Agaram Tv

Agaram Tv திருகோணமலையின் முதல்தர ஒளிபரப்புச் சேவை

13/07/2026

சுற்றுலாப்பயணியை உயரத்திற்குத் தூக்கி வீசிய காட்டெருமை.!!

அமெரிக்காவின் புகழ்பெற்ற எல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணி ஒருவர் அங்கிருந்த அமெரிக்கக் காட்டு எருமையின் மிகக் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்துள்ளார்.

சுற்றுலாப் பயணி எருமையின் மிக அருகில் சென்றபோது, ஆத்திரமடைந்த எருமை அவரைத் தனது கொம்புகளால் முட்டி காற்றில் சுமார் 8 அடி உயரத்திற்குத் தூக்கி வீசியுள்ளது.

நெஞ்சைப் பதறவைக்கும் இந்த முழுத் தாக்குதல் சம்பவத்தையும் அங்கிருந்த புகைப்படக் கலைஞர் மைக் மேக்லியோட் தனது கேமராவில் வீடியோவாகப் படம் பிடித்துள்ளார்.

வனவிலங்குகளுக்கு மிக அருகில் செல்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்தும் இந்த அதிர்ச்சியூட்டும் #வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

பலத்த காயமடைந்த அந்தச் சுற்றுலாப் பயணி தற்போது அவசர மருத்துவச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

07/07/2026

ராஜஸ்தானில் இடம்பெற்ற கொடூரம் 13 வயது பெண் பிள்ளையை கடத்தி 32 பேர், 5 நாட்கள் ஹோட்டலில் மகா பாலியல் வன்கொடுமை!!

இந்த நிலையில்,குறித்த 32 பேரையும் பிடித்த பொது மக்கள் அவர்களை
கயிற்றால் கட்டி,வீதியில் வைத்து தாக்குதல்
விடியோ சமூக ஊடகங்களில்
பெரும் வைரலாகியுள்ளது.

07/07/2026

மட்டக்களப்பு நகரிலுள்ள பேபி கிட்ஸ் வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிவதையும் அதனை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு, பொலிஸார், பிரதேச வாசிகள் ஆகியோர் தீவிர முயற்சி எடுப்பதையும் காணொளியில் காணலாம்.

02/07/2026

பௌத்த பிக்கு ஒருவரை கன்னத்தில் அறைந்த நபர்!!

பிக்குவை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

02/07/2026

யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழப்பு!!

ஏற்கனவே 3 உயிர்களைப் ப*லிவாங்கிய 'முத்து' யானை
பாசமாக ரொட்டி கொடுக்கச் சென்ற உரிமையாளரின் மாமாவையும் அடித்தே கொன்ற கொடூரம் கண்டி மெனிக்ஹின்னவில் #அதிர்ச்சி சம்பவம்!!

29/06/2026

திருகோணமலை
யாழ்ப்பாணம் வீதியில் பயணிக்கும் யாழ்ப்பாணம் டிப்போவிற்குச் சொந்தமான பேருந்து ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனரின் நடத்தை மிகவும் அநாகரிகமான செயல் பயணிகள் கடும் விசனம்

27/06/2026

பாக்கியராஜ் மற்றும் பாரதிராஜா அவர்களிற்கு சமர்ப்பணம்....🙏🙏🙏

27/06/2026

🚨
தியதலாவையில் இடம்பெற்ற பேருந்து விபத்து.!!

தியாத்தலாவாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து இரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 40 பயணிகள் காயமடைந்துள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பேருந்து பயணித்துக் கொண்டிருந்த போது, அதன் பிரேக் (Breake) திடீரென செயலிழந்ததே இந்த விபத்துக்குக் முக்கிய காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. பிரேக் செயலிழந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, வீதியை விட்டு விலகி அருகில் இருந்த இரயில் பாதையில் தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது.

விபத்து நடந்த உடனே அப்பகுதி மக்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து அதிவேகமாக மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர். விபத்தில் காயமடைந்த 40 பயணிகளும் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள தியாத்தலாவை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேருந்து இரயில் தண்டவாளத்தின் மேல் கவிழ்ந்துள்ளதால், அந்தப் பாதையிலான இரயில் போக்குவரத்து தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் உள்ள பேருந்தை அகற்றி, பாதையை வழமைக்குக் கொண்டு வரும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தியாத்தலாவை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

26/06/2026

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளித்து , பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த டொல்பின் ரக வாகனம்..!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளித்து , பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த டொல்பின் ரக வாகனம் தொடர்பில் பொலிஸார் விசரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கிளாலி பகுதியில் இருந்து அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் இரண்டு டிப்பர் வாகனங்களில் மணல் ஏற்றி வருவதாக , சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , கொடிகாமம் - புத்தூர் வீதியில் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

அதன் போது குறித்த இரண்டு டிப்பர் வாகனமும் அவ்வீதியூடாக வந்த போது அதனை வழி மறித்துள்ளனர். டிப்பர் சாரதிகள் பொலிசாரின் கட்டளையை மீறி தப்பியோடியுள்ளனர்.

அதனை அடுத்து பொலிஸார் டிப்பர் வாகனத்தை மடக்கி பிடிக்கும் நோக்குடன் துரத்தி சென்ற வேளை , குறித்த இரண்டு டிப்பர் வாகனங்களுக்கும் பாதுகாப்பாக பின் தொடர்ந்து வந்த டொல்பின் ரக வாகனம் , பொலிஸார் டிப்பர் வாகனத்தை நெருங்க விடாது , போக்குவரத்திற்கு இடையூறாகவும் , ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தி சென்றனர்.

இருந்த போதிலும் , வாகனங்களை இடைவிடாது பொலிஸார் தொடர்ந்து பின் தொடர்ந்த நிலையில் ஒரு டிப்பர் வாகனத்தை மடக்கி பிடித்து , அதன் சாரதியை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சாரதியையும் மீட்கப்பட்ட டிப்பரையும் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை , தப்பி சென்ற மற்றைய டிப்பர் வாகனம் தொடர்பில் , டிப்பர் வாகனத்திற்கு பாதுகாப்பாக பின் தொடர்ந்து , போக்குவரத்திற்கு இடையூறாகவும் , ஆபத்தான முறையில் வீதியில் வாகனம் செலுத்தி சென்றமை , பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றங்களுக்காக டொல்பின் வாகனம் தொடர்பிலும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

18/05/2026

வெள்ளவத்தை கடற்கரையில் மக்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த போது சில காடையர்கள் அவ்விடத்தில் ஒன்றுகூடி நிகழ்வை குழப்பும் விதமாக கூக்குரலிட்டனர்

பொலிஸார் தடுத்த போதும் அதனை மீறியதாக அவர்களின் கூக்குரல் இருந்தது

நிகழ்வு முடிந்து வீடு திரும்பும் போது மக்களை அச்சுறுத்தும் விதமாக கொட்டியா கொட்டியா என அவர்களை நோக்கி கத்தினர்

Address

T. G/20, Mitsui Housing Scheme Nilaveli Road Trincomalee
Trincomalee
31000

Telephone

+94757120312

Website

Alerts

Be the first to know and let us send you an email when Agaram Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Agaram Tv:

Shortcuts

Share