Tamilbooks_malaysia21

Tamilbooks_malaysia21 We have new & second hand tamil books!! Do contact us to find out more
018-2201909

21/11/2025

உலகில் தோன்றிய எந்தக் காவியமும் இலியட்டுக்கு நிகரில்லை என்று சொல்வோர் உண்டு. இயேசு பிறப்பதற்குச் சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கிரேக்க மகாகவி ஹோமரின் இரு பெரும் படைப்புகளுள் ஒன்று இது. ( இன்னொன்று ஒடிஸி). காதலும் வீரமும்தான் காவியத்தின் இரு கண்கள் என்பதை இலியட்டில் இருந்தே உலகம் கற்றது. ஒரு பெண்ணும், அவளுக்காக நடக்கிற யுத்தமும்தான் கதை என்று ஒருவரியிலும் சொல்லிவிடலாம்; ஒப்பற்ற பேரழகுப் புதையலான ஹோமரின் கவித்துவத்தைப் பக்கம் பக்கமாகவும் வருணிக்கலாம். ஆனால் இலியட்டை, வெறும் கதையாகப் பார்க்க  இயலாது. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு கவிஞனின் பார்வையில் அந்தக் காலகட்டத்து கிரேக்க நாகரிகம், வரலாறு, பெருமைகள் அனைத்தையும் ஏந்தி நிற்கும் ஒரு பொக்கிஷமாகவே இதைப் பார்க்க வேண்டும். சமூக உண்மைகளும் சரித்திரப் பதிவுகளும் கவியின் கற்பனையும் கலந்திருக்கும் விகிதம், கண்டிப்பாகப் பிரமிப்பூட்டக்கூடியது.


21/11/2025

Naan, Vidya" translates to "I, Vidya" and refers to the autobiographical book by Living Smile Vidya, a transgender woman from Tamil Nadu. The book recounts her life experiences, challenges, and journey of self-discovery, and is also known by its English title, "I am Vidya: A Transgender's Journey




21/11/2025

”எனக்குப் பிடித்த நூறு தமிழ்ச் சிறுகதைகளில் வண்ணநிலவனின் ‘எஸ்தர்’ கதைக்கு அடுத்து ஆனந்த் ராகவின் கதையும் உண்டு.” -- இரா. முருகன்*தமிழகத்தின் அனைத்து முன்னணி இதழ்களிலும் பத்து வருடங்களாக எழுதிவரும் ஆனந்த் ராகவ் இதுவரை அறுபது சிறுகதைகளும், ஏழு மேடை நாடகங்களும் எழுதியிருக்கிறார்.இலக்கியச் சிந்தனை அமைப்பின் 2010ம் ஆண்டின் சிறந்த சிறுகதைக்கான விருது பெற்றவர். இதைத் தவிர இலக்கியச் சிந்தனையின் மாதாந்திரப் பரிசுகள், விகடன் முத்திரைக்கதை பரிசுகள் போன்றவற்றைப் பெற்றிருக்-கிறார். இந்திய ராமாயணங்களோடு தாய்லாந்து மற்றும் இதர தென்கிழக்கு ஆசிய ராமாயணங்களை ஒப்பிட்டு எழுதிய ‘ராமகியன்’ என்கிற ந

21/11/2025

The credit goes to 😉saro

21/11/2025

Poovarasi, a young girl, fails to realize the reality behind her life as the daughter of a garbage gatherer. She falls in love with Mano, a literate and a little well-to-do person. The unexpressive love gets caged and locked up without even the gentle winds knowing of it. She dies every moment with her unquenched longings...

The social novel reflects the pangs of the economically under privileged. The web of strains and struggles of the sweeper community is being spun through the moving story. The writer explores the varying manifold sets of different incidents through Poovarasi.



20/11/2025

சிறுமியோ, வயதான கிழவியோ எல்லோரும் முகத்திரை அணிந்துதான் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும். உடைக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். வியாபாரமோ, தொழிலோ செய்ய முடியாது. தனியாக வசிப்பவர்களுக்கு வேலை கிடையாது. வேலையில் இருப்பவர்கள் வரி செலுத்த வேண்டும். திருமணமானவர்களுக்கு பேறுகால விடுப்பு கிடையாது. நிலம், சொத்து வாங்க முடியாது.’ இப்படித் தொடர்கிற அடக்குமுறைக்கு ஒரே காரணம் அவர்கள் பெண்கள். அதுவும் இஸ்லாமியப் பெண்கள்.

