SHUMS TV

SHUMS TV இறைஞானமே எங்கள் மூலதனம்

இது ஷம்ஸ் மீடியா யுனிட்டின் உத்தியோகபூர்வ ஷம்ஸ் டிவி முகநூல் பக்கம்.

இவ் அமைப்பு கிழக்கிலங்கை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அதி சங்கையும், கீர்த்தியும் நிரம்பிய அஷ்ஷெய்குல் காமில், ஆரிப் பில்லாஹ், ஞானபிதா, மௌலவீ அல்ஹாஜ் AJ.அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ அன்னவர்களின் உயர்திரு ஆலோசனைக்கிணங்க
ஸுபிஸ இஸ்லாமியம் சார்ந்த விழுமியங்களான ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் ஆகியவற்றின் விளக்கங்க

ளையும், நுணுக்கங்களையும், ஆய்வுகளையும், வழிகாட்டுதலையும் உலகிற்கு எடுத்துரைக்கக்கூடிய ஓர் முகநூல் ஊடகமாகும்.

எமது உத்தியோகபூர்வ ஊடக வலையமைப்புக்களும், சமூக வலைத்தளங்களும்...

இணையத்தளம் - www.shumsmedia.com

யூடியுப் - www.youtube.com/shumsmedia

டுவிட்டர் - www.twitter.com/shumsnews

வாட்ஸ்அப் - +94 77 48 49 786

முகநூல் - www.facebook.com/shumsmediaunit

முத்துப்பேட்டை வாழுமெங்கள்...வரிகள் - அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, ப...
06/11/2025

முத்துப்பேட்டை வாழுமெங்கள்...
வரிகள் - அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ
பாடகர் - இறைஞானப் பாடகர் MFM. பிஹாம்
வெளியீடு - ஷம்ஸ் மீடியா யுனிட்

-------------------- வரிகள் ---------------------
முத்துப்பேட்டை வாழுமெங்கள் முக்தி பெற்ற நாதரே!
முத்தி முத்தி உங்கள் பாதம் சித்தி பெற்றோம் நீதரே!
முத்துப்பேட்டை வாழுமெங்கள் முக்தி பெற்ற நாதரே!
முத்தி முத்தி உங்கள் பாதம் சித்தி பெற்றோம் நீதரே!

பைத்தியம் பேய் சூனியம் நோய்
பறக்கச் செய்யும் செம்மலே!
பக்தியுடன் கேட்டு நின்றோம்
பார்த்து அருள்வீர் எம்மையே!

மனைவி மக்கள் மனைகள் காப்பீர்
மாதவத்தின் தென்றலே!
மகிழ்வுடன் எம்மைத் திருத்தி
மலரச் செய்வீர் மகிபரே!

சென்று வருவீர் என்று செப்பி
செல்வம் தருவீர் ஷெய்கனா!
சென்று வருகின்றோமே நாங்கள்
ஸெய்யிதே யா கௌதனா!

நோய் நொடிகள் நொம்பலங்கள்
கென்சர் சீனி யாவுமே!
வந்து எம்மை தாக்கிடாமல்
காத்தருள்வீர் நாதரே!

கடல் கடந்து உங்கள் தர்பார்
வருவதற்கு ஆசையே!
வந்து உங்கள் பாதம் பற்றி
கண்ணீர் மல்க வேண்டுமே!

எந்தன் குறைகள் கஷ்டம் யாவும்
தீர்த்து அருள வேண்டுமே!
என்ன குற்றம் செய்திட்டாலும்
நாங்கள் உங்கள் சொந்தமே!

ஹக்கை கல்கில் காணும் பேறை
காட்டி அருள்வீர் நாதரே!
காலம் வீணாய் போய்விடாமல்
கைப்பிடிப்பீர் நீதரே!

வறுமை நீக்கி வளங்கள் தந்து
வாழ வழிகள் காட்டுவீர்!
வற்றிடாத செல்வம் தந்து
வாழ்வு சிறக்க வாழ்த்துவீர்!

மருத்துவத்தின் மாமருந்தே!
மருத்துவர்கள் மன்னரே!
மருத்துவர்கள் மடிந்து நிற்கும்
மன்னரே குரு நாதரே!

ஒன்றில் பலதாய் பலதில் ஒன்றாய்
ஒருவனான ஏகனை
எதிலும் கண்டு கண்கள் குளிர
கைப்பிடிப்பீர் நாதரே!

திரை கடல் கடந்து வந்து
பாதம் முத்தும் பாக்கியம்!
கிடைத்துவிட்டால் போதும் போதும்
போதும் போதும் போதுமே!

முத்துப் பேட்டை வந்து உங்கள்
முற்றத்தில் நான் ஒரு முறை
முட்டுக்காலில் நின்று நெஞ்சம்
உருகி முனங்க வேண்டுமே!

Title : Muththup Peattai Vazhumengal...Lyrics : Ash Sheikh Moulavi Alhaj A. Abdur Rauf Misbahee, BahjeeSinger : MFM. FihamCreated By : Shums Media Unitமுத்து...

06/11/2025

நாளை 07.11.2025 வெள்ளிக்கிழமை தவ்ஹீதின் தலம் பத்ரிய்யா ஜுமுஆப் பள்ளிவாயலில் மாலை 05.00 மணிக்கு வைத்தியக் கலாநிதி ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் அவர்களின் திருக்கொடியேற்றப்படும்.

அனைத்து முரீதீன்கள் மற்றும் முஹிப்பீன்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னர் உரிய இடத்திற்கு வருமாறு அன்பாய் அழைக்கின்றோம்.

கொடி ஏற்றிய பின் “துஆ” ஓதப்படும். அதையடுத்து பின்வரும் பாடல் ஏழு தரம் பாடப்படும். அதை நீங்களும் பாட வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே உங்களின் கவனத்திற்கு தருகிறேன்.

مُرَادِيْ يَا مُرَادِيْ يَا مُرَادِيْ - مُرَادِيْ شَيْخُ دَاؤُوْدْ يَا مُرَادِيْ

இது ஏழு தரம் பாடப்படும்.

இந்த நிகழ்வு முடிந்ததிலிருந்து மூன்றாம் நாளிரவு கந்தூரி நிறைவு பெறும் வரை நீங்கள் விரும்பிய நேரத்தில் உங்களின் வீடுகளில் குடும்ப சகிதம் ஓதிக் கொள்வதற்காக தமிழில் இன்னுமொரு பாடலை உங்களின் நன்மை கருதி நாளை ஜுமுஆ தொழுகையின் முன் பள்ளிவாயலில் உங்களுக்கு வழங்குவோம். இதை கந்தூரி முடியும் வரை உங்களின் வீடுகளில் ஓதிக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

காதிமுல் கவ்மி,
மிஸ்பாஹீ.
06.11.2025

06/11/2025

ஆழ்ந்த அனுதாபங்களும், பிரார்த்தனைகளும்.

நேற்று 05.11.2025 புதன் கிழமை மாலை காலி, கிந்தோட்டையைச் சேர்ந்த எனது ஆன்மிக நண்பரும், அவ்லியாஉகளின் பக்தனுமாகிய அல்ஹாஜ் ஹாஷிம் அவர்கள் “தாறுல் பனா”வை விட்டும் “தாறுல் பகா” அளவில் பயணமானார்கள். “இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்”

அன்னார் பல்லாண்டுகளாக என்னுடன் தொடர்புடையவரும், “வஹ்ததுல் வுஜூத்” சத்தியக் கொள்கையை நூறு வீதமும் ஏற்று அதன் வழி பயணித்தவருமாவார்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் சகல பாவங்களையும் மன்னித்து, “ஜன்னதுல் பிர்தவ்ஸ்” எனும் சுவனச் சோலையில் கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அன்னவர்களுடனும், “ஸாதாத்”மார் மற்றும் வலீமார்களுடனும் குடியமர்த்துவானாக! அன்னாரின் பிரிவால் துன்புறும் அன்னாரின் மனைவி, மக்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பொறுமையையும், மன அமைதியையும் வழங்குவானாக! ஆமீன்.

اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسّع مدخله وأسكنه جنّة الفردوس الأعلى مع أسعد المخلوقات وأفضل الموجودات سيدنا محمد صلى الله عليه وسلم بجاهه وبجاه سائر الأنبياء والأولياء والأقطاب كلّهم أجمعين، آمين،

03/11/2025

அல்லாஹ் படைப்புக்கள் அனைத்துமாயும் உள்ளவன் என்றாலும், அல்லாஹ் படைப்புக்கள் அனைத்தையும் சூழ்ந்தவன் என்றாலும் இரண்டும் ஒன்றேதான்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

வாசக நேயர்களே!

நீங்கள் இரண்டு வசனங்களில் சொல்லப்பட்ட மேற்கண்ட ஒரே தத்துவத்தை தெளிவான மன நிலையோடு சிந்தித்தால் எது சத்தியமோ அதைச் சந்திப்பீர்கள். இன்றேல் அசத்தியம் என்ற இருளில் வாழ்ந்து மரணிப்பீர்கள். அசத்தியம் என்பது இருள். அது ஒரு திரை!

வாசக நேயர்களே! நீங்கள் பின்வருமாறு என்னிடமும் கேட்கலாம். அல்லது “எல்லாம் அவனே” என்ற தத்துவம் பேசுகின்ற ஸூபீகளிடமும் கேட்கலாம். எவரிடம் கேட்டாலும் விடை ஒன்றுதான்.

உங்களின் கேள்வியை நானே சொல்லி அதற்கான தெளிவையும் தருகிறேன்.

இதுவே உங்கள் கேள்வி.

அல்லாஹ் அனைத்துமாயும் உள்ளான் என்றும் சொல்கிறீர்கள். இவ்வாறு எழுதியும் வருகிறீர்கள்.

அல்லாஹ் அனைத்தையும் சூழ்ந்துள்ளான் என்றும் சொல்கிறீர்கள். இவ்வாறு எழுதியும் வருகிறீர்கள்.

அல்லாஹ் அனைத்துமாய் உள்ளான் என்றால் “எல்லாம் அவனே” என்று சொல்கிறீர்கள். இதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஏனெனில் இதற்கு இரண்டு வஸ்துக்கள் தேவையில்லை. “உள்ளது ஒன்று, மற்றது அன்று” என்ற தத்துவத்தின் படி உள்ளது ஒன்றுதான், மற்றது அன்றுதான் என்று நம்புகிறோம்.

ஆயினும் இவ்வாறு தத்துவம் பேசியும், எழுதியும் வருகின்ற நீங்கள் இதற்கு மாறாகவும் சிலவேளை சொல்கிறீர்கள். எழுதியும் வருகிறீர்கள்.

அதாவது அல்லாஹ் எல்லா வஸ்துக்களையும் சூழ்ந்தவனாக உள்ளான் என்றும் சொல்கிறீர்கள். எழுதியும் வருகிறீர்கள். இதற்கு இரண்டு வஸ்துக்கள் அவசியம் தேவைப்படும். அதாவது சூழ்கின்ற வஸ்து என்றும், சூழப்பட்ட வஸ்து என்றும் இரண்டு வஸ்துக்கள் தேவைப்படும்.

சூழ்கின்றவன் அல்லாஹ் என்றால் சூழப்படுகின்ற வஸ்து எது? அது படைப்பாகத்தானே இருக்க வேண்டும்.

இதன் விபரத்தை சந்தேகம் அறுந்து போகும் வகையில் விளக்கி கூறுங்கள்.

சந்தேக நிவர்த்தி:

இங்கு மூன்று விடயங்களைக் கவனத்திற் கொள்ள வேண்டும். ஒன்று مُحِيْطٌ சூழக் கூடியது. அதாவது எது சூழ்கிறதோ அது. இரண்டு مُحَاطٌ சூழப்பட்டது. அதாவது எது சூழப்பட்டதோ அது. மூன்று إِحَاطَةٌ சூழ்தல்.

உதாரணமாக “கால் உறை காலைச் சூழ்ந்துள்ளது” என்பது போன்று. இவ் உதாரணத்தில் மூன்று அம்சங்கள் உள்ளன. ஒன்று: கால், இரண்டு: உறை, மூன்று: சூழ்தல். சூழ்தல் என்பதற்கு இம் மூன்றும் அவசியம். இவற்றில் ஒன்று இல்லையானால் சூழ்தல் என்ற பேச்சுக்கே இடமில்லாமற் போய்விடும்.

இது ஒரு வகையான சூழ்தல். சூழ்தலில் இரண்டு வகையுண்டு. ஒன்று மேலே சொன்ன வகை. மற்றது ஒன்று அது தன்னைத்தானே சூழ்ந்து கொள்தல். இதற்கு மூன்று அம்சங்கள் தேவையில்லை.

உதாரணமாக தங்கம் மோதிரத்தை சூழ்ந்துள்ளது, கடித உறையை தாள் சூழ்ந்துள்ளது என்பன போன்று. இது ஒரு வகைச் சூழ்தல். இந்த வகைச் சூழ்தலுக்கு மூன்று அம்சங்கள் தேவையில்லை.

மேற்கண்ட இரண்டு வகைச் சூழ்தலில் அல்லாஹ் படைப்பைச் சூழ்தல் என்பது இரண்டாம் வகையைச் சேர்ந்ததேயன்றி முதலாம் வகையைச் சேர்ந்ததல்ல.

தங்கம் மோதிரத்தைச் சூழ்வதற்கு தங்கம் என்று ஒரு வஸ்தும், மோதிரம் என்று இன்னொரு வஸ்தும் தேவையில்லை. இவ்வாறுதான் கடித உறையை தாள் சூழ்ந்து கொள்வதுமாகும். இதற்கும் தாள் என்றும், உறை என்றும் இரண்டு வஸ்துக்கள் தேவையில்லை. இவ்வாறுதான் சீனியை இனிப்பு சூழ்ந்து கொள்வதுமாகும். இதற்கும் இரண்டு வஸ்துக்கள் தேவையில்லை. இதனால்தான் இமாம் இப்னு அதாயில்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் أَلَا إِنَّهُ بِكُلِّ شَيْءٍ مُحِيْطٌ “அறிந்து கொள்! அல்லாஹ் அனைத்து வஸ்துக்களையும் சூழ்ந்தவனாக உள்ளான்” என்ற திருமறை வசனத்திற்கு பின்வருமாறு விளக்கம் கூறியுள்ளார்கள்.
أَيْ كَإِحَاطَةِ مَاءِ الْبَحْرِ بِأَمْوَاجِهِ مَعْنًى وَصُوْرَةً، فَهُوَ حَقِيْقَةُ كُلِّ شَيْءٍ، وَهُوَ ذَاتُ كُلِّ شَيْءٍ، وَكُلُّ شَيْءٍ عَيْنُهُ وَصِفَتُهُ، (الطبقات الكبرى للشعراني، 2-33)

விளக்கம்: “அல்லாஹ் அனைத்து வஸ்துக்களையும் சூழ்ந்தவனாக உள்ளான் என்பது கடல் நீர் எல்லா அம்சங்களிலும் அதன் அலைகளைச் சூழ்ந்திருப்பது போன்றதாகும். அவனே அனைத்து வஸ்துக்களின் எதார்த்தமாக உள்ளான். அவனே அனைத்து வஸ்துக்களின் “தாத்” ஆக உள்ளான். அனைத்து வஸ்துக்களும் அவன் தானானவையும், அவனின் தன்மையுமேயாகும்” என்று விளக்கம் கூறியுள்ளார்கள்.

இவ்வாறு விளக்கம் கூறிய இமாம் இப்னு அதாயில்லாஹ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் யார்? இவர்கள் “ஷாதுலிய்யா தரீகா”வின் தாபகர் “குத்புஸ்ஸமான் - குத்புல் வுஜூத்” அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் முதல் “கலீபா” குத்புஸ்ஸமான் அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் கலீபா ஆவார்கள்.

