mulli1stnews net

mulli1stnews  net மாற்றத்தின் புதிய தேசத்தின் குரல்
(3)

*புத்தளம் நூர் நகரை பாதுகாக்க மாநகர சபையில் பிரேரணை*தூய தேசத்தத்திற்கான கட்சியின் தலைவர் இஷாம் மரிக்கார் அவர்களினால் வரு...
04/04/2026

*புத்தளம் நூர் நகரை பாதுகாக்க மாநகர சபையில் பிரேரணை*

தூய தேசத்தத்திற்கான கட்சியின் தலைவர் இஷாம் மரிக்கார் அவர்களினால் வருகின்ற 7ம் திகதி நடைப்பெற இருக்கும் ஏப்ரல் மாதத்திற்கான மாநகர சபை பொதுக்கூட்டத்தில் புத்தளம் நூர் நகர் சம்பந்தமான பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

மர்ஹூம் டாகடர் இலியாஸ் அவர்களினால் சட்டபூர்வமாக நிருவப்பட்ட புத்தளம் நூர் நகர் புகையிரத நிலையத்தில் ஒரு சில மாதங்களாக எந்த வித சேவைகளும் நடைபெறாமல் இருக்கிறது. ஆனாலும் அந்த புகையிரத பாதையின் வழியாக சீமெந்து தொழிற்சாலைக்கு சுண்ணக்கற்கள் தொடராக ஒவ்வொரு நாளும் கொண்டுசெல்லப்படுகிறது. இது முற்றிலும் சட்டத்திற்கு முரணானது என்பதால், மக்கள் சேவையை அவசரமாக ஆரம்பிக்க கோரி புத்தளம் மாநகரசபையின் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதற்காக இந்த முயற்சி தூய தேசத்திற்கான கட்சியின் மூலமாக முன்னெடுக்கப்படுகிறது.

இரண்டாம் மற்றும் மூன்றாம் வட்டாரத்தின் மத்தியில் அமைந்துள்ள இந்த ரயில் பொது சேவை நிலையத்தை அவசரமாக இயங்கு நிலைக்கு கொண்டுவந்து ரயில் நிலையத்தை பாதுகாப்பதே இந்த முயற்சியின் பிரதான நோக்கமாகும்.

மகிழ்சியான செய்திகாணமல் போன கிண்ணியா நடுத்திவை சேர்ந்த முஹம்மது குச்சவெளியில் இனதெரியாதவரால் கடத்தி செல்லப்பட்டுள்ளார் எ...
30/03/2026

மகிழ்சியான செய்தி

காணமல் போன கிண்ணியா நடுத்திவை சேர்ந்த முஹம்மது குச்சவெளியில் இனதெரியாதவரால் கடத்தி செல்லப்பட்டுள்ளார் என தகவல் கிடைதுள்ளது
இவர் தற்போது குச்சவெளி கண்டெடுக்கப்பட்டுள்ளார்
உதவி அனைவருக்கும் குடும்பத்தினர் நன்றியை தெரிவித்துகொள்கிறார்கள்

அவசரமானது/காணவில்லைகிண்ணியா நடுத்திவு 06சேர்ந்த முகம்மது அமீர்முகம்மது  என்ற Gce Ol மாணவரை இன்று அஷர் தொழுகையின் பின் கா...
29/03/2026

அவசரமானது/காணவில்லை
கிண்ணியா நடுத்திவு 06சேர்ந்த முகம்மது அமீர்முகம்மது என்ற Gce Ol மாணவரை இன்று அஷர் தொழுகையின் பின் காணவில்லை கண்டவர்கள் கீழ் காணும் இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும்

0755881058
mulli1stnews net

இலங்கையில் சமாதான நீதவான் (Justice of the Peace - JP) பதவியானது, இந்நாட்டின் சட்ட அமைப்பு மற்றும் நிர்வாகக் கட்டமைப்பில்...
29/03/2026

இலங்கையில் சமாதான நீதவான் (Justice of the Peace - JP) பதவியானது, இந்நாட்டின் சட்ட அமைப்பு மற்றும் நிர்வாகக் கட்டமைப்பில் மிக முக்கியமான மற்றும் கௌரவமான ஓர் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பதவியின் வரலாறு, பரிணாம வளர்ச்சி மற்றும் தற்போதைய வகிபாகம் குறித்து நான் மேற்கொண்ட ஆய்வின் தகவல்களை உங்கள் கவனத்திற்காகக் கீழே குறிப்பிடுகிறேன்.

