RagsStar Media Global

RagsStar Media Global RagsStar Media — Based in Johor Bahru, Malaysia, Connected Across the Globe. A Dynamic Venture in Arts | Talents | Records | News.

AS Wonder Film proudly presents the Musical Video 'KAALI KARUPPU' | 30th Sept 2025 | TSR Cinema, Shah Alam | 7pm Onwards...
01/10/2025

AS Wonder Film proudly presents the Musical Video 'KAALI KARUPPU' | 30th Sept 2025 | TSR Cinema, Shah Alam | 7pm Onwards
A Creation of 'KAALI KARUPPU' Directed by: Umagandhan Krishnan
Music | Lyrics | Vocals | Edit: Amigoz Appu
Choreography: Nantha Ti-Amo
MUA: Shivanshema
A collective vision brought to life by passionate creatives & artists!
Produced by: Dr. S. Saswin

01/10/2025

𝗠𝗞𝗨 𝗟𝗜𝗩𝗘 𝗦𝗧𝗥𝗘𝗔𝗠𝗜𝗡𝗚- Seerkazhi Pugal Ashok’s Deepavali Kalai Iravu 2025 | 1st Oct 2025 | YMCA Rose Room

Proudly Presenting By VG Vision Production & Msia South India Art & Culture

30/09/2025

AS Wonder Film proudly presents the Musical Video 'KAALI KARUPPU' | 30th Sept 2025 | TSR Cinema, Shah Alam | 7pm Onwards

A Creation of 'KAALI KARUPPU' Directed by: Umagandhan Krishnan
Music | Lyrics | Vocals | Edit: Amigoz Appu
Choreography: Nantha Ti-Amo
MUA: Shivanshema

A collective vision brought to life by passionate creatives & artists!

Produced by: Dr. S. Saswin

இந்து ஆலயங்களுக்கு தலா வெ 20,000:தர்ம மடானி திட்டத்தின் அசல் நோக்கத்துக்கு ஏற்புடையதல்ல! கோலாலம்பூர் செப் 29நாட்டில் உள்...
29/09/2025

இந்து ஆலயங்களுக்கு தலா வெ 20,000:
தர்ம மடானி திட்டத்தின் அசல் நோக்கத்துக்கு ஏற்புடையதல்ல!
கோலாலம்பூர் செப் 29
நாட்டில் உள்ள இந்து ஆலயங்களுக்கு தலா வெ 20,000 "ஒன்-ஆஃப்"(one-off) நிதி உதவி பரிந்துரை தர்ம மடானி திட்டத்தின் அசல் நோக்கத்துக்கு ஏற்புடையதல்ல என மலேசிய இந்து சங்க தலைவர் தங்க கணேசன் தெளிவுபடுத்தினார்.
இந்த பரிந்துரை தர்ம மடானி திட்டத்தின் அமலாக்கத்தை கவனிக்கும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் செயல்படும் செயல் குழுவில் விவாதிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டு விட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விவகாரத்தில் திட்டக் குழுவின் நிலைப்பாடு உறுதியானது என்றார் அவர்.
தர்ம மடானி திட்டம் என்பது மலேசிய இந்த சங்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு துறை அமைச்சு இணைந்து நடத்திய தேசிய ஆலய மாநாடு விளைவாக உருவானது என அவர் சொன்னார்.
அந்த மாநாட்டில் இந்திய சமூகம் எதிர்நோக்கி வரும் பல்வேறு சவால்கள் முன்வைக்கப்பட்டதோடு, அவற்றை சமாளிக்க ஆலயங்களின் பங்கு குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
அந்த மாநாட்டில் ஆலயங்கள் வெறும் வழிபாட்டுத்தலங்கள் மட்டுமல்லாமல் சமூக சேவை மையங்களாக இயங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் அரசாங்கத்தின் திட்டங்கள் மற்றும் தகவல்கள் மக்களிடம் கொண்டு செல்லும் தளமாகவும் ஆலயங்கள் விளங்க வேண்டும் என விரிவாக பேசப்பட்டது.
இந்த அணுகுமுறை அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட மடானி அரசு திட்டத்துடன் ஒத்துப் போகிறது.
ஒரு மத அமைப்பால் முன்வைக்கப்பட்ட தொலைநோக்கு முயற்சியை அரசு ஏற்று, அதை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பது இதுவே முதல் முறை
இது சமூகத்தின் குரலுக்கு அரசு செவி சாய்த்ததையும் மத அமைப்புகளின் பங்களிப்பை மதிப்பதையும் காட்டுகிறது.
தேசிய ஆலய மாநாட்டில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அவை பின்னர் பரிசு அளிக்கப்பட்டு 8 தீர்மானங்களாக சுருக்கப்பட்டது. இவை இவ்வாண்டு மார்ச் மாதத்தில் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அமைச்சரவை, இந்திய சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் நோக்கத்தில், அவற்றை நிறைவேற்ற MITRA நிதியை பயன்படுத்த ஒப்புதல் வழங்கியது.
மொத்தம் 20 மில்லியன் நிதி 200 ஆலயங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, தர்ம மடானி திட்டம் என்பது தேசிய ஆலயங்கள் மாநாட்டில் உருவான ஒரு முக்கிய முயற்சியாகும். அது தேசிய ஒருமைப்பாட்டு துறை அமைச்சால் அமைச்சரவை நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு, தற்போது MITRA நிதியின் மூலம் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் கட்டத்தை எட்டியுள்ளது. தர்மம் மடானி திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் தேசிய ஒருமைப்பாட்டு துறை அமைச்சால் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளன. விண்ணப்ப படிவங்கள் அங்கீகரிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள ஆலயங்களுக்கு விநியோகிக்க தயாராக உள்ளன.
ஆகையால் ஊடகங்களில் ஏற்பட்ட குழப்பத்தை தெளிவுபடுத்தவும் நாடு முழுவதும் உள்ள ஆலயங்களில் நிர்வாகிகளுக்கு தர்ம மடானி திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என தங்க கணேசன் தமது அறிக்கையில் தெளிவுப்படுத்தினார்.

