Arasan

தமிழ்நாடுமாடு மேய்க்கும் போராட்டம் நடத்திய சீமான் - வனத்துறையினருக்கு விடுத்த எச்சரிக்கை..!!கால்நடைகளுக்கான மேய்ச்சல் நி...
04/08/2025

தமிழ்நாடு

மாடு மேய்க்கும் போராட்டம் நடத்திய சீமான் - வனத்துறையினருக்கு விடுத்த எச்சரிக்கை..!!

கால்நடைகளுக்கான மேய்ச்சல் நில உரிமை கோரி தேனி மாவட்டம் போடி அருகே மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

இதன்படி, தேனி மாவட்டம் போடி, முந்தல் அருகே அடப்பாறையில் நேற்று கட்சியினர் மற்றும் 500க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுடன் அடப்பாறை மலை பகுதியில் நுழைந்தார்.

இந்த போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி அளிக்காத நிலையில், பேரிகார்டுகளை வைத்து வழியை மறைத்தனர் காவல்துறையினர்.

ஆனாலும் தடையை மீறி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து பேசிய சீமான், "கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும் விவசாயிகளுக்கு வனத்துறையினர் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். கூரிய கொம்புகள் இருந்தும் மாடுகளுக்கு போராட தெரியவில்லை.

மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சென்றால் மட்டுமே மலைப் பகுதி, வனப் பகுதியில் காட்டுத் தீ பரவுவது தடுக்கப்படும். மலைகளை பாதுகாக்க வேண்டுமெனில் அங்கு ஆடு, மாடுகள் மேய வேண்டும். நீரின்றி அமையாது உலகு எனில் ஆடு, மாடு இன்றி அமையாது காடு.

மலைகளில் கிரானைட் குவாரிகள் அமைப்பதற்கு அனுமதி கொடுக்கிறார்கள் மாடு மேய்ப்பதற்கு அனுமதி கொடுப்பதில்லை. இந்த காடு சிங்கம் புலிகளுக்கு மட்டும் தானா ஆடு மாடுகளை எங்கு கொண்டு போய் மேய்ப்பது?

தேனியில் உள்ள மாடுகளுக்கு பெயரே மலை மாடுகள் தான். இதே மலைகளில் தான் ஆடு மாடுகளை மேய்த்து வந்தார்கள் வனத்துறை இதற்கு தடை விதித்தால் ஒரு லட்சமாக இருந்த மலை மாடுகள் தற்போது ஐந்தாயிரமாக சுருங்கி விட்டன.

வனப்பகுதிகளில் மாடுகள் மேய்க்க கூடாது எனில் மேய்ப்பதற்கு மாற்று இடம் வழங்கியிருக்க வேண்டும். அதைச் செய்யமால் மாடு மேய்ப்பதை தடை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வெடிகளை வைத்து மலைகளை தகர்க்கும் போது பாதுகாப்பாக இருக்கும் வனவிலங்குகள், எங்கள் மாடுகள் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றால் பாதுகாப்பு இல்லையா? எங்கள் கோரிக்கைகளை ஏற்காமல் மலைமேல் மேய்ச்சலுக்கு கால் நடைகளை தடை செய்தால் மீண்டும் மாடுகளை மலை மேல் ஏற்றி போராட்டம் நடத்துவோம்" என பேசினார்.

எனக்கும் சத்யராஜுக்கும் கருத்து வேறுபாடு உண்டு ஆனால் - ஓப்பனாக சொன்ன ரஜினிகாந்த்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார்...
04/08/2025

எனக்கும் சத்யராஜுக்கும் கருத்து வேறுபாடு உண்டு ஆனால் - ஓப்பனாக சொன்ன ரஜினிகாந்த்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அவரது வெற்றி குறித்து பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், " உழைப்புக்கு மேல் என் வெற்றிக்கு ஒரு ரகசியம் உண்டு. அதுதான் இறைவனின் குரல். இறைவனின் குரலையும் உங்கள் குரலையும் பிரித்துப்பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும்.

எவ்வளவு பணம், புகழ் இருந்தாலும் வீட்டில் நிம்மதி, வெளியில் கவுரவம் இல்லையெனில் எதுவுமே இல்லை. எனக்கும் சத்யராஜுக்கும் கருத்து ரீதியாக முரண்பாடு இருக்கலாம். ஆனால் அவர் மனசில் பட்டதை சொல்லிட்டு சென்றுவிடுவார்.

