ஏகத்துவ மெய்ஞானம்

ஏகத்துவ மெய்ஞானம் வஹ்ததுல் வுஜூத் எனும் இறைஞானத்தை போத

கலிமது தையிபாவின் யதார்த்தமான விளக்கம் இக்கடிதத்தில் பேசப்படுகிறது. உலமாக்கள் கவனத்துடனும் ஆர்வத்துடனும் வாசித்தால் சமூக...
26/11/2024

கலிமது தையிபாவின் யதார்த்தமான விளக்கம் இக்கடிதத்தில் பேசப்படுகிறது. உலமாக்கள் கவனத்துடனும் ஆர்வத்துடனும் வாசித்தால் சமூகத்துக்கு பிரயோசனம் கிடைக்கும். இன்ஷா அல்லாஹ்

DR. SM றயீஸுத்தீன் மௌலவீ அவர்கள் எனக்கு அனுப்பிய கடிதத்துக்கான பதில்!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ.

நீங்கள் கடந்த 20.11.2024 அன்று திகதியிட்டு அனுப்பிய கடிதம் கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்! இதற்கு முன்னரும் நீங்கள் ஒரு கடிதம் அனுப்பியிருந்தீர்கள். அதற்கு பதில் எழுதும் நோக்கில் தயாராகிக் கொண்டிருந்த வேளை நீங்கள் நமது பிள்ளைகளுடன் வட்ஸ்அப் குழுமத்தில் உரையாடிய விதம் பற்றி அறிந்தேன். நான் எப்போதும் சத்தியத்தை அறியும் எண்ணத்துடன் கேட்பவர்களுக்கே பதிலளிப்பது வழக்கம். எவ்வாறேனும் மறுக்க வேண்டும் அல்லது விவாதித்து வெல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் கேள்விகளைத் தொடுப்பவர்களுக்கு பதிலளிப்பதில்லை. அதனால் அதைக் கைவிட்டுவிட்டேன்.

இருந்த போதிலும் மீண்டும் நீங்கள் என்னை நோக்கி சில கேள்விகளைத் தொடுத்து கடிதம் அனுப்பியுள்ளீர்கள். உங்களின் ஆர்வத்தை மதித்து இந்த பதிலை எழுதுகிறேன்.

திருக்கலிமா “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனத்தை எவ்வித வலிந்துரையுமின்றியே விளங்க வேண்டும் என்ற உங்களின் நிலைப்பாட்டை கூறியுள்ளீர்கள். நாமும் அதே கருத்திலேயே உள்ளோம். அல்ஹம்து லில்லாஹ்!

அடுத்து நீங்கள் இமாம் பக்றுத்தீன் றாஸீ றஹிமஹுல்லாஹ் அவர்களின்

ومتى كان الأمر كذلك لم يكن بنا حاجة إلى ذلك الإضمارالبتة، فصحّ أنّ قولنا لا إله إلا الله يفيد المقصود بظاهره من غير حاجة البتة إلى الإضمار،
என்ற வசனத்தை நான் ஆதாரமாகக் காட்டி திருக்கலிமாவுக்கு “வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” என்று நீங்கள் கருத்துக் கூறுவது பிழை, அவ்வாறு வலிந்துரை வைக்காதீர்கள் என்று கூறுவதாகவும், இமாம் பக்றுத்தீன் றாஸீ அவர்கள் இங்கு “தஃவீல்” பற்றிப் பேசவில்லை. என்றும் எழுதியிருந்தீர்கள்.

இவ்வாறு எழுதிய நீங்கள் تأويل என்றால் என்ன? إضمار என்றால் என்ன? அவ்விரண்டுக்குமிடையிலான வேறுபாடு என்ன? என்ற விளக்கத்துடன் குறிப்பிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். உங்களின் அறிவுப் புலமையையும் அது காட்டியிருக்கும்.

இக்கடிதத்தை எழுதிய உங்களின் நிலைப்பாடு எவ்வித “தஃவீலோ”, “இழ்மாறோ” தோவையில்லை என்தபாகும். அதே நேரம் மேற்குறித்த வசனத்தில் இமாம் பக்றுத்தீன் றாஸீ அவர்கள் அறவே எந்த “இழமார்” உம் தேவையில்லை என்று கூறுகிறார்கள்.

எனவே, எனது நிலைப்பாட்டின் அடிப்படையிலும், உங்களின் நிலைப்பாட்டின் அடிப்படையிலும், “ஷெய்குல் இஸ்லாம்” இமாம் பக்றுத்தீன் றாஸீ அவர்களின் கருத்தின் படியும் திருக்கலிமாவை எவ்வித “இழமாறோ”, “தஃவீலோ” இன்றி அதன் வெளிப்படையான சொற்களைக் கொண்டே விளங்க வேண்டும்.

அதேபோன்று இமாம் பக்றுத்தீன் றாஸீ அவர்கள் தங்களின் “தப்ஸீர்” திருமறை விளக்க நூலில் குறிப்பட்ட

وذلك لأنك إذا قلنا: لَا إِلَهَ فِي الْوُجُودِ لَا إِلَهَ إِلَّا هُوَ كَانَ هَذَا نَفْيًا لِوُجُودِ الْإِلَهِ الثَّانِي، أَمَّا لَوْ لَمْ يُضْمَرْ هَذَا الْإِضْمَارُ كَانَ قَوْلُكَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ نَفْيًا لِمَاهِيَّةِ الْإِلَهِ الثَّانِي، وَمَعْلُومٌ أَنَّ نَفْيَ الْمَاهِيَّةِ أَقْوَى فِي التَّوْحِيدِ الصِّرْفِ مِنْ نَفْيِ الْوُجُودِ، فَكَانَ إِجْرَاءُ الْكَلَامِ عَلَى ظَاهِرِهِ، وَالْإِعْرَاضُ عَنْ هَذَا الْإِضْمَارِ أَوْلَى،
வசனத்தை மேற்கோள்காட்டி وَالْإِعْرَاضُ عَنْ هَذَا الْإِضْمَارِ أَوْلَى “இழ்மார்” ஐப் புறக்கணிப்பது ஏற்றமானது என்றுதான் குறிப்பிட்டுள்ளார்களேயன்றி அவ்வாறு “இழ்மார்” வைத்தால் தவறில்லை என்று கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள்.

இமாம் பக்றுத்தீன் றாஸீ அவர்கள் தவறில்லாத ஒரு விடயத்தை விளங்கப்படுத்தவா தனது தப்ஸீர் நூலிலும், “லவாமிஉல் பையினாத்” என்ற நூலிலும் இந்த விளக்கத்தை வரி வரியாக எழுதியுள்ளார்கள். ஒருவருடைய வசன நடையைக் கூடவா விளங்க முடியவில்லை? முதலாவதாக நீங்கள் குறிப்பிட்ட “லவாமிஉல் பையினாத்” எனும் நூலில் அவர்கள்
فصحّ أنّ قولنا لا إله إلا الله يفيد المقصود بظاهره من غير حاجة البتة إلى الإضمار،

எனவே, “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனம் எந்தவொரு “இழ்மார்” உம் இன்றி அதன் வெளிப்படையான வசனமே அதன் நோக்கத்தை தருகிறது என்ற கருத்து “ஸஹ்ஹ” சரியானது என்று குறிப்பிட்டுள்ளார்களே. அப்படியாயின் صَحَّ “ஸஹ்ஹ” – “ஸஹீஹ்” என்பதற்கு மாற்றமானது خَطَأٌ தவறானது என்றுதானே வரும். வேறோர் இடத்தில் أَوْلَى மேலானது என்று மிகைத்துப் பேசுவதால் அதைப் பிடித்துக் கொண்டு “மேலானது” என்றுதான் சொல்லியுள்ளார்கள். அதனால் அதற்கு மாற்றமாகச் சொல்வது தவறில்லை என்ற கருத்துதான் வரும் என்று வாதிடுவது அறிவுடமையல்ல.