29/09/2025

Veeramani Raju
✨ AS WONDERS FILM presents… ✨
🎶 Musical Video Release 🎶

📅 30th September 2025
⏰ India – 3:25 PM | Malaysia – 5:55 PM

🎬 A creation of Kaali Karuppu
🎥 Directed by Umagandhan Krishnan
🎶 Music | Lyrics | Vocals | Edit – Amigoz Appu
💃 Choreography – Nantha Ti-Amo
🎨 Makeup – Shivanshema
🎭 Teaming up with passionate creatives & artists!

🌟 Produced by Dr. S. Saswin

🔥 Stay tuned for the big drop!

பினாங்கில் நடந்த ஏர் ஆசியா ரேட்ரன் மெது ஓட்டத்தில் 4000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்பினாங்கு செப் 28பினாங்கில் நடந்...
28/09/2025

பினாங்கில் நடந்த ஏர் ஆசியா ரேட்ரன் மெது ஓட்டத்தில் 4000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
பினாங்கு செப் 28
பினாங்கில் நடந்த ஏர் ஆசியா ரேட்ரன் மெது ஓட்டத்தில் 4000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பினாங்கு குளோபல் சுற்றுலாத்துறை ஆதரவில் கெர்னி பிளாசாவில் தொடங்கிய இந்த மெது ஓட்டத்தில் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் இதர பிராந்தியத்தைச் சேர்ந்த ஓட்டக்காரர்கள் பங்கு பெற்றனர்.
ஏற்கனவே பாலி, சுராபாயா மற்றும் அண்மையில் சிங்கப்பூரில் ஏர் ஆசியா வெற்றிகரமாக இந்த மெது ஓட்ட நிகழ்வை நடத்தியது.
பினாங்கு ஒரு முன்னணி சுற்றுலா மையமாகவும் மற்றும் மக்கள் விரும்பும் தேர்வாகவும் இருப்பதால், இந்த மாநிலத்தை ஏர் ஆசியா தேர்வு செய்தது.
பினாங்கு ரேட்ரன் ஓட்டத்தில் 3கிமீ,5கிமீ மற்றும் 10கிமீ ஆகிய மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது.
அனைத்து வயது தரப்பினரும் இந்த மெது ஓட்டத்தில் பங்கு பெற்றனர்.
இந்த மெது ஓட்டத்தில் பங்கு பெற்று மொத்த ஓட்டக்காரர்களில் 32 விழுக்காட்டினர் பினாங்கு மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
மொத்த ஓட்டக்காரர்களில் 28 விழுக்காட்டினர் அனைத்துலக நகரங்களை சேர்ந்தவர்கள்.
10கிமீ ஓட்டத்தை பினாங்கு சுற்றுலாத்துறைக்கான ஆட்சி குழு உறுப்பினர் வோங் ஹொன் வை, ஏர் ஆசியா எவியேஷின் குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஃபோ லிங்கம் மற்றும் ஏர் ஆசியா எவியேஷின் குழுமத்தின் வர்த்தக பிரிவு தலைமை அதிகாரி அமான்டா வூ கொடி அசைத்து தொடக்கி வைத்தனர்.
சமூகங்களுக்கிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் சமூகங்களை ஒருங்கிணைக்கவும் ஏர் ஆசியா இந்த ரேட்ரன் மெது ஓட்ட நிகழ்வை
தொடர்ந்து நடத்தி வருகிறது.
இதனிடையே இந்த ரேட்ரன் மெது ஓட்ட நிகழ்வை பினாங்கில் நடத்துவது ஒரு மைல்கல் என ஏர் ஆசியா எவியேஷின் குழுமத்தின் வர்த்தக பிரிவு தலைமை அதிகாரி அமான்டா வூ கூறினார்.