எங்கோ நைஜீரியாவில் ஒரு பொந்தில் வசிக்கும் அமினா, பெண்களுக்கு எதிரான ஆதிக்கப்போக்கையும் கடுமையான சட்டதிட்டங்களையும் எதிர்கொள்ளத் துணிகிறாள். முடிவற்றுத் தொடர்கிறது அவளது உணர்ச்சிபூர்வமான போராட்டம். நைஜீரியாவையும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்க்கையையும் கண் முன் நிறுத்தும் அபூர்வமான படைப்பு இது.



20/11/2025

மனித மனத்தின் நுட்பமான அடுக்குகளைத் துல்லியமாகச் சித்தரிக்கும் ஆதவன் ஆண் பெண் உறவு நிலைகளையும் பல கதைகளில் நுணுகி ஆராய்கிறார். ‘இரவுக்கு முன் வருவது மாலை’ குறுநாவலும் அத்தகையதொரு படைப்பு. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான உரையாடல் வழி நகரும் இந்தக் கதை ஆண் பெண் உறவுச் சிக்கல் குறித்த இருவரின் மனவோட்டங்களை அலசிக் கேள்விகளை முன்வைக்கிறது. அவர்கள் இருவருக்குமிடையே நடக்கும் பாவனை விளையாட்டை அபாரமான புனைவு மொழியில் சித்தரிக்கும் ஆதவன் அதன் மூலம் அவர்களின் பின்புலங்கள், கண்ணோட்டங்கள், ரகசிய வேட்கைகள் ஆகியவற்றைச் சொல்லாமலேயே உணர்த்திவிடுகிறார். பாவனை விளையாட்டின் வழியே மன அடுக்குகளில் படிந்திருக்கும் இருண்ட உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். அவர்களுக்கிடையிலான உறவு இரவுமல்லாத பகலுமல்லாத மலையைப் போலவே விளிம்பு நிலையில் ததும்புவதைக் காட்டியபடி முடிகிறது இந்தக் குறுநாவல். எழுதி ஐம்பது ஆண்டுகள் ஆன பிறகும் புதிய வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கும் படைப்பு இது


20/11/2025

அமரர் கல்கி (1899-1954) எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது

19/11/2025

All credit goes to the write :saro

19/11/2025

ஓஷோவின் ஆன்மிகமும் தத்துவமும் தியானமும் மட்டுமல்ல, அவர் வாழ்க்கையும் கூட தனித்துவமானதுதான். சாதனைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் சற்றும் குறை வைக்காமல் நிறை வாழ்வு வாழ்ந்தவர். இன்றும் உலகம் முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான பக்தர்கள் பெரும் பரவசத்துடன் ஓஷோவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் பல்வேறு புதிய அமைப்புகள் ஓஷோவின் பெயரைத் தாங்கி செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஓஷோவின் உரைகள், புத்தகங்கள் பலத்த வரவேற்பைப் பெற்றுவருகின்றன. கிட்டத்தட்ட அதே எண்ணிக்கை கொண்டவர்கள் ஓஷோவை நிராகரிக்-கிறார்கள். அவரது தத்துவத்தை. வாழ்க்கையை. அவர் முன்வைத்த சிந்தனைகளை. ஓஷோவுக்கு இன்னொரு பக்கம் உண்டு. ஓஷோ இறைவனை ஏற்றுக்கொண்டிருக்கிறார். நிராகரித்திருக்கிறார். ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’ என்ற தலைப்பில் உரையாற்றி அதிர வைத்திருக்கிறார். தனக்குத் தானே ‘பகவான்’ என்று பட்டம் சூட்டிக்கொண்டு பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறார். ஓஷோவின் ஆசிரமத்தில் வன்முறையும் பாலுறவு வெறியும் மிதமிஞ்சி இருந்ததாக ஆதாரப்பூர்வமான பல செய்திகள் வெளிவந்துள்ளன. ஓஷோ கடுமையாக விமரிசிக்கப்பட்டார். கொலைமுயற்சியும் அரங்கேறியது. அவர் மரணம் குறித்த சர்ச்சைகளும் தீர்ந்தபாடில்லை. என்றாலும், ஓஷோ மீதான ஈர்ப்பு குறையவில்லை. ஓஷோவின் சிந்தனைகள் பரிச்சயமான அளவுக்கு அவர் வாழ்க்கை நமக்குப் பரிச்சயமாகவில்லை என்னும் குறையைத் தீர்த்து வைக்கிறது பாலு சத்யாவின் இந்தப் புத்தகம்.

