Arasan

ரஜினி, விஜய்யை தொடர்ந்து லோகேஷ் இயக்கப்போகும் டாப் ஹீரோ - மாஸ் கூட்டணி லோடிங்..!!விஜய்யுடன் லியோ படத்தை முடித்த கையோடு ர...
28/07/2025

ரஜினி, விஜய்யை தொடர்ந்து லோகேஷ் இயக்கப்போகும் டாப் ஹீரோ - மாஸ் கூட்டணி லோடிங்..!!

விஜய்யுடன் லியோ படத்தை முடித்த கையோடு ரஜினியுடன் இணைந்து கூலி படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஷ்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க ரஜினியுடன், சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர், பூஜா ஹெக்டே என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.

அனிருத் இசையில் தயாராகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் லோகேஷ் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், " அஜித் சார் நடிப்பில் கண்டிப்பாக திரைப்படம் இயக்குவேன், அது 100 சதவீதம் உறுதி. அவரது ஆக்சன் முகத்தை என்னுடைய படத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை உள்ளது. திரைப்பட டிக்கெட்

தற்போது அஜித் குமார் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். நானும் என் அடுத்தடுத்த படங்களிலும் பிசியாக இருப்பதால் கொஞ்சம் தள்ளிப்போகிறது.

ஆனால், எனக்கும் அவருக்கும் ஒரு டைம்லைன் அமையும் போது கண்டிப்பாக நான் அவர் படத்தை இயக்குவேன்" என்று தெரிவித்துள்ளார்.

உணவுக்காக கேமராவை விற்கும் பத்திரிகையாளர் - காஸாவை வாட்டும் கடும் பஞ்சம்..!!காஸாவில் உணவு மற்றும் சுகாதாரமான குடிநீருக்க...
28/07/2025

உணவுக்காக கேமராவை விற்கும் பத்திரிகையாளர் - காஸாவை வாட்டும் கடும் பஞ்சம்..!!

காஸாவில் உணவு மற்றும் சுகாதாரமான குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனிடையே சர்வதேச நிறுவனங்களுக்காக பணிபுரிந்த பத்திரிகையாளர் ஒருவர், உணவுக்காக தனது கேமராவையும், பாதுகாப்பு உபகரணங்களையும் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. காஸாவுக்கு நட்பு நாடுகள் கொடுக்கும் மனிதாபிமான உதவிகளை எல்லைப் பகுதிகளிலேயே இஸ்ரேல் ராணுவம் தடுத்து வருகிறது.

இதனால், காஸாவிலுள்ள மக்களுக்கு போதிய உணவு, குடிநீர், மருந்துகள் போன்ற அடிப்படை பொருள்கள் சென்று சேர்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனிடையே, காஸாவில் ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாடால் குடிமக்கள் மட்டுமின்றி அங்கு பணிபுரியும் பத்திரிகையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காஸாவில் பணிபுரிந்துவரும் புகைப்பட பத்திரிகையாளர் முகம்மது அபு வோன் லிங்க்டுஇன் சமூக வலைதளப் பக்கத்தில் உணவுக்காக தனது புகைப்படக் கருவியையும், பாதுகாப்பு உபகரணத்தையும் விற்பனைக்கு அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் காஸாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர். நான் எனது உபகரணங்களையும் பாதுகாப்பு கவசத்தையும் வழங்க விரும்புகிறேன். அதன்மூலம் எனக்கும் எனது குடும்பத்துக்குமான உணவை என்னால் வாங்க முடியும் எனப் பதிவிட்டுள்ளார்.

நாசாவிலிருந்து வெளியேற்றப்படும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள்..!!அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுமார் 14 ...
28/07/2025

நாசாவிலிருந்து வெளியேற்றப்படும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள்..!!

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுமார் 14 ஆயிரம் ஊழியர்கள் பணி செய்து வருகின்ற நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையால் நாசாவில் மேலும் ஆட்குறைப்பு செய்யப்படவுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தற்போது 2ஆவது முறையாக பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் 20 சதவீத ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.

