சமளங்குளம் கிராம அபிவிருத்தி சங்கம்

  • Home
  • Sri Lanka
  • Vavuniya
  • சமளங்குளம் கிராம அபிவிருத்தி சங்கம்

சமளங்குளம் கிராம அபிவிருத்தி சங்கம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from சமளங்குளம் கிராம அபிவிருத்தி சங்கம், Social Media Agency, Vavuniya.

சமளங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக  தங்களுடைய பணியினை சமூக ரீதியாக மேற்கொண்ட இரு உறுப்பினர்கள்  தங்களுடைய உத...
03/06/2025

சமளங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக தங்களுடைய பணியினை சமூக ரீதியாக மேற்கொண்ட இரு உறுப்பினர்கள் தங்களுடைய உத்தியோகபூர்வமான அரசியல் நடவடிக்கைகளையும் கிராம மட்டங்களின் பொதுச் சேவைகளை மேற்கொள்வதற்கான மக்கள் பிரதிநிதிகளாகவும் சத்திய பிரமாணத்தினை மேற்கொண்டு உள்ளனர். வட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு வெளிப்படை தன்மையுடனும் இதயசுத்தியுடனும் தங்களுடைய மக்கள் சேவையினை வழங்குவதற்க்காக எங்களுடைய முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குவதுடன் கிராம மக்கள் அனைவருடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இன்று எமது வட்டார உறுப்பினரின் உத்தியோபூர்வமான சத்தியப் பிரமாணத்தினை தொடர்ந்து  சமளங்குள மக்களுக்கும் வட்டார உறுப்பினருக...
28/05/2025

இன்று எமது வட்டார உறுப்பினரின் உத்தியோபூர்வமான சத்தியப் பிரமாணத்தினை தொடர்ந்து சமளங்குள மக்களுக்கும் வட்டார உறுப்பினருக்கும் இடையிலான சினேகாபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் தன்னார்வமாக கிராம மக்கள் தங்களுடைய கௌரவத்தினை வட்டார உறுப்பினருக்கு வழங்கியிருந்தார்கள். வட்டார உறுப்பினரும் தன்னுடைய எதிர்கால திட்டம் தொடர்பாக தெரிவித்து இருந்தார். எனவே இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இன்று (17/5/2025)அனர்த்தத்தினால் சமளங்குளம் கிராம சேவையாளர் பிரிவில்  ஏற்பட்ட பாதிப்புகளை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்ப...
17/05/2025

இன்று (17/5/2025)அனர்த்தத்தினால் சமளங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் ஏற்பட்ட பாதிப்புகளை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழு தலைவருமான மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் ஐயா அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தார். அத்துடன் அனர்த்ததினால் ஏற்பட்ட பாதிப்புகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்கு அரச நிர்வாகத்தின் ஊடான செயற்பாடுகளையும் துரிதப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்க விடயம்

👉உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சமளங்குளம் வட்டாரத்தில் வெற்றி தோல்விக்கு அப்பால் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாது வேட்ப...
07/05/2025

👉உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சமளங்குளம் வட்டாரத்தில் வெற்றி தோல்விக்கு அப்பால் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாது வேட்பாளர்களும் வாக்காளர்களும் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் செயல்பட்டமை எங்களுடைய வட்டார கிராமங்களுக்கு இடையில் எப்பொழுதும் ஒரு நல்லிணக்கம் இருந்து வருகின்றது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.

எனவே இந்த நல்லிணக்கம் ஆனது எங்களுடைய இருப்பை உறுதிப்படுத்தி கொள்வதுடன் அபிவிருத்தியிலும் பரஸ்பர புரிந்துணர்வுகளுடன் பங்காளர்களாக இணைந்து ஒற்றுமையை வலுப்படுத்துவோம்.

கட்சி வேறுபாடு இன்றி வாக்களித்த மக்கள் அனைவரும் ஜனநாயக கடமையை சரியாக கையாண்டு உள்ளார்கள்.

அவர்கள் வாக்களிப்பு தொடர்பான முக்கியத்துவம் அறிந்துள்ளார்கள் என்பதனை இட்டு மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதோடு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

👉அதேவேளை வாக்களிக்க செல்லாத மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை என்கின்ற காரணமும் வாக்களிப்பு தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டிய தேவையும் பொறுப்பும் இந்த சமூகம் மட்ட அமைப்புகளுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் உண்டு.

