Trinco voice

Trinco voice social service

தித்வா அனர்த்தத்தால் முழுமையாக வீடுகளை இழந்த 7 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் ...
01/09/2026

தித்வா அனர்த்தத்தால் முழுமையாக வீடுகளை இழந்த 7 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (01) மூதூரில் இடம்பெற்றது.

மூதூர் பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பயனாளி ஒருவருக்கு தலா 50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய வீடு அமைத்துக் கொடுக்கப்படவுள்ளது.
இதன்படி, 7 பயனாளர்களுக்கும் மொத்தம் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மூதூர் பிரதேச இணைப்பாளர் எம்.கே.எம். சப்றான், பிரதேச சபை உறுப்பினர் எம். றிபான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

#தித்வா #புதியவீடுகள் #வீடமைப்பு #தேசியமக்கள்சக்தி

🇯🇵 திருகோணமலையில் 250 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பான வரவேற்பு! 🇱🇰திருகோணமலைக்கு இன்று வருகை தந்த சுமார் 250 ஜப...
01/09/2026

🇯🇵 திருகோணமலையில் 250 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பான வரவேற்பு! 🇱🇰

திருகோணமலைக்கு இன்று வருகை தந்த சுமார் 250 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள், வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரம் கோயிலுக்கு விஜயம் செய்து சிறப்பு தரிசனத்தில் ஈடுபட்டனர்.

வருகை தந்த சுற்றுலாப் பயணிகளுக்கு பரதநாட்டிய நிகழ்வுடன் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழர்களின் கலை, கலாசாரம் மற்றும் ஆன்மிகப் பாரம்பரியத்தை வெளிப்படுத்திய இந்த நிகழ்வு, ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலா, முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புகளை ஜப்பான் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் முக்கிய முயற்சியாக இந்த விஜயம் அமைந்துள்ளது.
திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கத் தலைவர் குமார் ஜெயக்குமாரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த முயற்சியின் ஊடாக, எதிர்காலத்தில் மேலும் அதிகமான ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளை கிழக்கு மாகாணத்திற்கு அழைத்து வருவதற்கும், முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

🎥 திருகோணமலையின் சுற்றுலா மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை உலகிற்கு எடுத்துச் செல்லும் பயணத்தின் முக்கியமான தொடக்கம்!

இளம் ஊடகவியலாளரின் சமூகப் பணிக்கு ‘Best Young Journalist Award – 2026’! 🏆இளவயதிலேயே ஊடகத்துறையில் செய்திச் சேவையாற்றி வர...
01/09/2026

இளம் ஊடகவியலாளரின் சமூகப் பணிக்கு ‘Best Young Journalist Award – 2026’! 🏆

இளவயதிலேயே ஊடகத்துறையில் செய்திச் சேவையாற்றி வருவதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வரும் இளம் ஊடகவியலாளர் மின்மினி மின்ஹாவுக்கு, ‘Best Young Journalist Award – 2026’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லெட்டர் இணையத்தளத்தின் 10ஆவது வருட நிறைவு விழா, அக்கரைப்பற்று மாநகர சபையின் ஹல்லாஜ் மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழ் லெட்டர் ஸ்தாபகர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல். றமீஸ் நெறிப்படுத்தலில், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஐ.எம். றியாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தேசிய காங்கிரஸ் தேசிய தலைவர், முன்னாள் அமைச்சர் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை மேயர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ், மின்மினி மின்ஹாவுக்கு பதக்கம் அணிவித்து விருதை வழங்கினார்.

இளம் வயதிலேயே ஊடகப் பணியுடன் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அவர் ஆற்றிவரும் பங்களிப்பை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபீன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், உள்ளூராட்சி உறுப்பினர்கள், வைத்தியர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ் லெட்டர் இணையத்தளத்தின் 10ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு, பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வரும் 20 முக்கியஸ்தர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர். voice செய்திப் பிரிவின் சம்மாந்துறை செய்தியாளரான #மின்ஹாவுக்கு எமது செய்திப் பிரிவின் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

👏 இளம் ஊடகவியலாளரின் சமூகப் பணிக்கு கிடைத்த இந்த அங்கீகாரத்திற்கு வாழ்த்துக்கள்!






