Makkal Kural Media

Makkal Kural Media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Makkal Kural Media, Media/News Company, Bandar Kajang, Kajang.

DR MAK ANBAKALAM
09/08/2026

DR MAK ANBAKALAM

  கிழக்கு வெஸ்ட் கன்ட்ரி தமிழ்ப்பள்ளி அளவில்தொழில் முனைவோர் தின விழாஇங்கு கிழக்கு வெஸ்ட் கன்ட்ரி தமிழ்ப்பள்ளி அளவில் தொழ...
09/08/2026



கிழக்கு வெஸ்ட் கன்ட்ரி தமிழ்ப்பள்ளி அளவில்
தொழில் முனைவோர் தின விழா

இங்கு கிழக்கு வெஸ்ட் கன்ட்ரி தமிழ்ப்பள்ளி அளவில் தொழில் முனைவோர் தின விழா 8 ஆம் தேதி மிகவும் நேர்த்தியாக நடைபெற்றது. கற்றல் கற்பித்தலுடன் மாணவர்கள் மத்தியில் தனித்துவமான திறமைகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் நோக்கில் மாபெரும் அளவில் தொழில் முனைவோர் விழா ஏற்பாடு செய்யப்பட்டதாக கிழக்கு வெஸ்ட் கன்ட்ரி தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியை திருமதி சீதா முனியாண்டி கூறினார்.

இப்பள்ளியின் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 30 வகையான பல்வகை உணவுச் சந்தைகள், விளையாட்டுகள், பேய் வீடு, கோமாளி வித்தை, உள்ளூர் கலைஞர்களின் படைப்பு போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டது. இதே நிகழ்ச்சியில் குலுக்குச் சீட்டும் ஏற்பாடு

செய்யப்பட்டுள்ளதுடன் முதல் பரிசாக 55 அளவு ஸ்மார்ட் டிவி உட்பட பல்வேறு விதமான கவர்ச்சி மிக்க பரிசுகள் வழங்கப்பட்டது.

மாணவர்கள் மத்தியில் வணிகத் தலத்தை மேம்படுத்தும் வகையில் தொழில் முனைவோர் விழாவிற்கு பொது மக்கள் பேராதரவு வழங்கினர் என்று பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெயகாந்தன் ஜெயசீலன் குறிப்பிட்டார்.

மேலும் இவ்விழா மிகவும் சிறப்பாக
நடைபெற உதவிய பள்ளியின் நிர்வாகம்,
பள்ளியின் துணைத் தலைமை ஆசிரியர்கள். ஆசிரியர்கள், பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் நாதன் சிவசாமி, துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் துரைசாமி, பள்ளியின்
முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சுரேஷ், துணைத் தலைவி திருமதி கஸ்தூரி, பள்ளி பணியாளர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக கலந்துகொண்டு பேராதரவை வழங்கிய பள்ளி சார்பாக நன்றி கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் குருதி ...
09/08/2026

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் குருதி வள்ளல் மெஸ்பன் கலைமாமணி பொன்னமராவதி நம்பிக்கை நாயகன் அண்ணன் இரா பாஸ்கர் இந்தியன் அவர்களது உன்னத ஆசியில்..

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கத்தின் இரண்டாம் நிலைத்தலைவரும்,பூமித்ரா பயோ கிரீன் வேர்ல்டு நர்சரி கார்டன் மேலாளருமான மெஸ்பன் கலைமாமணி டாக்டர் வெங்கடேஷ் சங்கையா அவர்களது நட்புறவில் இன்று மலேசிய தாய்த் திருநாட்டில் இனிய சந்திப்பு..

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கத்தின் மெஸ்பன் கலைமாமணி டாக்டர் எம் அன்பா..
9.8.2026
மலேசியா

மலேசிய இந்து சங்கம் செராஸ் வட்டாரப் பேரவையின் 48 ஆம் ஆண்டு திருமுறை விழாஇளம் தலைமுறையினரை நன்னெறி பண்புகள் மிக்க சமுதாயம...
05/08/2026

மலேசிய இந்து சங்கம் செராஸ் வட்டாரப் பேரவையின் 48 ஆம் ஆண்டு திருமுறை விழா

இளம் தலைமுறையினரை நன்னெறி பண்புகள் மிக்க சமுதாயமாக உருவாக்கும் நோக்கத்துடன் மலேசிய இந்து சங்கம் செராஸ் வட்டாரப் பேரவையின் 48ஆம் ஆண்டு திருமுறை விழா சிறப்பாக பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப் பள்ளியில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

மலேசிய இந்து சங்கம் செராஸ் வட்டாரப் பேரவையின் 48 ஆம் ஆண்டு திருமுறை விழா மிகவும் நேர்த்தியாக வழி நடத்தப்பட்டது என செராஸ் வட்டார பேரவையின் தலைவர் கலைமாமணி தொண்டர்மணி ராமையா கேசவன் தமது தலைமை உரையில் கூறினார்.