​1. தோற்றமும் வரலாறும் (Origin and History)
​இலங்கையில் சமாதான நீதவான் பதவியின் மூல வித்து பிரித்தானியர் காலத்தில் விதைக்கப்பட்டது. இதன் தோற்றம் ஆங்கிலப் பொதுச் சட்டத்துடன் (English Common Law) பின்னிப்பிணைந்துள்ளது.
​🇬🇧 இங்கிலாந்தில் தோற்றம்: கி.பி. 1327 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் மூன்றாம் எட்வர்ட் மன்னரால் "சமாதானத்தைக் காப்பவர்கள்" (Keepers of the Peace) நியமிக்கப்பட்டதோடு இந்தக் கருத்துருவாக்கம் ஆரம்பமானது. பின்னர் 1361 இல் நிறைவேற்றப்பட்ட சமாதான நீதவான் சட்டத்தின் (Justice of the Peace Act 1361) மூலம் இவர்களுக்கு நீதித்துறை அதிகாரங்களும் கிடைத்தன.

​🇱🇰 இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்படுதல்: பிரித்தானியர்கள் இலங்கையின் கரையோர மாகாணங்களை ஆட்சி செய்த காலத்திலும், பின்னர் 1815 இல் முழுத் தீவையும் கைப்பற்றிய பின்னரும், பிரித்தானிய நிர்வாக முறைமை இங்கு தாபிக்கப்பட்டது.
​📄 1833 நீதி பட்டயம் (Charter of Justice 1833): கோல்புறூக்-கமரன் சீர்திருத்தங்களுக்குப் பின்னர் இந்நாட்டின் நீதித்துறை கட்டமைப்பு முறைப்படுத்தப்பட்டது. இதன்போது, பிராந்திய மட்டத்தில் சமாதானத்தைப் பாதுகாப்பதற்கும் சிறிய தகராறுகளைத் தீர்ப்பதற்கும் சமாதான நீதவான்களை நியமிக்கும் வழக்கம் ஆரம்பமானது.

​2. பதவியின் பரிணாம வளர்ச்சி (Evolution of the Position)
​ஆரம்ப காலங்களில் இப்பதவியானது வெறுமனே ஒரு கௌரவ நாமம் என்பதை விடவும் மேலானதாக இருந்தது.
​பழைய அதிகாரங்கள்: ஆரம்ப கட்டங்களில் சமாதான நீதவான்களுக்குக் கைதிகளை விளக்கமறியலில் வைப்பதற்கான கட்டளைகளைப் பிறப்பித்தல், பிடியாணை பிறப்பித்தல் (Issuing warrants) மற்றும் சிறு குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளல் போன்ற அதிகாரங்கள் இருந்தன.
​உள்நாட்டுமயமாக்கல்: ஆரம்பத்தில் பிரித்தானிய நாட்டவர்கள் மட்டுமே இப்பதவிகளுக்கு நியமிக்கப்பட்டாலும், பின்னர் இந்நாட்டின் உயர்குடி மக்கள் (Local Elites) மற்றும் அரச அதிகாரிகள் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
​சட்டரீதியான மாற்றங்கள்: 1978 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க நீதித்துறை அமைப்புச் சட்டம் (Judicature Act No. 02 of 1978) மூலம் தற்போதைய சமாதான நீதவான் பதவியின் சட்ட அடிப்படைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது இந்தப் பதவியானது நீதித்துறை அதிகாரங்களிலிருந்து விலகி, பெருமளவில் நிர்வாக மற்றும் சான்றளிக்கும் (Administrative and Attestation) பணிகளை நோக்கி நகர்ந்துள்ளது.

​3. தற்போதைய வகிபாகமும் பொறுப்புகளும் (Roles and Responsibilities)
​இன்று ஒரு சமாதான நீதவான் பிரதானமாகப் பொதுமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலும், அதேபோன்று சட்டத்திற்கும் இடையிலுமான ஒரு தொடர்பாளராகச் செயற்படுகின்றார்.