மனதில் பட்டதை சொல்றவங்களை நம்பிடலாம், ஆனால், உள்ளே ஒன்று வைத்து கொண்டு வெளியில் ஒன்று பேசுபவர்களை நம்ப முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

AI-ஆல் கடும் அப்செட்டில் நடிகர் தனுஷ் - கடும் கோபத்துடன் வெளியிட்ட அறிக்கை..!நடிகர் தனுஷ் மற்றும் சோனம் கபூர் நடித்த ஹிந...
04/08/2025

AI-ஆல் கடும் அப்செட்டில் நடிகர் தனுஷ் - கடும் கோபத்துடன் வெளியிட்ட அறிக்கை..!

நடிகர் தனுஷ் மற்றும் சோனம் கபூர் நடித்த ஹிந்தி படம் ராஞ்சனா 2013ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ஆகும்.

இந்த படம் தனுஷ் கெரியரில் முக்கிய படமாக இருந்து வருகிறது. தற்போது ராஞ்சனா படத்தின் கிளைமாக்ஸை ஏஐ மூலமாக மாற்றம் செய்து ரீரிலீஸ் செய்து இருக்கின்றனர்.

AI மூலமாக இப்படி கதையை மாற்றியது பற்றி தனுஷ் கோபமாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். திரைப்பட டிக்கெட்

"இது என்னை முற்றிலும் பாதித்து இருக்கிறது. நான் எதிர்ப்பு தெரிவித்த பிறகும் அவர்கள் இப்படி செய்து இருக்கிறார்கள். 12 வருடங்களுக்கு முன்பு நான் ஒப்புக்கொண்ட படம் இது இல்லை."

"வருங்காலத்தில் இதை தடுக்க சட்டங்கள் வர வேண்டும்" என தனுஷ் கூறி இருக்கிறார்.

எலான் மஸ்க்கின் தலையில் விழுந்த இடி - பலநூறு கோடி அபாராதம்..!!எலான் மஸ்க்கின் மின்சார வாகன நிறுவனமான டெஸ்லாவுக்கு அமெரிக...
04/08/2025

எலான் மஸ்க்கின் தலையில் விழுந்த இடி - பலநூறு கோடி அபாராதம்..!!

எலான் மஸ்க்கின் மின்சார வாகன நிறுவனமான டெஸ்லாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் பெரும் தொகையை அபராதமாக விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு புளோரிடாவின் கீ லார்கோவில் ஜார்ஜ் மெக்கீ என்ற நபர் தனது டெஸ்லா காரை ஓட்டிச் சென்று அதிநவீன ஆட்டோபைலட் அம்சத்தைப் பயன்படுத்தினார்.

இது டெஸ்லா வழங்கிய தானியங்கி ஓட்டுநர் அமைப்பு. வழியில், ஜார்ஜின் மொபைல் போன் காரில் கீழே விழுந்தது. கார் ஆட்டோபைலட்டில் இருப்பதாக நினைத்து, ஜார்ஜ் குனிந்து தொலைபேசியை எடுக்க முயன்றார்.

இருப்பினும், அந்த நேரத்தில், கார் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரில் மோதி, இரண்டு பேர் மீது மோதியது. இந்த சம்பவத்தில், 22 வயது பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார், அவரது நண்பர் படுகாயமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகினர். நீண்ட விசாரணைக்குப் பிறகு, சமீபத்தில் புளோரிடா நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்தது. இந்த விபத்துக்கான இழப்பீடாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மொத்தம் 329 மில்லியன் டாலர்களை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், விபத்துக்கு ஆட்டோபைலட் அமைப்பும் ஒரு காரணியாக இருப்பதைக் கண்டறிந்த நீதிமன்றம், டெஸ்லா நிறுவனம் தன் பங்குக்கு 242 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1,996 கோடி) வழங்க உத்தரவிட்டது.

மீதமுள்ள தொகையை வாகனத்தின் ஓட்டுநர் செலுத்த வேண்டும். இருப்பினும், புளோரிடா நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டெஸ்லா மேல்முறையீடு செய்வதாக அறிவித்துள்ளது.

இடிந்து வீழ்ந்த உலகின் மிகப்பெரிய செப்புச் சுரங்கம்..!!சிலியில் உள்ள உலகின் மிகப்பெரிய செப்புச் சுரங்கம் இடிந்து வீழ்ந்த...
04/08/2025

இடிந்து வீழ்ந்த உலகின் மிகப்பெரிய செப்புச் சுரங்கம்..!!

சிலியில் உள்ள உலகின் மிகப்பெரிய செப்புச் சுரங்கம் இடிந்து வீழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன், 5 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்ட சில அதிர்வு காரணமாக இந்த சுரங்கம் இடிந்து வீழ்ந்துள்ளது.

குறித்த சம்பவத்தின் போது 900 மீற்றருக்கும் அதிகமான ஆழத்தில் தொழிலாளர்கள் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.

