Ezhuna

Ezhuna ஈழக்கற்கைகள் சார்ந்த ஆய்வுகளுக்கான உரையாடல் தளம்

எழுநா, ஈழமும் ஈழம் சார்ந்த ஆய்வும் இடைவெட்டும் பரப்பை 'ஈழக்கற்கைகள்' (Eelam Studies) என்று வரையறுத்துக் கொண்டு, ஈழம் சார்ந்து வரலாறு, பண்பாடு, சமூகவியல், மானுடவியல், மொழியல், அரசியல், பொருளாதாரம், சூழலியல், அபிவிருத்தி, சட்டம் போன்ற தளங்களில் ஆய்வுகளை உருவாக்குவதையும் பரவலாக்குவதையும் முதன்மைப் பணியாகக் கொண்டு இயங்குகின்ற இலாபநோக்கற்ற அமைப்பாகும்.

இலங்கையின் கூட்டுறவுத்துறையின் மறுசீரமைப்பிற்கான பரிந்துரைகள் | கூட்டுறவு இயக்கத்தின் வகிபாகம் : போரின் பின்னரான மீள் கட...
22/07/2025

இலங்கையின் கூட்டுறவுத்துறையின் மறுசீரமைப்பிற்கான பரிந்துரைகள் | கூட்டுறவு இயக்கத்தின் வகிபாகம் : போரின் பின்னரான மீள் கட்டுமானமும் அபிவிருத்தியும் | வை. ஜெயமுருகன்

ஓர் அர்ப்பணிப்புள்ள கூட்டுறவுச் சங்கம், அதன் உறுப்பினர்களுக்கான சமூக நல்வாழ்வை முன்னுரிமைப்படுத்துவதன் மூலம் நிலையான வளர்ச்சிக்கான தனித்துவமான வழியை வழங்கும். பல நாடுகளில், கூட்டுறவுகள் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் சக்திவாய்ந்த கருவியாக இயங்குகின்றன.

இலங்கையில் போருக்குப் பிந்தைய மீட்புக் கட்டத்தில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், கூட்டுறவு அமைப்புகள் நம்பகமான மாற்று சமூக, பொருளாதாரக் கட்டமைப்பாகத் திகழலாம். எனினும், கூட்டுறவுகளுக்கான உள்ளார்ந்த ஆதரவுக் கட்டமைப்பை உருவாக்கும் மனப்பான்மை எம்மத்தியில் மிகக் குறைவாகவே உள்ளது.

முழுமையான கட்டுரைக்கு

ஓர் அர்ப்பணிப்புள்ள கூட்டுறவுச் சங்கம், அதன் உறுப்பினர்களுக்கான சமூக நல்வாழ்வை முன்னுரிமைப்படுத்துவதன் மூல.....

நூல் அறிமுக நிகழ்வு தளம் கட்டமைப்பின் ஏற்பாட்டில் எழுநாவின் வெளியீடான கலாநிதி என். கே. எஸ். திருச்செல்வம் அவர்களின் “இலங...
22/07/2025

நூல் அறிமுக நிகழ்வு

தளம் கட்டமைப்பின் ஏற்பாட்டில் எழுநாவின் வெளியீடான கலாநிதி என். கே. எஸ். திருச்செல்வம் அவர்களின் “இலங்கையின் பிராமி மற்றும் சிங்களக் கல்வெட்டுகளில் தமிழர்” என்ற நூலின் அறிமுக நிகழ்வு எதிர்வரும் யூலை 26 ஆம் திகதி (சனிக்கிழமை) மாலை 04.00 மணியளவில் திருகோணமலையில் அமைந்துள்ள தளம் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.

