் சிங்கப்பெண்” என பாராட்டி வருகின்றனர்.

அவரது உயரிய மனிதாபிமான செயலைக் கௌரவிக்கும் வகையில், அம்பாறை மாவட்ட உயிர் காப்பு மற்றும் அவசரகால மீட்பு குழுவினரால் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.

மனிதநேயம், சமூகப் பொறுப்பு மற்றும் உயிர் காக்கும் பணியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் இம்மாணவியின் செயற்பாடு சமூக வலைத்தளங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், இளைஞர்கள் பலரையும் இரத்ததானம் செய்ய ஊக்குவிக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகப் பார்க்கப்படுகிறது.

Thiran TV, Thiranoli, Thiranoli Media,
Ansath Ansath

*சம்மாந்துறை வலயமட்ட பெருவிளையாட்டு – 2026 போட்டிகளில் அல் அமீர் பாடசாலை வரலாற்றுச் சாதனை!நடைபெற்று முடிந்த சம்மாந்துறை ...
08/05/2026

*சம்மாந்துறை வலயமட்ட பெருவிளையாட்டு – 2026 போட்டிகளில் அல் அமீர் பாடசாலை வரலாற்றுச் சாதனை!

நடைபெற்று முடிந்த சம்மாந்துறை வலயமட்ட பெருவிளையாட்டு – 2026 போட்டிகளில், அல் அமீர் பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக, Under 16 உதைப்பந்தாட்ட அணி மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகி பெரும் சாதனை படைத்துள்ளது.

மாணவர்களின் திறமையான ஆட்டத்தாலும், அணியின் ஒருமித்த முயற்சியாலும் இந்த வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அல் அமீர் பாடசாலை விளையாட்டு வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

Thiran TV , Thiranoli

 #சம்மாந்துறை  #ஆதார  #வைத்தியசாலையின்  #இரத்தப்  #பற்றாக்குறையை  #நிவர்த்தி  #செய்ய  #மனிதாபிமான  #இரத்த  #தான  #முகாம்...
07/05/2026

#சம்மாந்துறை #ஆதார #வைத்தியசாலையின் #இரத்தப் #பற்றாக்குறையை #நிவர்த்தி #செய்ய #மனிதாபிமான #இரத்த #தான #முகாம்!

​சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியிலுள்ள இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கோடும், பொதுமக்களின் உயிர் காக்கும் உன்னத மனிதாபிமானப் பணியாகவும் அம்பாறை மாவட்ட அனர்த்த மேலாண்மை நிலையத்துடன் இணைந்து, அம்பாறை மாவட்ட உயிர் பாதுகாப்பு மற்றும் அவசரகால மீட்பு குழு நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

​​விபரங்கள்:
⭕​திகதி: 2026 மே 09 (சனிக்கிழமை)

⭕​இடம்: அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை), சம்மாந்துறை.

⭕​நேரம்: காலை 08:30 மணி முதல்...

ஒரு உயிரைக் காப்பாற்றுவது ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் காப்பாற்றுவதற்கு சமமானது எனும் உயரிய நோக்கோடு முன்னெடுக்கப்படும் இந்த முகாமில், சம்மாந்துறை மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த ஆரோக்கியமுள்ள இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரையும் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.

​இரத்ததானம் வழங்க விரும்புவோர் மற்றும் இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் கீழ்வரும் இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொண்டு தமது விபரங்களை முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்:

⭕மேலதிக விபரங்களுக்கு 👇👇👇

​எம்.ஏ.சி எம். றியாஸ் (அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர்): 0773957883

ஏ.ஆர். ம். மஜீட் (அமைப்பாளர் )
உயிர் பாதுகாப்பு மற்றும் அவசரகால மீட்பு குழு அம்பாறை மாவட்டம்
0752298420

Thiran TV

🏏 சரித்திரம் படைக்கப்பட்டது! 64 அணிகளில் இரண்டாம் இடம்! 🥈அல்ஹம்துலில்லாஹ்! எங்கள் பயணம் தொடங்கி 4 ஆண்டுகளுக்குப் பிறகு, ...
03/05/2026

🏏 சரித்திரம் படைக்கப்பட்டது! 64 அணிகளில் இரண்டாம் இடம்! 🥈

அல்ஹம்துலில்லாஹ்! எங்கள் பயணம் தொடங்கி 4 ஆண்டுகளுக்குப் பிறகு, ரியல் நஜா நைட் டோர்னமென்ட் சீசன் 2-ல் டிரைபல் ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் தனது முதல் போட்டிச் சாதனையான இரண்டாம் இடத்தைக் கொண்டாடுகிறது.

ஃபீனிக்ஸ் ✅
ரியல் நஜா ✅
நியூ சன் ✅
சீனத் டிராவல்ஸ் ✅ (காலிறுதி)

அரை இறுதி
யூனிட்டி எஸ்சி ✅

இறுதிப் போட்டி
சோபர் ❌

64 அணிகளில், நாங்கள் இறுதிப் போட்டி வரை போராடி, பெருமையுடன் ரூ. 50,000 பரிசை வென்றோம். இந்தத் தருணம் எங்களுக்கு எல்லாமே ❤️

ஒரு உயர்தரமான போட்டியை ஏற்பாடு செய்த ரியல் நஜா அணிக்கு (ரியல் நஜா ஸ்போர்ட்ஸ் கிளப்) மனமார்ந்த நன்றிகள். மேலும் எங்களுக்கு முலு ஆதரவுகளையும் தந்த எங்கள் சொந்த ஊர் ஆதரவாளர்களுக்கும்
ஏனைய கழகங்களுக்கும் —நன்றிகளை முன் வைப்பதோடு - இந்த 4 ஆண்டுகளாக நீங்கள் அளித்த பிரார்த்தனைகளும் உற்சாகங்களும் இறுதியாகப் பலனளித்துள்ளன 🙌

எங்கள் நட்சத்திரங்களுக்கு ஒரு சிறப்பு வாழ்த்து:
🔥 திரு. அஃப்சான் – சிறந்த பந்துவீச்சாளர் விருது
🔥 திரு. அஷ்மிர் – 4-ஆம் நாள் மற்றும் அரையிறுதிப் போட்டிக்கான சிறந்த பேட்ஸ்மேன் விருது

சாம்பியன்களுக்கும் அனைத்து அணிகளுக்கும் மரியாதை. இந்த முதல் சாதனை ஒரு ஆரம்பம் மட்டுமே — இன்ஷா அல்லாஹ், அடுத்தது கோப்பைதான்!

Thiran TV Thiranoli

01/05/2026

Address

Sammanthurai

Alerts

Be the first to know and let us send you an email when Thiran TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thiran TV:

Share

Category