சிறகுகள்

சிறகுகள் This page of Sirakukal, is totally unprofitable and which is specially aimed only in encouraging, promoting and publishing the creative works of Tamil poets.

When you share a common passion friendship comes easy. this is non profit channel.

09/12/2025

"அது என்னுடைய கடமையும் கூட"

இலங்கை பசறை மலைச்சரிவு மூன்று நாட்களிற்கு பின் மண்ணுக்குள் இருந்து உயிரோடு வந்த குடும்பம்05.12.2025 பசறை நகரை பல நாட்களா...
06/12/2025

இலங்கை பசறை மலைச்சரிவு மூன்று நாட்களிற்கு பின் மண்ணுக்குள் இருந்து உயிரோடு வந்த குடும்பம்

05.12.2025 பசறை நகரை பல நாட்களாக மூழ்கடித்த கனமழை மிகப்பெரிய மலைச்சரிவாக மாறி, குணபாலவின் சிறிய வீட்டை முழுவதுமாக புதைத்தது.
அந்த வேளையில் குணபால, அவரது மனைவி சீதா மற்றும் பத்து வயது மகன் சமீரா ஆகியோர் சமையலறையில் இருந்தனர்.

வீடு முழுவதும் இடிந்து மண்ணில் புதைந்த போதிலும், சமையலறை பகுதி மட்டும் அதிசயமாக இடிக்காமல் தப்பியது.

அந்த இருள், ஈரம், குறைந்த காற்றோட்டம், பசி, தாகம் ஆகியவற்றின் நடுவே அவர்கள் மூன்று நாட்கள் உயிர் போராட்டத்தில் இருந்தனர். நம்பிக்கையை மட்டும் பிடித்து அவர்கள் தங்கள் உயிரை தக்க வைத்தனர்.
மூன்றாம் நாளில் கனரக இயந்திரங்களின் அதிர்வுகள் மேலிருந்து கேட்டவுடன் குணபால சிறிய ஓட்டையில் கரண்டியால் தட்டி தன் இருப்பை அறிவித்தார். சில நிமிடங்களில் ராணுவ மீட்புக் குழுக்கள் அவர்களை அடையாளம் கண்டு மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர்.

முதன்முறையாக நுழைந்த ஒளிக்கதிரே அவர்களுக்கு இரண்டாவது பிறவியைப் போன்ற அனுபவமாய் இருந்தது. ராணுவ வீரர்கள் கவனமாக மண் அடுக்குகளை அகற்றி, மூவரையும் பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்து மருத்துவ குழுவிடம் ஒப்படைத்தனர்.
அவர்களின் வீடு மண்ணில் மறைந்திருந்தாலும், உயிர் மட்டும் காப்பாற்றப்பட்டது. இயற்கை பேரிடர்களில் மக்களின் உயிருக்காக போராடும் முப்படை வீரர்களின் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பே இந்த அதிசயத்தை ஏற்படுத்தியது.

பசறையில் நடந்த இந்த மீட்பு செயல், நாட்டின் அனைத்து மீட்பு பணியாளர்களுக்கும் ஒரு உயிர்த்த அஞ்சலியாக திகழ்கிறது.

29/11/2025

கொழும்புக்கு அருகில் உள்ள மல்வானை, களனி ஆறு பெருக்கெடுத்ததால் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. வீடுகள், சாலைகள், தோட்டங்கள் எல்லாம் சேறும் சகதியும் நிறைந்த வெள்ளக்காடாக உள்ளது

29.11.2025

28/11/2025

பெல் 212 ஹெலிக்கொப்டர் மூலம் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் விமானப்படையினர்

27/11/2025

கண்ணீர் சிந்தும் கார்த்திகை..!🥀

காந்தள் மலர்கள் விரிகையிலே
கண்ணீர் பொழிகின்ற கார்த்திகையே…

புது மலர்கள் மலர்ந்திடும் தேசம்
புண்ணியர் ஞாபகம் நெஞ்சைத் துடிக்க,
அமைதியின் நடுவே அலைபாய்கிறது
அவர்களின் நடைகள்…

ஈழத்தின் நாயகர்கள் சொன்ன
கதைகள் இன்னும் உயிர் பெற்று,
ஒரு கார்த்திகை வரும் போது
விழித்தெழுகின்றன மறுபடியும்…