இவர்கள் ஸூபிஸ தத்துவங்கள் பற்றி பல நூல்கள் எழுதிய மகான் ஆவார்கள். “ஹிகம்” என்ற தத்துவ நூலை எழுதியவர்களும் இவர்கள்தான். இந் நூல் பற்றி உலகில் தோன்றிய “ஆரிபீன்”கள் كَادَ الْحِكَمُ أَنْ يَكُوْنَ قُرْآنًا “ஹிகம்” என்ற நூல் திருக்குர்ஆனுக்கு நெருங்கிவிட்டது என்று கூறியுள்ளார்கள்.

கடல் நீர் அதன் அலையைச் சூழ்ந்திருப்பது போன்றே அல்லாஹ் தனது படைப்புகளைச் சூழ்ந்துள்ளான் என்று விளக்கம் எழுதியவர்கள் இந்த மகான்தான்.

கடல் நீர் அலையைச் சூழ்ந்திருப்பதற்கு எத்தனை வஸ்துக்கள் தேவை? ஒன்றுதான் தேவை. இதுதான் தன்னைத்தானே சூழ்தல் என்று சொல்லப்படுகிறது.

எனவே, சூழ்தலில் இரண்டு வகையான சூழ்தல் உண்டு என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

உடலை உடை சூழ்ந்திருப்பதும், கையை கை உறை சூழ்ந்திருப்பதும், கடிதத்தை கடிதம் வைக்கப்பட்டுள்ள “கவர்” உறை சூழ்ந்திருப்பதும் ஒரு வகை சூழ்தல்தான். இவ்வாறான சூழ்தலுக்கே இரண்டு வஸ்துக்கள் தேவை. உடலும், உடையும், கடிதமும், கடித உறையும் தேவை. கையும், கை உறையும் தேவை.

இந்த வகைச் சூழ்தல்தான் சிருட்டி சிருட்டியை சூழ்தலாகும். அல்லாஹ் சிருட்டியைச் சூழ்தல் என்பது அவன் தன்னைத்தானே சூழ்தல் என்பதாகும். இதற்கு இரண்டு வஸ்துக்கள் தேவையில்லை.

நான் கூறும் இக்கருத்தை உறுதிப்படுத்துவதற்காக பின்வரும் வசனத்தையும் ஆதாரமாக எழுதுகிறேன்.
أَلَا إِنَّهُمْ فِي مِرْيَةٍ مِنْ لِقَاءِ رَبِّهِمْ أَلَا إِنَّهُ بِكُلِّ شَيْءٍ مُحِيطٌ

அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் - காபிர்கள் மறுமையில் தமது “றப்பு” - அல்லாஹ்வைக் காண்பதில் சந்தேகம் உள்ளவர்களாக உள்ளார்கள்.

அறிந்து கொள்ளுங்கள்! நிச்சமயாக அவன் - அல்லாஹ் சகல வஸ்துக்களையும் சூழ்ந்தவனாக உள்ளான். (41-54)

வாசகர்கள் தமது முழுக் கவனத்தையும் செலுத்தி வாசிக்குமாறும், எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளும் தூய எண்ணத்தோடு வாசிக்குமாறும் அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

மேற்கண்ட திருவசனம் ஒரே வசனமாயிருந்தாலும் ஒரு கேள்வியும், அதற்கான பதிலும் போல் உள்ளது அறிவுள்ளவர்களுக்கு மறையாது.

“மறுமையில் அல்லாஹ்வைக் காணும் விடயத்தில் காபிர்கள் சந்தேகமுள்ளவர்களாக உள்ளனர்” என்ற வசனம் ஒரு கேள்வி போலும், “அல்லாஹ் நிச்சயமாக அனைத்து வஸ்துக்களையும் சூழ்ந்தவனாக உள்ளான்” என்ற வசனம் முன்னால் வந்துள்ள கேள்விக்கு பதில் போன்றும் அமைந்துள்ளது.

காபிர்கள் மறுமையில் அல்லாஹ்வைச் சந்திப்பதில் சந்தேகம் உள்ளவர்களாக உள்ளார்கள் என்ற வசனத்திற்கு, அவர்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. அவர்கள் நிச்சயமாக அவனைச் சந்திப்பார்கள் என்று வசனம் வந்திருந்தால் அவர்களின் சந்தேகத்திற்கு அது தெளிவான விடையாகவும், சுருக்கமான விடையாகவும் அமைந்திருக்கும். சிறியவர்கள் கூட புரிந்து கொள்ளக் கூடியதாகவும் இருந்திருக்கும்.

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம் அவ்வாறு அமையாமல் விடையின் சரியான விளக்கத்தை எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத பாணியில் அமைந்துள்ளது. ஏன் மூடலான பாணியில் அமைந்துள்ளதென்பதற்கு ஒரு விளக்கம் சொல்ல முடியும். அதை இங்கு சுட்டிக் காட்டுகிறேன்.

أَلَا إِنَّهُ بِكُلِّ شَيْءٍ مُحِيْطٌ،

“அறிந்து கொள்! நிச்சயமாக அல்லாஹ் அனைத்து வஸ்துக்களையும் சூழ்ந்தவனாவான்” என்ற இந்த பதில் மூலம் “இஹாதத்” சூழ்தலில் இரண்டு வகையுண்டு என்ற ஆய்வுக்கு வழி திறக்கப்படுகிறது. அதாவது ஒன்று இன்னொன்றைச் சூழ்ந்து கொள்தல். இன்னொன்று அது தன்னைத்தானே சூழ்ந்து கொள்தல் என்ற ஆய்வுக்கு வழி காட்டப்படுகிறது. இந்தப் பதிலில் மூளைக்கு வேலை வழங்கப்படுகிறது. அதாவது அவன் சகல வஸ்தையும் சூழ்ந்தவனாக உள்ளான் என்ற வசனம் அல்லாஹ்வை மறுமையில் காபிர்கள் காண்பார்கள் என்ற உண்மையை வெள்ளிடை மலை போல் உணர்த்துகிறது.

அல்லாஹ் நாடியிருந்தால் أَلَا إِنَّهُ بِكُلِّ شَيْءٍ مُحِيْطٌ “அவன் அனைத்து வஸ்துக்களையும் சூழ்ந்தவனாக உள்ளான்” என்று கூறாமல் أَلَا إِنَّهُمْ يَرَوْنَهُ “நிச்சயமாக அவர்கள் - காபிர்கள் அல்லாஹ்வைக் காண்பார்கள்” என்று சொல்லியிருக்கலாம். இவ்வாறு சொல்லியிருந்தால் மிக எளிதாக விடயம் விளங்கியிருக்கும். ஆயினும் அவனே எல்லாமாயும் உள்ளான் என்ற கருத்தைக் கூறி அவர்களின் சந்தேகத்தை நீக்கி வைப்பது அவன் தவிர வேறொன்றுமில்லை என்ற தத்துவத்தை மிக எளிதில் உணர்த்தலாம் என்பதற்காகவேயாகும்.

தொடரும்...

01/11/2025

அல்லாஹ் மட்டுமே உள்ளான். படைப்பு என்பது முக்காலத்திலும் இல்லாதது.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

இவ்வாறு சொல்கிறார்கள் “ஸ்பெய்ன்” நாட்டைச் சேர்ந்த ஹிஜ்ரீ 509ல் பிறந்து ஹிஜ்ரீ 594ல் மரணித்த குத்புல் அக்தாப் அபூ மத்யன் ஷுஐப் றஹிமஹுல்லாஹ் அவர்கள்.