அடுத்து “இலாஹ்” என்பதற்கு எப்படிப் பொருள் கொள்ள வேண்டும் என்று இமாம் பக்றுத்தீன் றாஸீ அவர்கள் தங்களின் தப்ஸீர் நூல்களில் குறிப்பிட்ட வசனங்களை குறிப்பிடுகிறேன் என்று சில வசனங்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள். அவற்றின் அடிப்படையில் நீங்கள் “இலாஹ்” என்பதற்கு வலிந்துரையின்றியே “வணக்கத்திற்குரியவன்” என்ற கருத்து வரும் என்று பிரதானமாக விளங்குவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களின் அறிவுப் புலமையை எண்ணி நான் வெட்கப்படுகிறேன்.

முதலில் “இலாஹ்” என்பதற்குரிய அர்த்தத்தை அறிய முன் திருக்கலிமாவில் அதற்கு முன்னதாகச் சொல்லப்படடுள்ள “லா” பற்றி அறிய வேண்டும். இது “தப்ரியா” உடை “லா” ஆகும். இந்த “லா”வுக்குப் பின்னால் “நகிரா”வான ஒரு “இஸ்ம்” வருமேயானால் அது அந்த இனத்தையே எடுத்துக் கொள்ளும். நீங்கள் ஏற்கனவே கேட்டது போல் “இலாஹ்” என்பது ஒரு இனமா? என்று அறபு மொழியறிவில்லாதவர் போல் இப்போதும் கேட்டு விடாதீர்கள். இங்கு இனம் என்பது அந்தப் பெயர் கொண்டு எது எதுவெல்லாம் புழக்கத்தில் அழைக்கப்படுகிறதோ அவற்றையெல்லாம் அது எடுத்துக் கொள்ளும். இல்லை அல்லாஹ் மட்டும்தான் “இலாஹ்” என்றால் திருக்கலிமாவில் உள்ள “இலாஹ்” என்பதற்கு “நஸ்ப்” செய்து “லா இலாஹ” என்று சொல்லத் தேவையில்லை.

நீங்கள் சொல்வது போல் “இலாஹ்” என்பதன் கருத்து வணக்கத்திற்குரியது என்றிருந்தால் திருக்கலிமாவின் கருத்து “அல்லாஹ் தவிர வணக்கத்திற்குரிய எந்த தெய்வமும் இல்லை” என்று வரும். இவ்வாறு சொல்வதால் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் மட்டும்தான் என்ற கருத்து வரும் என்றுதான் ஆழமான அறிவில்லாதவர்கள் எண்ணுகிறார்கள். இவ்வாறு எண்ணுவது சரியா? பிழையா? என்பதை நீங்கள் இமாம் பக்றுத்தீன் றாஸீ அவர்களின் கூற்றை சரியாக விளங்கியிருந்தால் புரிந்திருப்பீர்கள்.

இமாம் பக்றுத்தீன் றாஸீ அவர்கள் لَا إلهَ لَنَا எங்களுக்கு அல்லாஹ் தவிர எந்த இலாஹும் இல்லை என்று “இழ்மார்” செய்வதே பிழை என்று சொல்கிறார்கள். காரணம் அவ்வாறு சொன்னால் அனைத்துப் படைப்பினங்களுக்கும் அவனே “இலாஹ்” என்ற கருத்து வராது. அதனால்தான் إلهُكُمْ إلهٌ وَاحِدٌ என்று சொன்ன இறைவன் “உங்களுடைய” என்று மட்டும் யாரைப் பார்த்து விழிக்கப்பட்டதோ அவர்களுடைய இறைவன்தான் ஒருவன் என்ற கருத்து வந்துவிடும் என்பதனால் அதனைத் தொடர்ந்து لَا إلهَ إِلَّا هُوْ அவன் தவிர எந்த இலாஹும் இல்லை என்று கூறியுள்ளான் என்று குறிப்பிட்டுள்ளார்கள். உங்கள் வாதப்படி அல்லாஹ் “உங்களின் தெய்வம் ஒரே நாயன்தான்” என்று சொன்னதன் பிறகு அந்தக் கருத்து ஒரு சாராரை மட்டும் மட்டுப்படுத்திச் சொல்லப்படுவதால் அதையடுத்து “லா இலாஹ இல்லா ஹூ” என்று சொல்லாமல் إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ بَلْ إِلَهُ الْكُلِّ إلهٌ وَاحِدٌ “உங்களின் நாயன் ஒரே நாயனாவான். இல்லை அனைவரின் நாயனும் ஒரே நாயன்தான்” என்று சொல்லியிருக்க வேண்டும். அவ்வாறு சொல்லமால் “லா இலாஹ இல்லா ஹூ” என்று சொன்னமைக்கான காரணம் அனைவரும் அந்த ஒரே நாயனான அல்லாஹ்வை மட்டும் இலாஹ் ஆக எடுத்துக் கொள்ளவில்லை. அந்நிலையில் அனைவரின் இலாஹூம் ஒரே நாயன்தான் என்றால் அது பொருத்தமற்றதாகும். மாறாக அவனுக்கு வேறான எந்த தெய்வமும் இல்லை என்றால் அந்த வசனம் அனைத்து தெய்வங்களையும், அனைவரின் தெய்வங்களையும் எடுத்துக் கொள்ளும். இதுவே பொருத்தம். நீங்கள் கருதுவது போல் “உங்களின் இலாஹ் ஒரே நாயன்தான்” என்பதைத் தொடர்ந்து “வணக்கத்தறிகுரியவன் அல்லாஹ்” என்றால் அது பொருத்தமற்ற தொடராகும். அல்லாஹ்வின் பேச்சு எமது பேச்சு போன்ற வீணான. அர்த்தமற்ற பேச்சல்ல.

அதேபோல் “லா இலாஹ பில் வுஜூதி இல்லல்லாஹ்” – “உள்ளமையில் அல்லாஹ் தவிர வேறு நாயன் இல்லை” என்று “தக்தீர்” செய்வதும் பிழை என்று சொல்கிறார்கள். நீங்களும் இவ்விரண்டையும் ஏற்றே எழுதியுள்ளீர்கள். உங்களின் வாதப்படி திருக்கலிமாவின் பொருள் “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் தவிர வேறு நாயன் இல்லை” என்றால் - அதாவது “இலாஹ்” என்பதன் பொருள் “வணக்கத்திற்குரியவன்” என்றிருந்தால் “லா இலாஹ பில் வஜூதி இல்லல்லாஹ்” என்று இழ்மார் செய்வது பிழையேயாகாது. அதனால் எவ்வித பாதிப்பும் வராது. இதை ஒரு வாதமாக எடுத்து அவர்கள் தனது நூல்களில் எழுதத் தேவையுமில்லை. “உள்ளமையில் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை” என்றால் அது பிழையே அல்ல.

