Trinco voice

Trinco voice social service

25/06/2025

பாலமுனை அமைப்பாளர் அலியார் அவர்களுக்கு Get-out சொன்ன ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்.

காரணம் தெரிந்தால் பதிவிடவும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஆணையாளர் திருகோணமலை விஜயத்தை முன்னிட்டு அவரை வரவேற்கும் முகமாகவும், வடக்கு, ...
25/06/2025

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஆணையாளர் திருகோணமலை விஜயத்தை முன்னிட்டு அவரை வரவேற்கும் முகமாகவும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் அவசரமான மனித உரிமை நிலைமைகள் மற்றும் குறைபாடுகளை அவருடைய கவனத்திற்கு கொண்டு செல்லவும் அமைதியான கவனயீர்ப்பு நடவடிக்கை இன்று (25) திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த நடவடிக்கையினை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம், சிவில் அமைப்புக்கள் மற்றும் வடக்கு கிழக்கு சமூக இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டுர்க் இன்றைய (25) புதன்கிழமை திருகோணமலை -ஜுப்லி மண்டபத்திற்கு விஜயம் மேற்கொண்டு சிவில் செயற்பாட்டாளர்களை சந்தித்த நிலையில் அவருடைய கவனத்தை ஈர்க்கும் முகமாக ஜுப்லி மண்டபத்தின் முன்பாக பாதிக்கப்பட்ட சமூகங்கள், குடிமைப் பூர்வ அமைப்புகள், மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது கவனயீர்ப்பில் கலந்து கொண்டோரை மனித உரிமை உயர்ஸ்தானிகர் சந்தித்து கலந்துரையாடியதோடு அவர்களிடமிருந்து மகஜர்களையும் பெற்றுக் கொண்டார்.

இதன்போது, இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடைபெற்ற இன அழிப்பை (Genocide) விசாரித்து குற்றவாளிகளை வழக்குப் பூர்வமாக தண்டிக்க ஒரு சர்வதேச குற்றவியல் நீதித்துறை முறைமை அமைக்கப்பட வேண்டும்.
செம்மணி, கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கூட்டு மனித புதை குழி விடயம் தொடர்பாக சர்வதேச நீதிமன்ற மற்றும் நிபுணத்துவ குழுக்களுக்கு அணுகுவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் (ICC), அல்லது சர்வதேச நீதிமன்றத்திற்கும் (ICJ) – போர் குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள், மற்றும் இன அழிப்பு குற்றங்கள் ஆகியவற்றுக்காக பரிந்துரை செய்ய வேண்டும்.
தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழும் பிரதேசங்களில் அரசால் முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புகளை உடனடியாக நிறுத்தி, உரிய உரிமையாளர்களுக்கு நிலங்களை மீளளிக்க வேண்டும்.
தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு தளங்களை அழிக்கும் செயற்பாடுகளை (Sinhalisation) நிறுத்த வேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே? அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா?
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர் ஆணையாளர் அலுவலகம் (OSLAP) நடத்திய இலங்கை பொறுப்புக்கூறும் திட்டம் – 1948இல் தொடங்கிய தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறையின் மற்றும் இன அழிப்பின் முழு வரலாற்றையும் உள்ளடக்கி அறிக்கையிட வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை முன்நிறுத்தி அமைதியான முறையில் கவனயீர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


அதேவேளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் ஊடகப் பேச்சாளர் ஜெரமி லோரன்ஸ் ஆணையாளரின் இலங்கை வருகை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

25/06/2025

மன்னார் நகரசபை வளாகத்தில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் நபர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார் #மன்னார்

மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.பிரகலாதன் தோப்பூர் அஷ்ரப் பொது விளையாட்டு மைதானத்திற்கு இன்று செவ்வாய்கிழமை விஜயம் மே...
24/06/2025

மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.பிரகலாதன் தோப்பூர் அஷ்ரப் பொது விளையாட்டு மைதானத்திற்கு இன்று செவ்வாய்கிழமை விஜயம் மேற்கொண்டார்.இதன்போது யானையின் தாக்குதலுக்குள்ளாகி சேதமாகியுள்ள மைதான சுற்றுவேலியினையும் பார்வையிட்டார்.அத்தோடு கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவரோடு மைதான நிலமை தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

இதன் போது மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர்களான ஏ.ஜி.நிஸ்மி, எம்.ஐ.பாஹிம்,மூதூர் பிரதேச சபையின் செயலாளர் ,தோப்பூர் உப அலுவலக பொறுப்பதிகாரி ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

24/06/2025

தோப்பூரில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்து தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து படி ரக வாகனத்துடன் மோதியதிலே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தோப்பூர் சின்னக்கல்வான் பாலத்தில் வைத்து இன்று மாலை விபத்து. இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக...
24/06/2025

தோப்பூர் சின்னக்கல்வான் பாலத்தில் வைத்து இன்று மாலை விபத்து. இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைப்பு.

24/06/2025

குச்சவெளி பிரதேச சபை SLMC வசமானது. தவிசாளராக
A. முபாரக் தெரிவு.

24/06/2025
23/06/2025

கட்டாரிலுள்ள அமெரிக்க தளங்கள் நோக்கி ஈரான் சற்று நேரத்திற்கு முன்னர் ஏவுகணை தாக்குதல்.

23/06/2025

கட்டாரிலுள்ள அமெரிக்க தளங்கள் நோக்கி ஈரான் தாக்குதல் மேற்கொள்வதாகவும் தாம் அச்சத்துடன் இருப்பதாகவும் நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

23/06/2025

மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற போது இரகசிய வாக்கெடுப்பு நடைபெற வேண்டுமென சபையை விட்டு வெளிநடப்புச் செய்த சுயாதீன உறுப்பினர் புஹாரி நஸீர்.

Address

Trincomalee
31250

Telephone

+94773785456

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trinco voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share