✊தமிழர்கள் வாக்களிக்காமல் விடுவது என்பது அரசியல் ரீதியாக அவர்களுடைய இருப்புக்கும் உரிமைக்கும் பாரிய பின்னடைவை தரும். எனவே நாங்கள் கட்சி பேதங்களை மறந்து அனைவரையும் வாக்களிக்க வைக்க வேண்டும். இது எதிர்கால சமூக நல்லிணக்கத்திற்கு ஏதுவாக இருக்கும்.
நன்றி.

சமளங்குளம்- மூன்று முறிப்பு வீதி மற்றும் சமளங்குளம் -முப்பது வீட்டுத்திட்டம் ஊடாக வேல்கபே வீதி - உமா மகேஸ்வரன் வீதி எல்ல...
02/05/2025

சமளங்குளம்- மூன்று முறிப்பு வீதி மற்றும் சமளங்குளம் -முப்பது வீட்டுத்திட்டம் ஊடாக வேல்கபே வீதி - உமா மகேஸ்வரன் வீதி எல்லப்பர் மருதன்குளம் வரையான வீதிகள் விரைவில் காபேட் வீதிகளாக புணரமைக்கப்பட உள்ளது. இதை பெற்றுத்தந்த வன்னி மாவட்ட பிரதி அமைச்சர் அவர்களுக்கு கிராம மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்
වෙල්කපේ පාර - උමා මහේෂ්වරන් පාරේ සිට සමලන්කුලම්-ත්‍රි-බ්‍රේක් පාර සහ සමලන්කුලම්-තිස් නිවාස ව්‍යාපෘතිය හරහා එල්ලප්පර් මරුතන්කුලම් දක්වා මාර්ග ඉක්මනින් කාපට් කරන ලද මාර්ග ලෙස ප්‍රතිසංස්කරණය කෙරේ. මෙය ලබා දීම සම්බන්ධයෙන් වන්නි දිස්ත්‍රික් නියෝජ්‍ය අමාත්‍යවරයාට ගම්වැසියන් වෙනුවෙන් අපගේ හෘදයාංගම කෘතඥතාව පළ කරමු.

👉உள்ளூராட்சி மன்றத் தேர்தல் -2025சமளங்குளம் வட்டாரத்தில் வாழ்கின்ற மக்களே உங்களின் கவனத்திற்காக.✊ நீங்கள் யாருக்கு வாக்க...
09/04/2025

👉உள்ளூராட்சி மன்றத் தேர்தல் -2025

சமளங்குளம் வட்டாரத்தில் வாழ்கின்ற மக்களே உங்களின் கவனத்திற்காக.

✊ நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பான தீர்மானம் எடுக்கின்ற உரிமை உங்களுக்கு உண்டு.

நீங்கள் அவ்வாறு தீர்மானம் எடுக்க வேண்டும் என்பது தொடர்பான தெளிவுபடுத்துகை சமூக மட்ட அமைப்புகளுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் உண்டு.

1)உள்ளூராட்சி மன்றங்களுக்கு வரப்போற நிதி மிகவும் சொற்பமானது எனவே அபிவிருத்தி செய்வோம் எனக் கூறுவது உண்மைக்கு புறம்பானது.

2)ஒரு வட்டாரத்திற்குள் பிரதேச சபையால் மட்டும் தான் அபிவிருத்தி நடக்கும் என்பது உண்மைக்கு புறம்பானது. எனவே வேறு திட்டத்தின் ஊடாக வந்ததை கூறி இந்தத் தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதற்காகன உத்தியா பயன்படுத்துவதும்தவறு அதையும் மக்கள் தெளிவில் கொள்ளுங்கள்.

3) மக்களுடைய அறியாமையை ஏமாற்றி தங்களுடைய சுயநலத்திற்காக பயன்படுத்துவார்கள் உங்களுடைய வாக்குக்காக எண்ணவும் கூறுவார்கள் அவர்களை தெளிவாக அடையாளப்படுத்துங்கள்.

4) பிரதேசங்களுக்குள் பிரிவினைகளை உண்டாக்கியவர்களூக்கு பின்னர் பிரதேச சபை தேர்தலுக்கு வாக்குகளை வழங்கினால் அவர்களால் எவ்வாறு பிரதேசங்களை ஒற்றுமைப்படுத்த முடியும் என யோசியுங்கள்.

5) அனுபவம் இல்லாதவர்களுக்கு வாக்குகளை வழங்குவதன் மூலமாக உங்களுடைய வாக்கின் பெறுமதியை நீங்கள் இழந்து விடாதீர்கள்.