அதாவது சுமார் 3 ஆயிரத்து 870 பேர் வெளியேற்றப்படுகிறார்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ட்ரம்ப் நிர்வாகம் குறைந்தது 2 ஆயிரத்து 145 நாசாவின் மூத்த ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கடிதம் அனுப்பியது.

இந்நிலையில், மீண்டும் இரண்டாம் கட்ட ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல்கள் வெளியானதால் நாசா ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதற்கிடையே கடந்த 20ஆம் திகதி நூற்றுக்கணக்கான நாசா ஊழியர்கள், விண்வெளி அருங்காட்சியகம் அருகே போராட்டம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

ஒபாமாவை விடாமல் துரத்தும் டிரம்ப் - AI சித்திரிப்பால் மீண்டுமொரு சர்ச்சை..!!அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவை துரத்...
28/07/2025

ஒபாமாவை விடாமல் துரத்தும் டிரம்ப் - AI சித்திரிப்பால் மீண்டுமொரு சர்ச்சை..!!

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவை துரத்துவதுபோன்ற சித்திரிப்பு படத்தை டொனால்ட் டிரம்ப் வெளியிட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவை கைது செய்வது போன்ற ஏஐ விடியோவை கடந்த தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டு, சர்ச்சையை ஏற்படுத்தினார்.

சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் கிடையாது என்றுகூறி, பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், காரில் செல்லும் ஒபாமாவை டிரம்ப்பும் காவல்துறையும் பின்தொடர்ந்து துரத்துவதுபோன்ற சித்திரிக்கப்பட்ட புகைப்படத்தை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

டிரம்ப்பின் முந்தைய பதவியேற்பின்போது, அதனைத் தடுக்க ஒபாமா முயன்றதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அமெரிக்க தேசிய புலனாய்வும் தெரிவித்தது.

இந்த விவகாரம் குறித்து ஒபாமா கூறுகையில், அதிபர் பதவி மற்றும் வெள்ளை மாளிகையின் மீதான மரியாதை காரணமாகவே, வெள்ளை மாளிகையிலிருந்து வரும் முட்டாள்தனமான மற்றும் தவறான தகவல்களை கண்டுகொள்வதில்லை.

ஆனால், தற்போதைய குற்றச்சாட்டுகள் அபத்தமானவை; இவற்றை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. அவர் மீதான பாலியல் வழக்கை திசைதிருப்பும் முயற்சிதான் இது என்று தெரிவித்தார்.

தாய்லாந்து-கம்போடியா இடையிலான முரண்பாடு - மலேசியாவின் மத்தியஸ்தத்தில் நம்பிக்கை..!!தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாட...
28/07/2025

தாய்லாந்து-கம்போடியா இடையிலான முரண்பாடு - மலேசியாவின் மத்தியஸ்தத்தில் நம்பிக்கை..!!

தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் தங்களது எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க மலேசியாவை மத்தியஸ்தராக ஏற்றுக்கொண்டதாக மலேசிய வெளிவிவகார அமைச்சர் மொஹமத் ஹசன் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட பின்னரும், இரு நாடுகளும் பிரச்சனைக்குரிய எல்லைப் பகுதிகளில் தாக்குதல்களை முன்னெடுப்பதாக ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் மற்றும் தாய்லாந்து பிரதமர் பும்தம் வெச்சாயாச்சாய் ஆகியோர் இன்று (28) மாலை மலேசியாவில் பேச்சுவார்த்தைக்காக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் வேறு எந்த நாடும் தலையிடக் கூடாது என இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக மலேசிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தாய்லாந்து மற்றும் கம்போடிய பிரதமர்கள் தமது கோரிக்கையை ஏற்று போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.

இரு நாடுகளும் மலேசியாவின் மத்தியஸ்தத்தை ஏற்றாலும், தற்போது வரை எல்லையில் மோதல்கள் தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Gisborne பகுதியில் பாரிய நிலநடுக்கம்..!!Gisborne இல் உள்ள Ruatoria அருகே 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.R...
28/07/2025

Gisborne பகுதியில் பாரிய நிலநடுக்கம்..!!