மேலும், 100க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டொனால்ட் ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கும் மற்றொரு நாடு..!!அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அமைதிக்கான நோபல் பரி...
04/08/2025

டொனால்ட் ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கும் மற்றொரு நாடு..!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு கம்போடியா பரிந்துரைக்கும் என அந்த நாட்டின் துணைப் பிரதமர் சன் சாந்தோல் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒரு தசாப்தத்திற்கும் மேலான இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை பிரச்சினை தொடர்பில் அண்மையில் ஐந்து நாட்கள் நடந்த கடுமையான போரை நிறுத்துவதற்கான டொனால்ட் ட்ரம்பின் நேரடித் தலையீட்டுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த மோதலில் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்துடன், 300,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர்.

இராஜதந்திர முட்டுக்கட்டையை உடைத்த டொனால்ட் ட்ரம்பின் தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து இந்த போர் நிறுத்தம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக, கடந்த வாரம் திங்கட்கிழமை மலேசியாவில் போர் நிறுத்தம் கையெழுத்தானது.

600 ஆண்டுகளுக்குப் பின் வெடித்த ரஷ்ய எரிமலை..!!ரஷ்ய கம்சற்கா (Kamchatka) எரிமலையில் 600 ஆண்டுகளுக்குப் பின்னர் வெடிப்பு ...
04/08/2025

600 ஆண்டுகளுக்குப் பின் வெடித்த ரஷ்ய எரிமலை..!!

ரஷ்ய கம்சற்கா (Kamchatka) எரிமலையில் 600 ஆண்டுகளுக்குப் பின்னர் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்தெரிவித்துள்ளன.

கம்சற்காவில் கிராஷெனின்னிகோவ் என்ற எரிமலையானது 600 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் வெடித்துச் சிதற ஆரம்பித்துள்ளதாகவும் ஒரே இரவில், கிட்டத்தட்ட 6 கிலோ மீற்றர் உயரத்துக்கு சாம்பல் புகை சூழ்ந்தது.

எரிமலை வெடித்துச் சிதறியதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கடந்த சில நாட்களுக்கு இதே கம்சற்காவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களின் நீட்சியே இது, மேலும் பல எரிமலைகள் வெடித்துச் சிதற வாய்ப்பு உள்ளது என்று காலநிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பச்சிளம் குழந்தையை பேருந்தில் கைவிட்டுச்சென்ற பெண் - North Shore நீதிமன்றில் ஆஜர்..!!இரண்டு வயது குழந்தையை சூட்கேஸில் போ...
04/08/2025

பச்சிளம் குழந்தையை பேருந்தில் கைவிட்டுச்சென்ற பெண் - North Shore நீதிமன்றில் ஆஜர்..!!

இரண்டு வயது குழந்தையை சூட்கேஸில் போட்டு பேருந்தில் விட்டுச்சென்ற 27 பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு North Shore மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

Whangārei இல் இருந்து ஆக்லாந்து செல்லும் இன்டர்சிட்டி பேருந்தின் ஓட்டுநர் நேற்று பிற்பகல் பேருந்தில் இருந்து ஒரு குழந்தையைக் கண்டுபிடித்தார்.

பின்னர் அவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் வழங்கியதாக கூறப்படுகிறது.

மருத்துவ மதிப்பீட்டிற்காக குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

குழந்தை நலமாக இருப்பதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர், மேலும் அந்த குழந்தை பராமரிக்கப்படுவதை உறுதிசெய்ய அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் குழந்தையை கைவிட்டு சென்ற பெண் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

அவர் தனது வழக்கறிஞர் மூலம் எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை.

இந்த வார இறுதியில் மீண்டும் அவர் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது.

Waitematā காவல்துறையின் செயல் துப்பறியும் ஆய்வாளர் சைமன் ஹாரிசன் காவல்துறை, குழந்தையின் குடும்பத்தினருடனும், Oranga Tamariki உள்ளிட்ட நிறுவனங்களுடனும் அதிகாரிகள் பணியாற்றி வருவதாகக் கூறினார்.

குழந்தைக்கு நல்ல ஆதரவு கிடைப்பதை உறுதி செய்வதில் அவர்கள் கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.

செய்தி நிருபர் - புகழ்

கஷ்டத்தில் தனுஷ் பட நடிகர்; ஓடி சென்று உதவிய KPY பாலா - என்ன ஆனது?தனுஷின் 'துள்ளுவதோ இளமை' என்ற படத்தின் மூலம் அறிமுகமான...
02/08/2025

கஷ்டத்தில் தனுஷ் பட நடிகர்; ஓடி சென்று உதவிய KPY பாலா - என்ன ஆனது?

