Trinco Media

Trinco Media எமது சேவைகள் : செய்தி, பொழுதுபோக்கு, விளம்பரம், அறிவித்தல் மற்றும் பல

தேவைப்படும் போது தான் பொருளின் மதிப்பு புரிகிறது......🥹
31/10/2025

தேவைப்படும் போது தான் பொருளின் மதிப்பு புரிகிறது......🥹

குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ரூபா 5 லட்சம் பணத்தை லஞ்சமாக பெற முனைந்தபோது கையும் களவுமாக பிடிபட்டு பொலிஸாரினால் கைது செ...
31/10/2025

குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ரூபா 5 லட்சம் பணத்தை லஞ்சமாக பெற முனைந்தபோது கையும் களவுமாக பிடிபட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பத்தாயிரம் கிலோவுக்கு அதிகமான பூசணியை சந்தைப்படுத்த முடியாது அவதிப்படும் விவசாயி****************************************...
30/10/2025

பத்தாயிரம் கிலோவுக்கு அதிகமான பூசணியை சந்தைப்படுத்த முடியாது அவதிப்படும் விவசாயி
*********************************************************************

முல்லைத்தீவு மாவட்டம் சுதந்திரபுரம் கொலணியை சேர்ந்த விவசாயி ஒருவர் தான் அறுவடை செய்த சுமார் 10 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான பூசணிக்காயை
சந்தைப்படுத்த முடியாது ஒரு மாத்திற்கு மேலாக பெரும் கவலையில் காணப்படுகின்றார்.

மேற்படி பிரதேசத்தை சேர்ந்த துரை என அழைக்கப்படுகின்ற கமலராஜன் என்ற
விவசாயி சுமார் நான்கு ஏக்கர் காணியில் பூசணியை பயிரிட்டுள்ளார். இதற்காக சுமார் நான்கு இலட்சம் வரை செலவும் செய்திருகின்றார். இந்த நிலையில்
பூசணிக்காய்களை அறுவடை செய்து விற்பனை செய்வதற்காக சந்தைக்கு கொண்டு சென்ற போது அவரால் அதனை சந்தைப்படுத்த முடியவில்லை. ஆரம்பத்தில் கிலோ 20 ரூபாவுக்கு கேட்டுள்ளனர். இப்போது அந்த விலைக்கும் எவரும் கொள்வனவு
செய்வதாக இல்லை எனத் தெரிவித்த அவர்.

சந்தைக்கு கொண்டு சென்ற பூசணிக்காய்களை மீண்டும் வீட்டுக்கொண்டு வந்து குவித்து வைத்திருகின்றார். இவை நாளுக்கு நாள் பழுதடைந்தும் செல்கிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லை என கூறும் அவர். விவசாயத்தை
கைவிட்டுவிடுவோமா என்ற மனநிலை தோன்றுவதாகவும் தெரிவித்தார்

துரை என அழைக்கப்படுகின்ற கமலராஜன்
அழைக்கவும் 0778172310

திருகோணமலை கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள சிவப்பு நண்டுகள்! எச்சரிக்கை ⚠️ இவை உண்பதற்கு உகந்தவையல்ல! திருகோணமலை உட்துறைமுக...
30/10/2025

திருகோணமலை கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள சிவப்பு நண்டுகள்! எச்சரிக்கை ⚠️ இவை உண்பதற்கு உகந்தவையல்ல!

திருகோணமலை உட்துறைமுகவீதி கடற்கரையில் பெருமளவான சிவப்புநிற நண்டுகள் கரை ஒதுங்கி வருகின்றன. இதில் பெருமளவான நண்டுகள் இறந்த நிலையிலும் சில நண்டுகள் உயிருடனும் கரை ஒதுங்கி வருகின்றன.

அத்துடன் இந்த சிவப்பு நண்டுகள் உணவுக்கு பயன்படுத்த கூடாது என மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

கராத்தே போன்ற தற்காப்பு கலை வகுப்புகளுக்கு உங்க பிள்ளைகளை அனுப்புங்கள். காலத்தின் கட்டாயம் அது.விளையாட்டு உடற்பயிற்சி கல...
26/10/2025

கராத்தே போன்ற தற்காப்பு கலை வகுப்புகளுக்கு உங்க பிள்ளைகளை அனுப்புங்கள். காலத்தின் கட்டாயம் அது.