Gisborne இல் உள்ள Ruatoria அருகே 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Ruatoria வில் இருந்து 5 கி.மீ. தொலைவில் பிற்பகல் 1.10 மணிக்கு சற்று முன்பு நிலநடுக்கம் ஏற்பட்டது.

குறித்த நிலநடுக்கம் சுமார் 8 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜியோனெட் தெரிவித்துள்ளது.

சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்பதை தேசிய அவசர மேலாண்மை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

100க்கும் மேற்பட்டோர் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக ஜியோனெட் பக்கத்தில் தெரிவித்தனர்.

சமீபத்திய நாட்களில் இப்பகுதியில் மூன்று முறை சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக ஜியோநெட் தகவல்கள் காட்டுகின்றன.

செய்தி நிருபர் - புகழ்

தமிழ்நாடுநூலகத் திறப்புவிழா- கோலாகலக் கொண்டாட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில்!ஜூலை 21 ஆம் நாள் தமிழக பள்ளிக்கல...
27/07/2025

தமிழ்நாடு

நூலகத் திறப்புவிழா- கோலாகலக் கொண்டாட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில்!

ஜூலை 21 ஆம் நாள் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் அறிவுக்குச் சீதனமாக– நூலகத் திறப்புவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அருமையாக உரையாற்றி வாழ்த்துகள் வழங்கினார். மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பள்ளியின் தலைமை ஆசிரியர், மற்றும் சீதனம் அறக்கட்டளை சார்பிலும், மேலும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

இந்த நூலகம் அமைக்கப்பட்ட இடம் இலுப்பை தோப்பு, மேல்நிலை பள்ளி, ஆம்பலாப்பட்டு.

ஆம்பலாப்பட்டு, தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 3000 குடும்பங்கள் வாழ்கின்றனர். ஏறத்தாழ 10 ஆயிரம் மக்கள் இங்கு காணப்படுகின்றனர்.

இந்த மேல்நிலை பள்ளிக்கூடம் இலுப்பை தோப்பு ( இலுப்பை மரங்கள் அதிகமாக காணப்படும் இடம்) என்ற இடத்தில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இந்த பள்ளியில் 1500 க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்றுள்ளனர். கஜா புயல் ஏற்பட்ட பிறகு எங்களில் சிலர் இந்த கிராமத்தின் தேவையை உணர்ந்து முதலில் அந்த பேரிடரில் இருந்து மீள ஒரு சில வேலை திட்டங்களை செய்தோம். அதனை தாண்டி எங்களுக்கு முக்கியமாக தோன்றியது இந்த மேல்நிலைப்பள்ளி. ஏனென்றால் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றுக்கொண்டிருந்த அந்த பள்ளியில் மாணவர் எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்து 230 க்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் பள்ளிக்கூடமாக மாறிவிட்டது.

இந்த நிலை தொடர்ந்தால், ஒரு காலத்தில் இந்த பள்ளி இல்லாமலேயே போய்விடும் என்றும், அதன் பின்னர் இங்கு உள்ள மாணவர்கள் உயர்கல்விக்காக வெகு தூரம் செல்ல வேண்டி இருக்கும் எனவும், இந்த நிலையை மாற்ற நாங்கள் முயற்சிகளை எடுத்தோம். இதற்காக கிராம மக்களும் கூட முன்வந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தவிர இந்த உயர்நிலை பள்ளியின் முன்னாள் மாணவர் குழு மற்றும் சேவைக்குழுக்களும் பல்வேறு வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த சேவைக்குழுக்களில் "சீதனம்" அறக்கட்டளையும் ஒன்று. இந்த சீதனம் அறக்கட்டளை கிட்டத்தட்ட 6 வருடங்களாக, நீர்நிலைகளை புனரமைத்தல், நீர்வழி பாதைகளை சரி செய்தல், பள்ளிக்கூடங்களில் உட்கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தல் போன்ற பல்வேறு சேவைகளை ஆற்றியுள்ளது.

