Trinco voice

Trinco voice social service
(1)

பிராந்திய ஊடகவியலாளரான எம். எச். யூசுப் மீது கந்தளாயில் பகுதியில் வைத்து தாக்குதல் முயற்சியும் கொலை மிரட்டலும்.திருகோணமல...
16/07/2025

பிராந்திய ஊடகவியலாளரான
எம். எச். யூசுப் மீது கந்தளாயில் பகுதியில் வைத்து தாக்குதல் முயற்சியும் கொலை மிரட்டலும்.

திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளரான எம். எச். யூசுப் மீது மணல் மாபியாக்களால் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், திங்கட்கிழமை இரவு(14) கந்தளாய் பகுதியில் வைத்து, மேற்கொள்ளப்பட்டதோடு, குறித்த, கொலை மிரட்டலையும் தாக்குதல் முயற்சியையும் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் கும்பலே மேற்கொண்டதாகவும் ஊடகவியலாளர் தெரிவித்தார்.

குறித்த ஊடகவியலாளர் அன்றைய தினம் இரவு 11 மணியளவில், தனது பகுதி நேர தொழிலான, CCTV கமரா பொருத்தும் பணியில், கந்தளாய் நகரில் ஈடுபட்டிருந்த போதே, இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

இந்த நேரத்தில், இருவர் அவரிடம் வந்து முதலில் தீப்பெட்டி கேட்டுள்ளனர். "இல்லை" என பதிலளித்ததன் பின்னர், “பொய்யான செய்திகளை ஊடகங்களுக்கு பரப்புகிறாய்” என குற்றம்சாட்டி, கடுமையான வார்த்தைகளால் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

பின்னர், அவர்களில் ஒருவர் உடனடியாக அவரை தாக்க முயன்ற நிலையில், அருகிலிருந்த கடை உரிமையாளரும், பெண் ஒருவரும் ஊடகவியலாளருக்கு உடனடி பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து அவர் கந்தளாய் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார். பொலிஸார் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து ஊடகவியலாளரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த ஜூலை 13 ஆம் திகதி, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, தீத்தாந்தட்டி பகுதியில் நடந்த சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக, "சட்டவிரோத மணல் ஈடுபட்ட 5 உழவு இயந்திரங்களோடு , 7 பேர் கைது!" என்ற தலைப்பில் இவர் அறிக்கையிட்ட செய்தி தேசிய தொலைக்காட்சிகளிளும், இணைய தளங்களிலும் ஒலி- ஒளிபரப்பானது.

இந்த செய்தியை வெளியிட்டதன் காரணமாகவே, தனக்கு இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்
பொலிஸில் முறைபாடு செய்துள்ளார்.

சமூக விரோத செயல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் ஊடகவியலாளர்களின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை இச்சம்பவம் மீண்டும் எடுத்துக்காட்டுவதாக பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கந்தளாய் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.எம்.எஸ். பண்டார முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மூதூர் -இளக்கந்தை கிராமத்தில் இன்று (15) இலவச ஆயுர்வேத வைத்திய முகாம் ஒன்று இடம்...
15/07/2025

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மூதூர் -இளக்கந்தை கிராமத்தில் இன்று (15) இலவச ஆயுர்வேத வைத்திய முகாம் ஒன்று இடம் பெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் மூதூர் கிளையின் ஏற்பாட்டில், இடம்பெற்ற இந்த வைத்திய முகாமில், பல்வேறுபட்ட நோய்களுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

கிழக்கு மாகாண சுதேச வைத்திய திணைக்களத்தின் அனுசரணையுடன்

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டலின் கீழ், மூதூர் ஆயுர்வேத வைத்தியசாலையின் அனுசரணையோடு, இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதில் மிக அதிகளவான நோயாளர்கள் வருகை தந்து வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொண்டதுடன் அவர்களின் இரத்தம் மற்றும் குருதி அமுக்க பரிசோதனையையும் இலவசமாகப் பெற்றுக்கொண்டதுடன் உடல்வலி, உடற்பருமன், தோல் நோய்கள், நீரிழிவு, இரத்த அழுத்தம் பெண்கள் தொடர்பான நோய்கள், பக்கவாதம் போன்ற பல்வேறுபட்ட நோய்களுக்கான வைத்திய ஆலோசனை மற்றும் மருந்துகளையும் இலவசமாக பெற்றுக்கொண்டனர்.

இந்த, இலவச மருத்துவ முகாமில், தேசிய மக்கள் சக்தியின் மூதூர் அமைப்பாளர் எம். ஜே. சப்ரான் கலந்து கொண்டார்.

கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் மூதூர் பிரதேசத்திலுள்ள கடற்கரைச்சேனை, ஹபீப்நகர் ஆகிய இரண்டு கடற்கரைப் பகுதி...
15/07/2025

கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் மூதூர் பிரதேசத்திலுள்ள கடற்கரைச்சேனை, ஹபீப்நகர் ஆகிய இரண்டு கடற்கரைப் பகுதிகள் இன்று செவ்வாய்கிழமை (15) காலை சிரமதான மூலம் தூய்மைப்படுத்தப்பட்டன.

கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலுக்கமைவாக மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் செல்வரத்தினம் பிரகலாதன் தலைமையில் கடற்கரைப் பகுதிகள் சிரமாதனம் செய்யப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன.

மூதூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள், பொதுமக்கள் இணைந்து சிரமதானப் பணியை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது கடற்கரையில் காணப்பட்ட சூழலுக்கு பங்கம் விளைவிக்கும் குப்பை கூலங்கள்,பிளாஸ்டிக் பொருட்கள் உரிய முறைப்படி அகற்றப்பட்டது.

சிரமாதன நிகழ்வில் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் ,பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்டோர் பிரசன்னமாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடத்தினை அகற்றக்கோரிய கட்டளையானது இன்று (14) குறித்த பகுதிய...
14/07/2025

திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடத்தினை அகற்றக்கோரிய கட்டளையானது இன்று (14) குறித்த பகுதியில் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் ஆணையாளர் நாயகத்தினால் ஒப்பமிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது. குறித்த கட்டுமானம் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ளதாகக்கூறியே கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்திற்கு எதிராக குறித்த கட்டளை ஒட்டப்பட்டுள்ளது.

திருகோணமலை உட்துறைமுக வீதியில் மீன்பிடி படகுத்துறை பகுதியில் கட்டப்பட்டுள்ள 28.20 அடி நீளம் மற்றும் 09.10 அடி அகலத்தைக் கொண்ட கட்டடம், 44.7 அடி நீளம், 09.10 அடி அகலம் கொண்ட கழிப்பறை மற்றும் 17.5 அடி அகலம் கொண்ட கட்டிடம் ஆகியவற்றை அறிவிப்பு வெளியிடப்பட்ட திகதியில் இருந்து 07 நாட்களுக்குள் அகற்றுமாறும், குறித்த அறிவிப்பால் பாதிக்கப்பட்ட நபர் 3 நாட்களுக்குள் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் பொறுப்பான அமைச்சின் செயலாளரிடம் அதற்கு எதிராக மேன்முறையீடு செய்யலாம் எனவும் குறித்த கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1988 ஆம் ஆண்டின் 64 ஆம் எண் மற்றும் 2011 ஆம் ஆண்டின் 49 ஆம் எண் சட்டங்களால் திருத்தப்பட்ட, 1981 ஆம் ஆண்டின் 57 ஆம் எண் கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 31 (2) இன் கீழ் வெளியிடப்பட்ட உத்தரவின் பிரகாரம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான குறித்த பகுதியில் சில மீனவர்கள் மீன் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் அவர்கள் வெளியேற்றப்பட்டு சுற்றுலாத்துறையினரால் குத்தகைக்கு எடுக்கப்பட்டு தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் உரி யஅரச திணைக்கணங்களில் சட்ட அனுமதி பெறப்படாத உணவு விடுதி ஒன்று இயங்கி வருவதாகவும் தெரிய வருகின்றது.

அதிகம் பகிருங்கள்மூதூர் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைகளில் சிறந்த பெறுபேறுகள் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிக...
14/07/2025

அதிகம் பகிருங்கள்

மூதூர் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைகளில் சிறந்த பெறுபேறுகள் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வுக்காக முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

தோப்பூர் - ஸியா முன்பள்ளிப் பாடசாலையின் மாணவர் சிறுவர் சிறுவர் சந்தை ஞாயிற்றுக்கிழமை (13) மாலை இடம்பெற்றது.முன்பள்ளி ஆசி...
14/07/2025

தோப்பூர் - ஸியா முன்பள்ளிப் பாடசாலையின் மாணவர் சிறுவர் சிறுவர் சந்தை ஞாயிற்றுக்கிழமை (13) மாலை இடம்பெற்றது.

முன்பள்ளி ஆசிரியைகளின் ஏற்பாட்டில் அதன் தலைவர் என்.எம்.இன்பாஸ் தலைமையில் சிறுவர் சந்தை இடம்பெற்றது.

