Ameer Sulthan Foundation

Ameer Sulthan Foundation "உண்மைச் செய்திகளுக்கு முதலிடம்"

நைட்டா புதிய மாவட்ட முகாமையாளராக எஸ்.ஏ.ஈபான் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
03/07/2024

நைட்டா புதிய மாவட்ட முகாமையாளராக எஸ்.ஏ.ஈபான் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

திருகோணமலை மாவட்டத்தில் பெண் அரசியல் செயற்பாட்டாளர்களை அதிகரித்தல்.!!!பெக்ட் மற்றும் கிராமிய பொருளாதார மற்றும் சமூக அபிவ...
28/06/2024

திருகோணமலை மாவட்டத்தில் பெண் அரசியல் செயற்பாட்டாளர்களை அதிகரித்தல்.!!!

பெக்ட் மற்றும் கிராமிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் (ரெக்டோ) ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தில் பெண்களின் அரசியல் பங்குபற்றுதலை அதிகரித்து பொருளாதார ரீதியாக பாதிப்புற்ற பெண்களுக்கு உதவும் வகையில் செயலர்வொன்று திருகோணமலை ஜேகப் பீச் றிசோட்டில் இன்று 27 நடைபெற்றது.

ரெக்டோ நிறுவனத்தின் தலைவர் ஜே.எம்.அஷார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பிரதேச மட்டத்தில் பெண் தலைமைகள் என கலந்து கொண்டனர்.

நிகழ்வின் இலகுபடுத்துனர்களாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாவட்ட அதிகாரி அருன் சிவஞானம் மற்றும் பெண் செயற்பாட்டாளர் எம்.ஏ.நஸ்றின் டிலானி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இதன்போது ரெக்டோ நிறுவன நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஏ.எஸ்.எம்.தானீஸ், நிர்வாக,நிதி உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அனீஸ் உட்பட ரெக்டோ நிறுவன உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ் --எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.....மூதூர்,தோப்பூரின் முதலாவது -மருந்தாக்கவியலாளர்- B.Pharm (Hons)  அப்...
21/07/2023

அல்ஹம்துலில்லாஹ் --எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.....

மூதூர்,தோப்பூரின் முதலாவது -மருந்தாக்கவியலாளர்- B.Pharm (Hons) அப்துல் றஸ்ஸாக் ரோசன் றஸ்னா
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று (2023.07.21) ஆந் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற 37வது பொது பட்டமளிப்பு விழாவில் மூதூர் ஆனைச்சேனையை வசிப்பிடமாக கொண்ட அப்துல் றஸ்ஸாக் ரோசன் றஸ்னா - B.Pharm (Hons) பட்டம் பெற்று மூதூர்,தோப்பூரின் முதலாவது (மருந்தாக்கவியலாளர்) எனும் சிறப்புப் பட்டத்தை பெற்றவர் என்ற சிறப்பினைப் பெற்றுள்ளார்.

இவர் மூதூர் நாவலடியைச் சேர்ந்த அல்ஹாஜ் MK-அப்துல் றஸ்ஸாக்,தோப்பூரைச் சேர்ந்த ஹாஜியானி AS.முறுசிலா வீவீ தம்பதியினரின் மகளும், மூதூர் தாவூத் முகமட் ஆஷீக் (BA,DO ஆசிரியரின்) மனைவியுமாவார்.

இவர் தோப்பூர் தாருஸ்ஸலாம் பாலர் பாடசாலையின் முதலாவது பழைய மாணவியும்,தோப்பூர் பாத்திமா மகளிர் கல்லூரி, தி/ஸாகிறா கல்லூரி என்பவற்றின் பழைய மாணவியுமாவார்.

தோப்பூர் பாத்திமா மகளிர் கல்லூரியில் பயிலும்போது ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற இவர் பின்னர் அதே கல்லூரியில் க.பொ. த .சாதாரண தரத்தில் 8A,B தர சித்திகளைப் பெற்றார்.

இவர் ARM.றஸான் (Water board), ARM.றஸ்லான் (மௌலவி) ஆகியோரின் சகோதரியுமாவார்.

இவருக்கு பாலர் கல்வி முதல் பல்கலைக்கழக கல்வி வரை கற்றுக் கொடுத்த ஆசிரியைகள் /ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,குடும்ப உறவுகள் அனைவருக்கும் எமது உளங்கனிந்த நன்றிகளை குடும்பம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல்:-
ஏ.எஸ்.எம்.தாணீஸ் -BBA,JP(WI),
Ex.Member Of Piradeshiya Sabha Muthur.

Address

124/1, Peraru, Kanthale
Trincomalee

Telephone

+94775182152

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ameer Sulthan Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share