Trinco voice

Trinco voice social service
(1)

31/05/2026

தோப்பூரைச் சேர்ந்த சஹீட் முஹமட் ஹிஸாம் என்பவரது பணப்பை கிண்ணியா பொழுதுபோக்கு பூங்கா கடற்கரையில் வைத்து நேற்று (30) இரவு காணாமல் போயுள்ளது.

இதில் பெருந்தொகை பணம் உள்ளதினால் யாராவது கண்டெடுத்தால் கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு ஒப்படைக்கவும் .

குறிப்பு -தகுந்த சன்மானம் வழங்கப்படும்.

தொடர்புகளுக்கு -0773495953

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஆவணங்களை  திருடிய இருவருக்கு  விளக்கமறியல்திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் விசார...
31/05/2026

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஆவணங்களை திருடிய இருவருக்கு விளக்கமறியல்

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள ஒரு நில வழக்கு தொடர்பான ஆவணங்களை திருடியதாக குற்றச்சாட்டப்படும் இரண்டு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எஸ்.எம். அன்பார் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை துறைமுக பொலிஸார் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பிலான ஆவணம் திருடப்பட்டமை தொடர்பாக மாவட்ட நீதிமன்ற பதிவாளர் ராயப்பு ஜோமெல் ராய் குரூஸ், திருகோணமலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து, பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு சந்தேக நபர்களை கைது செய்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விசாரணை செய்த போது வழக்கு தொடர்பான ஆவணம் கிண்ணியாவில் உள்ள சந்தேக நபரது இல்லத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த ஆவணத்தை திருடுவதற்கு உதவிய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக துறைமுக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

திருகோணமலை மாவட்ட நீதிபதி கருப்பையா ஜீவராணி, மாவட்ட நீதிமன்றத்தின் இரண்டு ஊழியர்களால் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்டது குறித்து மேலும் விசாரணை நடத்துமாறு நீதித்துறை சேவை ஆணைக்குழுவிற்குத் தெரிவிக்குமாறு மாவட்ட நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

31/05/2026

தோப்பூரைச் சேர்ந்த என்.எம்.நபீஸ் என்பவருடைய பணப்பை தோப்பூரிலிருந்து பள்ளிக்குடியிருப்பு ஊடாக ஈச்சிலம்பற்று செல்லும் வழியில் நேற்று காணாமல் போயுள்ளது.அதில் ஒரு தொகை பணம் காணப்படுகிறது.

யாராவது பணப்பையை கண்டெடுத்தால் கீழுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல் வழங்கவும்.

தொலைபேசி இலக்கம் -0752595643

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள , மூதூர் அமினா வித்தியாலயத்திற்கு அருகில் இன்று (30) காலை இடம் பெற்ற முச்சக்...
30/05/2026

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள , மூதூர் அமினா வித்தியாலயத்திற்கு அருகில் இன்று (30) காலை இடம் பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் மூவர் சிறு காயமடைந்துள்ளனர்.

ஒலுவில் துறைமுகப் பாதிப்பு குறித்து பேசிய ஜனாதிபதி ஏன் கொழும்பு போர்ட்சிட்டடி பாதிப்பு குறித்து பேசவில்லை? இம்ரான் எம்.ப...
30/05/2026

ஒலுவில் துறைமுகப் பாதிப்பு குறித்து பேசிய ஜனாதிபதி ஏன் கொழும்பு போர்ட்சிட்டடி பாதிப்பு குறித்து பேசவில்லை? இம்ரான் எம்.பி கேள்வி
--+-+++

ஒலுவில் துறைமுகம் நிர்மாணம் விஞ்ஞான ரீதியாகப் பரிசீலிக்கப்பட்டது அல்ல என்றும் அதனால் கடலரிப்பு ஏற்படுவதாகவும் பேசிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஏன் கொழும்பு போர்ட்சிட்டடி நிர்மாணத்தினால் ஏற்பட்ட கடலரிப்பு குறித்து பேசவில்லை என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் (30) சந்திப்பில் இன்று கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது

அண்மையில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி ஒலுவில் துறைமுக நிர்மாணம் குறித்து கருத்து தெரிவிக்கையில் அது விஞ்ஞான ரீதியான சாத்தியக் கூற்று அறிக்கை பெறப்படாது அரசியல் நோக்கத்திற்காக நிர்மாணிக்கப்பட்டது என்றும் அதனால் தான் கடலரிப்பு ஏற்படுவதாகவும் கூறினார்.

இவரின் இந்தக் கருத்து அரசியல் நோக்கம் கொண்டது. மறைமுகமாக முன்னாள் அமைச்சர் மர் ஹூம் அஷ்ரப் அவர்களை குறைகூறும் நோக்கம் கொண்டது.

உண்மையில் இந்தத்துறைமுகம் ஆய்வுகள் எதுவுமின்றி நிர்மாணிக்கப்பட்டது என்றால் கடந்த 2 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் அவர் ஏன் இது குறித்து இதுவரை மாற்று நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை அல்லது இது குறித்து ஏன் முன்னர் கருத்து ஏதும் தெரிவிக்க வில்லை என்று கேட்க விரும்புகிறேன்.