وَمِنْ أَلْطَفِ إِشَارَاتِ وَحْدَةِ الْوُجُوْدِ قَوْلُ الْقُطْبِ أَبِى مَدْيَنْ التِّلَمْسَانِيْ رحمه الله تعالى،
اللهَ قُلْ وَذَرِ الْوُجُوْدَ وَمَا حَوَى - إِنْ كُنْتَ مُرْتَادًا بُلُوْغَ كمالٍ
فَالْكُلُّ دُوْنَ اللهِ إِنْ حَقَّقْتَهُ - عَدَمٌ عَلَى التَّفْصِيْلِ وَالْإِجْمَالِ
وَاعْلَمْ بِأَنَّكَ وَالْعَوَالِمَ كُلَّهَا - لَوْلَاهُ فِيْ مَحْوٍ وَفِي اضْمِحْلَالِ
مَنْ لَا وُجُوْدَ لِذَاتِهِ مِنْ ذَاتِهِ - فَوُجُوْدُهُ لَوْلَاهُ عَيْنُ مُحَالٍ
فَالْعَارِفُوْنَ بِرَبِّهِمْ لَمْ يَشْهَدُوْا - شَيْئًا سِوَى الْمُتَكَبِّرِ الْمُتَعَالِ
وَرَأَوْا سِوَاهُ عَلَى الْحَقِيْقَةِ هَالِكًا- فِي الْحَالِ وَالْمَاضِيْ وَالْإِسْتِقْبَالِ

இவர்கள் “திலம்ஸான்” என்ற ஊரில் அடக்கம் பெற்றுள்ளார்கள். இவர்கள் “ஷெய்குல் அக்பர்” முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களால் مُعَلِّمُ الْمُعَلِّمِيْنْ (ஆசிரியர்களின் ஆசிரியர்) என்று பட்டம் சூட்டப்பட்டவர்களாவர்.

முதலில் இவர்களின் பாடல் வரிகளுக்கான பொருளை எழுதிய பின் இவர்களின் வரலாறுகளை சுருக்கமாக தமிழில் எழுதுகிறேன்.

பாடல் வரிகளுக்கான சுருக்கமான தமிழாக்கம்:

01. நீ அல்லாஹ் என்று சொல். (அல்லாஹ்) என்று நீ சொல். “வுஜூத்” உள்ளமை என்பதையும், அது தொடர்பானதையும் விட்டு விடு. நீ பூரணம் அடைய விரும்பினால்.

02. நீ சரியாக ஆய்வு செய்தால் அல்லாஹ் அல்லாத அனைத்தும் - படைப்புகள் யாவும் இல்லாதவை என்று தெரிந்து கொள்வாய். நீ பொதுவாக ஆய்வு செய்தாலும் இதுவே முடிவு. விபரமாக ஆய்வு செய்தாலும் இதுவே முடிவு.

03. அல்லாஹ் இல்லையெனில் நீயும், ஏனைய ஆலம்களும் - அண்டசராசரங்களும் இல்லாதவை என்று தெரிந்து கொள்.

04. எவனுக்கு - எந்த ஒரு படைப்புக்கு அல்லாஹ்வின் “தாத்” உள்ளமையிலிருந்து “தாத்” இல்லையோ அவ்வாறு ஒன்றிருப்பது அசாத்தியமானதாகும்.

05. அல்லாஹ்வை அறிந்த “ஆரிபீன்” இறைஞானிகள் பெருமைக்குரிய, உயர்வுமிக்க அல்லாஹ் தவிர எதையும் கண்டதேயில்லை.

06. எதார்த்தத்தில் சென்ற காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலங்களிலும் அல்லாஹ் தவிர வேறொன்றையும் இறைஞானிகள் காணவில்லை. அவர்கள் அனைத்தையும் அல்லாஹ்வாகவே கண்டார்கள்.

அபூ மத்யன் ஷுஐப் அவர்களின் சுருக்கமான வரலாறு:

இவர்கள் “உன்துலுஸ்” ஸ்பெய்னைச் சேர்ந்தவர்கள். بُوْ مَدْيَنْ அல்லது أَبُوْ مَدْيَنْ என்று மக்களால் அழைக்கப்பட்டு வந்தார்கள். இவர்களின் இயற் பெயர் ஷுஐப் ஆகும். شَيْخُ الشُّيُوْخْ என்றும், مُعَلِّمُ الْمُعَلِّمِيْنْ என்றும் அழைக்கப்பட்டு வந்தார்கள்.

பிறப்பு: ஹிஜ்ரீ 509, மீலாதீ 1115.
மறைவு: ஹிஜ்ரீ 594, மீலாதீ 1198.
பிறந்த இடம்: குத்னியானா - قُطْنِيَانَةْ (இது إِشْبِيْلِيَّةْ இஷ்பீலிய்யாவுக்கு சமீபத்தில் உள்ளது)
சட்ட மேதை - فَقِيْهْ
“முதஸவ்விப்” ஸூபீ - مُتَصَوِّفٌ
ஸ்பெய்ன் கவிஞர் - شَاعِرٌ أُنْدُلُسِيٌّ

இவர்கள் மொறோக்கோ, ஸ்பெய்ன் நாடுகளில் ஸூபிஸக் கல்லூரிகள் அமைத்த மகான். இஷ்பீலிய்யா, பாஸ் நாடுகளில் படித்தவர். அதிக காலம் “பஜாயா” நாட்டில் வாழ்ந்தவர். இங்கு அதிகமானோர் இவரைப் பின்பற்றினர். இங்கு இவரின் அறிமுகம் பிரசித்தி பெற்றது.

இவ்வாறிருந்த நிலையில் “மறாகிஷ்” என்ற நாட்டு மன்னனிடம் இவர்களின் எதிரிகளிற் சிலர் இவர் பற்றிய தவறான கருத்துக்கள் கூறியதால் இவர்கள் மன்னரிடம் கொண்டு வரப்பட்டார்கள். மன்னர் இவர்களைக் கொலை செய்ய முடிவு செய்ததாகவும், “மறாகிஷ்” என்ற இடத்தில் இவர்களின் ஆதரவாளர்கள் அதிகமாக இருந்த காரணத்தினால் அங்கு கொலை செய்ய முடிவில்லையாதலால் இவர்கள் பக்கத்து நாடான “திலம்ஸான்” என்ற இடத்திற்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டார்கள். இங்கு அவர்களை கொல்வது அவர்களின் திட்டமாக இருந்தது.

எனினும் இவர்களின் சதித் திட்டத்தை அல்லாஹ்வின் கருணையால் அறிந்த அபூ மத்யன் றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களை அழைத்துச் சென்ற பாதுகாவலர்களிடம் “திலம்ஸான்” என்ற இடத்தை நாம் அடையும் வரை நான் உயிரோடிருந்தால் அங்கு சென்றபின் என்னைக் கொலை செய்யுங்கள். அங்கு செல்வதற்கிடையில் நான் மரணித்தால் என்னை திலம்ஸானிலேயே அடக்கம் செய்து விடுங்கள் என்று முன் கூட்டியே அறிவித்து விட்டார்கள்.

ஸுப்ஹானல்லாஹ்! திலம்ஸானை அடைவதற்கிடையிலேயே அவர்களை அல்லாஹ் அழைத்துக் கொண்டான். மரணித்து விட்டார்கள். “இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்” إِنَّا للهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنْ

மகான் அவர்கள் “திலம்ஸான்” எனும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு கவர்ச்சியான “தர்ஹா” “மசார்” ஒன்றும் கட்டப்பட்டு தினமும் பல்லாயிரம் மக்களால் தரிசிக்கப்பட்டும் வருகிறார்கள்.

“பனூ மரீன்” மன்னர்கள் அவர்களின் “தர்ஹா” - மசாரில் ஒரு பள்ளிவாயலும், கல்வி தாபனம் ஒன்றும் கட்டியுள்ளார்கள். மக்கள் தினமும் அங்கு சென்று “சியாறத்” தரிசித்தும், அருள் வேண்டியும் வருகிறார்கள்.

இவர்கள் மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்நதவர்கள். தனது உறவினர்களின் ஆடுகளை வளர்த்து அவர்களிடமிருந்து அதற்கான கூலி பெற்று வாழ்ந்து வந்தார்கள். இத்தகைய கஷ்டத்திற்கு மத்தியில் திருக்குர்ஆனைக் கற்றுக் கொள்வதிலும், அதை மனனம் செய்வதிலும் கவனமெடுத்தார்கள். மொறோக்கோ நாடுகளைத் தரிசித்து ஆங்காங்கே அறிவு ஞானங்களைக் கற்றார்கள். இன்னும் “ஸப்தா” “தன்ஜா” நாடுகளுக்கும் சென்று பல அறிஞர்களைக் கண்டு அவர்கள் மூலமும் கல்வி, ஞானங்களைக் கற்றுக் கொண்டார்கள். தங்களின் வறுமை காரணத்தினால் எவரிடமும் கையேந்தாமல் உழைத்து வாழ்வதற்கான வழிகளில் முயற்சி செய்தார்கள். மீனவர்களைச் சந்தித்து அவர்களுடன் மீன்பிடித் தொழிலும் கவனம் செலுத்தினார்கள்.