​📄 சத்தியப் பிரமாணங்களைப் பெற்றுக்கொள்ளல் (Administering Oaths and Affirmations): ஒரு நபரால் முன்வைக்கப்படும் கூற்றொன்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காகச் சத்தியப்பிரமாணம் செய்வித்தல்.

​📃 ஆவணங்களைச் சான்றளித்தல் (Attestation of Documents): பிறப்புச் சான்றிதழ்கள், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பிற சட்ட ஆவணங்களின் பிரதிகளின் உண்மைத்தன்மையைச் சான்றளித்தல் (Certifying true copies).

​🧾 கையொப்பங்களை உறுதிப்படுத்துதல் (Authentication of Signatures): பல்வேறு சட்ட ஆவணங்கள் மற்றும் ஒப்பந்தங்களில் நபர்கள் இடும் கையொப்பங்கள், சரியான நபரால் தான் இடப்பட்டன என்பதற்குச் சாட்சியமளித்தல்.

​👮‍♂ சமாதானத்தைப் பேணுதல் (Preserving the Peace): பெயரளவில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், சமூகத்தில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் பேணுவதற்கு உள்வாங்கப்படுவதும் வழிகாட்டுவதும் அவர்களின் தார்மீகப் பொறுப்பாகும்.

​4. நியமனங்களும் தகைமைகளும் (Appointments and Qualifications)
​இலங்கையில் சமாதான நீதவான்களை நியமிக்கும் முழு அதிகாரமும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் (Ministry of Justice, Prison Affairs and Constitutional Reforms) வசமே காணப்படுகின்றது.
​நியமன வகைகள் (Types of Appointments):
​முழுத் தீவுக்கும் உரித்தான (All Island): தீவின் எந்தவொரு பகுதியிலும் கடமைகளை ஆற்ற முடியும்.
​நீதிமன்ற வலயத்திற்குட்பட்ட (Judicial District): நியமிக்கப்பட்ட குறிப்பிட்ட நீதிமன்ற வலயத்திற்குள் மாத்திரம் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படும்.
​பதவி வழியிலான (Ex-officio): சில அரச அதிகாரிகள் (உ-ம்: கிராம உத்தியோகத்தர், அதிபர்) தாங்கள் பதவியில் இருக்கும் காலப்பகுதியில் மாத்திரம் சமாதான நீதவான்களாகச் செயற்படுவதற்கான அதிகாரத்தைப் பெறுகின்றனர்.

​தகைமைகள் (Qualifications):
​👉 சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட, நற்பண்புடைய (Good Character) ஒருவராக இருத்தல்.
​👉 கல்வித் தகைமைகளைப் பூர்த்தி செய்திருத்தல்.
​👉 சமூக சேவையில் (Community Service) ஈடுபட்டிருத்தல்.
​👉 எந்தவொரு குற்றவியல் குற்றத்திற்காகவும் (Criminal Offense) நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டிருக்காமை.

​5. தற்போதைய நிலையும் சவால்களும் (Current Status and Challenges)
​தற்போது இலங்கையில் பல்லாயிரக்கணக்கான சமாதான நீதவான்கள் உள்ளனர். இந்தப் பதவியின் கௌரவத்தைப் பாதுகாப்பது தொடர்பில் சமூகத்தில் ஒரு உரையாடல் உருவாகியுள்ளது.
​டிஜிட்டல் மயமாக்கல் (Digitalization): ஆவணங்களைச் சான்றளிக்கும் செயன்முறை டிஜிட்டல் மயமாக்கப்படுவதோடு, பாரம்பரிய இறப்பர் முத்திரைக்குப் (Rubber Stamp) பதிலாக நவீன முறைமைகளைப் பயன்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.
​ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு (Disciplinary Control): சில நபர்கள் இந்தப் பதவியைத் தவறாகப் பயன்படுத்துவதைத் (Misuse of position) தடுப்பதற்காக நீதி அமைச்சு கடுமையான ஒழுக்காற்றுச் சட்டங்களை விதித்துள்ளது.

