Trinco voice

Trinco voice social service
(1)

செம்மணி உட்பட இலங்கையில் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் ,நடைபெற்ற இனப்படுகொலைக்குமான சர்வதேச நீதி...
06/09/2025

செம்மணி உட்பட இலங்கையில் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் ,நடைபெற்ற இனப்படுகொலைக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம் இன்று சனிக்கிழமை (06) மூதூர் -மணற்சேனை பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் ஒன்றிணைந்து கையெழுத்து போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.

இதில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டு கையெழுத்துக்களை இட்டதையும் காண முடிந்தது.

கையெழுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர் அ.உதயகுமார் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவிக்கையில் -

வடகிழக்கிலே இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரி கையெழுத்து போராட்டத்தை சகல தமிழ் கட்சிகளும் இணைந்து ஆரம்பித்திருக்கிறோம்.

இலங்கையில் இருக்கின்ற 17 புதைகுழிகளில் மூதூர் -மணற்சேனையும் ஒன்றாகும்.கிட்டத்தட்ட 47 உடலங்கள் இங்கு புதைக்கப்பட்டுள்ளன.இந்த மயானமும் சர்வதேசத்திற்கு சாட்சி சொல்ல கூடிய ஒன்றாகும்.

வடகிழக்கிலே இடம்பெற்ற இனப்படுகொலைக்கு ஐ.நா சபையினுடைய நீதியை கோரி நிற்கின்றோம்.எங்களால் எடுக்கப்படுகின்ற கையெழுத்துக்களை ஐ.நா வின் மனித உரிமை ஆணைக் குழுவுக்கு அனுப்பவுள்ளோம்.

காணாமல் ஆக்கப்பட்டதற்கும் இனப்படுகொலைக்கும் உள்ளக பொறி முறையில் நீதி கிடைக்காது என்ற வகையில் நாம் சர்வதேசத்தை வேண்டி நிற்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

எமது செய்தித் தளத்தில் விளம்பரமும் வருது, காசும் வந்திருக்கு என்று காட்டுது.ஒன்றும் புரியிதில்லையே.Facebook தான் பதில் த...
06/09/2025

எமது செய்தித் தளத்தில் விளம்பரமும் வருது, காசும் வந்திருக்கு என்று காட்டுது.ஒன்றும் புரியிதில்லையே.Facebook தான் பதில் தரனும்.

06/09/2025

பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் புதிய மாகாண சாதனையோடு தங்கப்பதக்கம் வென்ற தி/மூ/தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவன் றஸ்மி அஹ்ஸான் தட்டெறிந்த காணொளி.

20 வயதின் கீழ் தட்டெறிதலில் 1ஆம் இடம், 41.42 மீற்றர் தட்டெறிந்து புதிய #மாகாண #சாதனை

#வாழ்த்துக்கள் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் #சுஹைல்

புலமைப் பரிசில் பரீட்சையில்(2025) தோப்பூர் பாத்திமா முஸ்லிம் மகளீர் கல்லூரியிலிருந்து 04 மாணவிகள் வெட்டுப் புள்ளிக்கு மே...
06/09/2025

புலமைப் பரிசில் பரீட்சையில்(2025) தோப்பூர் பாத்திமா முஸ்லிம் மகளீர் கல்லூரியிலிருந்து 04 மாணவிகள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்து கோட்டமட்டத்தில் முதலிடம்.

கடந்த மாதம் நடந்து முடிந்த மேற்படி பரீட்சையில் தோப்பூர் பாத்திமா மகளிர் கல்லூரியின் மாணவிகளுள் 04 பேர்
வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர்.
இதில் 70புள்ளிகளுக்குக் மேல் பெற்றோரின்
அடைவு 80 வீதமாகும்.

வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவிகளின் விபரம்

1. NARUFEESH LEEZA HAYANI - 148
2. NAWSHATH AFA MANAAL - 145
3. MOHAMED IRFAN IFFATH RAAHA -143
4. JESMIN AAYISHA ZAINAB - 137

இதில் சித்தியடைந்த மாணவிகளுக்கும்
மாணவிகளின் வெற்றிக்காக முழுமையாக முயற்சி செய்த MT.Marsook ஆசிரியருக்கும், அவருக்கு உதவியாக இருந்த M.I.M.Irshad sir, N.M.Arshad sir ஆகியோருக்கும் , இம் மாணவிகளுக்கு தரம் 4 வரை கற்பித்த M.Ameerali sir, P.T Ismail sir அவர்களுக்கும் , பக்கபலமாக நின்ற முன்னால் ஆரம்பப்பிரிவு பகுதித்தலைவர் N.Ansar sir ,தற்போதைய ஆரம்பப்பிரிவு பகுதித்தலைவர் M.I.Irshad sir அவர்களுக்கும் ஏனைய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும்
இச்சந்தர்ப்பத்தில்
கோட்டக் கல்விப் பணிப்பாளரும் கல்லூரியின் அதிபருமாகிய APA. ஜபார் Sir அவர்கள்
பாராட்டுக்களையும் நன்றிகளையும்
தெரிவித்துகொள்கின்றார்.

Copied உதவி தேவை என்று சொன்னார்கள்.. வேலியை உடைத்து எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள்..குன்றின் ஆழம் ஆழமாக இருப்பதாக சொன்னா...
05/09/2025

Copied
உதவி தேவை என்று சொன்னார்கள்.. வேலியை உடைத்து எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள்..
குன்றின் ஆழம் ஆழமாக இருப்பதாக சொன்னார்கள்.. ஒரு கயிற்றைப் போட்டு கீழே இறங்கினார்கள்..
காயமடைந்தவர்களை மேலே தூக்க முடியாது என்று சொன்னார்கள்.. பாறைகளை உருட்டி கயிற்றின் வழியாக இழுத்து மேலே இழுத்தார்கள்..
வெளிச்சம் இல்லை என்றும் இருட்டாக இருக்கிறது என்றும் சொன்னார்கள்.. தூரத்திலிருந்து தங்கள் டார்ச் லைட்களை கூட ஒளிரச் செய்யத் தொடங்கினர்...

இறுதியாக, இறந்தவர்களின் உடல்கள் தோள்களில் தொங்கிக் கொண்டு மேலே வந்தன..

நான் ஏன் இந்தத் தீவை விட்டு வெளியேற விரும்பவில்லை என்று யாராவது என்னிடம் கேட்டால், முதலில் நினைவுக்கு வருவது இதுதான்....

இறப்பிலும் ஒருபோதும் கைவிடாத இலங்கை மக்களின் மனிதநேயம் 💚❤

பாருங்கள், இந்த நேரத்தில் இங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?
🫵 அதுதான் உங்கள் இரத்தத்தில் உள்ள வலிமையான மனிதநேயம் 🙏

500 அடி கீழே, தனியாகக் கூட இறங்க முடியாத சரிவுகள், பாம்புகள் வெளியே வரும் நேரம், தூறல் மழை, இருள், அடைய நினைக்கக்கூட முடியாத இடம்...

இரும்புகளை ஒவ்வொன்றாக அகற்றுதல் மற்றவர்களைக் காப்பாற்ற உங்கள் உயிரைப் பணயம் வைத்த துணிச்சலான மனிதர்களே, யாருக்கும் பிரச்சனையாக இருக்காதீர்கள்!! 🙏

ஓ, மனிதநேயத்திற்காக மற்றவர்களைக் காப்பாற்ற தங்கள் உயிரைத் தியாகம் செய்த தேசபக்தி மற்றும் மனிதாபிமான வீரர்களே... மனிதநேயத்தின் பெயரால் நீங்கள் அழியாதவர்களாக இருப்பீர்கள்...

பேருந்தில் இறந்த அனைத்து பயணிகளும் சாந்தியடையட்டும்..! 🙏
காயமடைந்தவர்கள், இலங்கையின் அன்பான மகன்களே, விரைவில் குணமடையட்டும்... 🙏

தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவர்கள் மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியி சாதனைள் நிகழ்த்தி தேசியம் வரை ச...
05/09/2025

தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவர்கள் மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியி சாதனைள் நிகழ்த்தி தேசியம் வரை செல்வதற்கு காரணமாக விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் சுஹைலுக்கு Trinco voice வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.

