SuwasaM TV

SuwasaM TV Suwasam is the most populer digitel media organization in Sri Lanka.

We cover Sri Lanka and world - News,Politics,Current Affairs,Events, Entertinment Programmes,Social Responsibility & Social Awareness.

சஹாரா பாலைவனத்தினூடாகப் பயணித்து கொண்டிருந்த லொறி ஒன்று இயந்திர கோளாறுக்குள்ளானதால், அதில் பயணித்த 49 பேர் கடும் தாகம் க...
06/06/2026

சஹாரா பாலைவனத்தினூடாகப் பயணித்து கொண்டிருந்த லொறி ஒன்று இயந்திர கோளாறுக்குள்ளானதால், அதில் பயணித்த 49 பேர் கடும் தாகம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் சடலங்கள் நேற்று (5) மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாலி மற்றும் அல்ஜீரிய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள 'அசமகா' பகுதியிலிருந்து மேற்கே 80 கிலோமீற்றருக்கும் அதிக (49 மைல்) தூரத்தில் இந்த லொறி இயந்திர கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்த அனைவரும் நைஜீரிய நாட்டவர்கள் என்பதுடன், அவர்கள் மாலி நாட்டில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் தமது நாட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த கொடூர சோகத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இருப்பினும், இந்த விபத்திலிருந்து இருவர் மாத்திரம் உயிர் தப்பியுள்ளனர்.
🇳🇬

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டுள்ள தாயக கலைஞன் சங்கீதனை விடுவிக்க கோரி, மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம...
06/06/2026

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தாயக கலைஞன் சங்கீதனை விடுவிக்க கோரி, மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (06) கிளிநொச்சியில் பெரும் திரளான மக்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.

​"குரல்வளையின் விலங்குடைக்க அணிதிரள்வோம்" என்னும் தொனிப்பொருளில் சங்கீத்சனை விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாத தடை சட்டத்தின் ஊடாக தமிழர்கள் மீது நிகழ்த்தப்படுவதாக கூறப்படும் இன அடக்குமுறைகளைக் கண்டித்தும், கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்தினால் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

​இக்கண்டன பேரணியில் ஈடுபட்டவர்கள், "பாடினால் பயங்கரவாதமா? தாயகக் கலைஞனை உடனே விடுவி!", "தமிழர் வலிகளை பாடுவதும் எழுதுவதும் குற்றமா?", "ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் PTA-வை உடனே நீக்கு!", "போன்ற முழக்கங்கள் அடங்கிய வாசக அட்டைகளை ஏந்தியவாறும், உணர்ச்சி பூர்வமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

​குறித்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர் சமூகம் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
🇱🇰

இலங்கை-அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, பத்து TH-57 ‘சீ ரேஞ்சர்’ (Sea Ranger)ஹெலிகாப்டர...
02/06/2026

இலங்கை-அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, பத்து TH-57 ‘சீ ரேஞ்சர்’ (Sea Ranger)ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்துள்ளன என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
குறித்த விமானங்கள் விரைவில் இலங்கை விமானப்படையில் சேவையில் இணைக்கப்பட்டு, விமானப் பயிற்சி, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம், (HADR)தேடுதல் மற்றும் மீட்புத் திறன்களை வலுப்படுத்தும் எனவும் இலங்கை விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது .
🇺🇸 🇱🇰

மீகொடை பகுதியில் இடம்பெற்ற வெசாக் தன்சல் ஒன்றில் விபத்தை ஏற்படுத்தி 6 பேர் உயிரிழப்புக்குக் காரணமான கெப் வாகனத்தின் சாரத...
01/06/2026

மீகொடை பகுதியில் இடம்பெற்ற வெசாக் தன்சல் ஒன்றில் விபத்தை ஏற்படுத்தி 6 பேர் உயிரிழப்புக்குக் காரணமான கெப் வாகனத்தின் சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று (01) ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் கெப் ரக வாகனத்தை செலுத்திய சாரதி மது போதையில் இருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மீகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பு, செட்டியார் தெரு அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தினால் ஆறாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட தன்சல் நிகழ்வு, செ...
01/06/2026