அம்பாறை மாவட்டத்திற்கு வந்து தானா இந்தக் கருத்தை அவர் சொல்ல வேண்டும். அவர் இந்தக் கருத்தை இப்போது சொல்வதற்கு காரணம் அம்பாறை மாவட்ட மக்களின் மனங்களில் வாழும் மறைந்த மாமனிதர் அஷ்ரஃப் குறித்து குறைசொல்ல வேண்டும் என்ற நோக்கமே தவிர வேறில்லை.

கொழும்பு போர்ட் சிட்டி நிர்மாணமும் எவ்வித சுற்றாடல் ஆய்வுகளுமின்றி ஆரம்பிக்கப்பட்டது தான். இதனால் உஸ்வெட்டக் கெய்யாவ, வென்னப்புவ, நீர்கொழும்பு போன்ற பகுதிகள் அரிக்கப்படவதாக சூழலியாளர்கள் குறிப்பிடுகின்றனர். கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதாகவும், கடலின் அடியில் உள்ள வளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து ஜனாதிபதி எங்காவது பேசியுள்ளாரா? ஜனாதிபதியின் ஆட்சியில் கிழக்குக்கு ஒரு சட்டம் மேற்கிற்கு ஒரு சட்டமா?

இவ்வளவு பாதிப்புகள் போர்ட் சிட்டியினால் ஏற்பட்டும் கூட அதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளையும் தேவையன ஏனைய சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்து வருகின்றது

எனவே, ஜனாதிபதி ஒலுவில் துறைமுகம் குறித்து தெரிவித்த கருத்து மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களை குறை சொல்லும் நோக்கம் கொண்டதே தவிர வேறு இல்லை என்பது தெளிவாகின்றது.

வெசாக் தினத்தை முன்னிட்டு திருகோணமலை -சேருவில ரஜ மஹா விகாரையில் குளிர்பான தன்சல் இன்று சனிக்கிழமை (30) வழங்கி வைக்கப்பட்...
30/05/2026

வெசாக் தினத்தை முன்னிட்டு திருகோணமலை -சேருவில ரஜ மஹா விகாரையில் குளிர்பான தன்சல் இன்று சனிக்கிழமை (30) வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு பௌத்த மத சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்றதோடு சேருவில ரஜ மஹா விகாரை வளாகப் வெசாக் கூடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதையும் காணமுடிந்தது.

அதேவேளை நாட்டின் பல பாகங்களிலிருந்தும் சேருவில ரஜ மஹா விகாரைக்கு அதிகமான பௌத்த மக்கள் வருகை தந்து சமய கடமைகளில் ஈடுபட்டதையும் காணமுடிந்தது .

වෙසක් දිනය නිමිත්තෙන් සෙනසුරාදා (30) ත්‍රිකුණාමලයේ චෙරුවිල රජමහා විහාරස්ථානයේදී ප්‍රබෝධමත් පානයක් පිළිගැන්වීමක් සිදු කරන ලදී.

බෞද්ධ ආගමික වතාවත් ද පැවැත්වූ අතර චෙරුවිල රජමහා විහාර පරිශ්‍රය වෙසක් පහන් කූඩු වලින් සරසා තිබුණි.

ඒ සමඟම, දිවයිනේ බොහෝ ප්‍රදේශවලින් පැමිණි බෞද්ධයින් විශාල පිරිසක් චෙරුවිල රජමහා විහාරස්ථානයට පැමිණ ආගමික කටයුතුවල නිරත වූහ.

இன்று (29) வெள்ளிக்கிழமை மாலை 2.30 மணியளவில் மூதூர் 3Cd சந்தில் நடைபெற்ற விபத்தில் ஒருவர் மூதூர் தள வைத்தியசாலையில் , இர...
29/05/2026

இன்று (29) வெள்ளிக்கிழமை மாலை 2.30 மணியளவில் மூதூர் 3Cd சந்தில் நடைபெற்ற விபத்தில் ஒருவர் மூதூர் தள வைத்தியசாலையில் , இருவர் மூதூரில் இருந்து திருகோணமலைக்கு இடமாற்றம்.

29/05/2026

லியாக்கத்தலிக்கான் சதாஹீர் என்பவரின் மகளின் தங்கச் சங்கிலி தோப்பூர் #புளியடியில் வைத்து நேற்று வியாழக்கிழமை (28) இரவு காணாமல் போயுள்ளது.

இதனை யாராவது கண்டெடுத்தால் கீழுள்ள தொலைபேசி இலக்கத்துடன் ஒப்படைக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் .

தொலைபேசி இலக்கம் -0758927825

28/05/2026

Trinco voice செய்திப் பிரிவின் தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்.

ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று வியாழக்கிழமை (28) காலை 6.30 மணிக்கு இடம்பெற்றது.இ...
28/05/2026

ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று வியாழக்கிழமை (28) காலை 6.30 மணிக்கு இடம்பெற்றது.

இதனை மூதூர் அல் ஹஸனாஹ் சமூக அபிவிருத்தி மையம் ஏற்பாடு செய்திருந்தது.

அதிகளவான இஸ்லாமிய மக்கள் தொழுகையில் ஈடுபட்டதோடு தங்களுக்குள் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டதையும் காணமுடிந்தது.

இப்ராஹீம் நபி அவர்கள் செய்த தியாகத்தை நினைவு கூறும் வகையில் இஸ்லாமிய மக்கள் ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Address

Trincomalee
31250

Telephone

+94773785456

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trinco voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share