22/07/2026
🚩வித்ரிய்யா ஷரீப் [நபி புகழ் காவியம்] 🔰 القصيدة الوترية | Qaseedah Al-Vithriyya 🔻 - 004
---
دَنَا فَتَدَلّٰى فَارْ تَقٰى بِرِعَايَةٍ
அல்லாஹ் மிக நெருங்கினான், பிறகு இன்னும் நெருங்கினான்.
பிறகு அல்லாஹ்வின் பாதுகாப்புடன் அவர்கள் உயர்த்தப்பட்டார்கள்.
لِقَوْسَيْنِ أَوْ أَدْنٰى اِلٰى خَيْرِغَايَةٍ
இரண்டு வில்லின் இடைவெளி அளவுக்கு, அல்லது அதை விடவும் நெருக்கமாக,
மிகச் சிறந்த இலக்கை நோக்கி சென்றார்கள்.
فَأَوْحٰى لَهُ فِى الْعَرْشِ أَعْبَرَ اٰيَةٍ
அர்ஷில் வைத்து அல்லாஹ் அவர்களுக்கு
மிகப் பெரிய, விளக்கமான அத்தாட்சியை வஹீயாக அறிவித்தான்.
آرَاهُ مِنَ الْآيَاتِ أَكْبَرَ اٰيَةٍ
அத்தாட்சிகளில் எல்லாம் மிகப் பெரிய அத்தாட்சியை
அல்லாஹ் அவர்களுக்கு காண்பித்தான்.
فَمَا زَاغَ حَاشَا اَنْ يَّزِيْغَ الْمُبَرَّءُ
அவர்களின் பார்வை ஒருபோதும் விலகவில்லை.
ஹாஷா! பாவத்திலிருந்து பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் ஒருபோதும் விலகவே மாட்டார்கள்.
🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️
#இந்த_பைத்_சொல்லும் 3 முக்கிய விஷயம்:
1. "தனா ஃபததல்லா" – #நெருக்கத்தின்_உச்சம்:
இது குர்ஆன் வசனம் *ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ* [53:8-9] ஐ குறிக்குது. "தனா"னா நெருங்கினான், "ததல்லா"னா இன்னும் குனிஞ்சு நெருங்கினான். யார் யாரை நெருங்கினது? பெரும்பாலான முஃபஸ்ஸிர்கள்: ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் நபி ﷺ ஐ நெருங்கினார். சிலர்: அல்லாஹ் தன் அடியாரை நெருங்கினான் என்று சொல்றாங்க. எப்படியிருந்தாலும், *"காப கவ்ஸைனி அவ் அத்னா"* – ரெண்டு வில்லுக்கு இடைல இருக்குற தூரம், இல்ல அதை விட கம்மி. இது படைப்புக்கும் படைத்தவனுக்கும் இடையிலான நெருக்கத்தின் உச்சகட்ட உவமை.
2. "ஃபஅவ்ஹா" – #அர்ஷில்_கிடைத்த_வஹீ:
அர்ஷுக்கு மேலே, படைப்புகள் எதுவும் எட்டாத இடத்துல, அல்லாஹ் நேரடியா நபி ﷺ க்கு வஹீ அறிவிச்சான். அது என்ன? தொழுகை கடமையானது, சூரத்துல் பகராவின் கடைசி 2 ஆயத்துகள், இந்த உம்மத்துல ஷிர்க் செய்யாதவர்களுக்கு மன்னிப்பு – இந்த 3 பெரிய பரிசுகள்.
3. "ஃபமா ஸாக" – #பார்வை_விலகாத #கண்ணியம்:
*مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغَىٰ* [53:17] – "பார்வை விலகவும் இல்லை, வரம்பு மீறவும் இல்லை". அவ்வளவு பெரிய காட்சிகள், அர்ஷ், குர்ஸி, சுவர்க்கம், நரகம் எல்லாம் காட்டியும் நபி ﷺ அவர்களுடைய கண்ணு தடுமாற வில்லை. ஏன்?