இன்றைய இளைய தலைமுறையினர் தங்கள் பிள்ளைகளைச் சமய நெறிகளை பின்பற்றி எதிர்காலத்தில் நன்னெறிப் பண்புகளை வலுப்படுத்துவதற்கு உறுதிப்படுத்தும் வகையில் திருமுறை ஓதும் விழா முன்னுரிமை வழங்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் ஆலயமும் சமயமும் நமது இரண்டு கண்களை போன்றவை அதனை ஒவ்வொரு மாணவரும் மனதில் ஆழமாக பதிய வைத்து வாழ்க்கையில் சிறந்த நிலையை எட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

என் சமயம் என் கடமை என்கிற அடிப்படையில் இன்றைய இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தில் சமய கட்டொழுங்குமிக்கவர்களாக திகழ்வதற்கு அடித்தளத்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. க. சுந்தரி சிறப்புரையில் கூறினார்.

ஜூலை 18 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு நந்திக்கொடி ஏற்றி நடராஜர் சிவகாமி நால்வருக்கு சிறப்பு பூஜையுடன் திருமுறை பிரிவு 1 முதல் 6 பிரிவு வரை தனிநபர், ஆண், பெண், குழுப் பிரிவு, பதிகப் பாராயணம், மாறுவேடப் போட்டி, பேச்சுப்போட்டி, பஞ்சபுராணம் ஆகியவை இடம் பெற்றது. இவ்விழாவிற்கு நடுவர்களாக மலேசிய இந்து சங்கத்தின் புக்கிட் செந்தோசா, ரவாங், சுபாங் ஜெயா, ஷா ஆலாம், செலாயாங் ஆகிய வட்டாரப் பேரவையின் 12 பேர்கள் அடங்கிய குழுவினருக்கு தலைமை நடுவராக தொண்டர்மணி எம். அன்பரசன் பொறுப்பை மலேசிய இந்து சங்கம் செராஸ் வட்டாரப் பேரவையின் ஆலோசகர் செல்வரத்தினம் மாணிக்கம் நடுவர் அணிதலைவராக பொறுப்பேற்று செவ்வனே வழி நடத்தினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகர்களாக மலேசிய இந்து சங்கத்தின் சிலாங்கூர் மாநிலத் துணைத் தலைவர் தொண்டர்மணி சரஸ்வதி வேலு, மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப் பேரவையின் கெளரவச் செயலாளர் முருகன் கிருஷ்ணமூர்த்தி, தொண்டர்மணி சிவக்குமார், பள்ளியின் இணைப்பாடத் துணைத் தலைமை ஆசிரியர் திருமதி மு. கண்மணி, உலுலஙகாட் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மன்றத்தின் தலைவர் கு. நெடுஞ்செழியன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முரளி ராஜன் உட்பட செயலவை உறுப்பினர்கள், மலேசிய இந்து சங்கத்தின் செமினி வட்டாரப் பேரவையின் தலைவர் முத்துகிருஷ்ணன் ராமசாமி, செயலாளர் சிவசங்கரன் ராமு, மலேசிய இந்து சங்கத்தின் செராஸ் வட்டாரப் பேரவையின் செயலாளர் பூமாலா மாரி, துணைச் செயலாளர் ஆர். லட்சுமி, பொருளாளர் திருமதி பரமேஸ்வரி கோவிந்தசாமி, இளைஞர் பகுதி தலைவர் ஆர். இராகவேந்திரா, மகளிர் பகுதி தலைவி கிருஷ்ணவேணி அமரசிங்கம், சமய ஆசிரியரும் சமயப் பகுதி பொறுப்பாளருமான திருமதி தேன்மொழி பொன்னுசாமி உள்ளிட்ட சக பொறுப்பாளர்களுடன், தொண்டூழியர்கள், நன்கொடையாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மாறுவேட போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் உட்பட
இப் போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு கேடயம், பதக்கம் மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

