31/08/2026
"பலஸ்தீன் என்ற நாட்டை உருவாக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் "🇮🇱🔥🔥🔥🔥
இஸ்ரேலிய எல்லைக்குட்பட்ட நிலப்பரப்பில் பாலஸ்தீன நாடு அமைக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இஸ்ரேலிய நிலப்பரப்பில் ஒரு பாலஸ்தீன நாடு உருவாக்கப்படுவதை நான் இதுவரை அனுமதிக்கவில்லை; இனியும் அனுமதிக்க மாட்டேன்" என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடரும் போர் பதற்றங்களுக்கு இடையே, பாலஸ்தீன நாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளை முழுமையாக நிராகரிக்கும் வகையில் இஸ்ரேல் பிரதமரின் இந்த அறிக்கை அமைந்துள்ளது.