பின்னர் “மறாகிஷ்” مَرَاكِشْ என்ற ஊரில் இராணுவத்தில் சேர்ந்து சில காலம் செயல்பட்டார்கள். அக்கால கட்டத்தில் தங்களின் ஒரு கரத்தை இழக்க வேண்டிய நிலையும் அவர்களுக்கு ஏற்பட்டது. இராணுவத்தில் பணியாற்றிய கால கட்டத்தில் அங்கு பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் இவர்களின் ஆன்மிகப் போக்கை அறிந்து فَاسْ “பாஸ்” நாட்டிற்குச் செல்லுமாறு ஆலோசனை வழங்கினார்கள். அவரின் ஆலோசனைப்படி அங்கு சென்று மார்க்க ஞானங்களைக் கற்கத் தொடங்கினார்.

இது குறித்து அவர்கள் கூறுகையில்,

سِرْتُ إِلَيْهَا وَلَازَمْتُ جَامِعَهَا، وَرَغِبْتُ فِى مَنْ عَلَّمَنِيْ أَحْكَامَ الْوُضُوْءِ وَالصَّلَاةِ، ثُمَّ سَئَلْتُ عَنْ مَجَالِسِ الْعُلَمَاءِ فَسِرْتُ إِلَيْهَا مَجْلِسًا بَعْدَ مَجْلِسٍ،

குறித்த இராணுவ வீரரின் ஆலோசனைப்படி “பாஸ்” நாட்டிற்குச் சென்று ஒரு பள்ளிவாயலில் தங்கியிருந்து “வுழூ” வின் சட்டங்கள், தொழுகையின் விபரங்களைக் கற்றுக் கொண்டு “உலமாஉ” மார்க்க மேதைகளின் சபைகளில் கலந்து கொண்டு இறைஞானம் கற்கலானார்கள்.

குறிப்பு: இக்காலத்தில் “பாஸ்” எனும் நாடு “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் அதி உச்சக்கட்ட நிலையில் இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நாட்டில் ஆன்மிக மகான்களான ஷெய்குமாரை மட்டும் ஏற்றுக் கொண்டு ஏனைய உலமாஉகளின் உறவை முறித்துக் கொண்டார்கள்.

இதன் வரிசையில் ஹிஜ்ரீ 572ல் மரணித்த اَبُوْ يَعْزَى بَلْنُوْرْ என்ற மகானிடமும், ஹிஜ்ரீ 559ல் மரணித்த الشيخ علي بن حرزهم என்ற மேதை அவர்களிடமும் “முஹாஸபீ” என்ற இறைஞான மகானால் எழுதப்பட்ட اَلرِّعَايَةْ என்ற நூலையும், அஷ்ஷெய்கு அபுல் ஹஸன் என்ற ஞான மகானால் எழுதப்பட்ட اّلسُّنَنْ என்ற நூலையும், அஷ்ஷெய்கு அபூ அப்தில்லாஹ் அத்தக்காக் என்ற மகானிடம் “தஸவ்வுப்” கலையையும் கற்றார்கள்.

திரு மக்கா நகர் பயணம்:

இதன் பின் அபூ மத்யன் அவர்கள் திரு மக்கா நகர் சென்று “ஹஜ்” வணக்கம் செய்ய விரும்பி பயணத்தை தொடர்ந்தார்கள். வரும் வழியில் பல்லாயிரம் மார்க்க மேதைகளைச் சந்திக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. அவர்களில் உலமாஉகள் - மார்க்க மேதைகள், மற்றும் ஞான மகான்கள், துறவிகள் அடங்குவர்.

விஷேடமாக வலீகட்கரசர் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் அவர்களுக்கு கிடைத்தது.

திரு மக்காப் பள்ளிவாயலில் அவர்களிடம் “ஹதீது” நபீ மொழிகளை கற்கும் வாய்ப்பு இவர்ககுள்கு கிடைத்தது. இதைவிடப் பெரும் பாக்கியம் என்னவெனில் குத்பு நாயகம் அவர்கள் இவர்களுக்கு “ஸூபீ” என்று பட்டம் சூட்டியதேயாகும். அல்ஹம்து லில்லாஹ்! இதைவிட வேறு பாக்கியம் என்னதான் இருக்கறது?

அபூ மத்யன் அவர்கள் “ஹஜ்” பயணத்தை முடித்துக் கொண்டு ஆபிரிக்க நாட்டுக்கு திரும்பிவிட்டார்கள். அங்கு “பஜாயா” பகுதியின் கிழக்கில் உள்ள “பஜாயா” நகர் பட்டணத்தில் அதிக காலம் தங்கியிருந்தார்கள். இங்கு தங்கியிருந்த காலத்தில் அவர்கள் சர்வதேச மட்டத்தில் பிரசித்தி பெற்றார்கள். “பஜாயா” நகர் பள்ளிவாயலில் தங்கியிருந்து அறிவு ஞானங்களைக் கற்றுக் கொடுக்கவும், தங்களின் ஸூபிஸ “தரீகா”வை வளர்ப்பதிலும் கவனம் செலுத்தினார்கள்.

وَكَانَ يَقُوْلُ: طَرِيْقَتُنَا هَذِهِ أَخَذْنَاهَا عَنْ أَبِيْ يَعْزَى بِسَنَدِهِ عَنِ الْجُنَيْدِ الْبَغْدَادِيْ عَنْ سَرِيِّ السَّقَطِيْ عَنْ حَبِيْبِ الْعَجَمِيْ عَنِ الْحَسَنِ الْبَصَرِيْ عَنْ عَلِيِّ بْنِ أَبِيْ طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُمْ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ جِبْرِيْلَ عَلَيْهِ السَّلَامْ عَنْ رَبِّ الْعَالَمِيْنَ،

மகான் அபூ மத்யன் அவர்கள் பின்வருமாறு சொல்வார்கள்.

(நாங்கள் எங்களின் ஸூபிஸ “தரீகா”வை அல்லாஹ்விடமிருந்த ஜிப்ரீல் வழியாக, அவரிடமிருந்து கண்மணி நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் வழியாக, அவர்களிடமிருந்து அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் வழியாக, அவர்களிடமிருந்து ஹஸனுல் பஸரீ வழியாக, அவர்களிடமிருந்து ஹபீபுல் அஜமீ வழியாக, அவர்களிடமிருந்து ஸரிய்யுஸ்ஸகதீ அவர்கள் வழியாக, அவர்களிடமிருந்து ஜுனைதுல் பக்தாதீ வழியாக, அவர்களிடமிருந்து எனது குரு - ஷெய்கு அபூ யஃசா வழியாக பெற்றுக் கொண்டோம்)

இவ்வாறு ஏன் சொன்னார்கள் என்றால் அவர்கள் பேசிய கொள்கையான “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை அல்லாஹ்விடமிருந்து மேற்கண்ட எவராலும் மறுக்க முடியாதவர்கள் வழியாக வந்த கொள்கை என்பதை இக்காலத்தில் மேற்கண்ட கொள்கை “குப்ர்” என்று குரைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு செருப்படி - செருப்பு - அடி கொடுப்பதற்கேயாகும்.

முற்றும்.

சமூகம் என்றால் எத்தனை பேர்? Samooham Enraal Eththanai Pear?சிறப்பு சொற்பொழிவு : அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா...
31/10/2025

சமூகம் என்றால் எத்தனை பேர்? Samooham Enraal Eththanai Pear?

சிறப்பு சொற்பொழிவு : அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் அஷ்ஷெய்க் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ அன்னவர்கள்.

காலம் - 31.10.2025 வெள்ளிக்கிழமை

இடம் - பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், காத்தான்குடி-5. இலங்கை.

சமூகம் என்றால் எத்தனை பேர்? Samooham Enraal Eththanai Pear?சிறப்பு சொற்பொழிவு : அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா மௌலவீ அல....