காஜாங் தாமான் மெலூர் கல்லுமலை கருமாரியம்மன் ஆலயத்தின்23வது ஆண்டு ஆடி மாதத் திருவிழாகாஜாங், சுங்கை சுவா தாமான் ஸ்ரீ மெலூர...
03/08/2026

காஜாங் தாமான் மெலூர் கல்லுமலை கருமாரியம்மன் ஆலயத்தின்
23வது ஆண்டு ஆடி மாதத் திருவிழா

காஜாங், சுங்கை சுவா தாமான் ஸ்ரீ மெலூர் கல்லுமலை ஸ்ரீ மகா கருமாரியம்மன் ஆலயத்தின் 23 வது ஆண்டு ஆடி மாதத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

ஆகஸ்டு 1ஆம் தேதி காலையில் பால் குடம் ஏந்தி நூற்றுக்கும் அதிகமான பக்தர்கள் தங்களது வேண்டுதலை பக்தி சிரத்தையுடன் நிறைவேற்றினர் என்று ஆலய நிர்வாக சார்பில் ஆலயத் தலைவர் கோ. கருணாகரன் கூறினார்.

சிறப்புப் பூஜைகளுடன் அர்ச்சனையும் 600 பேருக்கு அன்னதானமும் நடைபெற்றதாக அவர் தெரிவித்தார்.

புதிய ஆலயத்தில் கட்டுமானப் பணிகளுக்கு பாலாலயம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநில அரசின் நில ஒதுக்கீட்டின் கீழ் முறைப்படி இந்த ஆலயத்திற்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது.

காஜாங் நகராண்மைக் கழக அனுமதியும் பெற்று புதிய வடிவமைப்பில் இதே இடத்தில் கருமாரியம்மன் ஆலயம் அமைக்கப்படும் என்று அவர் கூறினார்.

இவ்வட்டார சமய நம்பிக்கைக்குரிய வழிபாட்டுத்தலமாக கருமாரியம்மன் சன்னிதானத்தில் பக்தர்கள் வசதிக்காக இந்த ஆலயத்தின் திருப்பணிகளுக்கு பொதுமக்கள் பொருள் உதவி, நிதியுதவி வழங்க முன்வருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

ஆலயத் திருப்பணியை தொடர்ந்து தடையின்றி திருப்பணிகளை மேற்கொள்ளவும் முழுமை பெறச் செய்யவும் பக்தர்களாகிய அனைவரும் பங்கேற்று ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆலயத்தில் விநாயகர், முருகன், கருமாரியம்மன் மூலஸ்தானம், சிவன்,
துர்க்கை அம்மன், நாகம்மாள், முனியாண்டி, நவக்கிரகம் உட்பட கொடிமரம் பலிபீடம் புதிய சன்னிதிகள் அமைப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆலயத் திருப்பணிக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சி இம்மாதம் ஆகஸ்டு 29ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு ஆலய வளாகத்தில் பக்தர்களை மகிழ்விக்க மலேசிய டி.எம்.எஸ். புகழ் பாங்கி மகேந்திரனின் பக்தி
பாடல் கச்சேரியும் கலை நிகழ்ச்சி யுடன் அதிர்ஷ்டக் குலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலயத் திருப்பணிக்கு பொது மக்கள் நன்கொடை வழங்க விரும்புவோர் ஆலயத் தலைவரிடம் தொடர்பு கொள்ளலாம். 019-3779356.

We are proud to share that Pertubuhan Skuvaths Malaysia's "Seminar Hidup Sihat Tanpa Dadah & V**e" has been *featured in...
01/08/2026

We are proud to share that Pertubuhan Skuvaths Malaysia's "Seminar Hidup Sihat Tanpa Dadah & V**e" has been *featured in Makkal Osai Newspaper today, 1 August 2026.*

We extend our *heartfelt appreciation* to Makkal Osai, especially Bro. Anba, for the media coverage and continuous support.

Our sincere thanks also go to:

- SJKT Bandar Mahkota Cheras
- PIBG SJKT Bandar Mahkota Cheras
- AADK – Mr. Bharathan Raj, En. Zainal & En. Ishak
- All Skuvaths Malaysia committee members
- Our dedicated volunteers and supporters

Your invaluable cooperation and commitment contributed greatly to the success of this awareness programme. Together, we will continue promoting a healthier, drug-free and vape-free future for our younger generation.