வானம் முழுதும் ஈரமாய் துடிக்கும்;
கல்லறை மேனியில் உறங்கும் கண்கள்
தேன் பொழியும் மழையென
துளிர்க்கின்றன அமைதியில்…

பெற்றவையின் வயிரு கண்ணீரென
பிள்ளையின் முகம் தேடியடிக்க,
காலம் நின்றதா என கேட்கின்றது
இந்த கார்த்திகை இரவு…

கதவுகளற்ற கல்லறைகளில்
கண்மூடி உறங்கும் மாவீரர்களே!
உங்களுக்காய் இந்த ஈழம்
இன்னும் காத்திருக்கிறது…

ஒரு மறுகணம் உயிராய் எழுந்து
நம்மை நோக்கி வருவீர்களா,
ஐயா…?

✍️இளைய கவி லக்சி

27/11/2025

உடைபட்ட கல்லறையின் துகளொவ்வொன்றும்
எம் தாகம் எடுத்துரைக்கும்
எம் தலைமுறையின் கனவைச் சுமந்திருக்கும்

-தீபச்செல்வன்

26/11/2025

செந்தமிழில் உறுதி சொல்வோம்
செங்காந்தள் மலர்தூவி❤️💛

மாவீரர்நாள்2025

என் நேசத்துக்குரிய கரிகாலனே... உன்னிடம் சொல்வதற்கு சில சேதிகள் உண்டு. உன் மீதான எங்களின் ப்ரியம் உனக்கே ஆச்சரியமாய் இருக...
26/11/2025

என் நேசத்துக்குரிய கரிகாலனே...

உன்னிடம் சொல்வதற்கு சில சேதிகள் உண்டு.
உன் மீதான எங்களின் ப்ரியம் உனக்கே ஆச்சரியமாய் இருக்கலாம்.

தேசங்கள் கடந்தும் தமிழால் ஒன்றான உறவுகளின் இதயங்களில் உனக்கிருக்கும் தனித்துவமான இடம் குறித்து நீ புருவங்களை உயர்த்தலாம்.
கேள்...
இங்கே ஒரு இனக்குழுவினர் தமக்கென்று உண்டாக்கிய தலைவர் மூன்று நாட்களில் நான்கு கட்சி மாறுகிறார்...

இன்னொரு இனக்குழுவினரின் தலைவர்கள் தெற்கும் , கிழக்கும் , வடக்கும் என்று அடிபடுகிறார்கள்.

இன்னொரு குழுவின் தலைவர்கள் அவர்கள் மக்களின் ஊதியத்தைப் பெற்றுக்கொடுக்க கூட குரல் கொடுக்க பின்நிற்கிறார்கள்.

பெரும்பான்மை குழுவொன்று தமக்காய் உண்டாக்கிய தலைமைகள், இல்லாத பகடிகளும் சில்லறை வேலைகளையும் செய்கிறார்கள்.

ஆதலால் தான் கரிகாலா, அவர்கள் மட்டில் நீ காழ்ப்புணர்வின் சாரமாய் இருக்கிறாய். அவர்கள் பொதுவில் ஒப்புக்கொள்ள விரும்பாத இயலாமை அது. தலைமைகளுக்கான வெற்றிடத்தின் அசூசை.

அதே காரணத்தினால் தான் கரிகாலா நீ எங்களால் ஆராதிக்கப்படுகிறாய். அளவில்லாமல் அன்பு செய்யப்படுகிறாய்.

நீ எங்களைக் காதலித்தாய். எங்களுக்காகவே வாழ்ந்தாய். தணியாத தாகத்துடன் தீயிடை வெந்த ஆயிரமாயிரம் பிள்ளைகளுடன் உன் மூத்தவனையும் பலிகொடுத்தாய். பேரன்பின் வெளிப்பாடல்லவா அது ? " அவர் அவர்களின் பாலுள்ள அன்பால் தன் மகனையும் அவர்களுக்காய் பலிகொடுத்தார் " எனச்சொல்லி இங்கே தழைத்தோங்கி கோலோச்சும் ஒரு மதத்தின் அடிப்படைக் கொள்கையே அல்லவா அது. அவர்களின் படி நீ அங்கேயே கடவுளாகிறாய் கரிகாலா.