அவர்கள் அவ்வாறு “தக்தீர்” செய்வது பிழை என்பதற்குக் கூறும் காரணம் “லா இலாஹ பில் வஜூதி இல்லல்லாஹ்” என்று நீங்கள் “தக்தீர்” வைத்தால் அது இரண்டாவதொரு “இலாஹ்” இல்லை என்பதையே காட்டும். மாறாக அதனுடைய “மாஹியத்”தை இல்லமலாக்காது. என்பதாகும்.

இது கொண்டு நீங்கள் எதனை விளங்குகிறீர்கள்? இமாம் பக்றுத்தீன் றாஸீ அவர்களின் வசனங்களை நான் ஆதாரமாகக் காட்டிப் பேசியதை வைத்து எனது பொல்லை எடுத்து எனக்கே அடிக்கலாம் என்ற எண்ணத்தில்தானே கேள்விகளைத் தொடுக்கிறீர்கள்? உங்களுக்காக இல்லாவிட்டாலும் நீங்கள் பிரதிகன் என்று கோடிட்டவர்களின் நன்மை கருதி விளக்கி வைக்கிறேன். பின்வரும் உதாரணத்தை நன்றாக கவனியுங்கள்.

நான்கு நபர்கள் ஓரிடத்தில் உள்ளார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களில் “ஸைத்” என்பவன் மட்டுமே “ஆலிம்” ஆவான். ஆனால் அவர்கள் நால்வரையும் பார்க்கின்ற ஒரு பாமரன் அவர்கள் அனைவருமே “ஆலிம்”கள்தான் என்று கருதிவிடுவான் என்று நீங்கள் நினைத்து “லா ஆலிம இல்லா ஸைதுன்” ஸைத் தவிர எந்தவொரு ஆலிமும் இல்லை என்று கூறுகிறீர்கள். இதன் கருத்து என்னவெனில் ஸைத் மட்டுமே ஆலிம் என்பதாகும். அதாவது “லா ஆலிம பில் வுஜூதி இல்லா ஸைதுன்” உள்ளமையில் ஸைத் தவிர வேறு எவரும் ஆலிம் அல்ல என்பதாகும்.

நீங்கள் கூறும் கருத்துப்படி “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை” என்ற கருத்தை விளக்கி வைக்க இந்த “தக்தீர்” போதுமானது. அது பிழையாகாது. ஆனால் இமாம் பக்றுத்தீன் றாஸீ அவர்கள் இந்த “தக்தீர்” தேவையில்லை. திருக்கலிமாவை அதன் நேரடி வசனத்தைக் கொண்டே விளங்க முடியும் என்று அறுதியிட்டுக் கூறுவதற்கான காரணம் என்ன? அதுமாத்திரமின்றி இவ்வாறு வலிந்துரை வைப்பது பிழை என்பதற்கு அவர்கள் கூறும் காரணத்தின் அடிப்படையில் உங்களின் வாதத்திற்கு அது ஒத்து வராது. “பில் வுஜூதி” என்று “தக்தீர்” வைத்தால் அதுவும் ஒரு மட்டுப்பாடுதான். அது அதன் “மாஹியத்”தை இல்லாமலாக்காது. என்று கூறுகிறார்கள். இதை விளங்குவதற்கு மேற்குறித்த உதாரணத்தை வைத்து விளங்க நீங்கள் முற்பட்டால் “மௌத்” மரணம் வரையும் உங்களால் அதை விளங்க முடியாது. நான் பின்னால் கூறும் வகையில் உதாரணத்தை கற்பனை பண்ணி சிந்தித்துப் பாருங்கள்.

ஒருவன் ஒரு நகைக் கடைக்குச் சென்று அங்கு பலவிதமான ஆபரணங்களை - பல எண்ணிக்கையிலான ஆபரணங்களை கண்டு வியந்து நிற்கிறான். இவன் அங்கு காணப்படும் ஒவ்வொன்றையும் தனித்தனியான ஒவ்வொரு சாமான் என்று நினைக்கிறான். இவனுடைய இந்த பேதமையை நீக்கி அவனின் உள்ளத்தை சூழ்ந்துள்ள இருளை அகற்ற நினைத்த நீங்கள் لَا حُلْيَةَ إِلَّا الذَّهَبُ தங்கத்தை தவிர எந்த ஆபரணமும் இல்லை என்று சொன்னால் இங்கு لا حلية فى الوجود إلا الذهب “உள்ளமையில் தங்கம் தவிர ஆபரணம் இல்லை” என்று “தக்தீர்” வைக்கத் தேவையில்லை. அவ்வாறு வைப்பதை விட அந்த வசனத்தை அதன் வெளிரங்கமான சொற்களை வைத்து விளங்குவதே ஆபரணங்கள் என்பதன் “மாஹியத்”தை இல்லாமலாக்கி அப்படியொரு சாமானே இல்லை, அவ்வாறு தோற்றுவது தங்கம்தான் என்று நிறுவ உதவும். இவ் உதாரணம்தான் இமாம் அவர்கள் கூறியது போன்று உள்ளமையில் இரண்டவதான “இலாஹ்” இல்லை என்று நிறுவாமல் அவர்களின் - மக்கத்து காபிர்களின் பேதமையில் காணப்பட்ட வேறான “இலாஹு”களின் “மாஹியத்”தையே இல்லாமலாக்குவது போல் தங்கம் போன்ற இன்னொரு தங்கம் இல்லை என்பதை நிறுவாமல் அந்த ஆபரணங்களின் “மாஹியத்”தையே இல்லமலாக்கும்.

இதேபோன்றுதான் திருக்கலிமா “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனமுமாகும். மக்கத்து காபிர்கள் பெருமானார் திருக்கலிமாப் பிரகடனம் செய்த வேளை திரு “கஃபா”வினுள் 300க்கும் மேற்பட்ட விக்கிரகங்களை - தெய்வங்களை வைத்து வணங்கி வழிபட்டு வந்தார்கள். அவற்றை அவர்கள் தனித்தனியான ஒவ்வொரு “இலாஹ்” என்று நம்பியிருந்தார்கள். அவர்களிடம் காணப்பட்ட பேதமையை நீக்கவே “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமா வந்தது. அவர்கள் அறபீகளாயிருந்ததால் அவர்கள் அதனை சரியாகவே விளங்கினார்கள். அதனால்தான் أَجَعَلَ الْآلِهَةَ إِلهًا وَاحِدًا “இந்த முஹம்மத் அனைத்து தெய்வங்களையும் ஒரே தெய்வம் என்றா ஆக்கிவிட்டார்?” என்று கேட்டு நின்றார்கள். இதனையே “ஷெய்குல் இஸ்லாம்” இமாம் பக்றுத்தீன் றாஸீ அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