இதன்போது மாணவர்களால் வைக்கப்பட்டிருந்த மரக்கறி,இனிப்புப் பொருட்கள், சிற்றுண்டிக் கடைகள்,கைப்பணிப் பொருட்கள்,பழக்கடைகள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனையும் இடம்பெற்றது.

இதில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டு பொருள் கொள்வனவு செய்ததையும் காணமுடிந்தது.

இந்நிகழ்வில் அதிதிகளாக பிரபல சமூக சேவையாளர் சி.என்.எம்.றிபாஸ், தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியின் அதிபர் பீ.பீ.றிபாஸ்,சியா முன்பள்ளியின் முன்னாள் ஆசிரியை றினூஸ் சிபானா,முன்பள்ளி நிர்வாகத்தினர் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தீத்தான்தட்டிப் பகுதியில் மணல் அகழ்வு சட்ட விதிமுறைகளை மீறி மணல் அகழ்வில் ஈடுபட்...
13/07/2025

திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தீத்தான்தட்டிப் பகுதியில் மணல் அகழ்வு சட்ட விதிமுறைகளை மீறி மணல் அகழ்வில் ஈடுபட்ட 5 உழவு இயந்திரங்கள் நேற்று சனிக்கிழமை (12) கைப்பற்றப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 5 உழவு இயந்திரச் சாரதிகள் உற்பட 7 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் நாளை திங்கட்கிழமை (14) மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

மணல் அகழ்வு அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி மணல் அகழ்வு மேற்கொண்டமைக்காகவே இவ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சேருநுவர பொலிஸார், கந்தளாய் விசேட அதிரடிப்படையிர் இணைந்து இவ் சுற்றி வளைப்பை மேற்கொண்டு உழவு இயந்திரங்களையும் சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

13/07/2025

“தாபன நடைமுறைகளை மீறி அதிகார துஸ்பிரயோகம் செய்த கிழக்கு மாகாண அரச அதிகாரிகள் தொடர்பில் விசாரணை வேண்டும்”, “அரச உத்தியோகத்தர்களது கருத்து சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என்கின்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகையை ஏந்தியவாறு அதனை வலியுறுத்தி அரச உத்தியோகத்தர் ஒருவர் இன்று (13) கல்வி அமைச்சின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

புதிய கல்வி சீர்திருத்த செயல்முறை தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றிற்காக திருகோணமலையில் உள்ள கல்வி அமைச்சிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரும் முகமாக குறித்த உத்தியோகத்தர் தனிமனித போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

13/07/2025
இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக மூதூர் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட செல்வரத்தினம் பிரகலாதன் அவர்களை பாராட்...
13/07/2025

இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக மூதூர் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட செல்வரத்தினம் பிரகலாதன் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மூதூர் -கடற்கரைச்சேனையில் சனிக்கிழமை (12) மாலை இடம்பெற்றது.

இவ் கௌரவிப்பு நிகழ்வை மூதூர் -கடற்கரைச்சேனை கிராம அபிவிருத்திச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது அதிதிகள் மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்பு மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு மங்கள விளக்கேற்றி நிகழ்வுகள் இடம்பெற்றது.

நிகழ்வில் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அதேவேளை நிகழ்வின் அதிதியாக கலந்து கொண்ட திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாஸனும் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.

மூதூர் பிரதேச சபையின் தவிசாளராக 30 வருடங்களுக்கு பின்னர் தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டது இதுவே முதற்தடவையாகும்.அந்த வகையில் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட எஸ்.பிரகலாதனுக்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட இளைஞர் அணித் தலைவர் துரைராஜா விக்னேஸ் , மூதூர் பிரதேச சபையின் செயலாளர்,இலங்கை தமிழரசு கட்சியின் மூதூர் பிரதேச சபை உறுப்பினர்கள்,தமிழரசு கட்சியின் மூதூர் கோட்டக் கிளை உறுப்பினர்கள்,தவிசாளரின் குடும்பத்தினர்,கிராம மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திறந்தமை குறிப்பிடத்தக்கது.

2024(2025) க.பொ.த  சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மூதூர் வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் நிலை..!இவ் பகுப்பா...
13/07/2025

2024(2025) க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மூதூர் வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் நிலை..!