இலங்கையில் உள்ளூராட்சி அரசாங்கமும் ஜனநாயகமும் : நேற்று, இன்று, நாளை | அரசியல் யாப்பு சிந்தனைகள் | கந்தையா சண்முகலிங்கம்க...
21/07/2025

இலங்கையில் உள்ளூராட்சி அரசாங்கமும் ஜனநாயகமும் : நேற்று, இன்று, நாளை | அரசியல் யாப்பு சிந்தனைகள் | கந்தையா சண்முகலிங்கம்

காலனியத்திற்கு முற்பட்ட காலத்திலும், காலனிய ஆட்சிக் காலத்திலும் உள்ளூராட்சி நிறுவனங்கள் இலங்கையில் செயற்பாட்டில் இருந்தன. அந்நிறுவனங்கள் அரசுக்கும் – மக்களுக்கும் இடையிலான தொடர்புகளை (State – Society Relations) ஏற்படுத்தும் நிறுவனங்களாகச் செயற்பட்டன. அவ்வகையில் அவை மக்களுக்கான ஜனநாயக நிறுவன வெளியை (Democratic Institutional Space) உருவாக்கியிருந்தன என்ற வரலாற்று உண்மையை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

காலனிய ஆட்சிக்கு முற்பட்ட காலத்தில், கிராம சபைகள் (சிங்கள மொழியில் ‘ஹம்சபா’) உள்ளூர் சுயாட்சிக்கான (Local Government) பிரதான நிறுவனமாகப் பல நூற்றாண்டுக்கு மேலாகச் செயற்பட்டு வந்தன. ‘ஹம்சபா’ என அழைக்கப்பட்ட இக்கிராம சபைகளின் எல்லைக்குள் கிராமிய நகரங்களும் (Village Cities) உள்ளடங்கி இருந்தன என்று ஊகிக்க இடமுள்ளது.

முழுமையான கட்டுரைக்கு

காலனியத்திற்கு முற்பட்ட காலத்திலும், காலனிய ஆட்சிக் காலத்திலும் உள்ளூராட்சி நிறுவனங்கள் இலங்கையில் செயற்பா.....

வெற்றியுனதே : சுயமுன்னேற்றத்துக்கான வழித்தடம் பகுதி – 2 | கணக்குப் பதிவு நூல் முதல் கதிர்காமம் வரை | எம்.எம். ஜெயசீலன்இள...
18/07/2025

வெற்றியுனதே : சுயமுன்னேற்றத்துக்கான வழித்தடம் பகுதி – 2 | கணக்குப் பதிவு நூல் முதல் கதிர்காமம் வரை | எம்.எம். ஜெயசீலன்

இளைஞர்களிடத்தில் தோன்றும் மயக்கங்களைக் களைந்து, அவர்களின் முன்னேற்றத்துக்கான வழித்தடத்தை, ‘நீ மயங்குவதேன்’ என்ற நூலின் மூலம் செப்பனிட முனைந்த நடேசய்யர், அதன் தொடர்ச்சியாக ‘வெற்றியுனதே’ என்ற நூலை 1934 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். கொழும்பு தினத்தபால் பிரஸ், ஹட்டன் சகோதரி பிரஸ் ஆகியன இணைந்து அந்நூலைப் பதிப்பித்துள்ளன.

வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்கு வேண்டிய பண்புகளையும் அவற்றை அடைவதற்கான வழிகளையும் எடுத்துரைப்பதை முதன்மை நோக்காகக் கொண்டுள்ள இந்நூல், பொருள், தான், தன் சுற்றம் என்ற நிலையிலிருந்து விடுபட்டு மானுட வாழ்வை உயர்ந்த தளத்தில் அணுகும் மனவிசாலத்தைக் கட்டியெழுப்ப முயன்றுள்ளது.

முழுமையான கட்டுரைக்கு

இளைஞர்களிடத்தில் தோன்றும் மயக்கங்களைக் களைந்து, அவர்களின் முன்னேற்றத்துக்கான வழித்தடத்தை, ‘நீ மயங்குவதேன்’ ....

வடக்கு - கிழக்கு நிலத்தொடர் இணைப்பில், குச்சவெளிப் பிரதேச மக்களின் நில உரிமைக்கான போராட்டம் | வை. ஜெயமுருகன்தமிழ் பேசும்...
17/07/2025

வடக்கு - கிழக்கு நிலத்தொடர் இணைப்பில், குச்சவெளிப் பிரதேச மக்களின் நில உரிமைக்கான போராட்டம் | வை. ஜெயமுருகன்

தமிழ் பேசும் மக்களின் போராட்டங்கள் பல பரிமாணங்களைக் கொண்டவை. போருக்குப் பிறகான காலப்பகுதியில், நில உரிமைக்கான மக்கள் எழுச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன. இப்போதைய நிலவரத்தில், வடக்கு மற்றும் கிழக்கில் நில உரிமைக்கான போராட்டங்கள் பல இடங்களில் வேரூன்றி வளர்ந்து வருகின்றன. இந்தப் போராட்டங்கள் பலவிதமான நெருக்கடிகளின் மத்தியில், மக்கள் திரளுடன் நடைபெறுகின்றன.