ஜுமுஅஹ் பிரசங்கம்உரை - சங்கைக்குரிய மௌலவீ MJM. ஜஹானீ றப்பானீ அவர்கள்காலம் - 31.10.2025இடம் - பத்ரிய்யஹ் ஜுமுஅஹ் பள்ளிவாய...
31/10/2025

ஜுமுஅஹ் பிரசங்கம்

உரை - சங்கைக்குரிய மௌலவீ MJM. ஜஹானீ றப்பானீ அவர்கள்

காலம் - 31.10.2025

இடம் - பத்ரிய்யஹ் ஜுமுஅஹ் பள்ளிவாயல், காத்தான்குடி-5. இலங்கை.

ஜுமுஅஹ் பிரசங்கம்உரை - சங்கைக்குரிய மௌலவீ MJM. ஜஹானீ றப்பானீ அவர்கள்காலம் - 31.10.2025இடம் - பத்ரிய்யஹ் ஜுமுஅஹ் பள்ளிவாய.....

30/10/2025

அல்லாஹ்தான் சிருஷ்டிகளாக வெளியாகித் தோற்றுகிறான். இவ்வாறு வெளியானதால் அவனின் “தன்ஸீஹ்” பரிசுத்த நிலைக்கு எந்த ஒரு குறையும் ஏற்படவில்லை. அவன் படைப்புகளாக வெளியாகுமுன் எந் நிலையில் இருந்தானோ அந் நிலையில்தான் இன்றும் இருக்கிறான். என்றும் இருப்பான்.

'هُوَ الْآنَ' - بَعْدَ ظُهُوْرِهِ فِى صُوَرِ الْكَائِنَاتِ - 'كَماَ كَانَ' - قَبْلَ ظُهُوْرِهِ فِى صُوَرِ الْكَائِنَاتِ،
அவன் (அல்லாஹ்) தற்போது (படைப்புகளின் உருவில் வெளியான பின்) - (படைப்புகளின் உருவில் தோற்று முன்) இருந்தவாறே உள்ளான்.

وُجُوْدُهُ تَعَالَى لَمْ يَفْنَ وَلَمْ يَتَغَيَّرْ وَلَمْ يَتَبَدَّلْ بِظُهُوْرِهِ فِى صُوَرِ الْمَخْلُوْقَاتِ وَأَجْسَامِهَا،
படைப்புகளின் உருவிலும், ஜடத்திலும் தோற்றியதால் அவனுடைய உள்ளமை அழியவுமில்லை, மாறுபடவுமில்லை.

سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ كَانَ الرَّبُّ بَعْدَ خَلْقِ الْخَلْقِ؟ قَالَ: كَانَ كَمَا كَانَ قَبْلَ خَلْقِ الْخَلْقِ،
படைப்புகளைப் படைத்த பின் அல்லாஹ் எவ்வாறு உள்ளான்? என்று பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கேட்கப்பட்ட போது, “படைப்புகளைப் படைக்கு முன் எவ்வாறிருந்தானோ அவ்வாறே உள்ளான்” என்று பதிலளித்தார்கள்.

اَلسِّوَارُ الْمَصْنُوْعُ مِنَ الذَّهَبِ عَيْنُ الذَّهَبِ، لَا غَيْرُ الذَّهَبِ،
وَالْخِوَانُ الْمَصْنُوْعُ مِنَ الْخَشَبِ عَيْنُ الْخَشَبِ، لَا غَيْرُ الْخَشَبِ،
وَالْمِسْمَارُ الْمَصْنُوْعُ مِنَ الْحَدِيْدِ عَيْنُ الْحَدِيْدِ، لَا غَيْرُ الْحَدِيْدِ،
தங்கத்தினால் செய்யப்பட்ட வளையல் தங்கத்திற்கு வேறில்லை!
மரத்தினால் செய்யப்பட்ட மேசை மரத்திற்கு வேறில்லை!
இரும்பினால் செய்யப்பட்ட ஆணி இரும்புக்கு வேறில்லை!

اَلسِّوَارُ مَظْهَرُ الذَّهَبِ،
وَالْخِوَانُ مَظْهَرُ الْخَشَبِ،
وَالْمِسْمَارُ مَظْهَرُ الْحَدِيْدِ،
வளையல் என்பது தங்கத்தின் வெளிப்பாடே!
மேசை என்பது மரத்தின் வெளிப்பாடே!
ஆணி என்பது இரும்பின் வெளிப்பாடே!

وَالظَّاهِرُ لَا يُفَارِقُ الْمَظْهَرَ،
وَالصِّفَةُ لَا تُفَارِقُ الْمَوْصُوْفَ،
وَالسِّوَارُ لَا يُفَارِقُ الذَّهَبَ،
وَالْخِوَانُ لَا يُفَارِقُ الْخَشَبَ،
وَالْمِسْمَارُ لَا يُفَارِقُ الْحَدِيْدَ،
வெளியான வஸ்து தான் எவ்வுருவில் வெளியானதோ அதைப் பிரியாது.
“ஸிபத்” தன்மை என்பது அது கொண்டு எது வருணிக்கப்படுகிறதோ அதை விட்டும் பிரியாது.
வளையல் தங்கத்தை விட்டும் பிரியாது.
மேசை மரத்தை விட்டும் பிரியாது.
ஆணி இரும்பை விட்டும் பிரியாது.

وَالْبُرُوْدَةُ صِفَةُ الثَّلْجِ، وَهِيَ لَا تُفَارِقُ الثَّلْجَ،
وَالْحَرَارَةُ صِفَةُ النَّارِ، وَهِيَ لَا تُفَارِقُ النَّارَ،
وَالْحَلَاوَةُ صِفَةُ السُّكَّرِ، وَهِيَ لَا تُفَارِقُ السُّكَّرَ،
குளிர் என்பது “ஐஸ்” பனிக்கட்டியின் தன்மையாகும். அது “ஐஸ்” பனிக் கட்டியை விட்டும் பிரியாது.
சூடு என்பது நெருப்பின் தன்மையாகும். அது நெருப்பை விட்டும் பிரியாது.
இனிப்பு என்பது சீனியின் தன்மையாகும். அது சீனியை விட்டும் பிரியாது.

وَهَذِهِ أَمْثِلَةٌ لِاسْتِحَالَةِ فِرَاقِ الصِّفَاتِ عَنْ مَوْصُوْفِهَا،
وَهَكَذَا صِفَاتُهُ تَعَالَى وَهِيَ لَا تُفَارِقُ مَوْصُوْفَهَا، أَيْ ذَاتَهُ تَعَالَى عَزَّ وَجَلَّ،
இவ் உதாரணங்கள் தன்மைகள் கொண்டு வருணிக்கப்பட்டவற்றை விட்டும் அவை - தன்மைகள் பிரிதல் அசாத்தியம் என்பதற்கான உதாரணங்களாகும். இவ்வாறே அல்லாஹு தஆலாவுடைய தன்மைகளும் அவனை விட்டும் - அவனுடைய “தாத்” பிரம்மத்தை விட்டும் பிரயாது.

فَمَنْ قَالَ إِنَّ السِّوَارَ غَيْرُ الذَّهَبِ، وَإِنَّ الْخِوَانَ غَيْرُ الْخَشَبِ، وَإِنَّ الْمِسْمَارَ غَيْرُ الْحَدِيْدِ فَقَدْ أَخْطَأَ،
எவன் வளையல் தங்கத்திற்கு வேறென்றும், மேசை மரத்திற்கு வேறென்றும், ஆணி இரும்பிற்கு வேறென்றும் சொல்கிறானோ அவன் நிச்சயமாக தவறிழைத்தவனே!

وَمَنْ قَالَ إِنَّ الْخَلْقَ غَيْرُ الْحَقِّ أَيْ غَيْرُ الْخَالِقِ فَقَدْ أَشْرَكَ بِاللهِ تَعَالَى لِإِثْبَاتِهِ وُجُوْدًا مُسْتَقِلًّا لِلْخَلْقِ الْمَعْدُوْمِ غَيْرَ وُجُوْدِهِ تَعَالَى،
எவன் படைப்பு என்பது “ஹக்” படைத்தவனான அல்லாஹ்வுக்கு வேறானதென்று சொல்கிறானோ அவன் இல்லாத படைப்புக்கு அல்லாஹ்வுக்கு வேறான தனியான ஓர் உள்ளமையை தரிபடுத்துவது கொண்டு “ஷிர்க்” இணை வைத்தவனாகிவிட்டான்.