அடுத்து நீங்கள் இமாம் அவர்கள் “இலாஹ்” என்பதற்கு “வணக்கத்திற்குரியவன்” என்றுதான் தன்னுடைய “தப்ஸீர்” நூல்களில் எழுதியுள்ளார்கள் என்று சில வசனங்களை சுட்டிக்காட்டியுள்ளீர்கள். அவற்றில் எதுவுமே “இலாஹ்” என்ற பதத்தை விளங்கப்படுத்தும் தனியான பாடமல்ல. முன் பின் தொடரின்றி இடை நடுவில் வசனத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளீர்கள். “சேம்பிள்” மாதிரிக்காக ஒரு சிலதை மட்டும் குறிப்பிடுகிறேன். அனைத்தையும் விளக்க முற்பட்டால் ஒரு நூல்தான் எழுத வேண்டியேற்படும். சுருங்கச் சொன்னால் நான் மேலே குறிப்பிட்டது போன்று இமாம் அவர்களின் வசன நடையை உங்களால் விளங்க முடியவில்லை என்பதே முடிவாகும். முதலாவதாக நீங்கள் குறிப்பிட்ட
لِأَنَّ الْإِلَهَ هُوَ الْمُسْتَحِقُّ لِلْعِبَادَةِ،
என்ற வசனத்தை எடுத்துப் பார்ப்போம். இமாம் அவர்கள் இவ்வாறு எழுதியிருப்பது வாஸ்தவம்தான். ஆனால் எதற்காக இதனை எழுதியுள்ளார்கள் என்பதை அறிய அந்த வசனத்தின் முன் பின் தொடர்களை கவனமாக வாசிக்க வேண்டும். இதோ உங்கள் கவனத்திற்கு தருகிறேன்.
بَلْ ذَكَرَ قَوْلَهُ (اللَّهَ) لِأَنَّ هَذَا الِاسْمَ أَبْلَغُ فِي كَوْنِهِ زَاجِرًا عَنِ الْمَعَاصِي مِنْ سَائِرِ الْأَسْمَاءِ وَالصِّفَاتِ لِأَنَّ الْإِلَهَ هُوَ الْمُسْتَحِقُّ لِلْعِبَادَةِ، وَلَا يَكُونُ كَذَلِكَ إِلَّا إِذَا كَانَ قَادِرًا عَلِيمًا حَكِيمًا فَقَوْلُهُ: (أَعُوذُ بِاللَّهِ) جَارٍ مَجْرَى أَنْ يَقُولَ أَعُوذُ بِالْقَادِرِ الْعَلِيمِ الْحَكِيمِ، وَهَذِهِ الصِّفَاتُ هِيَ النِّهَايَةُ فِي الزَّجْرِ،

சுருக்கம்: “அஊது பில்லாஹ்” என்ற வசனத்தில் வந்துள்ள “அல்லாஹ்” என்ற திருநாமம் ஏனைய திருநாமங்களை விட பாவங்களிலிருந்து தடுப்பதில் மேலானது. ஏனெனில் “அல் இலாஹ்” என்பது வணக்கத்திற்கு தகுதியானதாகும்.............

இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் “அஊது பில்லாஹ்” என்ற வசனத்தில் “இலாஹ்” என்ற சொல் கூறப்படவில்லை. மாறாக “அல்லாஹ்” என்ற சொல்லே கூறப்பட்டுள்ளது. அந்த சொல் - திரு நாமம் பற்றி விபரிக்கும் போதுதான் நீங்கள் குறிப்பிட்ட வசனம் எழுதப்பட்டுள்ளது. இதை விளங்க நீங்கள் பின்வரும் விடயத்தை விளங்கினாலே போதும். திருக்கலிமாவில் “இலாஹ” என்று “அல்” – “அலிப், லாம்” இன்றி வந்தது போன்று “நகிரா”வாக கூறப்படவில்லை. மாறாக “அல் இலாஹ்” என்று “மஃரிபா”வாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. இதை விளங்கினாலே போதும் சத்தியத்தைக் கண்டு கொள்வீர்கள். நீங்கள் குறிப்பிட்டது போன்று “இலாஹ்” என்ற பதத்தை விளக்குவதுதான் நோக்கம் என்றிருந்தால் அது இந்த இடத்திற்குப் பொருத்தமற்றதாகும். இது போன்றுதான் நீங்கள் குறிப்பிட்ட ஏனைய ஆதாரங்களுமாகும்.

எனவே, மேற்குறித்த விளக்கங்களின் அடிப்படையில் “இலாஹ்” என்ற திருக்கலிமாவில் வரும் சொல்லுக்கு “வணக்கத்திற்குரியது” என்று பொருள் கூறுவது - ஒரு வர்ணனையில் “தக்ஸீஸ்” குறிப்பாக்கி பொருள் கூறுவது தவறாகும்.

திருக்கலிமாவுக்கு “வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை” என்று புழக்கத்தில் சொல்லப்படும் கருத்தை நிறுவுவதற்காக “இலாஹ்” என்ற சொல்லுக்கே “வணக்கத்திற்குரியது” என்ற பொருளைக் கொடுக்க வேண்டும் என்று பாடுபடுகிறீர்கள்.

ஆனால் இவ்வாறு பொருள் கூறும் நபர்கள் திருக்கலிமாவுக்கு அறபு மொழியிலக்கணப்படி تركيب கூறுகிறபோது “லா” என்பது “ஹர்புன் நபீF” என்றும், “இலாஹ” என்பது “லா” உடைய “இஸ்ம்” என்றும், “லா” உடைய “கபர்” “மஹ்தூப்” நீக்கப்பட்டுள்ளது. அது مُسْتَحِقٌّ لِلْعِبَادَةِ “முஸ்தஹிக்குன் லில் இபாததி” என்றிருக்கும். குறித்த வசனம் முழுமையாக வருவதாயின் لَا إِلهَ مُسْتَحِقٌّ لِلْعِبَادَةِ إِلَّا اللهُ என்று வரும் என்று கூறுகிறார்கள். ஆனால் நீங்கள் இதை மறைத்து வேறோர் பாணியில் உங்கள் கருத்தை நிறுவ வருகிறீர்கள். அவ்வாறாயின் உங்கள் வாதப்படி திருக்கலிமா “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனத்திற்கு அறபு மொழி இலக்கண அடிப்படையில் “தர்கீப்” எவ்வாறு அமையும் என்பதையும் கூறியிருக்க வேண்டும்.

நீங்கள் எந்தவொரு அகராதியை எடுத்துப் பார்த்தாலும் “இலாஹ்” என்ற சொல்லுக்கு كُلُّ مَعْبُوْدِ “வணங்கப்படக் கூடிய அனைத்தும்” என்றுதான் பொருள் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதனுடைய “மப்ஹூம் மஃனா” பொதுவாகப் படைப்புக்களையும், படைத்தவனையும் எடுத்துக் கொள்ளும். இது தொடர்பான விளக்கம் “அல்ஹகீகா” எனும் நூலில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. அதை நான் தொகுத்தெழுதிய “அல்பர்கதுல் பரீத்” எனும் நூலிலும் குறிப்பிட்டுள்ளேன். வாசித்துப் பயன் பெறுங்கள்.