கொழும்பு, செட்டியார் தெரு அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தினால் ஆறாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட தன்சல் நிகழ்வு, செட்டியார் தெரு நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் சரவணன் தலைமையில் நேற்றுமுன்தினம் (30) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டி சொய்சா பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மேலும், கொழும்பு பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மகேஷ் குமாரசிங்க, புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த டி சில்வா ஆகியோருடன் அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்க செயலாளர் பாலசுப்ரமணியம், பொருளாளர் தவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதுடன், குறித்த தன்சல் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
🇱🇰

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முக்கிய சந்தேக நபராக இறக்காமத்தை சேர்ந்த 21 வயதுடைய மௌலவி கைது செய்யப்...
01/06/2026

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முக்கிய சந்தேக நபராக இறக்காமத்தை சேர்ந்த 21 வயதுடைய மௌலவி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் முதலில் தப்பி ஓடியதாகவும், பின்னர் மே 20 அன்று ஒரு வழக்கறிஞர் மூலம் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் அவர் சரணடைந்ததாகவும், குறித்த நபர் ஜூன் 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இக்குற்றத்திற்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, அப்பகுதியை சேர்ந்த மற்றொரு 21 வயதான நபர் முன்னதாகவே கைது செய்யப்பட்டு, விசாரணைகள் தொடரும் நிலையில் அவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
🇱🇰

19ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 28-ஆம் திகதி ஆரம்பமானது. 10அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும...
31/05/2026

19ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 28-ஆம் திகதி ஆரம்பமானது.

10அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஓப்' சுற்று முடிவில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

இந்த நிலையில் கிண்ணம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (31) நடைபெறவுள்ளது.

இதேவேளை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் - குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்த போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி கடந்த ஆண்டில் கிண்ணத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

அட்டாளைச்சேனை விளையாட்டுகழகத்தினருக்கும் அக்கரைப்பற்றுசூசிட்டி விளையாட்டு கழகத்தினருக்கும் இடையிலான சினேகபூர்வ உதைப்பந்த...
31/05/2026

அட்டாளைச்சேனை விளையாட்டு
கழகத்தினருக்கும் அக்கரைப்பற்று
சூசிட்டி விளையாட்டு கழகத்தினருக்கும் இடையிலான சினேகபூர்வ உதைப்பந்தாட்டப் போட்டி கடந்த திங்கட்கிழமை(25) இடம்பெற்றது.
இதில் 7-1 எனும் கோல் வித்தியாசத்தில் அக்கரைப்பற்று சூசிட்டி அணி வெற்றி பெற்றது.

குறித்த போட்டி நிகழ்ச்சியில், அக்கரைப்பற்று முன்னாள் பிரதேச சபை எதிர்கட்சித் தலைவர்,சமாதான நீதவான் நளீம் மாஸ்டர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

2026 ஹஜ் உத்தியோகபூர்வ நிறைவு விழாவில் பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர் கலந்துகொண்டார்.இலங்கை ஹஜ் தூதுக்குழுவின் தலைவர் பி...
31/05/2026

2026 ஹஜ் உத்தியோகபூர்வ நிறைவு விழாவில் பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர் கலந்துகொண்டார்.

இலங்கை ஹஜ் தூதுக்குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர், இலங்கை ஹஜ் குழுவின் தலைவர் ரியாஸ் மிஹுலருடன் இணைந்து, சவூதி அரேபியாவின் மக்காவில் சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “கிதாமுஹு மிஸ்க்” மாநாட்டில் கலந்துகொண்டார்.
🇸🇦 🇱🇰

முஸ்லிம்கள் அனைவருக்கும் சுவாசம் டிஜிடல் ஊடக வலையமைப்பின், தியாக திருநாளான ஈத் அல் அழ்ஹா புனித ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக...
28/05/2026

முஸ்லிம்கள் அனைவருக்கும் சுவாசம் டிஜிடல் ஊடக வலையமைப்பின்,
தியாக திருநாளான ஈத் அல் அழ்ஹா புனித
ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துகள்
- ஈத் முபாரக் -

Address

Slave Island

Telephone

+94778898102

Alerts

Be the first to know and let us send you an email when SuwasaM TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SuwasaM TV:

Share