​சேவைக் கட்டணங்கள்: சமாதான நீதவான் என்பவர் ஒரு தொண்டர் (Volunteer) ஆவார். சேவைக்காகப் பணம் அறவிடுவது சட்டவிரோதமானதாகும்.
​குறிப்பு: சமாதான நீதவான் என்பவர் ஒரு சட்டத்தரணி (Attorney-at-Law) அல்ல என்பதையும், அவருக்குச் சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்கோ அல்லது நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்கோ அதிகாரம் இல்லை என்பதையும் புரிந்துகொள்வது முக்கியமாகும்.

​டபிள்யூ. விதுரிந்த ஸ்ரீ லங்காபுர விஜேசிங்க (Jehan Fernando)

இலங்கை விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்து, நடுநிலைமையை...
24/03/2026

இலங்கை விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்து, நடுநிலைமையைக் கடைப்பிடித்த NPP
அரசாங்கத்தின் முடிவை முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி பாராட்டியுள்ளார்.

சரியானதைச் செய்ய ஜனாதிபதிக்குத் துணிச்சலும் தொலைநோக்குப் பார்வையும் இருந்தது குறித்து நான் பெருமைப்படுகிறேன்” என்று கூறிய அலி சப்ரி, இந்த முடிவு இலங்கையின் “தீவிர சுதந்திரமான” வெளியுறவுக் கொள்கைக்கு ஒரு சான்றாகும் என வலியுறுத்தினார்.

ஒரு சிறிய நாடு என்ற முறையில், உலக வல்லரசுகளின் மோதல்களில் இலங்கை இழுத்துச் செல்லப்படுவதை ஏற்க முடியாது. நாம் எந்த மோதல்களிலும் ஈடுபடக்கூடாது. சிறிய நாடுகள் ஒரு தரப்பு எடுக்க முடியாது... இவை நாம் எடுத்த முடிவுகள் அல்ல. நாம் ஏன் இதில் இழுத்துச் செல்லப்பட வேண்டும் எனவும் அலி சப்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.

23/03/2026
முஸ்லிம்களின் நாளாந்த ரமலான் நோன்பு நிறைவைக் குறிக்கும் வகையில், நேற்று (18) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இப்தா...
19/03/2026

முஸ்லிம்களின் நாளாந்த ரமலான் நோன்பு நிறைவைக் குறிக்கும் வகையில், நேற்று (18) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.

இஸ்லாமிய மதத் தலைவர்கள், அமைச்சர்கள், இராஜதந்திரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், மத வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளித்து நிகழ்வு நடைபெற்றது.

பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி இதன்போது வரவேற்புரை நிகழ்த்தியதுடன் சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் இங்கு உரையாற்றினார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்களுடன் ஜனாதிபதி சுமுகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

Anura Kumara Dissanayake

🔸இன்று அக்கரைப்பற்று நூரானியா ஜும்ஆ பள்ளிவாசலில் தராவீஹ் தொழுகையை பாலமுனை மஹாசினுல் உலூம் அரபுக் கல்லூரி அதிபர் ஏ. எல். ...
15/03/2026

🔸இன்று அக்கரைப்பற்று நூரானியா ஜும்ஆ பள்ளிவாசலில் தராவீஹ் தொழுகையை பாலமுனை மஹாசினுல் உலூம் அரபுக் கல்லூரி அதிபர் ஏ. எல். சாஜித் ஹூசைன் (தற்போது எமது பள்ளிவாசலில் தராவீஹ் தொழுகை நடத்தும் இமாம்) அவர்களின் மகன், ஏறாவூர் ஜிப்ரியா வித்தியாலயத்தில் தரம் 04 இல் கல்வி கற்கும் சல்மான் ஹூமைஸ், தனது இனிமையான குரலில் மனதை கவரும் அழகிய கிராஅத்தை ஓதி அனைவரையும் ஆனந்தமடையச் செய்தார்.
எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே 🤲🏻
🇱🇰

14.03.2026

திருகோணமலை மாவட்ட கால்நடை மற்றும் கால்நடை வளர்ப்புக்கான முழுமையான இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகள் விநியோகம் இன்று (23) ...
23/02/2026

திருகோணமலை மாவட்ட கால்நடை மற்றும் கால்நடை வளர்ப்புக்கான முழுமையான இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகள் விநியோகம் இன்று (23) திருகோணமலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட கால்நடைத் துறைக்கு ரூ. 558 மில்லியன் இழப்பீடு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, மேலும் 1279 பயனாளிகள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

இன்று, மொரவெவ, கந்தளாய், திருகோணமலை நகரங்கள் மற்றும் கடவத், பதவி ஸ்ரீபுர, தம்பலகமுவ மற்றும் கிண்ணியா ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 281 பயனாளிகளுக்கு ரூ. 232 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள காசோலைகள் விநியோகிக்கப்பட்டன.