19/11/2025

இந்திய அரசியல் களத்தில் இவரைப் போல் இன்னொரு புயல் உருவாகவில்லை. உருவாகப்போவதும் இல்லை. அதிகாரம், ஆட்சி, கட்சி அரசியல் அனைத்துமே வெங்காயம்தான் பெரியாருக்கு. மதம், தேசியம், மொழி, கற்பு என்று புனிதமாகக் கொண்டாடப்படும் அனைத்தையும் போட்டு உடைத்தவர். யாருக்காகவும் எதற்காகவும் சமரசம் செய்துகொண்டதில்லை பெரியார். கண்முன்னால் ஒரு அராஜகமா? தோழர்களே, திரண்டு வாருங்கள் போராடுவோம்! போராட்டம். அது மட்டும்தான் தெரியும். பெரியார் முன்வைத்த நாத்திகவாதம் ஆக்ரோஷமானது, ஆவேசமானது, அறிவியல்பூர்வமானது. நிலச் சீர்திருத்தத்தில் இருந்து தொடங்குவோம் என்று கம்யூனிஸ்டுகள் சொன்னபோது, அமைதியாக ஒதுங்கிக்கொண்டார். மதம். அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆணிவேர் இதுவே என்றார். இந்திய சுதந்தரத்துக்குக் கறுப்புக் கொடி. காந்தி, அண்ணா, ராஜாஜி போன்றவர்களுடன் கருத்து மோதல். மணியம்மை திருமணம். திமுக மீது காட்டமான விமரிசனங்கள். அதிகாரத்துக்கு அடங்கிப்போக மறுக்கும் குணம். சர்ச்சைகளுக்குச் சற்றும் பஞ்சமில்லா வாழ்க்கை அவருடையது. தீரமிக்க போராட்டப் பாரம்பரியம் பெரியாரோடு தொடங்கி பெரியாரோடு முற்றுப்பெறுகிறது. பெரியாரை நம் கண்முன் நிறுத்தும் இந்நூல், வரலாற்றில் அவர் வகித்த பாத்திரத்தையும் சமூகத்தில் அவர் ஏற்படுத்திய மாற்றங்களையும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது. நூலாசிரியர் ஆர். முத்துக்குமார் சமகால இந்திய அரசியல் சார்ந்த ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்



19/11/2025

இந்திய சுதந்தரப் போராட்டத் தலைவர்களிலேயே அதிகம் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானவர் சுபாஷ் சந்திரபோஸ். இவரைப் போல் முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் வேறு யாருமில்லை.ஒட்டுமொத்த தேசமும் காந்தியின் தலைமையில் அறவழியில் போராடிக் கொண்டிருந்தபோது, ஆயுதப் போராட்டம்தான் ஒரே தீர்வு என்று, இந்தியாவை விட்டு ரகசியமாக வெளிர்படும் வகையில் வெளிநாட்டில் இருந்த படியே தனி ஆயுதப்படையையும், தனி அரசாங்கத்தையும் அவரால் உருவாக்க முடிந்தது. போஸ், விமான விபத்தில் இறந்து போனார் என்று பரவலாகச் சொல்கிறார்கள். இல்லை, அவர் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்கிறார்கள் சிலர். சீனாவில் அவரை நேரில் பார்த்துப் பேசியதாகச் சிலர் சாட்சியம் அளித்திருக்கிறார்கள். மாறுவேடத்தில் அவர் இந்தியாவில் சுற்றிக்கொண்டிருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. போஸ் விவகாரத்தை ஆராய அமைக்கப்பட்ட ஒவ்வொரு கமிஷனும், ஒவ்வொரு விதமான முடிவை முன்வைக்கிறது. இந்த நிமிடம் வரை போஸ் ஒரு புதிர். புலப்படாத மர்மம். இந்திய சுதந்தரப் போராட்ட வரலாற்றில் சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, தீரமும் விடுதலை வேட்கையும் கொண்ட தனி ஒரு பாகம்


Address

No 2A , Jalan Titiwangsa 3/2, Taman Tampoi Indah
Johor Bahru
82100

Telephone

+60182201909

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilbooks_malaysia21 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share