மட்டக்களப்பு, வெபர் விளையாட்டு மைதானத்தில் நேற்று (04) வியாழக்கிழமை நடைபெற்ற கிழக்கு மாகாண மெய்வல்லுநர் போட்டியில் கந்தள...
05/09/2025

மட்டக்களப்பு, வெபர் விளையாட்டு மைதானத்தில் நேற்று (04) வியாழக்கிழமை நடைபெற்ற கிழக்கு மாகாண மெய்வல்லுநர் போட்டியில் கந்தளாய் கல்வி வலயத்தின், தி/ஆயிஷா மகளிர் மகாவித்தியாலய மாணவி இப்திகார் சுல்பா 14 வயதின் கீழ் 100m ஓட்டப் போட்யில் 1 ஆம் இடத்தை பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

இவ் மாணவி 14.2 வினாடிகள் 100 மீற்றரை கடந்து புதிய மாகாண சாதனை நிலை நாட்டியுள்ளார்.

இம் மாணவியை நாமும் வாழ்த்துகின்றோம்.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தால் (JAICA) இலங்கையில் உள்ள 15 அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கும் அதிநவீன தொற்று கழிவு...
05/09/2025

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தால் (JAICA) இலங்கையில் உள்ள 15 அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கும் அதிநவீன தொற்று கழிவு எரியூட்டிகளின் அலகுகள்
நிறுவப்படவுள்ளன.

இதன் முதலாவது அலகை திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில், நிறுவுவதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று (5) இடம்பெற்றது.

இந்த விழா சுகாதார மற்றும்
வெகுசன ஊடகதுறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமாட்டா ஆகியோரின் பங்கேற்புடன் தொடங்கி வைக்கப்பட்டன.

இதன் போது அமைச்சர் உரையாற்றுகையில்,

ஜப்பான் நாட்டு மக்களின் நிதி உதவியுடன், கிழக்கு மாகாணத்துக்கான 8 மாடி கட்டடங்களை கொண்ட பிரதான இருதய சத்திர சிகிச்சை பிரிவு திருகோணமலை அமைய உள்ளதாகவும், இன்னும் ஆறு மாதங்களில், அதற்கான நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் கூறுகையில், சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில், அரசாங்கம் நாட்டில் ஐந்து வைத்தியசாலைகளை நவீனமயப்படுத்த திட்டங்கள் தீட்டிருப்பதாகவும், அதில்
திருகோணமலை வைத்தியசாலையும் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோன்று, நாட்டில் உள்ள 15 அரச வைத்தியசாலைகளுக்கு அதிநவீன தொற்று கழிவு எரியூட்டிகளின் அலகுகள் நிறுவப்பட உள்ளன. அதில் இன்று, திருகோணமலை வைத்தியசாலையிலே முதலாவதாக
ஆரம்பித்துள்ளோம். இதுவும் நாட்டின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும், அரசாங்கத்தின் திட்டத்துக்கு அமையவே என்றும் தெரிவித்தார்.

பண்டாரநாயக்கா சர்வதேச விமான விமான நிலைய அபிவிருத்தி திட்டம், கண்டி நகர கழிவு நீர் முகாமைத்துவ திட்டம், கொத்மலை நீர் சுத்திகரிப்பு திட்டம் உள்ளிட்ட அநேக நீர் மற்றும் வீதி அபிவிருத்திக்காக, ஜப்பானிய அரசாங்கம் அதிகமான உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதற்காக அந்த அரசாங்கத்துக்கும் நாட்டு மக்களுக்கும், இலங்கை மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் இயங்கி வரும், இருதய சிகிச்சை பிரிவையும் அமைச்சர் சென்று பார்வையிட்டதோடு, அவற்றின் செயற்பாடுகளையும் கேட்டு அறிந்து கொண்டார்.