Thank you for your unwavering support.

Sincerely
*Dr. RP.KANNAN*
President Skuvaths Malaysia

மலேசியா,மொரிஷியஸ், தென்னாப்பிரிக்கா சமூகப் பண்பாடு இயக்கம் ஏற்பாட்டில்மொரிஷியஸ் தமிழ் உறவுகளின் சங்கமம்மலேசியா, மொரிஷியஸ...
28/07/2026

மலேசியா,மொரிஷியஸ், தென்னாப்பிரிக்கா சமூகப் பண்பாடு இயக்கம் ஏற்பாட்டில்

மொரிஷியஸ் தமிழ் உறவுகளின் சங்கமம்

மலேசியா, மொரிஷியஸ், தென்னாப்பிரிக்கா சமூகம் பண்பாடு இயக்கத்தின் தமிழ் மொழி, பண்பாடு, பாரம்பரியத்தை மேம்படுத்துவதில் நேர்த்தியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இரண்டாவது முறையாக மலேசியாவில் உலகத் தமிழர்களை இணைக்கும் வகையில் ஜூலை 26ஆம் தேதி காஜாங், சஹாயா நிகழ்ச்சி மையத்தில் மலேசிய, மொரிஷியஸ் தமிழ் உறவுகளின் சங்கமம் நிகழ்ச்சியில் மொரிஷியஸ் நாட்டின் 25 தமிழ் ஆசிரியர்கள் பங்கேற்ற கல்விப் பயண கலந்துரையாடல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து இன்பத் தமிழ் இணைய வழி வகுப்புகள் தமிழ் பேச்சு மொழி கற்பிக்கும் முறையை மேற்கொள்வதற்கு தனித்துவமான உறவு பாலமாக அமைந்தது என மலேசியா, மொரிஷியஸ், தென்னாப்பிரிக்கா சமூகம் பண்பாடு இயக்கத் தலைவர் திருமதி க. கணேஸ்வரி தெரிவித்தார். தமிழ் மொழிக் கல்வி, பண்பாட்டு பரிமாற்றம், இளைய தலைமுறையினருக்கான தமிழ் மொழி கல்வித் திட்டங்களில் இணைக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என அவர் கூறினார்.

உலகத் தமிழர்களிடையே தமிழ் மொழியையும் பண்பாட்டையும் வளர்க்கும் நோக்கில் செயல்பட்டு வரும் மலேசியா மொரிஷியஸ் தென்னாப்பிரிக்கா சமூகம் பண்பாடு இயக்கமாக உருவெடுத்து
வருகின்றது என்றும் இந்த இயக்கத்தின் நிறுவனர், ஆலோசகர், தனது வழிகாட்டியான பேராசிரியர் டத்தோ டாக்டர் பரமசிவம் முத்துசாமி வழிகாட்டுதலுடன் சிறந்த எதிர்காலத்தை நோக்கி பயணம் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

எல்லைகளைக் கடந்து தமிழ் தங்களது தாய்மொழி என்பதால் அதை எப்படியாவது மொரிஷியஸ் தமிழ் வம்சாவளியினர் மத்தியில் கற்றுத் தர வேண்டும் என்று மொரிஷியஸ் தொடக்கப்பள்ளி தமிழாசிரியர் ஒன்றியத்தின் தலைவர் புலவன் கேசவன் சின்னராமன் தெரிவித்தார்.

தமிழ் மொழி கல்வியின் மகத்துவத்தையும் மலேசிய நாட்டின் தமிழ்ப் பள்ளிகளின் கல்வி மேம்பாட்டிற்கும் மிகச் சிறந்த அடித்தளமாக விளங்குகிறது என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் இரு தரப்பினருக்கும் இடையேயான நட்புறவையும் பண்பாட்டு உறவையும் வலுப்படுத்திய அர்த்தமுள்ள கலந்துரையாடலாக அடைந்ததாகவும்

இன்ப தமிழ் திட்டத்தின் விளக்கக் காட்சி வழியாக தகவல்களை முன்னாள் தலைமையாசிரியர் மொரிஷியஸ் நாட்டைச் சேர்ந்த தமிழ் உறவுகள் சங்கமத்தில் இனிமையாகத் தமிழ் பாடல்களைப் பாடி, தங்களது கலைத்திறனையும் தமிழ் மொழியின் மீதான அன்பையும் வெளிப்படுத்தியது பாராட்டும் வகையில் அமைந்தது.