யாழ்ப்பாணம், தையிட்டியில் வசிக்கும் மக்கள், தங்கள் மூதாதையர்களின் நிலங்களை சட்டவிரோதமாகக் கையகப்படுத்துவதற்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். தற்போது, அந்த நிலங்கள் புத்த கோவில் கட்டுமானத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இப்போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், மத நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் ஆதரவளித்து வருகின்றன.

முழுமையான கட்டுரைக்கு

தமிழ் பேசும் மக்களின் போராட்டங்கள் பல பரிமாணங்களைக் கொண்டவை. போருக்குப் பிறகான காலப்பகுதியில், நில உரிமைக்கா.....

ஜூலை மாதத்திற்கான எழுநா இதழினை  இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என்பதனை வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம்.தொடர்புகளுக்கு  :...
17/07/2025

ஜூலை மாதத்திற்கான எழுநா இதழினை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என்பதனை வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம்.

தொடர்புகளுக்கு :

இல 63. சேர்.பொன் இராமநாதன் வீதி,
கலட்டிச் சந்தி, திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.

+94 77 797 5029

Website : www.ezhunaonline.com

Face book Page : www.facebook.com/Ezhunax/

Instagram : www.instagram.com/ezhunaa/

Twitter : x.com/Ezhuna

ஆறுமுக நாவலரும் நன்னூல் பதிப்பு நெறிமுறையும் | ஈழத்துப் பதிப்பாசிரியர்களும் பதிப்பு நெறிமுறைகளும் | இளஞ்செழியன் சண்முகம்...
15/07/2025

ஆறுமுக நாவலரும் நன்னூல் பதிப்பு நெறிமுறையும் | ஈழத்துப் பதிப்பாசிரியர்களும் பதிப்பு நெறிமுறைகளும் | இளஞ்செழியன் சண்முகம்

உரைநடை நூல்கள் தொடக்கத்தில் இல்லை. அக்காலத்திய நூல்கள் எல்லாம் பெரும்பாலும் செய்யுள் வடிவில்தான் இருந்தன. சிலகாலம் கழித்துச் செய்யுளும் உரை நடையும் கலந்த நூல்கள் வெளிவரத் தொடங்கின. பிற்காலத்தில் ஐரோப்பியர் வருகையின் காரணமாகத்தான் தமிழ் உரைநடை புத்தொளி பெற்றது எனலாம். காலப்போக்கில் வளர்ந்து வந்த உரைநடை, பத்தொன்பதாம் நூற்றாண்டில் முக்கியத்துவம் பெற்றது.

ஆனால் இருபதாம் நூற்றாண்டில்தான் அது செழுமை பெறத்தொடங்கியது எனலாம். தமிழ் உரைநடை வளர்ச்சியில் ஆறுமுக நாவலரின் தொண்டு போற்றத்தக்கதாகும். ஆறுமுக நாவலரின் உரைநடை ஆற்றலைக்கண்டு வியந்த பரிதிமாற் கலைஞர் “ஆங்கில உரைநடைக்கு டிரைடன் (Dryden) போன்று தமிழ் உரைநடைக்கு ஆறுமுக நாவலர் சிறந்து விளங்கினார்” என்று போற்றுகிறார். மேலும் அவர் நாவலரை “வசனநடை கைவந்த வள்ளலார்” என்றும் கூறிப் புகழ்கிறார்.

முழுமையான கட்டுரைக்கு

உரைநடை நூல்கள் தொடக்கத்தில் இல்லை. அக்காலத்திய நூல்கள் எல்லாம் பெரும்பாலும் செய்யுள் வடிவில்தான் இருந்தன. சி.....

