Pulmoddainews

Pulmoddainews புல்மோட்டை மக்களின் உறவுப்பாலம் ,

09/07/2025

குருக்கள் மடம் கொலை..
காலம் கடந்த ஜானம்.
அதுவும் ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம். 😭

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு!இலங்கைக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்க்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் ...
27/06/2025

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு!

இலங்கைக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்க்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Turk ) மற்றும் அவரது குழுவினரை திருகோணமலையில் சந்தித்து எமது சிறுபான்மை சமூகத்தின் தேவைகள், மற்றும் உடனடியாக தீர்க்கப்படவேண்டிய காணிப்பிரச்சினைகள், அதற்கான முக்கிய சூத்திரதாரிகள், மற்றும் பாதுகாக்கப்படவேண்டிய எமது சமூகத்தின் கலாச்சார விழுமியங்கள், சின்னங்கள் தொடர்பான பல்வேறு விடயங்களை அவரது நேரடிக்கவணத்திற்கு கொண்டுவர முடிந்தது.
#அல்ஹம்துலில்லாஹ்!

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்கலந்துரையாடலில் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் திரு. மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் Marc-André Franche, மற்றும் எனது நன்பன் பாஸில், மற்றும் சகோதர மதகுருமார்கள் கலந்துகொண்டிருந்தனர்.

அத்துடன் அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் சிலவற்றை மாத்திரமே உயர்ஸ்தானிகரின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் என்னால் முன்வைக்கமுடியுமாக இருந்தது.

அத்துடன் அவரது நேரடி கவணத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென நீங்கள் கருதும் சிறுபான்மை, முஸ்லிம்களின் பிரச்சினைகள் இருப்பின் தயவுசெய்து இன்பொக்ஸில் பதிவிடவும்.
Sahulhameed Saliheen

நன்றி:
அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஸாலிஹீன்(நளீமி)

எனது உயிருக்கு எந்த மதிப்பும் கிடையாது,எனது வயதான உடலுக்கும் எந்த மதிப்பும் கிடையாது, கொள்கை கோட்பாடுகள் கொண்டு,கட்டமைக்...
19/06/2025

எனது உயிருக்கு எந்த மதிப்பும் கிடையாது,
எனது வயதான உடலுக்கும்
எந்த மதிப்பும் கிடையாது,
கொள்கை கோட்பாடுகள் கொண்டு,
கட்டமைக்கப்பட்ட சமூகங்களுக்கு,
தலைவர்கள் வழிப்போக்கார்கள்..!

இஸ்லாம் தான் முக்கியம் ஈரான் அல்ல"

உயிரோட்டமான வார்த்தைகள்,

அல்லாஹ் உங்கள் கரங்களை மென்மேலும்
பலப்படுத்துவானாக..

Ayatollah khamenei

தெஹ்ரானில் மேலும் 2 மொசாட் முகவர்கள் கைது செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில்...
16/06/2025

தெஹ்ரானில் மேலும் 2 மொசாட் முகவர்கள் கைது செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் யாரும் இஸ்ரேலியர்கள் அல்ல என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அல் அரேபிய சமூகத் தளத்தில் இதுபற்றிய வீடியோவும் வெளியாகியுள்ளது.

உப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில்  அமைச்சர் சுனில்,  அர்ச்சுனா இடையே, பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22)  கடும் வாக்குவாதம...
22/05/2025

உப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில் அமைச்சர் சுனில், அர்ச்சுனா இடையே, பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனையிறவு உப்பு தொழிற்சாலையில், தெற்கிற்கு வடக்கு உப்பு விநியோகம் நிறுத்தப்பட வேண்டும் என்று ஊழியர்கள் குழுவுடன் ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்ததாக அமைச்சர் ஹந்துன்னெத்தி கூறினார்.

"வடக்கு உப்பு மற்றும் தெற்கு உப்பு என்று எந்த உப்பும் இல்லை. எங்களிடம் இலங்கையின் உப்பு உள்ளது. அந்த நாட்களில் நீங்கள் பிரபாகரனின் உப்பை சாப்பிட்டிருக்கலாம். இனி அத்தகைய உப்பு இல்லை. நாங்கள் முழு நாட்டையும் ஒன்றிணைத்துள்ளோம்," என்று அவர் கூறினார்.

பதிலளித்த எம்.பி. அர்ச்சுனா, வடக்கின் உப்பை தெற்கிற்கு அனுப்பக்கூடாது என்று தான் ஒருபோதும் கூறவில்லை என்றும், ஆனையிறவு உப்பளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க மட்டுமே தான் மத்தியஸ்தம் செய்ததாகவும் கூறினார்.

அமைச்சர் ஹந்துன்னெத்தி தான் பொய் சொல்லவில்லை என்றும், ஆனையிறவு உப்பள ஊழியர்கள் மற்றும் எம்.பி. அர்ச்சுனாவுடன் நடந்த கலந்துரையாடல்களின் குறிப்புகளை மேற்கோள் காட்டுவதாகவும் கூறினார்.

20/05/2025

குச்சவெளி பிரதேச செயலாளர் திரு;இந்திரஜித் அவர்களுக்கு நன்றிகள்...

கிராமிய வீதி புனரமைப்புச் செய்தல் வேலைத்திட்டம்- 2025
ஜனாதிபதி அவர்களின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் ஊடாக ஒவ்வொரு பிரதேசத்திலும் 12KM வீதிகளினை புனரமைப்பு செய்தல் வேலைத் திட்டத்தில் குச்சவெளி பிரதேச சபையின் செயலாளர் வெ.இந்திரஜித் அவர்களினால் முன்மொழியப்பட்ட கீழ் குறிப்பிடப்படுகின்ற வீதிகளினை புனரமைப்பு செய்வதற்கான அனுமதி கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களினால் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த வீதிகளின் புனரமைப்பு செய்வதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதுபோல் PSDG வேலைத்திட்டம்- 2025
இவ்வருடத்திற்கு மாகாண சபையினால் வழங்கப்படுகின்ற PSDG நிதி ஒதுக்கீட்டில் கீழ் குறிப்பிடப்படுகின்ற வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கான அனுமதி கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களினால் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தகவல்
வெ.இந்திரஜித்
செயலாளர்
குச்சவெளி பிரதேச சபை.

18/02/2025
31/01/2025

லங்கா சுப்பர் டீசலின் விலை 18 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்து எரிபொருள் விலைகளிலும் மாற்றம் இல்லை..

31/01/2025

ஜனாதிபதியால் நியமிக்க பட்ட 5 நிறுவன தலைவர்கள் 3 மாத காலத்துக்குள் இராஜினாமா😂😂😂

Address

Trincomalee

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pulmoddainews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share