அதன்படி, ஜனவரி 30 ஆம் தேதி முதல் கட்டமாக மூதூர் மற்றும் சேருநுவரவைச் சேர்ந்த 275 பயனாளிகள் விநியோகிக்கப்பட்டனர், மேலும் மூன்றாம் கட்டத்தின் கீழ் எதிர்காலத்தில் குச்சவெளி மற்றும் ஈச்சலம்பட்டு பிரதேச செயலகப் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு இழப்பீடு விநியோகிக்கப்பட உள்ளது.

கிழக்கு மாகாண விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு அமைச்சின் செயலாளர் திரு. முகமது அஸ்மி, மாகாண கால்நடை உற்பத்தித் துறையின் மாகாண பணிப்பாளர் டனடொக்டர் முகமது சுல்பிகார் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

The distribution of cheques for the full compensation of livestock and animal husbandry losses in the Trincomalee District was held today (23) at the District Secretariat Auditorium under the patronage of Hon. Jayantha Lal Ratnasekera, Governor of the Eastern Province.

The Department of Livestock in the district has been allocated a total compensation amount of Rs. 558 million, following 1,279 applications submitted by affected beneficiaries.

At today’s event, cheques amounting to over Rs. 232 million were distributed to 281 beneficiaries representing the Divisional Secretariat Divisions of Morawewa, Kantale, Trincomalee Town & Gravets, Gomarankadawala, Padavi Sripura, Thambalagamuwa and Kinniya.

Earlier, under the first phase conducted on January 30, compensation was distributed to 275 beneficiaries from Muthur and Seruwila. The third phase will cover affected beneficiaries in the Divisional Secretariat Divisions of Kuchchaveli and Echalampattu.

The event was attended by the Secretary to the Eastern Province Ministry of Agriculture and Animal Production, Mr. Mohamed Azmi; the Provincial Director of the Provincial Department of Animal Production and Health, Dr. Mohamed Zulfikar; and other officials.

 #வசந்தம் தொலைக்காட்சி, வானொலி செய்திப் பிரிவு பிரதி முகாமையாளராக எம்.எஸ்.எம். இர்பான் நியமனம்Independent Television Net...
23/02/2026

#வசந்தம் தொலைக்காட்சி, வானொலி செய்திப் பிரிவு பிரதி முகாமையாளராக எம்.எஸ்.எம். இர்பான் நியமனம்

Independent Television Network (ITN) நிறுவனத்தின் தமிழ் ஒளி, ஒலிபரப்புச் சேவைகளான Vasantham TV மற்றும் Vasantham FM ஆகியவற்றின் செய்திப் பிரிவு பிரதி முகாமையாளராக எம்.எஸ்.எம். இர்பான் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பிரிவில் பதில் முகாமையாளராக பணியாற்றி வந்த அவர், அதே நேரத்தில் செய்தித் துறையிலும் முக்கிய பங்காற்றி வந்தார். இந்நிலையில், அவரது நீண்டகால சேவை மற்றும் நிர்வாக அனுபவத்தை கருத்தில் கொண்டு இந்த புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு வசந்தம் செய்திப் பிரிவில் நிறைவேற்றுத் தர தயாரிப்பாளராக தனது பணியைத் தொடங்கிய இர்பான், காலப்போக்கில் செய்தித் துறையில் ஆழமான அறிவும் அனுபவமும் பெற்றுள்ளார். செய்திகள் தொடர்பான பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய அவர், பார்வையாளர்களிடையே நம்பிக்கைக்குரிய ஊடகவியலாளராகத் திகழ்ந்துள்ளார்.

