WIN TV

WIN TV இது மாற்றத்திற்க்கான மக்களின் குரல்!!!முகநூல்,மற்றும் எமது இனையவழி ஊடாகவும்..உடனுக்குடன் செய்திகளை பார்வையிடலாம். எப்போதும் இணைந்திருங்கள். .wintv.lk

15/05/2026

சீரற்ற வானிலை மிகுந்த அவதானம் தேவை.!!

கொழும்பு, கல்கிசையில் இன்று ஒரு புதிய வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக ஒரு பெரிய மரம் முறிந்து விழுந்துள்ளது.

அரச மரங்கள் மற்றும் பெரிய மரங்கள் நனைந்து மண் இளகியிருக்கும் இப்போதைய நிலையில் அவை எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழக்கூடும்.

அவதானமாக இருங்கள்.
பழைய பெரிய மரங்களின் கீழே வாகனங்களை நிறுத்துவது மட்டுமன்றி மனிதர் நாமும் தேவையின்றி நிற்பது ஆபத்தானது.

இலங்கையில் இன்னும் 48 மணி நேரத்துக்கு இந்தத் தொடர் மழையும் சீரற்ற வானிலையும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

15/05/2026

🔴IRAN FM
“எங்கள் மண்ணை பாதுக்க நாங்கள் ரெடி”
-ஈரான் வெளியுறவு அமைச்சர்

“எங்கள் #சுதந்திரத்தையும், #மண்ணையும் பாதுகாக்க #நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆனால் #ராஜதந்திரமே முக்கியமானது, ஈரான் #போரை அல்ல, #அமைதியையே நாடுகிறது”

“நாங்கள் #ஒருபோதும் #அழுத்தங்களுக்குப் #அடிபணிவதில்லை, ஆயினும் அச்சுறுத்தப்படும்போது #மரியாதையுடனும் #வலிமையுடனும் #பதிலளிப்போம்.”

இந்தியாவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் மாநாட்டில் உரையாற்றும் போதே ஈரான் வெளியுறவு அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 #முதல்_முறையாக  #மட்டக்களப்பு_போதனா  #வைத்தியசாலையில்  #அதிநவீன_இதய  #வடிகுழாய்_ஆய்வகம் 14 May 2026 இலங்கை சுகாதார அமைச...
15/05/2026

#முதல்_முறையாக #மட்டக்களப்பு_போதனா #வைத்தியசாலையில்
#அதிநவீன_இதய #வடிகுழாய்_ஆய்வகம்

14 May 2026 இலங்கை சுகாதார அமைச்சின் புதிய திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முதல் முறையாக அதிநவீன இதய வடிகுழாய் ஆய்வகம் (Cath Lab) நிறுவப்படவுள்ளது. மட்டக்களப்பு, இரத்தினபுர, பதுளை மற்றும் காலி ஆகிய நான்கு வைத்தியசாலைகளுக்காக ஒதுக்கப்பட்ட 715 மில்லியன் ரூபாய் நிதியின் கீழ் இந்த வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.

தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் இந்த வசதி இல்லாததால், மாரடைப்பு மற்றும் இதய நோய்களுக்கான அவசரச் சிகிச்சைகளுக்கு மட்டக்களப்பு மக்கள் கொழும்பு அல்லது கண்டி போன்ற தூர இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்தப் புதிய ஆய்வகத்தின் வருகையோடு, நோயாளிகளுக்கு சிகிச்சையை இங்கே வழங்க முடியும் .

இதன் மூலம் நீண்ட பயணச் செலவுகள் மற்றும் நேர விரயம் தவிர்க்கப்படுவதுடன், இதயச் சிகிச்சைக்கான நீண்ட காத்திருப்புப் பட்டியல்களும் குறைக்கப்படும். இந்தத் திட்டம் மட்டக்களப்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இதய நோயால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைத்து, எமது மக்களின் சுகாதார வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுகிறது.

சுகாதார டாக்டர் நலிந்த ஜெயதிஸ்ஸவின் அறிவுறுத்தல்களின்படி, இந்த ஆண்டு ஆண்டுக்குள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தகவல் : கந்தசாமிபிரபு

✍️ கபில சந்திரசேனவின் iphone அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பு...!சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப...
15/05/2026

✍️ கபில சந்திரசேனவின் iphone அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பு...!