விளையாட்டு உடற்பயிற்சி கலைப்பயிற்சி என்பன எப்பவுமே ஒரு ஒழுக்கத்தை தரும்.

#போதைப்பழக்கங்களை பழகி வீணாகப் போகாம அது தடுக்கும்.

இன்றைய குற்றங்கள் நிறைந்த சமூகத்தில் இரவில் மட்டுமன்றி பகலிலும் வெளியே நடமாட பயமான சூழல்.

ஆணே பெண்ணே தற்காப்பு என்பது மிகமுக்கியம்.

தன்னை தற்காத்துக்க கொள்ள முடியாமல் நல்லவன் என்ற பட்டம் யாருக்கு வேணும்?

திருகோணமலை! 💕 🦌🌿🍃🌱🫰
25/10/2025

திருகோணமலை! 💕 🦌🌿🍃🌱🫰

கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் தங்கியிருந்தம...
25/10/2025

கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் தங்கியிருந்தமை தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட பொலீஸ் குழுவிடம் அம்பாள்குளம் பகுதியில் சிக்கிய கஞ்சா

24/10/2025

யாழில், 20 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெறுவதற்கு மறுத்த பொலிஸ் புலனாய்வாளர் சுதர்சனுக்கு பலரும் பாராட்டு!

போலி முகநூல் ஊடாக அல்லது பிற இணைய தளங்கள் ஊடாக ஒருவரை அவதூறாக சித்தரிப்பது மற்றும் ஒருவர் பற்றிய அவதூறான தகவல்களை பிற நப...
24/10/2025

போலி முகநூல் ஊடாக அல்லது பிற இணைய தளங்கள் ஊடாக ஒருவரை அவதூறாக சித்தரிப்பது மற்றும் ஒருவர் பற்றிய அவதூறான தகவல்களை பிற நபருக்கு அனுப்பி அவரை அவதூறு பரப்ப சொல்லி தூண்டும் நபர்களுக்கான சட்ட நடவடிக்கைகள்

பொருந்தும் சட்டங்கள் (இலங்கை)

(a) Penal Code – Sections 479, 480, 481, 485, 486
இவை அவதூறு (Defamation) பற்றிய பிரிவுகள்.
ஒருவரின் கண்ணியத்தை பாதிக்கும் வகையில் பொய்யான தகவல்கள் பரப்பினால்,
அது குற்றச்சாட்டு (Criminal Defamation) ஆகும்.

தண்டனை: அபராதம் அல்லது சிறைத் தண்டனை (2 ஆண்டுகள் வரை).
(b) Computer Crimes Act No. 24 of 2007

இணையம், சமூக ஊடகம், அல்லது மின்னஞ்சல் மூலம் அவதூறு, மிரட்டல், அல்லது தவறான தகவல் பரப்பினால்,

இது சைபர் குற்றமாக (Cyber Crime) கருதப்படும்.

தண்டனை: அபராதம் + சிறைத் தண்டனை (3–5 ஆண்டுகள் வரை).

(c) ICCPR Act No. 56 of 2007 – Section 3(1)

ஒருவரை சமூக, இன, மத அடிப்படையில் அவதூறு செய்வது அல்லது வெறுப்பு தூண்டுவது

குற்றம் (Offence under ICCPR Act) ஆகும்.

தண்டனை: அதிகபட்சம் 10 ஆண்டு சிறைத் தண்டனை.
(d) Telecommunications Act No. 27 of 1996 – Section 62

தொலைத்தொடர்பு சாதனங்களை (பேசி, இணையம்) பயன்படுத்தி ஒருவரை அவதூறு செய்வது அல்லது தொந்தரவு செய்வது
தண்டனை: அபராதம் + சிறைத் தண்டனை (2 ஆண்டுகள் வரை).