உண்மையில் உங்களுக்கு சத்தியத்தை அறியும் நோக்கமிருந்தால் இறைஞானிகளின் நூல்களிலிருந்து நான் தொகுத்தெழுதிய الفرقد الفريد فى شرح كلمة التوحيد என்ற எனது நூலை தெளிவான உள்ளத்தோடு வாசியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு நலவை நாடியிருந்தால் திருக்கலிமாவின் எதார்த்தமான விளக்கத்தை தருவான். தெகிட்டாத பானத்தைப் புகட்டுவான். இன்ஷா அல்லாஹ்!

குறிப்பு: திருக்கலிமாவில் வந்துள்ள “இலாஹ்” என்பதற்கே “வணக்கத்திற்குரியது” என்று கருத்துக் கொடுப்பது பிழை என்று சொல்கிறோமே தவிர பொதுவாக “வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்” என்பதில் எமக்கு மாற்றுக் கருத்தில்லை. நாம் திருக்கலிமாவுக்கு கூறும் விளக்கத்தை சரியாக அறிந்தால் அவன் அல்லாஹ் தவிர வேறெதையும் வணங்கவே மாட்டான். இதனாலேயே இஸ்லாத்தை ஏற்ற மக்கத்து காபிர்கள் விக்கிரக வணக்கத்தை விட்டும் ஒதுங்கினார்கள்.

மேலதிக குறிப்பு: لا إله إلا الله என்ற திருக்கலிமாவில் - வசனத்தில் முதலில் வந்துள்ள لَا - லா என்பது لَا الَّتِيْ لِنَفْيِ الْجِنْسِ ஜின்ஸை “நபீF” செய்கின்ற “லா”வாகும். இதன் பொருள் எந்த “இலாஹ்” தெய்வமும் (கடவுளும்) இல்லை என்பதேயாகும். உதாரணமாக لَا رَجُلَ فِى الْبَيْتِ வீட்டில் எந்த ஒரு மனிதனும் இல்லை என்பது போன்று.

رَجُلٌ
என்பது نَكِرَةٌ குறிப்பில்லாத ஒரு “இஸ்ம்” ஆகும். எவரெல்லாம் رَجُلٌ என்று அழைக்கப்படுவதற்கு பொருத்தமானவரோ அவரெல்லாம் رَجُلٌ என்ற சொல்லில் அடங்கிவிடுவார்கள். இந்த விதிப்படி لَا رَجُلَ என்று வசனம் வந்தால் “எந்த ஒரு மனிதனும் இல்லை” என்றுதான் பொருள் வர வேண்டும். இவ்வசனத்துக்கு கட்டையான மனிதன் எவருமில்லை என்றோ, நெட்டையான மனிதன் எவருமில்லை என்றோ, சிவப்பான மனிதன் எவருமில்லை என்றோ பொருள் கொள்ள முடியாது. இவ்வாறு ஒன்றில் கட்டுப்படுத்திப் பொருள் கொண்டால் رَجُلٌ என்ற “இஸ்ம்” “நகிறா”வாக இருக்க முடியாது. அது تَخْصِيْصْ குறிப்பாக்குவதன் மூலம் “நகிறா” என்ற இடத்திலிருந்து வெளியாகிவிடும். “மஃரிபா” என்ற இடத்திற்கு வந்து விடும். “தப்ரியா” உடைய “லா” என்பது نكرة குறிப்பு எதுவுமில்லாத ஒரு இஸ்மில்தான் வரும். இந்த விபரத்தின் படி لا إلهَ என்றால் “எந்த “இலாஹ்” தெய்வமும் இல்லை” என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். “வணக்கத்திற்குத் தகுதியான, வணக்கத்திற்குத் தகுதியில்லாத எந்த தெய்வமும் இல்லை” என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். பொதுவாக எந்த ஒரு “இலாஹ்” தெய்வமும் இல்லை என்றே பொருள் கொள்ள வேண்டும். اَلْإلهُ الْمُسْتَحِقُّ لِلْعِبَادَةِ வணக்கத்திற்குத் தகுதியான எந்த ஓர் “இலாஹ்” தெய்வமும் இல்லையென்று பொருள் கொள்வது பிழையாகிவிடும். இது “நஹ்வு” எனும் மொழியிலக்கணத்திற்கே பிழையாகிவிடும்.

மிக நுணுக்கமாக ஆய்வு செய்தால் إله என்ற சொல் தெய்வத்திற்கு மட்டுமன்றி படைப்புக்கும் பயன்படுத்தக் கூடிய பொதுச் சொல் என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒரு சொல்லாகும். இந்த விபரம் மேலே நான் குறிப்பிட்ட, நான் தொகுத்தெழுதிய الفرقد الفريد என்ற நூலில் உள்ளது. நபீ பெருமானார் அவர்கள் لا إله إلا الله என்று முதலாவதாகச் சொன்ன போது அந்நேரம் “கஃபா”வினுள் இருந்த 300க்கும் அதிகமான வணங்கப்பட்டு வந்த தெய்வங்களையும், வணங்கப்படாமலிருந்த படைப்புக்களையும் உள்வாங்கிய கருத்திலேயே அவ்வாறு சொன்னார்கள். இதன்படி திருக்கலிமாவுக்கு அல்லாஹ் அல்லாத எந்தவொரு தெய்வமும் இல்லை என்று சொல்வதை விட அல்லாஹ் அல்லாத - அல்லாஹ்வுக்கு வேறான எந்த ஒரு படைப்பும் (சிருட்டியும்) இல்லை என்றே பொருள் கொள்ள வேண்டும்.

மேலும் நபீ பெருமானார் அவர்கள் முதன் முதலாக திருக்கலிமாவைச் சொன்ன போது திரு மக்கா நகரில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களில் அநேகர் படிப்பறிவு இல்லாதவர்களாகவே இருந்தார்கள். அவர்களுக்கு تَأْوِيْلْ என்றாலே என்னவென்று தெரியாமலிருந்தது. الإله المستحقّ للعبادة என்று வலிந்துரை கொள்வதற்கும், வேறு விதமாக வலிந்துரை கொள்வதற்கும் தெரியாதவர்களாகவே இருந்தனர். இதனால்தான் أجعل الآلهة إلها واحدا என்று வியந்தார்கள்.

பெருமானார் அவர்கள் بُعثَ فى الأمّيّين படிப்பறிவற்றவர்கள் மத்தியிலேயே நபீயாக வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு الإله المستحقّ للعبادة என்ற வலிந்துரையும் தெரிந்திருக்கவில்லை. இதனால்தான் لو أنكم دليتم بحبل إلى الأرض السفلى لهبط على الله என்று சொன்னவர்கள் பின்னால் هو الأول والآخر والظاهر والباطن என்று ஓதிக் காட்டினார்கள். அல்லாஹ் அல்லாத எதுவுமில்லை என்பதையே இவ்வசனம் சுட்டிக் காட்டுகிறது. இங்குதான் எல்லாம் அவனே என்ற ஞானம் பிறக்கிறது.