6) கடந்த கால தேர்தலில் சேர்ந்திருப்பதும் பின்னர் பிரிந்து வாக்குகளை சேகரிப்பது என்பது இந்தப் பிரதேசத்தில் பாரம்பரியமாக வேறுன்றி இருக்கின்ற சமூக கலாச்சார விழுமியங்களை அரசியலுக்காக கொச்சைப்படுத்துவதாக அமைகின்றது.

7)கடந்த காலங்களில் பிரதேச சபையினுடைய ஆளுமை எவ்வாறு இருந்தது என வட்டாரத்தின் மக்கள் அனைவரும் அறிந்த விடயமே.

8) பலர் சமூக சேவையாளர் என்ற பெயரில் வாக்கு கேட்கின்றார்கள் வாக்காளருடன் சேர்ந்து வாக்கு சேகரிக்கவும் உதவுகின்றார்கள். அவர்கள் அடுத்தவன் போடுற பிச்சை காசுல தான் உதவி செய்கின்றார்களே தவிர யாரும் அவர்களுடைய பணத்தில் உதவி செய்வதில்லை. இதனால் அவர்களுக்கு தனிப்பட்ட வருமானமும் கிடைக்கின்றது. அதை தேர்தல் காலங்களில் சேவையாக மாற்றி வாக்கு கேட்பார்கள். பின்னர் அவர்களே தங்களை தாங்களே சமூக சேவையாளர்கள் என நினைத்து உதவி பெற்றவர்களை அடிமையாக நினைத்துக் கொண்டு அரசியல் போதிப்பார்கள். இவ்வாறான மனநிலை கொண்டவர்களால் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை வழிநடத்த முடியாது. எதிர்காலத்தில் ஆபத்தான சமூகங்களை உருவாகக் கூடியவர்களாகவும் மாற்றம் அடைவார்கள். எனவே வேட்பாளர்கள் அவர்களுக்கு வாக்கு சேகரிப்பவர்களை அடையாளம் கண்டு சிந்தித்து செயட்படுங்கள்.

✊வாக்களிப்பவர்கள் இதை மட்டும்
சிந்தியுங்கள்
👇நீங்கள் நடுநிலைவாதிகள்.

1)உற்றார் உறவினர்கள் என்ற சிந்தனையை தேர்தல் காலங்களில் விடுங்கள்.

2)பொதுச் சேவைகளில் மற்றும் சமூக மட்ட அமைப்புகளில் ஈடுபட்ட செயற்பாடுகளை விளம்பரப்படுத்துபவர்கள் தேர்தலுக்கு பொருத்தமான வேட்பாளர் அல்ல. காரணம் அவர் தேர்தலை நோக்காக கொண்டு தான் இந்த செயற்பாடுகளை எல்லாம் கடந்த காலங்களில் செய்துள்ளார்.

3) நாங்கள் எல்லோரும் எங்களுடைய கிராமங்களுக்கிடையிலான பிணைப்புகளை ஏற்படுத்தவும் கிராமங்களுக்கிடையிலான சமூக நல்லிணக்கத்தின் மூலம் ஒரு வலுவான கிராமமாக முன்னேறுவதற்காக ஒருங்கிணைந்து வாக்களிப்போம்.

4)இதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அரசியலில் தேர்தல் என்பது ஒரு ஜனநாயகத்தை பிரதிபலிப்பதற்காக மக்கள் ஒரு குழுவாக செயல்படுகின்றார்கள் என்பதை பிற நாடுகளுக்கு நாங்கள் பலமான நாடு என்பதனை காட்டுவதற்காக மட்டுமே ஜனநாயகத்தில் தேர்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

5) அரசியலில் ஜனநாயக அடிப்படையில் மக்களை அவ்வாறு ஒரு குழுவாக ஒன்று திரட்ட வேண்டுமாயின் ஊழலற்ற தலைமை பீடங்களைக் கொண்ட ஒரு கட்சிக்கோ அல்லது சுயேட்சை குழுவுக்கோ வாக்களிப்பது சிறந்ததாகும்.

(இந்த தேர்தலில் இனம், பிரதேசம், அபிவிருத்தி என்ற சொற்பதங்களை நம்பி வாக்களித்தால் அந்த வாக்குகள் அர்த்தமற்றவையாக பின்னர் மாற்றப்படும். அவ்வாறு எந்தவிதமான அபிவிருத்திகளும் செய்ய முடியாது இதுதான் யதார்த்தம்.)