குறிப்பாக, தொலைக்காட்சி மற்றும் வானொலியில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பான “பத்திரிகைக் கண்ணோட்டம்” நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கிய விதம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. அவரது திறமையான செய்தி வழங்கல் மற்றும் ஆழமான பகுப்பாய்வு பல்வேறு தரப்பினராலும் மதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் செய்தித் தயாரிப்புகளுக்காக ஜனாதிபதி விருதுகள் உட்பட தேசிய ரீதியில் பல விருதுகளை எம்.எஸ்.எம். இர்பான் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நியமனம், வசந்தம் ஊடகப் பிரிவின் செய்தித் தரத்தையும் நிர்வாக வலிமையையும் மேலும் உயர்த்தும் என ஊடக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.

 #சிரேஷ்ட ஒளிபரப்பாளர் ஏ.எல். இர்பான் அவர்களின் தந்தை புத்தளத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.புத்தளம், தில்லையடி ரத்மல்யாய...
22/02/2026

#சிரேஷ்ட ஒளிபரப்பாளர் ஏ.எல். இர்பான் அவர்களின் தந்தை புத்தளத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம், தில்லையடி ரத்மல்யாய 4ம் குறுக்குத் தெருவில் வசித்து வந்த ஆதம்பாவா அப்துல் லதீப் என்பவர், இனம்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று (22.02.2026) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (21.02.2026) இரவு சுமார் 9.00 மணியளவில், YB 6811 இலக்கமுடைய சிவப்பு நிற முச்சக்கரவண்டியில் வெளியே சென்ற அவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

உறவினர்களும் நேற்று இரவு முதல் அவரை தேடிய நிலையில், இன்று காலை தில்லையடி ரத்மல்யாய – அல்காசிமி சிட்டி (600 வீட்டுத்திட்டம்) பிரதான வீதியிலிருந்து கல்லடி நோக்கிச் செல்லும் உள்வீதியில் உள்ள தோட்டப் பகுதிக்கு அருகில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், உயிரிழந்தவரின் முச்சக்கரவண்டி அல்காசிமி சிட்டி பகுதியின் பின்புறம் வேறொரு இடத்தில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அவசர எச்சரிக்கை: மகாவலி கங்கை பெருக்கெடுக்கும் அபாயம்! ⚠️​மகாவலி கங்கையின் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை கா...
22/02/2026

அவசர எச்சரிக்கை: மகாவலி கங்கை பெருக்கெடுக்கும் அபாயம்! ⚠️

​மகாவலி கங்கையின் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, அடுத்த 24 மணிநேரத்திற்குள் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

​📍 அவதானமாக இருக்க வேண்டிய பிரதேசங்கள்!

​பின்வரும் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட மகாவலி கங்கையைச் சார்ந்த தாழ்நில மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

​திருகோணமலை மாவட்டம்: கிண்ணியா, மூதூர், சேருவில.

​பொலன்னறுவை மாவட்டம்: வெளிகந்த, லங்காபுர, தமன்கடுவ, திம்புலாகல.

​🚫 போக்குவரத்து மற்றும் வழிபாட்டாளர்களுக்கான அறிவிப்பு:
​மட்டக்களப்பு - பொலன்னறுவை வீதி: கெல்லேல்ல பகுதியில் சிறு வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.

​சோமாவதி ரஜமகா விகாரை. விகாரையின் நுழைவாயில் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வெள்ள நிலைமை காணப்படுவதால், அடுத்த சில நாட்களுக்கு வழிபாட்டாளர்கள் அங்கு செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

​📢 பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள்!

​ஆற்றுக்கு அருகில் வசிப்பவர்கள் மற்றும் தாழ்நில மக்கள் உடமைகள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பு குறித்து அவதானமாக இருக்கவும்.

​தேவையற்ற ரீதியில் ஆற்றுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்கவும்.

​அவசர தேவைகளுக்கு அந்தந்த பிரதேச அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரைத் தொடர்பு கொள்ளவும்.

​காலம்: இன்று (23) நள்ளிரவு முதல் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு.

​இந்தத் தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து முன்னெச்சரிக்கையாக இருக்க உதவுங்கள்! #

Address

Trincomalee

Alerts

Be the first to know and let us send you an email when mulli1stnews net posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to mulli1stnews net:

Share