அன்புத் தோழா! எந்த அறிஞர் எத்தகைய விளக்கம் கொடுத்தாலும், எழுதினாலும் “இல்ஹாம்”, “கஷ்பு”, “இல்முல்லதுன்னீ” வழங்கப்பட்ட مكاشفين களின் விளக்கமே சரியானதென்பதை நீங்களும், நாங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரதிகள்: நீங்கள் பிரதிகள் என்று குறிப்பிட்ட அனைவரினது தொலைபேசி இலக்கங்களும் இல்லாததால் அனைவரும் பார்வையிடும் வகையில் எனது முகநூல் பக்கத்திலும் பதிவிடுகிறேன்.

بسم الله الرحمن الرحيم،
وعليكم السّلام ورحمة الله وبركاته،

يا أخي مولوي رئيس الدين! لماذا تُدندِن مع مَن يُدندِنُ؟ أترغبُ فى شُهرتِك بين النّاس؟ أو فى ميلهم إليك؟ أو ترغب فيما عندهم؟ وأسألك أن تجيبني للأسئلة الآتية، من قلبك لا من لسانك، لماذا أرسلتَ نسخ خطابك إلى جمعيّة العلماء وإلى بعض العلماء أيضا؟ وما مقصودُك بإرسالِها إليهم؟ قل الحقّ ولو كان مرّا أو سرّا أو جهرا، وأنا ممّن جاوز ثمانين، أنا أعرف بفراسة الوجه الصالح والطالح، والطّيّب والخبيث،

يا مولوي رئيس الدين! ما لي أراك حيران فى فهم معنى كلمة الحقّ وخلاصتِها، فأوصيك إن شئتَ الحقّ والصّواب بمطالعة كتب المكاشفين والملهمين من الأولياء، كالفتوحات المكيّة وفصوص الحكم للشّيخ الأكبر محي الدين ابن عربي، والإنسان الكامل والنّادرات العينيّة للشّيخ عبد الكريم الجيلي، والحقيقة للشّيخ عبد القادر العالم الحيدرآبادي، واليواقيت والجواهر والكبريت الأحمر فى بيان علوم الشّيخ الأكبر للشّيخ عبد الوهّاب الشّعراني، ومشكاة الأنوار للغزالي، وغيرها من الكتب التي صنّفها العارفون الكاملون الواصلون،

وإذا أردت تحقيق مسائل كلمة الحقّ ووحدة الوجود فأتني بعد الإذن منّي بقلب صاف خالص خال عن الكبر والعجب والخطرات الشيطانيّة إن شئت الذّوق منّي، وإلّا فاطلب لك من تريد،

والله يبارك لي ولك فى العلوم والمعارف والأسرار،
خادم القوم،
عبد الرؤوف بن عبد الجواد،
25.11.2024

வஹ்ததுல் வுஜூத்-  தத்துவார்த்த ரீதியான விளக்கம்.---------அனைத்து சிருஷ்டிகளும் அல்லாஹ்வால் படைக்கப்பட்டவையாகும். அவன் அவ...
10/06/2024

வஹ்ததுல் வுஜூத்- தத்துவார்த்த ரீதியான விளக்கம்.
---------
அனைத்து சிருஷ்டிகளும் அல்லாஹ்வால் படைக்கப்பட்டவையாகும். அவன் அவற்றை தன்னிலிருந்தே படைத்தான். தோற்றச்செய்தான். அவற்றுக்கு அவனே கரு – மூலப்பொருள் ஆவான்.
ஒரு வஸ்துவை அல்லாஹ் படைப்பதாயினும் அல்லது ஒரு வஸ்துவை ஒரு மனிதன் செய்வதாயினும் அதற்கு ஒரு மூலம் –கரு (ஆரம்பம்) அவசியமாகும். எதுவாயினும் அது அதன் மூலத்திலிருந்தே ஆரம்பமாகி வரவேண்டும். ஏனெனில், “அதம்” இல்லாமை என்பது உண்டாக முடியாது.
எனவே அந்த மூலப்பொருளே அந்த வஸ்த்துவுக்கு “வுஜூத்” ஆகும். அந்த வுஜூதுதான் “வுஜூதே ஹகீகீ” எதார்த்தத்தில் வுஜூத் ஆகும். சிருஷ்டிக்கு எதார்த்தத்தில் “வுஜூத்” இல்லை. ஆயினும், அதனை “வுஜூதே இழாபீ” ஒன்றுடன் சேர்த்துப்பாக்கும் வகையிலுள்ள “வுஜூத்” எனப்படுகிறது.

சிருஷ்டிக்கு அல்லாஹ்வுடைய வுஜூது-உள்ளமைதான் கருவாகவும் மூலமாகவுமிருப்பதால் ஒரு வஸ்த்து அதன் மூலத்தை விட்டும் பிரியமாட்டாதென்ற தத்துவப்படி சிருஷ்டி அதன் மூலமான அல்லாஹ்வின் உள்ளமையை விட்டும் ஒருபோதும் பிரியமாட்டாது. மேலும் ஒரு வஸ்த்து அதன் மூலத்துக்கு வேறாகாமல் அது தானானதாயிருப்பது போல் சிருஷ்டி அல்லாஹ்வின் உள்ளமைக்கு வேறாகவுமாட்டாது. இது அதுதான். அது இதுதான். மெய்ப்பொருள் என்ற அடிப்படையில் இரண்டும் வெவ்வேறல்ல. ஒன்றுதான்.
உதாரணமாக தங்கமோதிரம் போன்று.

மோதிரத்துக்கு மூலம் தங்கம்.
மோதிரம் என்பது தங்கத்திலிருந்து வந்துள்ளது. அந்த மூலம்தான் இந்த மோதிரத்தின் “வுஜூத்” ஆகும். அதுவே “வுஜூத் ஹகீகீ” எதார்த்தமான வுஜூத் ஆகும். மோதிரத்துக்கு எதார்த்தத்தில் வுஜூத் இல்லை. இருப்பதுபோல் தெரிவது “வுஜூது இழாபி” ஒன்றுடன் சேர்த்துப்பார்ப்பது கொண்டுள்ள வுஜூத் மட்டும்தான். இது பொய் “வுஜூத்” ஆகும்.
மோதிரத்துக்கு எதார்த்தமான வுஜூத் உண்டென்று யாராவது சொன்னால் மோதிரமென்று ஒரு வஸ்த்து எதார்த்தத்தில் தங்கத்தை விட்டும் வேறாகி தனியாக இருப்பதை அவர் காட்ட வேண்டும். அவ்வாறு காட்ட முடியாது அவர் காட்டுவதாயின் மோதிரத்தின் வடிவத்தை காட்டலாம். அது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். ஏனெனில், அது தங்கத்தின் வடிவமேயாகும். அந்த வடிவம் மோதிரம் என்ற பெயரைப் பெற்றதேயன்றி எதார்தத்தில் தங்கத்துக்கு வேறான தங்கத்தை விட்டும் பிரிந்த தனியான வடிவமல்ல அதாவது தங்கத்தை விட்டும் பிரிந்த தனியான மோதிரமல்ல.