📕 2. பிறரை அவதூறு செய்ய சொல்லி தூண்டுவது (Instigation)

மற்றவரை ஒருவரை பற்றி பொய்யான தகவல் பரப்ப சொல்லுதல்,
Penal Code Section 100 – Abetment (தூண்டல்) படி குற்றம்.
அதே தண்டனை மூல குற்றவாளிக்கு உள்ளபடி தூண்டுபவருக்கும் வழங்கப்படும்.
அதாவது, நீங்கள் நேரடியாக அவதூறு செய்தவர் போலவே குற்றவாளி எனக் கருதப்படுவீர்கள்.

⚖️ 3. புகார் செய்யும் வழிமுறை

1. சைபர் குற்றப் பிரிவு (Cyber Crime Division), CID, கொழும்பு 01
அல்லது
உங்கள் பிராந்திய காவல் நிலையம்
வழியாக புகார் செய்யலாம்.
2. ஆதாரங்களாக கீழ்வரும் விஷயங்களை வழங்கவும்:
அவதூறு பதிவின் ஸ்கிரீன் ஷாட்கள்
போலி கணக்கின் இணைப்பு (URL)
பதிவின் தேதி/நேரம்
செய்தி பரிமாற்றங்களின் நகல்கள் (அனுப்பியவர் பெயர், chat screenshot)

⚠️ 4. முக்கிய நினைவூட்டல்

“மற்றவர் சொன்னது” என்று கூறியும், அல்லது “நான் பகிர்ந்ததுதான்” என்றாலும்,
அது அவதூறு பரப்பல் ஆகும்.

“அறியாமலே பகிர்ந்தேன்” என்றாலும், நீங்கள் பொறுப்பேற்க வேண்டும்.

இத்தகவலை எல்லோருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்

இன்று 23/10/2025 காலை இலங்கையில் தங்க விலை நிலவரம்!கடும் வீழ்ச்சியில் தங்கத்தின் விலை! கடந்த சில வாரங்களிற்கு முன் ரூபா ...
23/10/2025

இன்று 23/10/2025 காலை இலங்கையில் தங்க விலை நிலவரம்!
கடும் வீழ்ச்சியில் தங்கத்தின் விலை!
கடந்த சில வாரங்களிற்கு முன் ரூபா நான்கு இலட்சம் வரை தங்கத்தின் விலை உயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்வியில் உயரும் திருகோணமலை! அன்மைய நாட்களில் பிரதான நகர் பகுதிக்கு வெளியில் இருந்து பல மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெர...
23/10/2025

கல்வியில் உயரும் திருகோணமலை! அன்மைய நாட்களில் பிரதான நகர் பகுதிக்கு வெளியில் இருந்து பல மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவாகி வருவது மிகவும் மகிழ்ச்சியான விடயம்!

அகில இலங்கை அழகியக் கலை சித்திர போட்டியில் குச்சவெளி தி/தி-அந்நூரியா முஸ்லிம் மகா வித்யாலய மாணவி இப்ராஹிம் நஸ்ரானா தேசிய மட்டத்திற்கு தெரிவாகியிருந்தார்.

கடந்த வாரம் கொழும்பு இசிபதன கல்லூரியில் நடைபெற்ற அகில இலங்கைதேசிய மட்ட சித்திரப் போட்டிக்கு சென்று பாடசாலைகளுக்கும் மற்றும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அந்த மாணவிக்கும் அவரை வழி நடத்திய ஆசிரியை மற்றும் அதிபருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

திருகோணமலையில் பல கிராம பகுதிகளில் யானைகள் அட்டகாசம் அதிகரித்த வண்ணம் உள்ளது.இதுதொடர்பில் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை...
23/10/2025

திருகோணமலையில் பல கிராம பகுதிகளில் யானைகள் அட்டகாசம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதுதொடர்பில் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளார். உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் மென்மேலும் பாரிய விபரீதங்கள் ஏற்படக்கூடும்.

இலங்கையில் யானைகள் பல விதத்திலும் அழிவை சந்தித்து வருவதனால் அவற்றை காக்க வேண்டியதும் எமது பொறுப்பாகும்!



படம்: கிளிவெட்டி உப தபால் அலுவலகத்தில் யானைகள் அட்டகாசம்!

Address

Trincomalee
31000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trinco Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share