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) கபில சந்திரசேனவின் நவீன கைபேசியில் (iPhone) அமெரிக்காவிலுள்ள ‘ஆப்பிள்’ (Apple) போன் தலைமையகத்திற்கு அனுப்பி னவைக்கப்பட உள்ளது

இந்த கையடக்க தொலைபேசியின் பாதுகாப்புக்காக இடப்பட்டிருந்த டிஜிட்டல் முகக் கடவையை (Face ID) திறந்து விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு, கோரியே அமெரிக்காவிலுள்ள ‘ஆப்பிள்’ (Apple) தாய் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்குமாறு கோட்டை நீதிவான் பசன் அமரசேன நேற்று முன்தினம் (12) உத்தரவிட்டுள்ளார்.

கபில சந்திரசேனவின் நவீன கைபேசி அவரின் முகத்தைக் கொண்டே திறக்கப்பட முடியும் என்பதால், கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் விசேட முயற்சியொன்றை மேற்கொண்டிருந்தனர்.

ஐந்து பேர்கொண்ட விசேட மருத்துவக் குழுவின் முன்னிலையில், அவர்களின் அனுமதியுடன் கபில சந்திரசேனவின் சடலத்தின் முகத்திற்கு நேரே இந்த கைபேசி காட்டப்பட்டது.

எனினும், பயோ மெட்ரிக் (Bio-metric) தொழில்நுட்பக் காரணம் காரணமாக போன் திறக்கவில்லை என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதனைக் கருத்திற்கொண்டே நீதிவான் ஆப்பிள் நிறுவனத்திற்கு அனுப்பி இதனை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கொள்ளுப்பிட்டி, பேத்ரிஸ் மாவத்தையிலுள்ள முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் வீட்டிலுள்ள அறையொன்றிலிருந்தே கபில சந்திரசேன கழுத்து தூக்கிலிடப்பட்ட நிலையில் சந்தேகத்துக்கிடமாக மரணமடைந்திருந்தார்.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய, இந்த விபரம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவிடம் (CCID) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த உப பொலிஸ் பரிசோதகர் ஜயந்த லால், உயிரிழந்த கபில சந்திரசேனவின் சடலத்தை அவரின் மனைவியின் சகோதரியான பிரியங்கி அனுஷ்கா மற்றும் வீட்டின் பணியாளரான ஆர்.எம்.சோமதாச ஆகியோர் அடையாளம் காட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

கபில சந்திரசேனவின் கழுத்தில் இருந்த பட்டி மற்றும் குளியல் அறையில் இருந்த பட்டித் துண்டுகள் இரண்டும், சம்பவத்திற்கு முதல் நாள் வழங்கப்பட்ட ஒரே பட்டியின் துண்டுகளா என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரச இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இதனை வீட்டின் மற்றொரு சேவையாளரான சுசீமா பிரமிலா அடையாளம் காட்டியுள்ளார்.

அதேவேளை, சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் காண முடியாத மர்ம மருந்துப் பொருட்கள் மற்றும் கடதாசி துண்டுகள் குறித்தும் நீதிவான் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர், அவை பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், உடலிலிருந்து எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகளுடன் சேர்த்து அவை விரைவில் அரச இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், கபில சந்திரசேன இறுதியாக தங்கியிருந்த அரவிந்த டி சில்வாவின் வீட்டில் பணியாற்றும் ஒரு பணியாளர் மற்றும் சாரதி ஆகியோரின் கைபேசி அழைப்பு விபரங்களை (Call Records) பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்களின் முகாமையாளர்களுக்கும் கோட்டை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் தீவிர மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

14/05/2026

🔴PUTTALAM 👉THILLAIYADI
கொட்டும் #மழை வெள்ளத்தில் #மாணவர்களின் #பரிதாபம்!

இது நேற்றைய(13) மழையின் போது #புத்தளம், #தில்லையடி பகுதி மாணவர்கள் #கொட்டும் மழை வெள்ளத்தில் பாடசாலையிலிருந்து வெளியேறி தத்தமது வீடுகளுக்கு செல்லும் #பரிதாப காட்சியே இதுவாகும்.