இந்த நிகழ்வில் நாலாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது ஒரு சாதனை தான் என அவர் சுட்டிக் காட்டினார்.
சுகாதாரம், உடல் ஆரோக்கியம் மற்றும் ஒற்றுமைக்கு மக்கள் முன்னுரிமை வழங்கி வருவதை இது சித்தரிப்பதாக அவர் தெரிவித்தார்.
விமானத்தில் சிறகடிப்பதையும் தாண்டி மக்களுக்கு அர்த்தமுள்ள அனுபவத்தை தருவதில் ஏர் ஆசியா உறுதியுடன் இருப்பதாக அவர் சொன்னார்.
இதனிடையே முதல் முறையாக பினாங்கில் ரேட்ரன் மெது து ஓட்ட நிகழ்வை நடத்த ஏர் ஆசியா முன்வந்துள்ளதை தாம் பாராட்டுவதாக பினாங்கு சுற்றுலாத் துறைக்கான ஆட்சி குழு உறுப்பினர் வோங் ஹொன் வை கூறினார்.
பல அனைத்துலக விளையாட்டு நிகழ்வுகள் இந்த மாநிலத்தில் நடத்தப்படுவதில் பினாங்கு பெருமை கொள்வதாக அவர் தெரிவித்தார்.
ஏர் ஆசியாவின் இந்த திட்டம் மிகவும் பாராட்டக்கூடியது என்றார் அவர்.
இந்த மெது ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கம் உட்பட வெ 60,000 மதிப்பிலான பரிசுகள், இலவச இரு வழி விமான டிக்கெட்டுகள், ஹோட்டலில் தங்குவதற்கான இலவச பற்று தீட்டுக்கள் உட்பட பல பரிசுகள் வழங்கப்பட்டன.

ஒற்றுமை வார கொண்டாட்டம் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தும்ஈப்போ செப் 28மாநில அளவிலான ஒற்றுமை வார கொண்டாட்டம் பல இனங்களுக்கிடை...
28/09/2025

ஒற்றுமை வார கொண்டாட்டம் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தும்
ஈப்போ செப் 28
மாநில அளவிலான ஒற்றுமை வார கொண்டாட்டம் பல இனங்களுக்கிடையே ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தும் என தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
மலேசிய சமூகத்திடையே பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் இந்த கொண்டாட்டம் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக் காட்டினார்.
இன்று இங்கு பேராக் மாநில அளவிலான ஒற்றுமை வார கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசினார்.
பேராக் மாநிலத்தில் 564 குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இவ்வாண்டிற்கான இந்த கொண்டாட்டம் இந்த குடியிருப்பு பகுதிகளில் ஒற்றுமையின் வலிமையை பிரதிபலிப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இம்மாநிலத்தில் 12 மாவட்டங்களில் உள்ள இந்த குடியிருப்பு பகுதிகளில் ஒற்றுமை உணர்வு வலிமை அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாநில அளவிலான இந்த கொண்டாட்டத்தை பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஷாரானி முகமட் நிறைவு செய்து வைத்தார்.