இதனிடையே இந்த மேல்நிலைப்பள்ளியில் நாங்கள் ஒரு நூலகத்தை நிறுவுவதற்கு திட்டமிட்ட நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள திருமதி வள்ளி விஜய், மேலும் திருமதி வள்ளி விஜய் அவர்களில் தந்தை திரு ராஜு கருப்பையா, மற்றும் திருமதி பெனிடா விக்னேஷ் ஆகியோர் இணைந்து நூலகத்திற்கான உட்கட்டமைப்பு செலவிற்கான 7 இலட்சம் ரூபாய் பணத்தை அவர்கள் எமக்கு வழங்கி இருந்தனர்.

திருமதி வள்ளி விஜய் அவர்கள் மதுரையை சேர்ந்தவர். இருப்பினும் கூட தஞ்சாவூர் பகுதியில் அமைந்துள்ள இந்த மேல்நிலைப்பள்ளிக்கு அவர்கள் செய்திருக்கும் இந்த உதவி அளப்பரியது.

இந்த நூலகத்தில் "சீதனம்" அறக்கட்டளை வழங்கிய இரண்டு ஏசிக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பல புத்தகங்களையும் வழங்கி இருந்தனர்.

நூலகம் உட்புறம் மற்றும் வெளிப்புறமாக அமர்வுகளுடன் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், உட்புறம் குளிரூட்டும் வசதியுடன் (ஏர் கண்டிஷன்) அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குழந்தைகள் நூலகத்திற்கு தொடர்ந்து செல்லும் ஆர்வம் அதிகரிக்கப்படும் என நம்புகின்றோம்.

மாணவர்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடிய ஒரு கட்டிடமாக அமைய வேண்டும் என்ற எமது வேண்டுகோளுக்கு அமைய அதனை மிகவும் சிறப்பாக வடிவமைத்து கொடுத்தது கே.எஸ்.எம் ஆர்கிடெக்ச்சர் குழுமம். அவர்களும் எமது நூலகத்திற்கு 500 புத்தகங்களை வழங்கி இருந்தனர்.

இதனை தவிர கிராம மக்களும், புதிய புத்தகங்கள் மற்றும் வாசித்து முடித்த நல்ல நிலையில் உள்ள புத்தங்களை வழங்கி உள்ளனர். இவை எல்லாம் ஒருங்கிணைத்து சுமார் 3000 புத்தகங்கள் தற்போது நூலகத்தில் காணப்படுகின்றன. இதனிடையே அமெரிக்கா டெக்சாக்ஸில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் இதுவரை சுமார் 1500 புத்தகங்களை சேகரித்துள்ளார்கள். அதுவும் வெகு விரைவில் எமக்கு கிடைக்கும் என எதிர்பார்கிறோம்.

ஆகவே இந்த நூலகத்திற்காக பள்ளி மேலாண்மை குழு, கிராம மக்கள், மற்றும் பலர் இணைந்து இந்த நட்காரியத்தை முன்னெடுத்துள்ளார்கள் என்றால் அது மிகையாகாது.

நன்றியுடன்
சீதனம் அறக்கட்டளை சார்பாக வெங்கடேஷ் கண்டியர்

தகவல் - நிருபர் ஷீலா ரமணன்

சாய் நாட்யாலயா பெருமையுடன் வழங்கும் "The Dancer" பரதநாட்டிய நிகழ்வு ஆக்லாந்து நகரில். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13 ஆம...
26/07/2025

சாய் நாட்யாலயா பெருமையுடன் வழங்கும் "The Dancer" பரதநாட்டிய நிகழ்வு ஆக்லாந்து நகரில். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி நடைபெற உள்ளது.

பரதநாட்டிய குரு ரேனுகா கேதீசன் அவர்கள் அரங்கேற்றும் இந்த இனிய நிகழ்வில் கலந்து கொள்ள வாருங்கள், பரதநாட்டியத்தின் அழகை கண்டு ரசியுங்கள்.

இடம்: Michael Park Auditorium,
55 Amy Street, Ellerslie.

டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள அழையுங்கள்:
ரேனுகா கேதீசன் - +64211374929

இளையராஜாவுக்கு வேற வேலை இல்லையா, நான் காசு கொடுத்திருக்கேன் - கொந்தளித்த வனிதாநடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் சமீபத்தில...
25/07/2025

இளையராஜாவுக்கு வேற வேலை இல்லையா, நான் காசு கொடுத்திருக்கேன் - கொந்தளித்த வனிதா

நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் சமீபத்தில் மிஸஸ் & மிஸ்டர் என்ற படம் ரிலீஸ் ஆகி இருந்தது. அந்த படத்தில் இளையரராஜாவின் பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நான் இளையராஜா வீட்டுக்கு சென்று பேசிவிட்டு, அனுமதி வாங்கி படத்தில் பாடலை பயன்படுத்தினேன். அப்போதே சொல்லி இருக்கலாமே. நான் இளையராஜா வீட்டுக்கு மருமகளாக சென்றிருக்க வேண்டியவள் என வனிதா முன்பு கூறி இருந்தார்.
இந்நிலையில் நீதிமன்றத்திற்கு வந்த வனிதா செய்தியாளர்களிடம் ஆவேசமாக பேசி இருக்கிறார்.

"நான் வரும்போது கேப்-ல தான் வந்தேன், அதன் டிரைவர் என்னை பார்த்ததும் 'இளையராஜாவுக்கு வேற வேலை இல்லையா' என கேட்டார். இவர் செய்வது இப்படி தான் வெளியில் பேசப்படுகிறது."

நான் கோடிக்கணக்கில் பணம் போட்டு படம் எடுத்து இருக்கிறேன். பணம் கொடுத்து ரைட்ஸ் வாங்கி தான் நான் பாடலை பயன்படுத்தி இருக்கிறேன். நான் ஏன் நீக்க வேண்டும். எனக்கு உரிமை இருக்கு.

இளையராஜா போட்டோவை போட்டு நன்றி என டைட்டில் கார்டில் போட்டதற்காக என்னிடம் பணம் கேட்கிறார்கள் என வனிதா ஆவேசமாக பேசி இருக்கிறார்.

தமிழ்நாடுமுதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை; தற்போதைய நிலை என்ன? அமைச்சர் துரைமுருகன் விளக்கம்..!தமிழக முதல்வர்...
25/07/2025

தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை; தற்போதைய நிலை என்ன? அமைச்சர் துரைமுருகன் விளக்கம்..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதல்வர் வழக்கமான நடைப்பயிற்சியின் போது லேசான தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்டதாகவும், தேவையான மருத்துவப் பரிசோதனை நடந்து வருவதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து, முதல்வர் சில நாட்கள் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனையடுத்து, முதல்வரின் சுற்றுப்பயணங்கள் ரத்து செய்யப்பட்டது. இருந்தாலும், மருத்துவமனையில் இருந்தே பணிகளை தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாகவும், எப்போது டிஸ்சார்ஜ் ஆவார் என்று மருத்துவர்களே முடிவு செய்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Gisborne இல் நிலநடுக்கம்..!!Gisborne பகுதியில் இன்று பிற்பகல் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று மாலை 4...
25/07/2025

Gisborne இல் நிலநடுக்கம்..!!

Gisborne பகுதியில் இன்று பிற்பகல் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று மாலை 4.17 மணிக்கு Tokomaru Bay இல் இருந்து 10 கிமீ தெற்கே 12 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜியோனெட் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அரை மணி நேரத்திற்குள், அப்பகுதியில் 150 குடியிருப்பாளர்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக Geonet பக்கத்தில் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்

11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சினிமாவில் களமிறங்கும் அப்பாஸ்..!!தமிழ் சினிமாவில் 90களில் சாக்லெட் பாயாக, இளம் பெண்களின் ...
25/07/2025

11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சினிமாவில் களமிறங்கும் அப்பாஸ்..!!

தமிழ் சினிமாவில் 90களில் சாக்லெட் பாயாக, இளம் பெண்களின் கனவு கண்ணனாக திகழ்ந்தவர் நடிகர் அப்பாஸ். ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழை தாண்டி மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். கிட்டதட்ட 11ஆண்டுகளாக சினிமாவிலிருந்து விலகி இருக்கும் நடிகர் அப்பாஸ் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ஜி.வி.பிரகாஷ் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அப்பாஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இந்த படத்தில் லவ்வர் படத்தில் நடித்து புகழ் பெற்ற நாயகி கௌரி பிரியா நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Arasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arasan:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share