எனவே நாங்கள் சிந்தித்து எங்களுடைய வாக்குகளை அனுபவம் வாய்ந்த ஊழல் அற்ற தலைமை பீடத்தினால் நடத்தப்படுகின்ற கட்சிக்கு அல்லது சுயேட்சை குழுவுக்கு வாக்குகளை வழங்குவோம்)

👉இது ஒரு அரசியல் பதிவு அல்ல சமளங்குளம் வட்டார மக்களுடைய தெளிவுபடுத்தலுக்கான பதிவு.
நன்றி

துயர் பகிர்வு. வவுனியா சமளங்குளத்தை  பிறப்படமாகவும் மாதகல் வடக்கு  மற்றும் வவுனியா சமளங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சோ...
27/01/2025

துயர் பகிர்வு.

வவுனியா சமளங்குளத்தை பிறப்படமாகவும் மாதகல் வடக்கு மற்றும் வவுனியா சமளங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் லோகேஸ்வரி அவர்கள் 25.01.2025 அன்று காலமானார் . அன்னார் காலஞ் சென்ற சிவசிதம்பரம் மகேஸ்வரி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும் காலஞ் சென்றவர்களான அம்பலவாணர் வள்ளியம்மை தம்பதியினரின் மருமகளும் , சோமசுந்தரம் அவர்களின் ஆருயிர் மனைவியும் அருள் சுகந்தன் (UK), சயந்தினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு தாயாரும், மாதினி , தில்லை முருகதாசன் அவர்களின் அன்பு மாமியாரும், கங்கா சுதந்தரி, சாய் லகரி, பால சுயம்பரி, சரணி ,திருஷன் ஆகியோரின் பேத்தியும் ஆவர், நற்றவ மலர், நாகேஸ்வரி(ஓய்வு பெற்ற பிரதி கல்வி பணிப்பாளர் - வவுனியா), தவவிக்னேஸ்வரி காலன்சென்ற சிவஞானேஸ்வரி, ஜெகதீஸ்வரி, சர்வேஸ்வரி(வவுனியா இந்து கல்லூரி ஆசிரியை), சிவபாதமலர் ஆகியோரின் சகோதரியும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 28.01.2025 அன்று மதியம் 12.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தகன கிரிகைக்காக சமளங்குளம் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறிய தருகின்றோம்.
தகவல் குடும்பத்தினர்

எமது கிராமம் சார்ந்த ஆழ்ந்த அனுதாபங்களை அன்னாரின் குடும்பத்திற்கு தெரிவித்துக் கொள்வதுடன், அவருடைய ஆத்மா சாந்தியடையவும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கின்றோம்.

தொலைந்த மனிதாபிமானத்தை மீட்டெடுக்கும் முயற்சியில்  சமளங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் ஆச்சிபுரம் கிராமத்தில் வசித்து வர...
17/08/2024

தொலைந்த மனிதாபிமானத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் சமளங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் ஆச்சிபுரம் கிராமத்தில் வசித்து வருகின்ற கண் தெரியாத நடக்க முடியா அம்மா ஒருவரின் கோரிக்கைக்கு இனங்க சமளங்குளம் 244 B பொதுநோக்கு மண்டபத்தில் கிராம சேவையாளர் ஊடாக சமளங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கம் வள்ளுவர் சன சமூக நிலையம் இணைந்து சர்க்கர நாற்காலியினை வழங்கியிருந்தோம்.

ஊர் கூடி நண்டு கணவாய் மீன் என ஒடியல் கூழ் காய்ச்சி பனையின் பயனை தெரிந்து கொள்வோம். நம் வருங்கால சந்ததியினருக்கு பாரம்பரி...
29/06/2024

ஊர் கூடி நண்டு கணவாய் மீன் என ஒடியல் கூழ் காய்ச்சி பனையின் பயனை தெரிந்து கொள்வோம். நம் வருங்கால சந்ததியினருக்கு பாரம்பரிய பண்பாட்டை கடத்துவதற்கான முயற்சி அனைத்து சிறர்களையும் அழைத்து வாருங்கள்.

05/06/2024
இணைந்த கரங்களின் எற்பாட்டில்  #சமளங்குளம் கல்லுமலை ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தினை சூழ உள்ள இருந்த பற்றைக்காடினை கிராம இள...
05/05/2024

இணைந்த கரங்களின் எற்பாட்டில் #சமளங்குளம் கல்லுமலை ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தினை சூழ உள்ள இருந்த பற்றைக்காடினை கிராம இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களோடு இணைந்து இன்று (2024.05.07) சிரமதானப்பணி மூலம் துப்பரவு செய்யப்பட்டது.

Address

Vavuniya

Website

Alerts

Be the first to know and let us send you an email when சமளங்குளம் கிராம அபிவிருத்தி சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share