23/12/2025
அனைத்துலக சுற்றுப்பயணிகளை கவர்ந்து வரும் அழகிய இஸ்தான்புல்
கோலாலம்பூர் டிச 24
ஏர் ஆசியா எக்ஸ்ஸின் இடைநிறுத்தாமல் நேரடி விமான சேவையின் மூலம் சுமார் 10 மணி நேரத்தில் துருக்கியின் இரண்டாவது பெரிய நகரமான இஸ்தான்புல் நகரை நம்மால் சென்றடைய முடியும்.
உலகின் மிக அழகிய நகரங்களில் ஒன்றான இஸ்தான்புல் அனைத்துலக சுற்றுப்பயணிகளை அதிகமாக கவர்ந்து வருகிறது.
ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களின் சந்திப்பில் உள்ள இந்த அற்புத நகரம் வித்தியாசமான அனுபவத்தை நமக்கு தருகிறது.
இஸ்தான்புல் உலகின் மிகப் பழமையானதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆன நகரங்களில் ஒன்றாகும்.
துருக்கியின் கலாச்சார, வரலாற்று மற்றும் பொருளாதார மையமாக இந்த நகரம் விளங்கி வருகிறது.
இஸ்தான்புல் பைசாண்டியம், கான்ஸ்டான்டினோபிள் என பல பெயர்களில் அழைக்கப்பட்ட வரலாற்று பெருமை கொண்டது.
ரோமன்,பைசாண்டைன் மற்றும் ஒட்டோமான் பேரரசுகளின் தலைநகராக இருந்து இந்நகரம் உலக வரலாற்றில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
ஆயா சோபியா,டொப்ப்காபி அரண்மனை, நீல பள்ளி வாசல் போன்ற கட்டிடங்கள் இஸ்தான்புல் வரலாற்றின் பெருமையை கூறுகிறது.
காலாட்டா டாவர்(Galata Tower)
காலாட்டா டாவர் இஸ்தான்புல் நகரின் அடையாளம் ச் சின்னங்களில் ஒன்றாக திகழ்கிறது.பொஸ்பரஸ் நீரிணையை அண்மித்து, ஐரோப்பா பகுதியில் அமைந்துள்ள இந்த கோபுரம் வரலாறு அழகும் கலந்த ஒரு முக்கிய சுற்றுலா தலமாகும்.
வரலாற்றுச் சிறப்பு காலாட்டா டாவர் கி.பி.1348 ஆம் ஆண்டு ஜெணோவா மக்களால் கட்டப்பட்டது. அக்காலத்தில் இது பாதுகாப்பு கோபுரமாகவும், நகரை கண்காணிக்கும் மையமாகவும் பயன்படுத்தப்பட்டது.ஒட்டோமன் காலத்தில் தீக் கண்காணிப்பு கோபுரம், சிறைச்சாலை போன்று பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது.
கட்டிடக் கலையின் அழகு சுமார் 67 மீட்டர் உயரம் கொண்ட இந்த வட்ட வடிவ கல்லாலான கோபுரம், நடுத்தரை யுக ஐரோப்பிய கட்டிடக் கலையின் சிறந்த எடுத்துக்காட்டாகும். அதன் மேல் பகுதியில் உள்ள கூம்பு வடிவ கூரை, காலாட்டா டாவரின் தனித்துவ அடையாளமாக திகழ்கிறது.
அற்புதமான காட்சி பார்வை காலாட்டா டாவரின் மேல் மாடியில் இருந்து இஸ்தான்புல் நகரின் முழு அழகையும் காணலாம்.
பொஸ்பரஸ் நீரிணை,கோல்டன் ஹார்ன்(Golden Horn),ஹாகியா சோபியா,நீல பள்ளிவாசல் போன்ற வரலாற்று சின்னங்கள் இங்கிருந்து தெளிவாக தெரியும். குறிப்பாக சூரிய அஸ்தமன நேர காட்சி மிகுந்த மனதை கொள்ளை கொள்ளும்.
ஹாகியா சோபியா(Hagia Sophia)
ஹாகியா சோபியா துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னமாகும்.
உலக வரலாற்று முக்கியத்துவம் கி.பி.537 ஆம் ஆண்டு பைசநாநிய பேரரசர் ஜஸ்டியனின் 1 ஆல் கட்டப்பட்டது. இது பல நூற்றாண்டுகளாக உலக வரலாற்றின் சாட்சியாக விளங்குகிறது.
மூன்று மதங்களின் சின்னம்:
-முதலில் கிறிஸ்துவ தேவாலயம்
-பின்னர் ஒட்டோமான் காலத்தில் மசூதி
-ஒரு காலகட்டத்தில் அருங்காட்சியகம்
-தற்போது மீண்டும் மசூதி. இதனால் கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய மதங்களின் கலாச்சார சேர்க்கையை காட்டுகிறது.
அற்புதமான கட்டிடக்கலை அதன் பெரும் கூம்பு(Dome) உலகக் கட்டிட கலையின் அதிசயமாக கருதப்படுகிறது. கட்டுமான காலத்தில் இவ்வளவு பெரிய கூம்பு அமைந்தது ஒரு மாபெரும் சாதனையாகும்.
கிறிஸ்துவ மொசைக் ஓவியங்கள், இயேசு, மரியாள் தேவ தூதர்கள் போன்ற கிறிஸ்துவ மொசைக் கலைப் பணிகள் இன்றும் காணப்படுகிறது.
இஸ்லாமிய கலை மற்றும் அழகிய பெரிய அரபு எழுத்துக்கள், மிஸ்ராப்,மிம்பர் போன்ற இஸ்லாமிய கலை அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம் மனித குலத்தின் பொது சொத்தாக யுனெஸ்கோ அறிவித்துள்ள ஒரு முக்கிய வரலாற்று நினைவிடம் இது.
-தொடரும்