Azeem Srilanki

Azeem Srilanki ஸலஃப் மன்ஹஜ் | அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்.
🇵🇸🇶🇦✌️

நன்மையை ஏவு, தீயதைத் தடு!

أهل السنة والجماعة | منهج السلف | طالب العلم.
(4)

“சுவனத்தின் சுகத்தை, சுகங்களால் அடைந்து கொள்ள முடியாது.”ஷேய்க் அலீ பின் அப்துல் ஹாஃலிக் அல்கர்னி.
15/12/2025

“சுவனத்தின் சுகத்தை, சுகங்களால் அடைந்து கொள்ள முடியாது.”

ஷேய்க் அலீ பின் அப்துல் ஹாஃலிக் அல்கர்னி.

14/12/2025

கஃபாவில் வைத்து விஜய்யின் வெற்றிக்கும், அவனது கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் எனவும் துஆ கேட்ட விஜய் ரசிகை.

இது போன்ற அறிவிலிகள் அமல் செய்து எதனை அடைந்து கொள்ள முயற்சிக்கிறார்கள்??

என்னது, அல்லாஹ்கு அருகில நின்னு கேற்குறியா?? என்னமா சொல்றாய்? கஃபாவிற்கு போய் துஆ கேட்டதும் அந்த துஆவை அல்லாஹ் அங்கீகரித்துவிடுவான் என்பது பிழையான நம்பிக்கை.

மேலும், அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய கஃபா செல்ல தான் வேண்டும் என்பதும் அல்ல,
وَلَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ وَنَعۡلَمُ مَا تُوَسۡوِسُ بِهِۦ نَفۡسُهُۥ وَنَحۡنُ أَقۡرَبُ إِلَيۡهِ مِنۡ حَبۡلِ ٱلۡوَرِيدِ
மேலும், நிச்சயமாக, நாம்தான் மனிதனைப் படைத்தோம், (நன்மை, தீமை ஆகியவற்றிலிருந்து) அவன் மனம் எதை ஊசலாடச் செய்கிறது (பேசுகிறது) என்பதையும் நாம் நன்கறிவோம், இன்னும், நாம் பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பைவிட அவனுக்கு மிகச்சமீபமாகவே இருக்கின்றோம்.
(அல்குர்ஆன் : 50:16)

எல்லாவற்றிற்கும் மேலாக, எப்படி துஆ கேற்க வேண்டும் என இஸ்லாம் காட்டித் தந்திருக்கிறது.

இதுபோன்ற அறிவிலித்தனங்களால் இஸ்லாத்தின் புனித்தத் தன்மையை கலங்கப்படுத்தாதீர்கள்.

13/12/2025

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் எந்த வார்த்தைகளால் பாதுகாப்புக் கோரிவந்தார்களோ அவற்றைக் கூறி நீங்களும் பாதுகாப்புக் கோருங்கள்.

(அவை:) அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஜுப்னி, வ அஊது பிக்க மினல் புக்லி, வ அஊது பிக்க மின் அன் உறத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அதாபில் கப்ர்.

பொருள்:
இறைவா! கோழைத்தனத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். கருமினத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நான் தள்ளாத வயதுக்குத் தள்ளப்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், இம்மையின் சோதனையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.

ஸஹீஹ் புகாரி : 6374.

11/12/2025

பெண்கள் நறுமணப் பொருட்கள் பூசுவதவன் இஸ்லாமிய சட்டம் என்ன??

இன்று சிலர் இதனை தங்களது சிந்தனையை புகுத்தி இந்த ஹதீஸுக்கு தங்களது சுய விளக்கங்களை கொடுத்து மக்களை வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் அவர்களிடம் இருந்து இந்த உம்மத்தை பாதுகாப்பானாக.

ஒரு ஹதீஸ், அல்லது இஸ்லாமிய சட்டங்கள் தெளிவாக இருக்கும் போது அதற்கு கட்டுப்பவதை விட்டுவிட்டு, அந்த தடையை செய்வதற்கு ஏதாவது சுயவிளக்கத்தை கொடுப்பதானது, சுவனத்தில் அனைத்தும் ஹலாலாகி இருக்கு ஒற்றை மரம் மாத்திரம் ஹராமிகி இருந்த போது, அந்த மரத்தை நெருங்க வைக்க ஷைத்தான் பயன்படுத்தி அதே யுத்தி தான் இதுவும்.

இஸ்லாம் எப்போதும் பித்னாவின் வாயில்களை மூடுவதில் மிகத் தெளிவாகவே இருக்கும், அந்த வகையில் தான் பெண்கள் நறுமணப் பொருட்கள் பூசி, அதனை அன்னிய ஆண்கள் உணரும்படி வீட்டை விட்டு வெளியே சென்றால் அதற்காக அவளுக்கு விபச்சாரம் செய்த அளவான பாவம் கிடைக்கும் என இஸ்லாம் கூறுவதாகும்.

தனது நறுமணத்தை மற்றவர்கள் நுகர வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு சென்றால் அவள் விபச்சாரி என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினாா்கள்.

அறிவிப்பவர் : அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி)

(நஸாயி: 5126
தரம்- ஸஹீஹ்)

ஆக, இவ்வளவு தெளிவான, நேரடியான ஹதீஸ் வந்திருக்கும் போது அதற்கு கட்டுப்படாமல் மறுப்பதானது எமது ஈமானை பறிக்கும் அளவு பாரதூரமனதாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மார்க்கத்தில் சொல்லப்பட்ட சட்டங்களை அதன் தூய்மை மாறாமல் பின்பற்ற வல்ல ரஹ்மான் எம்மனைவருக்கும் அருள் செய்வானாக.