இவ் பகுப்பாய்வு 3C,3S அடிப்படையில் கவனத்திற் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1. தி/மூ/லிங்கபுரம் சரஸ்வதி வி.
2.தி/மூ/துவாரகா வி.
3.தி/மூ/கட்டைப்பரிச்சான் விபுலாந்த .வி
4. தி/மூ/ அந் - நகார் மகா.வி
5. தி/மூ/ பட்டித்திடல் மகா.வி

திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள பகுதிகளில் அனுமதிகளைப் பெற்று மணல் அகழ்வில் ஈடுபடுவோருக்கான மணல் அகழ்வு தொடர்பான...
12/07/2025

திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள பகுதிகளில் அனுமதிகளைப் பெற்று மணல் அகழ்வில் ஈடுபடுவோருக்கான மணல் அகழ்வு தொடர்பான அரச சட்டவிதிகள் தொடர்பாக தெளிவூட்டும் கூட்டம் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை (12) காலை இடம்பெற்றது.

கந்தளாய் பிராந்திய SSP எல்.எம். சஜ்ஜீவ பண்டார இந் நிகழ்வில் கலந்து கொண்டு மணல் அகழ்வு தொடர்பான சட்டமுறைகள் தொடர்பாக இதனை மீறுவோருக்கெதிராக எடுக்கப்படும் சட்டநடவடிக்கை தொடர்பாகவும் தெளிவூட்டினார்.

இதன்போது அனுமதிப்பத்திரம் இல்லாமல் மணல் அகழ்வு மேற்கொண்டால் சட்டநடவடிக்கை மேற்கொள்ளல், எந்த இடங்களில் மணல் அகழ்வு மேற்கொள்வது, எவ்வாறு மணல் அகழ்வு மேற்கொள்வது, அகழ்வு செய்த மணல்களை எந்தளவு வாகனங்களில் ஏற்றிச் செல்வது,மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திர நடைமுறைகள்,சட்டத்தை மீறுவோருக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள்,வேறு மாவட்டங்களைச் சேர்ந்தோர் வருகைதந்து மணல் அகழ்வு மேற்கொள்வதால் ஏற்படும் சட்ட சிக்கல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது தெளிவூட்டினார்.

இதன்போது மணல் அகழ்வில் ஈடுபட்டோரும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.


ත්‍රිකුණාමළය - සේරුණුවර පොලිස් බල ප්‍රදේශයට අයත් ප්‍රදේශවලින් බලපත්‍ර ලබාගෙන වැලි අග්‍රහණය සිදු කරන අය සඳහා වැලි අග්‍රහණය සම්බන්ධ නීති රෙගුලාසි පිළිබඳව අවධාරණය කිරීම සඳහා වූ විශේෂ සාකච්ඡාවක් අද සෙනසුරාදා (12) පෙරවරුවේ සේරුණුවර පොලිස් ස්ථානයේ දී පැවැත්විනි.

කන්දලයි ප්‍රාදේශීය ජ්‍යෙෂ්ඨ පොලිස් අධිකාරී එස්.එස්.පී. එල්.එම්. සජීව බණ්ඩාර මහතා මෙම අවස්ථාවට සහභාගීවෙමින් වැලි අග්‍රහණය සම්බන්ධ නීතිමය ක්‍රියාමාර්ග පිළිබඳව, නීතිවිරෝධී ක්‍රියාකාරකම් සිදුකලහොත් එයට එරෙහිව ගන්නා නීතිමය ක්‍රියාමාර්ග සම්බන්ධවද පැහැදිලි කළේය.

මෙහිදී, බලපත්‍රයකින් තොරව වැලි අග්‍රහණය සිදුකළහොත් එයට එරෙහිව නීති ක්‍රියාමාර්ග ගන්නා බවත්, කුමන ප්‍රදේශවලදී වැලි අග්‍රහණය කළ හැකිද, කෙසේ වැලි අග්‍රහණය කළ යුතුද, අග්‍රහණය කළ වැලි කිසියම් ප්‍රමාණයක් වාහනවලට පුරවා ගෙන යාම, වැලි අග්‍රහණ බලපත්‍ර ලබාදීමේ ක්‍රියාවලිය, නීතිය උල්ලංඝනය කරන අයට එරෙහිව ගන්නා ක්‍රියාමාර්ග, වෙනත් දිස්ත්‍රික්කවල සිට පැමිණ වැලි අග්‍රහණය කරන අය හේතුවෙන් ඇතිවන නීතිමය ගැටළු වැනි විෂයයන් රැසක් පිළිබඳවද පැහැදිලි කළේය.

මෙම අවස්ථාවට සහභාගී වූ වැලි අග්‍රහණකරුවන්ද තම අදහස් ඉදිරිපත් කළහ.

Address

Trincomalee
31250

Telephone

+94773785456

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trinco voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share