🌾 வெருகலில் அறுவடை செய்த நெல்லை கொள்வனவு செய்ய யாரும் முன்வரவில்லை! விவசாயிகள் கவலைதிருகோணமலை – வெருகல் பிரதேசத்தில் தற்...
31/08/2026

🌾 வெருகலில் அறுவடை செய்த நெல்லை கொள்வனவு செய்ய யாரும் முன்வரவில்லை! விவசாயிகள் கவலை

திருகோணமலை – வெருகல் பிரதேசத்தில் தற்போது சிறுபோக வேளாண்மை அறுவடை இடம்பெற்று வருகின்ற நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்வனவு செய்வதற்கு வியாபாரிகளோ அல்லது வேறு தரப்பினரோ முன்வராததால் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களாக அறுவடை செய்த நெல்லை வீதிகளிலும், வயல் ஓரங்களிலும் வைத்து கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வீதிகளிலும் வயல் ஓரங்களிலும் நெல் மூட்டைகள் அதிகளவில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை காண முடிகிறது.

கடும் செலவுகளுக்கு மத்தியில் வயல்களில் காவல் இருந்து, யானைகளின் அச்சுறுத்தலையும் எதிர்கொண்டு அறுவடை செய்த நெல்லை தற்போது விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

“நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தற்போது யானைக்கு காவல் காக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே, விவசாயிகளின் நிலைமையை கருத்தில் கொண்டு அரசாங்கம் உடனடியாக தலையிட்டு நெல்லை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வெருகல் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#வெருகல் #நெல்கொள்வனவு #சிறுபோகவேளாண்மை

மூதூரில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!மூதூர் பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தி...
31/08/2026

மூதூரில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

மூதூர் பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், இன்று திங்கட்கிழமை (31) மதிய நேரத்தில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமைதியான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை பிரமாணக் குறிப்பை உடனடியாக பெற்றுக்கொடு” என்ற கோரிக்கையை முன்னிறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, விசேட தரத்துடனான பதவி உயர்வு முறைமையை வழங்க வேண்டும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அரச சேவை கட்டமைப்பினுள் முறையாக நிலைநிறுத்த வேண்டும், 2027ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தில் 25,000 ரூபாய் வழங்க வேண்டும், வாக்குறுதியளிக்கப்பட்ட MN-5 சம்பளத் தரநிலையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

அரசாங்கம் தமது கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து தீர்வை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

ஒரு நொடி அலட்சியம்… ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த வெளிச்சத்தையே அணைத்த சோகம்! 💔உடுவில் பிரதேச செயலகத்தில் சுதேச மருத்துவ ...
31/08/2026

ஒரு நொடி அலட்சியம்… ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த வெளிச்சத்தையே அணைத்த சோகம்! 💔

உடுவில் பிரதேச செயலகத்தில் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிய திருமதி நிசாந்தன் சிந்துப்பிரியா, வரவிருக்கும் உற்பத்தித்திறன் போட்டிக்காக அலுவலகத்தை அழகுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது துரதிர்ஷ்டவசமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

அலுவலக மூலிகைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அவர் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

உடனடியாக தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை.
இரண்டு பிள்ளைகளின் தாயான அவர், கணவரையும் பிஞ்சுக் குழந்தைகளையும் தவிக்கவிட்டு சென்றிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அலுவலகத்தை அழகுபடுத்தச் சென்ற ஒரு அர்ப்பணிப்பான உயிர்… இன்று உயிரற்ற உடலாக வீடு திரும்பிய சோகம். 😢💔

அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். 💐

#மின்சாரவிபத்து #சோகச்சம்பவம் #அனுதாபங்கள்

திருகோணமலை – கிண்ணியாவில் தனியார் காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன!கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்...
30/08/2026

திருகோணமலை – கிண்ணியாவில் தனியார் காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன!

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலிம் வீதி, நோவா மைதானம் பகுதியில் அமைந்துள்ள தனியார் காணியிலேயே இந்த குண்டுகள் இன்று (30) மாலை மீட்கப்பட்டுள்ளன.