- காதிமுல் கவ்மி -

30/10/2025
29/10/2025
29/10/2025

*புதை பொருள் போன்ற இறை மறை ஞானம்! அது எது?*

_தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)_

قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ مِنَ الْعِلْمِ كَهَيْئَةِ الْمَكْنُوْنِ لَا يَعْلَمُهُ إِلَّا أَهْلُ الْمَعْرِفَةِ بِاللهِ تَعَالَى، فَإِذَا نَطَقُوْا بِهِ لَمْ يَجْهَلْهُ إِلَّا أَهْلُ الْاِغْتِرَارِ بِاللهِ تَعَالَى،
“நிச்சயமாக அறிவில் மறை பொருள் போன்றதும் உள்ளது. இதை இறைஞானம் உள்ளவர்கள் மட்டுமே அறிவார்கள். இவர்கள் இந்த அறிவை மக்கள் மத்தியில் கூறினால் அல்லாஹ் யாரென்று தெரியாத ஏமாந்து போனவர்கள் மட்டுமே அதை எதிர்ப்பார்கள்” என்று நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள். (ஆதாரம்: இஹ்யா உலூமித்தீன்)

மேற்கண்ட இந்த நபீ மொழி இன்னும் சில அறிவிப்புகளில் لَا يَعْلَمُهُ إِلَّا الْعُلَمَاءُ بِاللهِ அல்லாஹ்வை அறிந்த அறிஞர்கள் தவிர வேறு எவரும் அறியமாட்டார்கள் என்றும், فَإِذَا نَطَقُوْا بِهِ لَا يُنْكِرُهُ إِلَّا أَهْلُ الْغِرَّةِ بِاللهِ அவர்கள் அந்த அறிவைப் பகிரங்கமாக கூறினால் அல்லாஹ்வை அறிந்து கொள்ளாதவர்கள் மட்டுமே அதை எதிர்ப்பார்கள் என்றும் வந்துள்ளது இங்கு குறிப்பிட வேண்டியதாகும்.

நபீ மொழியில் வந்துள்ள அறபு வசனங்கள் மாறுபட்டாலும் கருத்து ஒன்றுதான். அதென்னவெனில் அறிவில் மறை பொருள் போன்ற, அதாவது பகிரங்கமாகச் சொல்லப்படாத அறிவும் உண்டு. அதை அறிந்தவர்கள் பகிரங்கமாக வாய் திறந்து பகிரங்கமாகச் சொன்னார்களாயின் அந்த அறிவை அறியாதவர்களே அதை எதிர்ப்பார்கள் என்பதாகும்.

நபீ பெருமானார் அவர்களின் مُعْجِزَةْ அற்புதத்தை என்னென்பது? 1400 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கக் கூடிய ஓர் உண்மையை அதற்கு முன்னேயே அறிவித்து விட்டார்கள்.

இத் தகவல் நபீ பெருமானார் அவர்கள் மறைவான செய்திகளையும் அறிந்தவர்களே என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரமாகும். இவ் ஆதாரம் பெருமானாருக்கு மறைவான செய்தியொன்றும் தெரியாதென்று கூறும் வழிகேடர்களுக்கு வசமான ஆப்பாகும்.

120 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي أَخِي، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: ' حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وِعَاءَيْنِ: فَأَمَّا أَحَدُهُمَا فَبَثَثْتُهُ، وَأَمَّا الآخَرُ فَلَوْ بَثَثْتُهُ قُطِعَ هَذَا البُلْعُومُ '

அபூ ஹுறைறா றழியல்லாஹு அன்ஹு அவர்கள், “நான் பெருமானார் அவர்களிடமிருந்து இரண்டு தோல் துருத்தியளவு (அறிவுகளைப்) பெற்றேன். அவற்றில் ஒன்றை உங்கள் மத்தியில் பரப்பிவிட்டேன். மற்ற ஒன்றை நான் பரப்பினால் என்னுடைய கழுத்து வெட்டப்படும்” என்று கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரீ, 120)

وِعَاءٌ
என்ற சொல் ஒருமை. وِعَائَانِ - وِعَائَيْنِ என்ற சொல் இருமை. أَوْعِيَةٌ என்ற சொல் பன்மை. இச் சொல்லை اَلْوِعَاءُ என்றும், اَلْوُعَاءُ என்றும் சொல்ல முடியும்.

اَلْوِعَاءُ: مَا يُوْعَى فِيْهِ الشَّيْءُ أَيْ يُجْمَعُ وَيُحْفَظُ،

“அல் விஆஉ” என்றால் தோல் துருத்தி, பேக், சாக்கு போன்ற ஏதோ ஒரு வஸ்தை ஒன்று சேர்த்து பாதுகாக்கப்படக் கூடிய ஒன்றுக்குச் சொல்லப்படும்.

வசனத்தின் பொருள் இரண்டு சாக்கு அளவு அல்லது இரண்டு “பேக்” அளவு அறிவுகளைப் பெற்றுக் கொண்டேன் என்று வரும்.

நான் பெருமானாரிடமிருந்து இரண்டு சாக்கு அளவு அறிவுகளைப் பெற்றுக் கொண்டு அவற்றில் ஒன்றிலிருந்த அறிவை மக்களிடம் சொல்லிவிட்டேன். மற்றதிலிருந்த அறிவை நான் சொல்லவில்லை. அதை நான் சொன்னால் எனது கழுத்து வெட்டப்படும் என்று கூறினார்கள்.

இந்த நபீ மொழிக்கு பின்வருமாறும் பொருள் கூறலாம். ஒன்றிலிருந்த அறிவு சொல்லக் கூடியதாக இருந்தது. அதாவது அதைச் சொன்னால் அதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களேயன்றி அதை எதிர்க்கமாட்டார்கள். இதனால் நான் அதைச் சொல்லிவிட்டேன். மற்றதை நான் சொன்னால் என்னை எதிர்த்து என்னைக் கொலை செய்து விடுவார்கள் என்று நான் பயந்து அதைச் சொல்லாமல் மறைத்து விட்டேன் என்று அபூ ஹுறைறா சொன்னார்கள் என்றும் நாம் கருத்துக் கொள்ளலாம்.

இந்த நபீ மொழியோடு தொடர்புள்ள இன்னுமொரு நபீ மொழி உண்டு. இந்த நபீ மொழியும் “புகாரீ” எனும் நூலில் பதிவான ஆதாரபூர்வமான நபீ மொழிதான். இந்த நபீ மொழிக்கும், நான் மேலே அறபீயில் எழுதியுள்ள நபீ மொழிக்கும் கருத்தில் தெடர்புண்டு. அதை நான் பின்னால் எழுதுகிறேன். முதலில் இங்கு அறபீயில் குறிப்பிட்ட நபீ மொழிக்கு மட்டும் விளக்கம் எழுதுகிறேன். இக்கட்டுரையில் இடமிருந்தால் அடுத்த நபீ மொழிக்கும் விளக்கம் எழுதுவேன். இடமில்லாது போனால் மற்ற நபீ மொழிக்கு தொடர் இரண்டில் விளக்கம் எழுதுவேன்.

நபீ மொழிகளை அறிவித்த நபீ தோழர்களில் அபூ ஹுறைறா போன்ற ஓர் அறிவிப்பாளர் இருந்ததே இல்லை. அதிக நபீ மொழிகளை அறிவித்தவர்கள் இவர்கள் மட்டும்தான்.

இதற்கான காரணம் இவர் “அஹ்லுஸ்ஸுப்பஹ்” திண்ணைத் தோழர்களில் ஒருவராக இருந்ததேயாகும். இவருக்கு வீடும் இருக்கவில்லை, மனைவியும் இருக்கவில்லை. தொழிலும் இருக்கவில்லை. இதனால் இவர் தனது அதிக நேரத்தை பெருமானார் அவர்களுடன் பள்ளிவாயலில் கழித்த நபீ தோழராயிருந்ததேயாகும்.