"அல்-முபர்ரஉ" – அல்லாஹ்வாலேயே #பாவத்திலிருந்து #பரிசுத்தமாக்கப்பட்டவர்கள். மஃசூம். ஹாஷா!
சுருக்கம்:
நபி ﷺ அல்லாஹ்வுக்கு ரொம்ப நெருக்கமான இடத்துக்கு போனாங்க – ரெண்டு வில்லுக்கு இடைப்பட்ட தூரம், இல்ல அதை விட கம்மி. அங்க அல்லாஹ் நேரடியா வஹீ கொடுத்தான். அல்லாஹ்வோட மிகப் பெரிய அத்தாட்சிகளை கண்ணால பார்த்தாங்க. ஆனாலும் அவங்க பார்வை அங்கிட்டு இங்கிட்டு அலையல. ஏன்னா அவங்க பரிசுத்தமானவங்க, பாவத்தை விட்டும் காக்கப்பட்டவங்க.
இதுதான் "லகத் ரஆ மின் ஆயாதி ரப்பிஹில் குப்ரா" [53:18] – "தன் இறைவனின் பெரிய அத்தாட்சிகளை திட்டமாக பார்த்தார்".
🚩Qaseedah Al-Vithriyya – Poem in Praise of the Prophet ﷺ.
--- 004
دَنَا فَتَدَلّٰى فَارْ تَقٰى بِرِعَايَةٍ
He drew near, then came closer still.
Then he was raised up with Allah’s protection.
لِقَوْسَيْنِ أَوْ أَدْنٰى اِلٰى خَيْرِغَايَةٍ
To a distance of two bow-lengths, or even nearer,
Toward the greatest and best destination.
فَأَوْحٰى لَهُ فِى الْعَرْشِ أَعْبَرَ اٰيَةٍ
At the Throne, Allah revealed to him
The most profound and clearest sign as revelation.
آرَاهُ مِنَ الْآيَاتِ أَكْبَرَ اٰيَةٍ
Allah showed him the greatest of all signs
From among His signs.
فَمَا زَاغَ حَاشَا اَنْ يَّزِيْغَ الْمُبَرَّءُ
His sight did not swerve.
Never! How could the one purified from sin ever swerve?
🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️
#3 Key Points This Verse Explains:
1. "Dana Fatadalla" – :
This refers to the Quranic verse *ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى [53:8-9]. "Dana" means he drew near, "tadalla" means he came even closer, leaning down. Who drew near to whom? Most mufassirun say: Jibreel عليه السلام drew near to the Prophet ﷺ. Some say: Allah drew His servant near. Either way,
"Qaba qawsayni aw adna"– the distance of two bows, or less. This is the ultimate metaphor for nearness between the Creator and creation.
2. "Fa-awha" – :
Above the Arsh, in a place no creation can reach, Allah gave direct revelation to the Prophet ﷺ. What was it? Three great gifts: The obligation of 5 daily prayers, the last 2 verses of Surah Al-Baqarah, and forgiveness for those in his Ummah who do not commit shirk.
3. "Fama zagha" – :
مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغَىٰ* [53:17] – "The sight did not swerve, nor did it transgress". Despite seeing overwhelming scenes – the Arsh, Kursi, Paradise, Hell – the Prophet’s ﷺ gaze did not wander. Why?
"Al-mubarra’u"* – sin by Allah Himself. Ma’soom. Never! He would never go astray.
:
The Prophet ﷺ reached a station of nearness to Allah like two bow-lengths or closer. There, Allah gave him direct revelation. He saw the greatest of Allah’s signs with his own eyes. Yet his sight never turned away or exceeded limits, because he is purified and protected from sin.
This is *"Laqad ra’a min ayati Rabbihil kubra"* [53:18] – "He certainly saw of the greatest signs of his Lord."