இந்த நிகழ்வில், சுகாதார அமைச்சின் செயலாளர் நாயகம் அசேல குணவர்த்தன, ஜெயிகா நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கெஞ்சு குருநோமோ, திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளர் நாயகம் சந்தமாலி, கிழக்கு மாகாண அமைச்சர்கள், கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்கள ஊழியர்கள், மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், திருகோணமலை வைத்தியசாலை தாதியர்களின் நடன நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.

05/09/2025

2வது புதிய மாகாண சாதனையை நிலைநாட்டிய #தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி.

மட்டக்களப்பு, வெபர் விளையாட்டு மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (05) நடைபெற்ற கிழக்கு மாகாண மெய்வல்லுநர் போட்டியில் மூதூர் கல்வி வலயத்தின், தோப்பூர் அலஹம்றா மத்திய கல்லூரி மாணவன் ஆர்.எம்.அஹ்ஸான் தட்டெறிதல் போட்டியில் 41.42m தூரம் எறிந்து மீண்டுமொரு #கிழக்கு #மாகாண #புதிய #போட்டி #சாதனையை நிலைநாட்டி 1ஆம் இடத்தை பெற்று தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.அவரையும் பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர்களையும் நாமும் வாழ்த்துகிறோம்.

செம்மணி உட்பட இலங்கையில் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் ,நடைபெற்ற இனப்படுகொலைக்குமான சர்வதேச நீதி...
05/09/2025

செம்மணி உட்பட இலங்கையில் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் ,நடைபெற்ற இனப்படுகொலைக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை (05) மாலை திருகோணமலை - வெருகல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இதில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டு கையெழுத்துக்களை விட்டதையும் காண முடிந்தது.

கையெழுத்து இடம்பெற்ற இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் வருகை தந்தார்.இதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

மாகாண மட்ட போட்டியில் தோப்பூர் - #ஜின்னாநகர் தி/மூ/ அல் தாஜ் மகா   வித்தியாலய மாணவன்   MR.Rusaid உயரம் பாய்தல் நிகழ்ச்சி...
05/09/2025

மாகாண மட்ட போட்டியில் தோப்பூர் - #ஜின்னாநகர் தி/மூ/ அல் தாஜ் மகா வித்தியாலய மாணவன் MR.Rusaid உயரம் பாய்தல் நிகழ்ச்சியில் 18 வயதின் கீழ் #இரண்டாம் இடத்தைப் பெற்று #தேசிய மட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அடுத்து நடைபெற்ற ஈட்டி எறிதல் நிகழ்ச்சியிலும் வெண்கலப்பதக்கத்தைப் பெற்று இரண்டு நிகழ்வில் தேசியமட்டம் தெரிவாகும் வாய்ப்பைப் பெற்று பாடசாலைக்கும் வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இம் மாணவன் 1.80M தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும் 48.53 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இப்பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியை திருமதி. தர்ஷா அழைத்துச்சென்ற ஆசிரியர் ஜெம்சீல் முன்னால் பயிற்றுவிப்பாளர் றிபாய் ஏனைய ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் பாடசாலையின் முதல்வர் எம்.எம்.நௌபீக் ஆகியோருக்கும் பாடசாலை சமூகம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

05/09/2025

பலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் எனும் தொணிப் பொருளிலௌ மூதூரில் இன்று வெள்ளிக்கிழமை (05) ஜும்ஆ தொழுகையின் பின்னர் அமைதிப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

மற்றும் மூதூர் சிவில் அமைப்புக்களின் ஒன்றியம் இவ் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.

மூதூர் -அக்கரைச்சேனை ஜும்ஆ பள்ளிவாசலிலிருந்து ஆரம்பமான இப்பேரணி பிரதான வீதியூடாகச் சென்று மூதூர் பிரதேச செயலக முன்றலை சென்றடைந்தது.

அமைதிப் பேரணியில் ஈடுபட்டோர் சுலோகங்களை ஏந்தி கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

பலஸ்தீனத்துக்காக ஒன்றிணைவோம் எனும் தொணிப் பொருளில் இடம்பெற்ற பேரணியில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Address

Trincomalee
31250

Telephone

+94773785456

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trinco voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share