இவ்வாறுதான் அல்லாஹ்வும் அவனுடைய சிருஷ்டிகளுமாகும்.
தங்கத்தை அல்லாஹ்வுக்கும் மோதிரத்தை சிருஷ்டிக்கும் உதாரணமாகக் கொண்டு ஆராய்ந்தால் உண்மை விளங்கும்.
மோதிரத்தின் மூலம் தங்கம்தான் என்றும், மோதிரம் தங்கத்தை விட்டும் பிரியவில்லை என்றும் மோதிரம் தங்கத்துக்கு வேறான தனியான ஒரு பொருள் அல்லவென்றும் சொல்வது தவறா? எதார்த்தத்துக்கு முரணா? அவ்வாறு சொன்னவனை பைத்தியக்காரனென்று சொல்வது புத்திசாலித்தனமா?

அல்லாஹ்வுக்கு அவனின் சிருஷ்டிக்குமுள்ள தொடர்பு தங்கத்துக்கும் மோதிரத்துக்கும் உள்ள தொடர்பு போன்றதேயன்றி மோதிரத்துக்கும் பொற்கொல்லனுக்கும் உள்ள தொடர்பு போன்றதல்ல.
தங்கத்துக்கும் மோதிரத்துக்குமுள்ள தொடர்பு நிலையானதும் முடிவற்றதுமாகும்.
ஆனால் மோதிரத்துக்கும் பொற்கொல்லனுக்குமுள்ளதொடர்பு நிலையானதல்ல. மோதிர வேலைமுடிந்ததோடு அவனின் தொடர்பு துண்டிக்கப்படுகிறது.

எனவே அல்லாஹ்வுக்கும் சிருஷ்டிக்குமுள்ள தொடர்பு;
மோதிரத்துக்கும் தங்கத்துக்குமுள்ளதொடர்பு போன்று, அலைக்கும் நீருக்குமுள்ள தொடர்பு போன்று,
கானல் நீருக்கும் வெப்பக்காற்றுக்குமுள்ள தொடர்பு போன்று
என்றறிதல் அவசியம்.

அல்லாஹ் அனைத்து சிருஷ்டிகளையும் தன்னிலிருந்து படைத்தான்; வெளிப்படுத்தினான்; தோற்றச் செய்தான் என்றால் ஒரு பெட்டிக்குள்ளிருந்த பொருட்களை அப்பெட்டியிலிருந்து வெளிப்படுத்தியதுபோல் என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. இது இரண்டு உள்ளமையைக் குறிக்கும்.
ஒன்று: பெட்டி மற்றது அதிலுள்ள பொருட்கள்.

இரண்டு உள்ளமைகள் இல்லை என்பதே இஸ்லாத்தின் முடிவு. துவிதம் இஸ்லாம் அல்ல.
மேலும், தங்கம்-மோதிரம் என்ற உவமானம் இரண்டுக்குமிடையேயான ஒரு குறிப்பிட்ட மூலப்பொருள் ரீதியான ஒற்றுமையை விளக்க கூறப்பட்டதே தவிர வேறு பல அம்சங்களில் அவ்வுதாரணத்தை பொருத்திக் கொள்ளக்கூடாது.

உதாரணமாக தங்கம் விகாரப்பட்டுத்தான் மோதிரமாக வந்துள்ளது அதனால் அல்லாஹ்வுடைய தாத்-உள்ளமை விகாரப்பட்டு சிருஷ்டியாக வந்துள்ளது என்று எண்ணிவிடக்கூடாது.
“ஹுவல் ஆன கமா கான”
படைப்புகளை படைக்க முன்னர் அவன் எவ்வாறிருந்தானோ அவ்வாறே படைத்த பின்னரும் இருக்கின்றான்.

ஸூபிகளும் இறைஞானிகளும் வஹ்ததுல் வுஜூத் என்ற இறையியல் தத்துவத்தை கற்பனை செய்தோ அல்லது தமது சொந்த கருத்துக்களாகவோ சொல்லவில்லை. ஆயினும் அவர்கள் தமது இந்த வாதத்துக்கு ஆதாரமாக திருக்குர்ஆன் வாசகங்களையும் நபீமொழிகளையுமே கூறுகிறார்கள். குறிப்பாக லா இலாஹ இல்லல்லாஹு என்ற இஸ்லாமிய மூலப் பிரமாணமான திருக்கலிமாவை – திருவசனத்தை ஆதாரமாக கூறுகின்றார்கள்.
“லா இலாஹ இல்லல்லாஹு” என்ற மூலமந்திரமும், “தஸவ்வுப்” என்ற ஸூபிஸமும், அல் குர்ஆனில் குறிப்பிடப்படும் “ஹிக்மத்” என்ற இறைஞானமும் அல்லாஹ் அல்லாத ஒன்றுமில்லை; அவனுக்கு வேறான ஒன்றுமில்லை; எல்லாமாய் உள்ளவன் அவனே; உள்ளது ஒன்றே என்ற “வஹ்ததுல் வுஜூத்” (Oneness of being) தத்துவத்தையே கூறுகின்றன.

 #கலிமாவின்_சரியான_கருத்து_எது?“அல்பர்கதுல்_பரீத் பீ ஷர்ஹி  #கலிமதித்_தவ்ஹீத்”‎الفرقد الفريد فى شرح كلمة التوحيدஎழுதியது...
08/04/2024

#கலிமாவின்_சரியான_கருத்து_எது?

“அல்பர்கதுல்_பரீத் பீ ஷர்ஹி #கலிமதித்_தவ்ஹீத்”

‎الفرقد الفريد فى شرح كلمة التوحيد

எழுதியது: அஸ்செய்யிதுல் உலமா அஷ்ஷெய்ஹ் மெளலவீ அப்துர் றஊப் மிஸ்பாஹி பஹ்ஜி

“தஸவ்வுப்” எனும் ஸூபிஸ ஞானம் கூறும் “வஹ்ததுல் வுஜூத்” மெய்ப் பொருள் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் “அல்கலிமதுத் தையிபா” எனும் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற இறை மறை கூறும் திருவசனம் உலகில் தோன்றிய முதல் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் முதல் அண்ணலெம் பெருமானார் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் உள்ளிட்ட அனைவரும் சொன்ன, தமது சமுகத்திற்குப் போதித்த மார்க்கத்தின் மூல மொழியாகும். மூல மந்திரமாகும். திருக்கலிமாவாகும்.