நீ இருக்கும் வரையில் நாம் தலைநிமிர்ந்து நடந்தோம். எங்களுக்கான ஒருமித்த குரலாய் நீ இருந்தாய். சிதறிப்போய்விடாதபடிக்கு பத்திரமாய் பாதுகாக்கும் ஒரு ஆயனின் கண்காணிப்பில் இருந்த மந்தைகள் போல எதிர்காலம் குறித்த நிம்மதியோடு உறங்கப்போனோம். எமக்கு சுவராகவும் , கூரையாகவும் நீ இருந்தாய். உன் பிள்ளைகள் இருந்தார்கள்.

கடவுள் கோட்பாட்டின் தோற்றம் தெரியுமா கரிகாலா?
மனிதன் தான் பார்த்து பிரம்மித்த, தன் ஆளுகைக்கு உட்படுத்த முடியாதவைகள் குறித்து அச்சப்பட்டான். மானசீகமாக நேசித்தான். அவற்றை அல்லது அவர்களை கடவுள்கள் ஆக்கினார்கள். தொல்தமிழர் மரபே முன்னோர் வழிபாடு தான். காலத்தில் நின்று அவர்கள் தேவைகளுக்காகவும் , உரிமைகளுக்காகவும் போராடியவர்களை , வீரம் செறிய வாழ்ந்தவர்களை , மாண்போடு நின்றவர்களை என் முப்பாட்டன்களும் , பாட்டிகளும் நடுகல் இட்டு கடவுளாய் வணங்கினார்கள். பின்னர் பெரும் சமயங்களில் கடவுளானார்கள். என் பிரான் சிவனும் அப்படி ஆன ஒரு கடவுள் தான்.

கரிகாலா... எமக்கு காலத்தால் விதிக்கப்பட்ட தேவையை நீ தான் கையிலெடுத்தாய். கடைசிவரை அதன் ஒழுங்கில் நின்றாய். நாம் சோரம் போகாதபடிக்கு நீ யாரிடமும் சோரம்போகமலிருந்தாய். தழல் வீரம் செறிந்தாய். எப்போதும் எங்களை நசித்தாய்.
ஆதலாலே கரிகாலா நீ இறைவனாகிறாய்.

இறைவனுக்கு பிறப்புண்டு , வாழ்வுண்டு காலம் ஆகும் இயல்புண்டு. இறையாகிய கரிகாலனே , நீ எந்த தூணிலோ துரும்பிலோ இருந்தபடி எம்மை நோக்கி உன் அந்த மந்திரப்புன்னகையை திருப்பு. நீ எங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய் என்ற நினைப்பே பவித்திரமானதும் பாதுகாப்பானதும் ஆகும்.

இங்கே கடவுள் நம்பிக்கை அத்தனையும் அப்படித்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் இறைவனே!

மேதகு தமிழினத்தலைவர்71 ❤️

23/11/2025

" மக்களே மக்களுக்கான அரசை தேர்ந்தெடுப்பார்கள் "

#தமிழகவெற்றிக்கழகம்

ஈழத்தில் இருந்து தனிச்சிங்கள சட்டம் குறித்தொரு குறும்படம் "1956 சிலோன்" "வாழ்த்துவோம் பகிர்வோம்"
23/11/2025

ஈழத்தில் இருந்து தனிச்சிங்கள சட்டம் குறித்தொரு குறும்படம்
"1956 சிலோன்"

"வாழ்த்துவோம் பகிர்வோம்"

Pakidiya Kathaippam Productions presents1956 Ceylon | 1956 சிலோன்Written and Directed by Joy JegarthanA Anton Rawshan MusicalEdit, DOP , Associate Direction ...

கவிஞர் ஈழ ஆதரவாளர்  ஈரோடு தமிழன்பன் அவர்கள் காலமானார் (வயது 92)
22/11/2025

கவிஞர் ஈழ ஆதரவாளர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் காலமானார்
(வயது 92)

Address

Jalan Tengku Kelana
Klang
41000

Alerts

Be the first to know and let us send you an email when சிறகுகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to சிறகுகள்:

Share

சிறகுகள்

FRIENDSHIP