வீடொன்றை நிர்மாணிப்பதற்காக அத்திவாரப் பணிகளுக்காக நிலத்தைத் தோண்டியபோது, சந்தேகத்திற்கிடமான நிலையில் காணப்பட்ட இரு மோட்டார் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து காணி உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த கிண்ணியா பொலிஸார், குண்டுகளை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட குண்டுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நாளை (31) நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

#திருகோணமலை #மோட்டார்குண்டுகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி யாருக்கு வழங்கப்படப் போகிறது?சட்டத்தரணி J.M. ...
30/08/2026

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி யாருக்கு வழங்கப்படப் போகிறது?

சட்டத்தரணி J.M. லாஹிரா?
அல்லது எம்.எஸ். தௌபீக்கா?

இருவரில் யாருக்கு தேசியப் பட்டியல் வழங்கப்பட வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

உங்கள் கருத்தை கமெண்டில் பதிவிடுங்கள்! 🗣️

#முஸ்லிம்_காங்கிரஸ் #தேசியப்பட்டியல் ாஹிர் ௌபீக்

தோப்பூரில் கடும் வறட்சி: கால்நடை வளர்ப்பாளர்கள் கவலை!திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்தில் நிலவி வரும் கடும் வறட...
30/08/2026

தோப்பூரில் கடும் வறட்சி: கால்நடை வளர்ப்பாளர்கள் கவலை!

திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக, பல குளங்கள் நீர் வற்றிய நிலையில் காணப்படுவதால் கால்நடைகள் நீருக்காகவும், தீவனத்திற்காகவும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன.

தோப்பூர் பிரதேசத்திலுள்ள பம்மான்குளம், இத்திக்குளம், மறவட்டகுளம் உள்ளிட்ட பல குளங்கள் தற்போது நீரின்றி வறண்டு காணப்படுகின்றன.

அதேவேளை, மேய்ச்சல் நிலங்களும் காய்ந்து கருகியுள்ளதால், கால்நடைகள் உணவு மற்றும் நீருக்காக நீண்ட தூரம் அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
என்றுமில்லாத வகையில் இம்முறை கடும் வறட்சி நிலவி வருவதால், கால்நடைகளின் உயிரிழப்பு மற்றும் கால்நடை வளர்ப்பின் எதிர்காலம் குறித்து கவலை ஏற்பட்டுள்ளதாக தோப்பூர் பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கால்நடைகளுக்கான குடிநீர் மற்றும் அவசர தீவன வசதிகளை ஏற்படுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

#தோப்பூர் #திருகோணமலை #வறட்சி #கால்நடை_வளர்ப்பாளர்கள்

தோப்பூர் பொழுதுபோக்கு பூங்கா சிரமதானம் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டது!மூதூர் பிரதேச சபையின் கீழ் இயங்கி வரும் தோப்பூர் பொழ...
29/08/2026

தோப்பூர் பொழுதுபோக்கு பூங்கா சிரமதானம் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டது!

மூதூர் பிரதேச சபையின் கீழ் இயங்கி வரும் தோப்பூர் பொழுதுபோக்கு பூங்கா, இன்று சனிக்கிழமை (28) காலை சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டது.

மூதூர் பிரதேச சபை தவிசாளர் எம்.டி.எம். தாஹிஸ் அவர்களின் பணிப்புரைக்கமைய, பிரதேச சபையின் சுகாதார ஊழியர்களால் இந்த சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, பூங்கா வளாகம் முழுமையாக துப்புரவு செய்யப்பட்டு, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் தூய்மைப்படுத்தப்பட்டது.

இந்த சிரமதானத்தில் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் எப். பாஹிம், தோப்பூர் உப அலுவலகப் பொறுப்பதிகாரி திருமதி அஸ்ரா, வருமானவரி உத்தியோகத்தர் திக்ருல்லா ஆசிக், சுகாதார மேற்பார்வையாளர் நஹீம், இக்பால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பொதுமக்களின் பயன்பாட்டுக்கான இடங்களை தூய்மையாகப் பேணும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#பொழுதுபோக்குபூங்கா #சிரமதானம்

Address

Trincomalee
31250

Telephone

+94773785456

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trinco voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share