07/12/2025

أَوَلَا يَرَوۡنَ أَنَّهُمۡ يُفۡتَنُونَ فِي كُلِّ عَامٍ مَّرَّةً أَوۡ مَرَّتَيۡنِ ثُمَّ لَا يَتُوبُونَ وَلَا هُمۡ يَذَّكَّرُونَ

ஒவ்வோர் ஆண்டிலும், ஒரு முறையோ, இரு முறையோ அவர்கள் சோதிக்கப்படுகிறார்கள்” என்பதை அவர்கள் காணவில்லையா? அப்படியிருந்தும் அவர்கள் தவ்பா செய்து மீள்வதுமில்லை;(அது பற்றி) நினைவு கூர்ந்து நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை.
(அல்குர்ஆன் : 9:126)

27/11/2025

عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ يَقُولُ مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ "".
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுவான்'.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 1145.

24/11/2025

பள்ளிவாசல்களில் மந்திரித்தல், நூல் தாயத்து கட்டுவதெல்லாம் இஸ்லாமிய செயற்பாடுகள் இல்லை.

இவைகள் இந்து கலாச்சாரத்தையும், இந்து மதத்தையும் அப்படியே copy செய்த சூஃபி/ பரலேவி மடையர்களின் வேளை!

இவர்களின் இதுபோன்ற காம செயல்களாலும், கொ*லைகார புத்தியினாலும் இஸ்லாமும் - முஸ்லிம்களும் கேள்வி கேற்கப்பட்டு கேவலப்படுத்தும் நிலைக்கு வந்துள்ளது.

இலங்கையிலும் இப்படி மந்திரித்தல், தாயத்து கட்டும் வேளை செய்யும் இந்த சூஃபி பன்னாடைகள் பல பெண்களை தகாத முறையில் தீண்டிய பல நூறு சம்பவங்கள் இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக பெண்கள் எதற்காகவும் தங்களதுமஹ்ரம்கள் இன்றி தனியான சந்திப்பு, பயணங்களை செய்யாதீர்கள். இஸ்லாம் ஒரு வழியை காட்டித் தந்தால் அதில் பாதுகாப்பு இருக்குமே தவிர ஆபத்து இருக்காது.

அடுத்த முக்கியமான விடயம், சுகயீணம், மருந்துகள் தேவையெனில் இஸ்லாம் கற்றுத் தந்திருக்கிற துஆக்களை ஓதிக் கொள்ளுங்கள், சரியான மருத்துவரிடம் சென்று அதற்கான மருந்து மாத்திரிகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

சூஃபி/பரலேவி மடையர்களை நம்பி உங்களது ஈமானையும் கற்பபையும் இழந்து விடாதீர்கள்.

(இந்த வீடியோவை ஒரு செய்தியை சொல்வதற்காகவே பதிவேற்றி இருக்கிறேன், இதில் வரும் இசை, AI உருவங்கள், பெண்கள் படங்களை காட்சிப்படுத்துவதை ஏற்பவன் இல்லை)

22/11/2025

மஹ்தி (அலை) அவர்களது வருகையை- முஸ்லிம்கள் எதிர்பார்ப்பதற்கும், யூத- ஷீயா மதத்தினரும் எதிர்பார்ப்பதற்குமிடையேயான வித்தியாசம்.

#ஷீயா #ஷீயாக்கள்

20/11/2025

யூதர்கள் எதிர்பார்க்கும் மஸிய்யாஹ் எனும் தஜ்ஜாலை தான், ஷீயாக்களும் எதிர்பார்த்திருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள்.

யூதர்களினதும், ஷீயாக்களினதும் மூல நூற்களில் இருந்து ஆதாரங்கள்.

ஷீயாக்களை விட்டு அல்லாஹ் முஸ்லிம்களை பாதுகாப்பானாக!

உரை:
அஷ்ஷேய்க் அஸ்ஹர் ஸீலானி (ஃஹபிழஹுல்லாஹ்).

#ஷீயா #ஷீயாக்கள்

18/11/2025

அல்லாஹ்வோடு சேர்த்து
வணங்கப்பட்டுக் கொண்டிருந்த
மூன்று கப்ருகளுக்கு எதிராக
சத்திய பிரச்சாரம் செய்த அல் முஜத்தித் அப்துல் ஹமீத் பக்ரி (ரஹிமஹுல்லாஹ்)

உரை:
அவரது மாணவர் உஸ்தாத் அபூபக்கர் ஸித்தீக் மதனி (ஃஹபிழஹுல்லாஹ்)

18/11/2025

மகன் செய்த பிரச்சாரத்திற்கு தந்தையின் பெயரைக் கொண்டு தூற்றிக் கொண்டிருக்கும் மூடர் கூட்டம் 🤷

முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) - அதாவது அப்துல் வஹ்ஹாபின் மகன் முஹம்மத்.

ஷிர்க்குக்கு எதிரார பிரச்சாரம் செய்தவர் முஹம்மத் (ரஹ்) அவர்களே தவிர அவரது தந்தை அப்துல் வஹ்ஹாப் இல்லை 😂

மொத்ததில் மகன் யார் வாப்பா யார்னு கூட இவர்களுக்கு தெரியவில்லை.

இதற்கிடையில் இவர்கள் தங்களை பெரும் அறிவு பின்புலம் கொண்டவர்கள் என பீத்தியும் கொள்வார்கள் 🤦

Address

Al Fadl Bin Sahl Street
Doha
0000

Telephone

+94771779798

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azeem Srilanki posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Azeem Srilanki:

Share