தெப்ராவ் தோட்ட தமிழ் பள்ளிக்கு நிலப்பட்டா கிடைத்துவிட்டது தெப்ராவ் தோட்ட தமிழ் பள்ளிக்கு நிலப்பட்டா கிடைத்து விட்டதாக அப...
28/09/2025

தெப்ராவ் தோட்ட தமிழ் பள்ளிக்கு நிலப்பட்டா கிடைத்துவிட்டது
தெப்ராவ் தோட்ட தமிழ் பள்ளிக்கு நிலப்பட்டா கிடைத்து விட்டதாக அப்பள்ளியின் வாரியக் குழு தலைவர் டத்தோ டாக்டர் புருஷோத்தமன் கூறினார்.
இப்பள்ளிக்கு இந்த நிலப்பட்டா கிடைக்க உதவிய சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் பள்ளியின் வாரியத் தலைவர் என்ற நிலையில் தாம் நன்றி கூறுவதாக அவர் குறிப்பிட்டார்.
இப்பள்ளியின் வளர்ச்சிக்கு உதவி வரும் நல் உள்ளங்களுக்கு இவ்வேளையில் நன்றி கூற தாம் கடமைப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நாட்டிலுள்ள தமிழ் பள்ளிகளின் வளர்ச்சிக்கு ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பள்ளிகளின் வாரியம் ஆகிய தரப்பினரின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்றார் அவர்.

8 டிசம்பர் 2025-ல் 9 புதிய பயண வழிகளில் பாத்தேக் ஏர் விமான சேவை சுபாங் செப் 27 எதிர் வரும் 8 டிசம்பர் 2025-ல் ஒன்பது புத...
28/09/2025

8 டிசம்பர் 2025-ல் 9 புதிய பயண வழிகளில் பாத்தேக் ஏர் விமான சேவை
சுபாங் செப் 27
எதிர் வரும் 8 டிசம்பர் 2025-ல் ஒன்பது புதிய பயண வழிகளில் முன்னணி விமான நிறுவனமான பாத்தேக் ஏர் விமான சேவையை மேற்கொள்ளவிருக்கிறது.
குறிப்பிட்ட ஒரே நாளில் இந்த விமான நிறுவனம் பல நகர்களுக்கு புதிய பயண வழிகளில் சேவையை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
மலேசியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் பாத்தேக் ஏர் வலிமையாக கால் பதித்து வருவதை இது காட்டுகிறது.
சுபாங் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையம் கோலாலம்பூர் நகர் விமான நிலையமாக உருமாற்றம் பெற்று வரும் வேளையில்,பாத்தேக் ஏரின் இந்த விரிவாக்கம் பொருத்தமாக அமைந்துள்ளது.
பாத்தேக் ஏரின் வளர்ச்சி இலக்கில் சுபாங் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இந்த விமான நிலையத்திலிருந்து கிள்ளான் பள்ளத்தாக்கு மக்களுக்கு பாத்தேக் ஏர் சிறந்த சேவையை வழங்க முடியும்.
இங்கிருந்து சிங்கப்பூர், ஜாக்கார்த்தா, லங்காவி மற்றும் ஜொகூர் பாரு ஆகிய நகர்களுக்கான புதிய பயண வழிகளின் மூலம், பயணிகள் எளிதான போக்குவரத்து மற்றும் தாங்கள் விரும்பும் நகர்களுக்கு பயணிக்க முடியும்.
அரசாங்கத்தின் சுபாங் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலைய உருமாற்றத் திட்டத்திற்கு பாத்தேக் ஏரின் ஆதரவை இந்த விரிவாக்கம் காட்டுகிறது.
வட மலேசியாவில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்த பினாங்கை ஒரு முக்கிய மையமாக பாத்தேக் ஏர் திட்டமிட்டு வருகிறது.
பினாங்கு அனைத்துலக விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், மேடான்,கூச்சிங் மற்றும் கோத்தா கினபாலு நகர்களுக்கு சிறகடிக்கவிருக்கிறது.
சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்திலிருந்து ஈப்போவிற்கு புதிய பயண வழியாக பாத்தேக் ஏர் அறிமுகம் செய்கிறது.
அதேவேளையில் ஈப்போ மற்றும் சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவையை பாத்தேக் ஏர் தொடங்குகிறது.
இவ்விரு நகர்களுக்கு இடையிலான நேரடி விமான சேவை வார இறுதி பயணிகள், வர்த்தக பயணிகள் மற்றும் கலாச்சார பயணிகளுக்கு இது ஏதுவாக அமைகிறது.
மலேசிய பயணிகளுக்கு சிங்கப்பூர் ஒரு சிறந்த தேர்வான நகரமாக அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
எதிர் வரும் நவம்பர் 2025 முதல் பாத்தேக் ஏர் உட்பட அனைத்து லையன் குழும விமானங்களும் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் 4 ஆம் முனயத்திலிருந்து விமான சேவைகளை மேற்கொள்ளும்.
இதனிடையே இந்த விரிவாக்கம் கவனமான திட்டமிடுதலை பிரதிபலிப்பாக பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
ஆசியானில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தவும் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களை இணைக்கவும் பாத்தேக் ஏர் கவனம் செலுத்தி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டிற்கான பிரச்சாரத்திற்கு தயாராகும் வகையில் சுபாங் மற்றும் பினாக்கில் பாத்தேக் ஏர் தீவிர கவனம் செலுத்தி வருவதாக அவர் சொன்னார். மேலும் உள்நாட்டு சுற்றுப்பயணத்தை அதிகரிக்க சிங்கப்பூரை முக்கிய தேர்வாக பாத்தேக் ஏர் கருதி வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த விரிவாக்கம் சுற்றுப்பயண மற்றும் வர்த்தக பகுதிகளுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என அவர் கூறினார்.
இந்த ஒன்பது புதிய பயண வழிகளை காண சேவை மக்களுக்கு தடையற்ற பயணத்தை ஏற்படுத்தி தருவதை பிரதிபலிப்பாக அவர் சுட்டிக் காட்டினார்.
எதிர் வரும் 8 டிசம்பர் 2025 முதல்
சுபாங்-சிங்கப்பூர்
சுபாங்-ஜாக்கர்த்தா
சுபாங்-லங்காவி
சுபாங்-ஜொகூர் பாரு
பினாங்கு-சிங்கப்பூர்
பினாங்கு-கூச்சிங்
பினாங்கு-மேடான்
பினாங்கு-கோத்தா கினபாலு
ஈப்போ-சிங்கப்பூர் ஆகிய நகர்களுக்கு பாத்தேக் ஏர் சிறகடிக்கிறது.