நூல் வெளியீட்டு நிகழ்வுகிழக்குப் பல்கலைக்கழகம், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் ம...
15/07/2025

நூல் வெளியீட்டு நிகழ்வு

கிழக்குப் பல்கலைக்கழகம், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் மற்றும் எழுநாவின் அனுசரணையில் ஆய்வாளர் க. பத்திநாதன் அவர்களின் ‘உத்தியாக்கள்: கிழக்கிலங்கை வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்’என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வானது எதிர்வரும் யூலை 20 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெறவுள்ளது.

நூலின் அறிமுகத்தைத் தொடர்ந்து, நூல் குறித்த கலந்துரையாடல் இடம்பெறும்.

அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

மன்னன் நாகன் பற்றிக் கூறும் கள்ளஞ்சிய பாறைக் கல்வெட்டு | இலங்கை பிராமிக் கல்வெட்டுகளில் நாகர்  | என்.கே.எஸ். திருச்செல்வ...
14/07/2025

மன்னன் நாகன் பற்றிக் கூறும் கள்ளஞ்சிய பாறைக் கல்வெட்டு | இலங்கை பிராமிக் கல்வெட்டுகளில் நாகர் | என்.கே.எஸ். திருச்செல்வம்

மிகிந்தலை நகரில் இருந்து வடக்கு நோக்கி வவுனியாவுக்குச் செல்லும் வீதியில் 9 கி.மீ தூரத்தில் ரம்பேவ சந்தி அமைந்துள்ளது. இச்சந்தியின் கிழக்குப் பக்கத்தில் சுமார் 9 கி.மீ தூரத்தில் கள்ளஞ்சிய என்னுமிடம் காணப்படுகிறது. இங்கு உள்ள நீராவிய என்னுமிடத்தில் பண்டைய கால சுவடுகள் காணப்படுகின்றன.

இங்கு நீளமான, ஒடுங்கிய வடிவில் அமைந்துள்ள கள்ளஞ்சிய குளத்தின் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் பாறைகளும், கற்குகைகளும் காணப்படுகின்றன. 1891 ஆம் ஆண்டு இப்பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்ட எச்.சி.பி. பெல் இங்கு காட்டுப் பற்றைகளின் மத்தியில் பண்டைய ஆலய இடிபாடுகளைக் கண்டார்.

முழுமையான கட்டுரைக்கு

மிகிந்தலை நகரில் இருந்து வடக்கு நோக்கி வவுனியாவுக்குச் செல்லும் வீதியில் 9 கி.மீ தூரத்தில் ரம்பேவ சந்தி அமைந்த...

எழுநாவின் புதிய பதிப்பான நாகமுத்து பிரதீபராஜா அவர்களின் 'வடக்குப் பிராந்தியக் காலநிலையியல்' என்ற நூலினை இன்று முதல் நேரட...
14/07/2025

எழுநாவின் புதிய பதிப்பான நாகமுத்து பிரதீபராஜா அவர்களின் 'வடக்குப் பிராந்தியக் காலநிலையியல்' என்ற நூலினை இன்று முதல் நேரடியாகவும், தபால் மூலமும் பெற்றுக்கொள்ளலாம் என்பதனை வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம்.

நூலின் விலை: ரூ.1500/=

தொடர்புகளுக்கு:

இல. 63, சேர்.பொன். இராமநாதன் வீதி,
கலட்டிச் சந்தி, திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.

‪+94 77 797 5029

ஆனைக்கோட்டைத் தொல்லியலாய்வு  | பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம் | சிவ. தியாகராஜா 1980 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆன...
13/07/2025

ஆனைக்கோட்டைத் தொல்லியலாய்வு | பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம் | சிவ. தியாகராஜா

1980 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆனைக்கோட்டைக் கரையாம்பிட்டியில் மண்ணகற்றல் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில், அங்கே கலாநிதி இரகுபதி தலைமையிற் சென்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினரால் இது ஒரு பெருங்கற் பண்பாட்டுத் தொல்லியல் மேடு என இனங்காணப்பட்டது. அச்சமயம் பெய்த பெருமழையில் மண் தோண்டப்பட்ட இடங்களில் மண் கரைந்து பெருவாரியான மட்கலத் துண்டுகள் வெளியே தெரிந்தன.