இந்நிகழ்ச்சியில் மலேசியா-மொரிஷியஸ், தென்னாப்பிரிக்கா கலை சமூகப் பண்பாட்டுக் கழகத்தின் துணைத் தலைவர் வழக்கறிஞர் திருமதி கே. மதிமுகம், செயலாளர் திருமதி விஜயலெட்சுமி சாமிதுரை, துணைச் செயலாளர் திருமதி தனபாக்கியம் பழனிச்சாமி, பொருளாளர் ஆர். ராஜேந்திரன், செயலவை உறுப்பினர்கள் உட்பட மொரிஷியஸ் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒன்றியத்தின் பலர் கலந்து சிறப்பித்தனர்.

சிலாங்கூர் மாநில அளவிலான ஆங்கில நாடாளுமன்ற விவாதப் போட்டியில்ப. கெத்ரீனா டீபிகா செல்வம் 3ஆம் இடம்சிலாங்கூர் மாநில அளவிலா...
26/07/2026

சிலாங்கூர் மாநில அளவிலான ஆங்கில நாடாளுமன்ற விவாதப் போட்டியில்

ப. கெத்ரீனா டீபிகா செல்வம் 3ஆம் இடம்

சிலாங்கூர் மாநில அளவிலான ஆங்கில நாடாளுமன்ற விவாதப் போட்டி நடைபெற்றது. உலுலங்காட் மாவட்டம் முழுவதிலுமிருந்து 20 பங்கேற்பாளர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு அழைக்கப்பட்டனர். சிலாங்கூர் மாநில அளவில் உலுலங்காட் மாவட்டத்தைப் பிரதிநிதிக்க 10 மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஜூலை 9 ஆம் தேதி சுபாங் ஜெயா டத்தோ ஒன் ஜாஃபார் தேசியப் பள்ளியில் நடைபெற்ற அரையிறுதிக்குத் தகுதியில் பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப் பள்ளியின் மாணவி ப. கெத்ரீனா டீபிகா செல்வம் உலுலங்காட் மாவட்டத்தின் 'ஏ' அணிக்கு 3ஆவது இடத்தைப் பெற்று பெருமை சேர்த்துள்ளார் என்று பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி க. சுந்தரி சார்பில் பயிற்சி ஆசிரியர் எஸ். புவனேஸ்வரன் தெரிவித்தார்.

பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சுந்தரி தலைமைத்துவத்தின் கீழ் மாவட்டம், மாநிலம், தேசிய அளவிலான பல்வேறு விதமான போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிக்கொணர்ந்து வருகின்றனர்.

கற்றல், கற்பித்தல், மாணவர்கள் மத்தியில் தனித்துவமான திறமைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

சிலாங்கூர் மாநில அளவிலான ஆங்கில நாடாளுமன்ற விவாதப் போட்டியில் மாணவி ப. கெத்ரீனா டீபிகா செல்வம் 3ஆவது இடம் பெற்றுள்ளதைப் பாராட்டி பள்ளித் தரப்பினர் உட்பட பெற்றோர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

மலேசிய இந்து சங்கம் காஜாங் வட்டாரப் பேரவையின் 48ஆம் ஆண்டு திருமுறை விழா:கிழக்கு வெஸ்ட்கன்ட்ரி தமிழ்ப்பள்ளி வாகை சூடியது ...
23/07/2026

மலேசிய இந்து சங்கம் காஜாங் வட்டாரப் பேரவையின் 48ஆம் ஆண்டு திருமுறை விழா:

கிழக்கு வெஸ்ட்கன்ட்ரி தமிழ்ப்பள்ளி வாகை சூடியது

இன்றைய இளைய தலைமுறையினர் தங்கள் பிள்ளைகளைச் சமய நெறிகளை பின்பற்றி எதிர்காலத்தில் நன்னெறிப் பண்புகளை வலுப்படுத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் திருமுறை ஒதும் விழா நடைபெற்றது.

மாணவ சமுதாயம் மிகச் சிறந்த கட்டொழுங்கு, நன்னெறி பண்புகளை வலியுறுத்தும் நிகழ்ச்சிகளுக்குத் தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்படும்.