28/09/2025

𝗠𝗞𝗨 𝗟𝗜𝗩𝗘 𝗦𝗧𝗥𝗘𝗔𝗠𝗜𝗡𝗚-

28/09/2025

𝗠𝗞𝗨 𝗟𝗜𝗩𝗘 𝗦𝗧𝗥𝗘𝗔𝗠𝗜𝗡𝗚- �� Selangor Junior Superstars 2025 – Semi Final ��
A Great Musical Journey awaits! �

� 28.09.2025 (Sunday)
� 10.00am – 2.00pm
� Auditorium E Library, Majlis Bandaraya Diraja Klang

Proudly supported by YB. Dr. Gunaraj G and organized with the spirit of Malaysia MADANI.

Don’t miss the rising talents of tomorrow showcasing their musical brilliance! ��

Live Streaming by MKU Malaysia Kalai Ulagam எம்.கே.யு மலேசிய கலை உலகம் & Naan Oru Malaysian - NOM

27/09/2025

✨ AS WONDERS FILM presents… ✨
🎶 Musical Video Release 🎶

📅 30th September 2025
⏰ India – 3:25 PM | Malaysia – 5:55 PM

🎬 A creation of Kaali Karuppu
🎥 Directed by Umagandhan Krishnan
🎶 Music | Lyrics | Vocals | Edit – Amigoz Appu
💃 Choreography – Nantha Ti-Amo
🎨 Makeup – Shivanshema
🎭 Teaming up with passionate creatives & artists!

🌟 Produced by Dr. S. Saswin

🔥 Stay tuned for the big drop!

Address

Johor Bahru
81100

Alerts

Be the first to know and let us send you an email when RagsStar Media Global posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RagsStar Media Global:

Share

Category

RAGSSTAR MEDIA

Coming soon