தோழர் அபூ ஹுறைறா ஒரு சாக்கில் இருந்த அறிவை சொன்னதாகவும், மறு சாக்கில் இருந்த அறிவைச் சொல்லவில்லை என்றும் சொல்லாமல் அதைச் சொன்னால் கழுத்து வெட்டப்படும் என்று சொல்லியுள்ளார்கள்.

அபூ ஹுறைறா குறிப்பிடும் அறிவு பெருமானார் அவர்கள் அவருக்குச் சொல்லிக் கொடுத்த அறிவேயன்றி இன்னொருவர் சொல்லிக் கொடுத்த அறிவல்ல என்பதை நாம் நிச்சயம் நம்புகிறோம்.

அபூ ஹுறைறா அவர்கள் அந்த அறிவை நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்கள். அதற்காக நான் சொல்லவில்லை என்று காரணம் சொல்லவில்லை. அவ்வாறு ஒரு காரணம் அவர் சொல்லியிருந்தால் நாமும் ஓரளவு சாந்தி அடைந்திருப்போம். எமக்குப் புரியாதென்பதால் அவர் சொல்லவில்லை என்று நாமும் முடிவு செய்திருப்போம். ஆயினுமவர்கள் அதைச் சொன்னால் தனது கழுத்து வெட்டப்படும் என்று சொன்னதால் அவர் சொல்ல மறுத்த அறிவு “ஷரீஆ”வுக்கு அல்லது திருக்குர்ஆனுக்கு அல்லது நபீ மொழிக்கு முரணானதாக இருக்கலாம் என்று நாம் சிந்திக்க இடமுண்டு. அவ்வாறு சிந்திப்பதும் கூட தவறென்றே சொல்ல வேண்டும். ஏனெனில் அபூ ஹுறைறாவுக்கு அந்த அறிவை - அவர் சொன்னால் கொலை செய்யப்படுவார் என்ற அறிவைச் சொல்லிக் கொடுத்தவர்கள் பெருமானாரேயன்றி வேறு யாருமில்லை. பெருமானார் அவர்கள் திருக்குர்ஆனுக்கோ, நபீ மொழிகளுக்கோ, இஸ்லாமிய “அகீதா” கொள்கைக்கோ முரணான கருத்தை கூறியிருக்கமாட்டார்கள். இது சத்தியம்.

இவ்விடயத்தில் நம்மில் சிலர் - அதாவது “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவம் “குப்ர்” நிராகரிப்பு என்பதால் அதை அபூ ஹுறைறா சொல்லப் பயந்திருக்கலாம், அதனால் தான் அவ்வாறு சொன்னார்கள் என்று உலமா சபைக்குச் சாதகமானவர்கள் அல்லது உலமா சபையினரே அவ்வாறு சொல்லலாம். இவ்வாறு சிந்திப்பவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அவர்கள் அதற்குப் பதில் சொல்வார்களா?

நபீ தோழர் அபூ ஹுறைறா சொல்லாமல் மறைத்த அறிவை அவருக்குச் சொல்லிக் கொடுத்தவர் யார்? பெருமானாரா? அல்லது காத்தான்குடியைச் சேர்ந்த அப்துர் றஊபா? அல்லது சிரியாவைச் சேர்ந்த இப்னு அறபீயா? நபீ பெருமானார் அவர்கள்தானே அபூ ஹுறைறாவுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். அபூ ஹுறைறா என்ன சொன்னார்கள்?

حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وِعَاءَيْنِ
நான் பெருமானார் அவர்களிடமிருந்து இரண்டு சாக்கு (அறிவுகைளப்) பெற்றேன் என்றுதானே சொன்னார்கள்.

حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وِعَاءً مِنَ الْعِلْمِ وَحَفِظْتُ مِنِ ابْنِ عَرَبِيْ وَعَبْدِ الرَّؤُوْفِ وِعَاءً مِنَ الْعِلْمِ،

ஒரு சாக்கு அறிவை நபீ பெருமானாரிடமிருந்தும், மறு சாக்கு அறிவை இப்னு அறபீயிடமிருந்தும், அப்துர் றஊபிடமிருந்தும் பெற்றேன் என்று சொன்னார்களா? இல்லையே! இவ்வாறிருக்கும் நிலையில் அபூ ஹுறைறா சொல்லாமல் மறைத்த, பெருமானார் சொல்லிக் கொடுத்த அறிவு எது? இதற்கு “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற அறிவென்று சொல்லி அது “குப்ர்” என்று விளக்கம் சொல்லும் உலமா சபையும், குறிப்பாக அதன் தலைவர் ரிஸ்வீ முப்தீ அவர்களும் பதில் கூற வேண்டும். விளக்கமும் சொல்ல வேண்டும்.

அபூ ஹுறைறாவுக்கு நபீ பெருமானார் சொல்லிக் கொடுத்து அவர் சொல்லப் பயந்த அறிவு “வஹ்ததுல் வுஜூத்” – “ஹமவோஸ்த்” எல்லாம் அவனே என்ற தத்துவம் என்றிருந்தால் உலமா சபை சொல்வது போல் “குப்ர்” ஆன தத்துவத்தையா நபீ பெருமானார் அபூ ஹுறைறாவுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்? இதற்கு உலமா சபை – “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவம் பிழை, “குப்ர்” என்று சொல்லும் உலமா சபை ஊமை ஷெய்தான்கள் போல் இருந்து விடாமல் தெளிவான ஆதாரத்துடன் பதில் தர வேண்டும். பதில் தர ஆதாரமில்லையானால் அபூ ஹுறைறா அவர்கள் சொல்லப் பயந்த அறிவு எதுவென்று விளக்கம் கூற வேண்டும். எவ்வாறு பதில் சொல்வதற்கும் தம்மிடம் சரக்கில்லையானால் இறைஞானத்தை தலை கீழாய் புரட்டி முஸ்லிம்களின் கொள்கையில் கையடிக்காமல் மௌனிகளாகிவிட வேண்டும்.

உலமாஉகளே! நீங்கள் “வஹ்ததுல் வுஜூத்”, “ஹமவோஸ்த்” எல்லாம் அவனே என்பது “குப்ர்” என்று உங்களின் “மன்ஹஜ்” நூலில் குறிப்பிட்டுள்ளீர்கள். இவ்வாறு குறிப்பிட்ட நீங்கள் இன்று இலங்கையில் நடைமுறையிலுள்ள தரீகாக்களில் பல தரீகாக்களில் “எல்லாம் அவனே” என்ற கருத்து பகிரங்கமாகச் சொல்லப்பட்டுள்ளதே அது உங்களுக்குப் புரியவில்லையா? ஏன் சத்தியத்தைக் கூறத் தயங்குகிறீர்கள்? சட்டம் என்பது அரசியல்வாதிக்கும் ஒன்றுதான். ஆலிமுக்கும் ஒன்றுதான். உலமா சபைத் தலைவருக்கும் ஒன்றுதான் என்றிருக்கும் நிலையில் நீங்கள் அநீதி செய்கிறீர்கள். அரசனுக்கு ஒரு சட்டமும், ஆண்டிக்கு இன்னொரு சட்டமும் சொல்கிறீர்கள். இது நியாயமா? அல்லாஹ்வுக்குப் பொருத்தமான செயலா? நீதி செய்யுங்கள். உங்களை முழுமையாக நாம் ஆதரிப்போம். மார்க்க விடயத்தில் ஏற்றத் தாழ்வு காட்டாதீர்கள். காத்தான்குடி அப்துர் றஊபுக்கு ஒரு சட்டமும், உலமா சபை தலைவருக்கு இன்னொரு சட்டமும் உண்டா? அவ்வாறிருந்தாலும் சொல்லுங்கள். நீங்கள் செய்கின்ற அநீதிகளை அல்லாஹ் தொடர்ந்து பொறுமையுடன் பார்த்துக்கொண்டிருக்கமாட்டான். இதை உணர்ந்து செயல்படுங்கள். அல்லாஹ்வை எல்லா விடயங்களிலும் பயந்து கொள்ளுங்கள்.

தொடரும்...

Address

Kattankudi

Alerts

Be the first to know and let us send you an email when SHUMS TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SHUMS TV:

Share

Category