இளம் தலைமுறையை நன்னெறி பண்புகள் மிக்க சமுதாயமாக உருவாக்கும் நோக்கத்துடன் மலேசிய இந்து சங்கம் காஜாங் வட்டாரப் பேரவையின் 48 ஆம் ஆண்டு திருமுறை விழா போட்டிகள் கிழக்கு வெஸ்ட் கன்ட்ரி தமிழ்ப்பள்ளியிலும் அதன் பரிசளிப்பு விழா காஜாங், ஜாலான் ரெக்கோ ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி பொன்னம்பலம் மண்டபத்திலும் விமரிசையாக நடைபெற்றது என்று மலேசிய இந்து சங்கத்தின் காஜாங் வட்டாரப் பேரவைத் தலைவர் நடராஜா பொன்னு சேகர் கூறினார்.

காஜாங், பாங்கி, கிழக்கு வெஸ்ட் கன்ட்ரி ஆகிய மூன்று தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 278 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு கேடயம், பதக்கம், நற்சான்றிதழ் வழங்கப்பட்டது

இத்திருமுறை போட்டியை முறையாக நடைபெற பள்ளி மண்டபம், போட்டிகள் நடந்தேறிட வகுப்பறைகள் போன்ற பலவேறுபட்ட உதவிகளை வழங்கிய
கிழக்கு வெஸ்ட் கன்ட்ரி தமிழ்ப்பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி மு. சீதா, பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தினர் உள்ளிட்டோருக்கும் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷா ரெட்ஷான் ஜோஹான், காஜாங் கேகேஐ தலைவர் சரஸ்வதி சின்னையா, மலேசிய இந்து சங்கத்தின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் தொண்டர்மணி அசோகன் மூக்கன், தலைமை பொறுப்பாளர் தினகரன் பெருமாள் ஆகியோருக்கு நடராஜா பொன்னு நன்றி தெரிவித்தார்.

மலேசிய இந்து சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் முனைவர் முரளிதான் பரமசிவம், மலேசிய இந்து சங்கத்தின் தேசியம், மாநிலம், வட்டாரப் பொறுப்பாளர்கள், துணைத் தலைவர்
பெருமாள் சின்னையா, செயலாளர் திருமதி சூரியகலா அண்ணர் மலை, பொருளாளர் பார்த்திபன் மாடசாமி.
ஆலயப் பொறுப்பாளர் இளங்கோவன் ஆர்.எஸ். மணியம், சமயப் பொறுப்பாளர் வித்யா பத்துமலை, மகளிர் பொறுப்பாளர் திருமதி கன்னிகா செல்வராஜு, செயற்குழுவினர் குமணன் எல்லன், திருமதி மயூரி சுந்தரம், சரவணன், சக பொறுப்பாளர்கள், சமூகத் தலைவர்கள், நன்கொடையாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், தொண்டூழியர்கள் உட்பட பள்ளி நிர்வாகத்தினர், திருமுறை ஓதும் போட்டி மிகவும் நேர்த்தியாக நடைபெற உதவிய
அனைத்து நல்லுள்ளங்களுக்கும் கலந்து கொண்ட வட்டார பிரமுகர்கள், பொதுமக்கள் உட்பட 600க்கும் மேற்பட்டோருக்கும் மலேசிய இந்து சங்கம் காஜாங் வட்டாரப் பேரவையின் பொறுப்பாளர்கள் சார்பில் தலைவர் நடராஜா பொன்னு சேகர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

காஜாங் பொது மருத்துவமனை, அருள்மிகு ஸ்ரீ முனிஸ்வரர் அம்மன் கோவிலில்  மண்டல பூஜை நடைபெறுகிறது ஒவ்வொரு மாலையிலும் சிறப்பு அ...
22/07/2026

காஜாங் பொது மருத்துவமனை, அருள்மிகு ஸ்ரீ முனிஸ்வரர் அம்மன் கோவிலில்

மண்டல பூஜை நடைபெறுகிறது

ஒவ்வொரு மாலையிலும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள்
சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று ஆலய நிர்வாகம் தெரிவித்தனர்.

பால், பன்னீர், பூ மாலைகள் போன்றவை
நாள்தோறு பூஜைகளுக்கு பக்தர்கள் வழங்கலாம் என ஆலய நிர்வாகம் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பூஜை நேரம் மாலை மணி 5.30 அளவில் சிறப்பு அபிஷேகத்துடன் இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

மேல் விவரங்களுக்கு 016-60 70554 என்கின்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்..

Address

Bandar Kajang
Kajang

Alerts

Be the first to know and let us send you an email when Makkal Kural Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share