தனுஷின் 'துள்ளுவதோ இளமை' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அபிநய். இந்த படத்தில் தனுஷின் நண்பராக அபிநய் நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழில் சில படங்கள் நடித்த இவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. தற்போது, இவர் 'லிவர் சிரோசிஸ்' என்ற கல்லீரல் தொடர்பான கடுமையான நோய் ஒன்றில் அவதி பட்டு வருகிறார்.

இந்த நோயில் இருந்து மீள அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக அபிநய்க்கு ரூ. 28 லட்சம் தேவைப்படுகிறது. இதற்காக, சினிமா நண்பர்களிடம் உதவிக் கோரி இருந்தார் அபிநய்.

இந்நிலையில், கலக்கப்போவது யாரு பாலா நேராக அபிநய்யின் வீட்டுக்கு சென்று, அவரிடம் நலம் விசாரித்து ரூ. 1 லட்சம் நிதியுதவி கொடுத்திருக்கிறார்.

நடிகர் ஷாருக்கானுக்கு தேசிய விருது - அட்லீக்கு உருக்கமாக நன்றி சொன்ன ஷாருக்கான்..!!சினிமாவில் அடியெடுத்து வைத்து 36 ஆண்ட...
02/08/2025

நடிகர் ஷாருக்கானுக்கு தேசிய விருது - அட்லீக்கு உருக்கமாக நன்றி சொன்ன ஷாருக்கான்..!!

சினிமாவில் அடியெடுத்து வைத்து 36 ஆண்டுகளுக்குப் பின் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு முதல் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜவான் படத்தில் நடித்ததற்காக நடிகர் ஷாருக் கானுக்கு தற்போது இந்த தேசிய விருது வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் ஜவான் படத்தில் தனக்கு வாய்ப்பு கொடுத்த அட்லீக்கு நன்றி என கூறி ஷாருக் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்த அட்லீ மற்றும் அவர் டீமுக்கு நன்றி என அவர் அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.

யார் கண்ணுக்கும் தெரியாமல் - அனிருத்திற்கு இருக்கும் வித்தியாசமான ஆசை..!!தமிழ் சினிமா கொண்டாடும் டாப் இசையமைப்பாளர்களில்...
02/08/2025

யார் கண்ணுக்கும் தெரியாமல் - அனிருத்திற்கு இருக்கும் வித்தியாசமான ஆசை..!!

தமிழ் சினிமா கொண்டாடும் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் அனிருத். ஏ.ஆர்.ரகுமான் பள்ளியில் பயின்று இன்று இந்தியாவை தாண்டி கொண்டாடப்படும் இசையமைப்பாளராக உள்ளார்.

அனிருத் இசையில் வெளியாகும் பாடல்கள் யூடியூப் தளத்தில் வெளியான விரைவிலேயே மில்லியன் பார்வையாளர்களை பெற்று விடுகிறது.

தமிழில் கூலி, ஜனநாயகன், மதராஸி, லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி, ஜெயிலர் 2 போன்ற படங்களும், தெலுங்கில் சில படங்களும் இவரது இசையமைப்பில் அடுத்து வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், அனிருத் அவரது வித்தியாசமான ஆசை குறித்து பகிர்ந்துள்ளார்.

அதில், "நான் யார் கண்ணுக்கும் தெரியாமல் போகும் வரம் கிடைத்தால் முதலில் பேருந்தில் பயணம் செய்வேன். பள்ளி நாட்களில் எப்படி பேருந்தின் இருக்கையில் அமர்ந்து கொண்டு பயணம் செய்தேனோ அப்படி பயணம் செய்ய விரும்புகிறேன்.

இதை இப்போது செய்ய முடியாததால் மிகவும் மிஸ் செய்கிறேன். வெளிநாட்டுக்கு சென்றால் என்னால் பேருந்தில் பயணம் செய்ய முடிகிறது. ஆனால், என்னோட நாட்டில் அப்படி பயணம் செய்ய முடியவில்லை" என தனது வித்தியாசமான ஆசை பற்றி கூறி இருக்கிறார்.

டொனால்ட் ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசை கோரும் வெள்ளை மாளிகை..!!அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு  அமைதிக்கான ந...
02/08/2025

டொனால்ட் ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசை கோரும் வெள்ளை மாளிகை..!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வியாழக்கிழமை, வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட், உலகெங்கிலும் உள்ள பல மோதல் மண்டலங்களில் பல அமைதி ஒப்பந்தங்கள் மற்றும் போர் நிறுத்தங்களுக்கு டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததாகக் கூறினார்.

டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் 6 மாதங்களில் 6 போர்களை நிறுத்தியுள்ளார்.

அதனால்தான் ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று லெவிட் தெரிவித்தார்.

இதன் போது, ட்ரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகவும் லெவிட் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

Address

Auckland
2019

Alerts

Be the first to know and let us send you an email when Arasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arasan:

Share