ஆயிரம் பிளவுகள் இருந்தாலும் அவங்க அவங்கதான்!இதைத்தான் நம்ம மார்க்கமும் தெளிவாக சொல்லுது...நாமதான் ஒற்றுமை எனும் கயிற்றைப...
14/05/2026

ஆயிரம் பிளவுகள் இருந்தாலும் அவங்க அவங்கதான்!
இதைத்தான் நம்ம மார்க்கமும் தெளிவாக சொல்லுது...
நாமதான் ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப்பிடித்துக்கொள்ள மறுக்கின்றோம்.

சீனாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க
இடங்களை ஷி ஜின்பிங்குடன் நேரில்
பார்வையிட்டார் ஜனாதிபதி ட்ரம்ப்.
இரு தலைவர்களும் சீனக் கலாசாரத்தின் அடையாளமாக விளங்கும் பல்வேறு இடங்களைப் பார்வையிட்டதோடு, புகைப்படங்களுக்குத் தோன்றி தமது நட்புறவையும் வெளிப்படுத்தினர்.

14/05/2026

எந்தவிதமான சலனமும் இல்லாமல் அசையாமல் நின்ற சீன அதிகாரி ஒருவர் இணையத்தில் வைரலாகி வருகிறார்...

ஏர் ஃபோர்ஸ் ஒன் (Air Force One) விமானம் அவரது தலைக்கு மேல் நகர்ந்து சென்றபோது,,

எதிர்கட்சிகளைப் பேசவிடாமல் குறுக்கிட்டு கலவரம் செய்யும் ஆளுங்கட்சியைத் தான் மக்கள் இதுவரை பார்த்தனர் ,ஆனால் வரலாற்றில் ம...
14/05/2026

எதிர்கட்சிகளைப் பேசவிடாமல் குறுக்கிட்டு கலவரம் செய்யும் ஆளுங்கட்சியைத் தான் மக்கள் இதுவரை பார்த்தனர் ,
ஆனால் வரலாற்றில் முதன்முறை எதிர்க்கட்சிகளை முழுமையாக பேசவிட்டு அதில் உள்ள நல்லவைகளை குறிப்பெடுக்கும் முதல் முதலமைச்சரை இப்போது தான் பார்க்கிறோம் !

பதிலுரையில் கூட எதிர்க்கட்சி விமர்சனங்களுக்கு பதிலுக்குப் பதில் வாக்குவாதம் பண்ணாமல் " துள்ளி எழுந்து பதிலளிப்பதைவிட நான் செயலில் காட்டவே விரும்புகிறேன் " என்று கூறிய அந்தக் காட்சி தமிழ்நாடே இதுவரைக் காணாதக் காட்சி !

விஜய்க்கு என்ன அரசியல்
தெரியும் என்றார்கள் ,
இப்போ தன் அரசின் பெரும்பான்மையை
144 ஆக மாற்றியிருக்கிறார் ,
அரசியலையும் அசால்ட்டாக ,
டீல் செய்வார்
முதல்வர்
திரு விஜய்

13/05/2026

🔴NARENDRA MODI
#எரிபொருள் பாவனையை #மட்டுப்பட்டுத்துங்கள்!
-நரேந்திர மோடி

இந்திய பிரதமரின் பயணத்தில் பயணிக்கும் #வாகனங்களே இவை!

எப்பாவளையிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் இன்று (13) காலை இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் உயர்தரத்தை சேர்ந்த 5 மாணவர்கள்...
13/05/2026

எப்பாவளையிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் இன்று (13) காலை இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் உயர்தரத்தை சேர்ந்த 5 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காயமடைந்த 5 மாணவர்களும் அதே பாடசாலையில் தொழில்நுட்பப் பிரிவில் (Technology Stream) பயிலும் உயர்தர மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காயமடைந்த மாணவர்கள் எப்பாவளை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், அவர்களின் காயங்கள் பாரதூரமானவை அல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்திய மாணவன் விஞ்ஞானப் பிரிவைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

இவருக்கும் காயமடைந்த மாணவர்களில் ஒருவருக்கும் இடையே நிலவிய நீண்டகாலத் தகராறே குறித்த தாக்குதலுக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த மாணவன் ஒருவரைத் தாக்கியபோது, அதனைத் தடுக்க முற்பட்ட ஏனைய நான்கு மாணவர்களும் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளனர்.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கூர்மையான ஆயுதத்தை எப்பாவளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Address

Trincomalee
31000

Telephone

+94715736975

Alerts

Be the first to know and let us send you an email when WIN TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to WIN TV:

Share