ஆனைக்கோட்டைக் கரையாம்பிட்டி தொல்லியல் மேட்டை வட திசையிலிருந்து நோக்குமிடத்து பரந்து விரிந்த நெல் வயல்களின் பின்னணியில் பனந்தோப்புகளுக்கு இடையே மண்கும்பிகள் கிழக்கு - மேற்காக நீண்டு கிடந்தன. இந்த மேட்டை தென் திசையிலிருந்து நோக்குமிடத்து, மண்கும்பிகள் அகற்றப்பட்ட நிலம் பனை மர அடிமட்டத்திலிருந்து மூன்று அடிவரை கீழே தோண்டப்பட்டிருந்தது.

முழுமையான கட்டுரைக்கு

1980 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆனைக்கோட்டைக் கரையாம்பிட்டியில் மண்ணகற்றல் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்த....

அஞ்சி முனியாண்டி வழிபாடும் படையல் முறைமையும் : மலையகத்தை முன்வைத்து | லெட்சுமணன் அருணாசலம்'அஞ்சி' என்பது பயந்து அல்லது த...
12/07/2025

அஞ்சி முனியாண்டி வழிபாடும் படையல் முறைமையும் : மலையகத்தை முன்வைத்து | லெட்சுமணன் அருணாசலம்

'அஞ்சி' என்பது பயந்து அல்லது திகைத்து எனப் பொருள்படுகிறது. முனியாண்டி கடவுளுக்குப் பயந்து அல்லது அஞ்சித் திகைத்து நிற்கும் நிலையைக் குறிப்பிடுகின்றது. தமிழகத்தில் சில சமூகத்தினரால் வழிபடப்பட்டதன் தொடர்ச்சி நிலையில் அஞ்சி முனியாண்டி வழிபாடும் வியாபகம் பெற்றிருக்கின்றது. குறிப்பாக நாடார் சமூகத்தினரினால் தெய்வமாக அனுட்டிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சி நிலையில் பல நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும் அஞ்சி முனியாண்டி வழிபாடு பரவியுள்ளது.

மலையகத்தில் ஆண் சிறு தெய்வங்கள் அம்மனின் சகோதரர்களாக நோக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வழிபாட்டுடன் தொடர்புபட்ட, அம்மனுக்குப் பாதுகாப்பைத் தருகின்ற வகையிலான தொன்மக் கதைகளும் உற்றுநோக்கத் தக்கவைகளாகும். இவ்வாறு காணப்படும் மாடசாமி, மருதைவீரன், பொன்னர் - சங்கர், கருப்பன், இராமர் போன்ற தெய்வங்கள் பற்றிய விடயங்கள் கவனத்தைப் பெறுகின்றன.

முழுமையான கட்டுரைக்கு

'அஞ்சி' என்பது பயந்து அல்லது திகைத்து எனப் பொருள்படுகிறது. முனியாண்டி கடவுளுக்குப் பயந்து அல்லது அஞ்சித் திகைத...

Address


Alerts

Be the first to know and let us send you an email when Ezhuna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ezhuna:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

Our Story

Ezhuna Media Foundation is a non - profit, charitable independent media organization founded in 2012. The primary objective of this organization is to record the various voices of the people, especially those occupying the margins of society. Operating in the social spaces closely related to Sri Lanka’s Tamil speaking communities, Ezhuna aims at recording, preserving and engaging with various forms of arts and culture associated with these communities. It also aims to specialize in print medium, visual medium, radio broadcasting and internet medium covering a range of social, cultural, political and economical issues. As an independent body, Ezhuna Media Foundation will bring together different social groups, and organizations representing conflicting ideological positions. The foundation looks forward to collaborating with individuals and organizations that are interested in contributing to its endeavors in the above mentioned domains. Objectives * Initiate the traditional print medium efforts that publishes books, journals, magazines and newspapers * Introduce the most powerful visual medium to specialise in producing documentries, short-films and talk shows * Provide a radio broadcasting service which broadcasts content that is popular and relevant to Sri Lanka's Tamil speaking communities and provide a mechanism for enabling individuals, groups to tell their own stories and to share experiences. * Build a more interactive internet and mobile medium that would connect rest of the mediums and also function in all possibilities.