நபீமாரில் இதை மொழியாத எவருமில்லை. 124,000 நபீமாரும் இதை மொழிந்தவர்களும், இது கூறும் தத்துவத்தை போதித்தவர்களுமேயாவர். இது குறித்தே நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்

‎وَأَفْضَلُ مَا قُلْتُ أَنَا، وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي: لاَ إِلَهَ إِلاَّ اللهُ، وَحْدَهُ، لاَ شَرِيكَ لَهُ»

நானும், எனக்கு முன் வாழ்ந்த நபீமார்களும் பேசிய பேச்சுக்களில் மிகவும் சிறந்தது “லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹூ லா ஷரீக லஹூ” என்பதாகும் என்று கூறியுள்ளார்கள்.
ஆதாரம்: முஅத்தா

இவ்வசனத்தின் வெளிரங்கமாக பொருள் “இபாறதுன் நஸ்” வசனம் காட்டும் பொருள் “அல்லாஹ் அல்லாத எந்த “இலாஹ்” தெய்வமும் - நாயனும் இல்லை” என்பதும், இவ்வசனத்தின் உள்ரங்கமான பொருள் “தலாலதுன் நஸ்” “அல்லாஹ் அல்லாத எந்த ஒரு வஸ்த்தும் - படைப்பும் இல்லை” என்பதுமாகும்.

இவ்விரு கருத்துக்கள் மட்டும்தான் திருக்கலிமா தருகின்ற கருத்தாகும். இது தவிர வேறு கருத்து திருக்கலிமாவுக்கு இல்லை.

யாராவதொருவர் என்னிடம் திருக்கலிமாவுக்கு “வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு நாயன் யாருமில்லை” என்று சிலர் சொல்கிறார்களே என்று கேட்பாராயின் அவ்வாறு சொல்பவர்களிடமே அதற்கான ஆதாரமும், விளக்கமும் கேட்க வேண்டுமென்று நான் அவருக்குச் சொல்வேன்.

ஸூபிஸ வழி செல்லும் நாங்கள் இருக்கின்ற வசனத்திற்கு மட்டுமே பொருள் சொல்வோம். இல்லாத வசனம் ஒன்றை நாங்களாக கற்பனை செய்து சொல்லும் போலிகள் அல்ல. குருடர்களுமல்ல.
‎. ذَهَبْتُ إِلَى الدُّكَّانِ என்ற வசனத்திற்கு கடைக்குச் சென்றேன் என்றுதான் நாங்கள் பொருள் சொல்வோமேயன்றி வாழைப்பழம் வாங்குவதற்காக கடைக்குச் சென்றேன் என்று சொல்லமாட்டோம். இதேபோல் اِغْتَسَلَ عَبْدُ اللهْ என்ற வசனத்திற்கு அப்துல்லாஹ் குளித்தான் என்றுதான் பொருள் சொல்வோமேயன்றி முழுக்காளியாயிருந்து குளித்தான் என்று சொல்லமாட்டோம். சுருக்கமாகச் சொன்னால் இல்லாத ஒன்றைச் சொல்லமாட்டோம். இருக்கின்ற ஒன்றை விடவும் மாட்டோம்.

மேலே நான் எழுதிய இரண்டு கருத்துக்கள் மட்டும்தான் திருக்கலிமாவின் கருத்துக்களாகுமே தவிர வேறு கருத்து நான் ஆய்வு செய்து அறிந்த வகையிலும், இதற்கு முன் வாழ்ந்த ஸூபீ மகான்கள் ஆய்வு செய்து அறிவித்த வகையிலும், இதேபோல் இக்காலத்தில் உலகில் வாழும் ஸூபீ மகான்கள் ஆய்வு செய்து அறிவிக்கின்ற வகையிலும் இல்லவே இல்லை. இதேபோல் இஸ்லாமிய வரலாற்றில் இதுவரை தோன்றி மறைந்த மகான்கள், ஸூபீகள், ஆரிபீன் - இறைஞானிகளிற் பலர் நான் திருக்கலிமாவுக்கு கூறிய கருத்தையே பேசியும், எழுதியும் வந்துள்ளார்கள்.

எனினும் ஸூபீ மகான்கள் அல்லாத, நம்பத்தகுந்த இஸ்லாமிய வரலாற்றில் பிரசித்தி பெற்ற சில இமாம்கள் திருக்கலிமாவுக்கு வலிந்துரை கொண்டு பொருள் கூறியிருப்பதற்கான காரணம் அதற்குரிய நேரடிப் பொருள் கூற அவர்கள் பயந்ததேயாகும்.

#ஏன் அவர்களுக்குப் பயம் வந்தது?

திருக்கலிமாவுக்கு வலிந்துரை கொள்ளாமல் அவ்வசனத்துக்கான நேரடிப் பொருள் கொண்டால் அல்லாஹ் அல்லாத எந்த ஓர் “இலாஹ்” தெய்வமும் இல்லை என்றும், அல்லாஹ் அல்லாத எந்த ஒரு வஸ்த்தும் இல்லையென்றும் கருத்து வரும். அதாவது இக்கருத்தை விரித்துப் பார்த்தால் “எல்லாம் அவனே” என்று கருத்து வரும்.

அல்லாஹ்வின் படைப்பு என்று எவையெல்லாம் உள்ளனவோ அவையெல்லாம் அவனே என்று சொல்ல வேண்டியும், நம்ப வேண்டியும் ஏற்படும். இது வழிகேட்டிலும் மாபெரும் வழிகேட்டைக் கொண்டு வரும் என்று பயந்து அவர்கள் திசையை மாற்றியிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். நான் இவ்வாறு நினைத்தாலும் ஸூபிஸத்தில் ஊறி அதிலேயே “பனா” ஆன மகான்கள் இக்காரணத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவர்கள் இந்த அறிவை மறைப்பது திருக்குர்ஆனுக்கு முற்றிலும் விரோதமானதென்று அடித்துக் கூறுவார்கள். இவ் வாதத்திற்கு ஆதாரமாக பின்வரும் திரு வசனத்தை ஆதாரமாகக் கூறுவார்கள்.
‎هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ

“அல்லாஹ்தான் றஸூல் நாயகமவர்களை நேர்வழி கொடுத்தும், சத்திய மார்க்கம் கொடுத்தும் தூதராக அனுப்பினான். அந்த மார்க்கத்தை “இள்ஹார்” பண்ணுவதற்காகவேயாகும். இதை இணை வைத்தோர் வெறுத்தாலும் சரியே!” என்று கூறியுள்ளான்.
திருமறை: 09-33

“இள்ஹார்” என்றால் என்ன? இச்சொல் வெளிப்படையாக, பட்டவர்த்தனமாக, பகிரங்கமாக என்ற பொருளுக்குரிய சொல்லாகும். மார்க்கத்தைப் பகிரங்கப்படுத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்டதினால் திருக்கலிமா “லா இலாஹ இல்லல்லாஹ்” என்பதை மக்கத்து கபிர்கள் மத்தியில் பகிரங்கமாகச் சொல்வதற்காக மலை மேல் ஏறினார்கள் எம்பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸாம் அவர்கள்.

அறிஞர்களிற் சிலர் நினைப்பது போல் பகிரங்கமாகச் சொல்வதால் வழிகேட்டிற்கு வழி வகுக்கும் என்றிருந்தால் எம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் ஏன் மலையேறி “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று சொன்னார்கள். நபீ பெருமானின் முதலுரையான அவ்வுரை கேட்ட மக்க நகர் மக்களில் எவரும் அறபு அல்லாத வேறு மொழியை தாய் மொழியாகக் கொண்டவராக இருக்கவில்லை. அவர்கள் பெரும் பண்டிதர்களில்லாது போனாலும் அறபிகளாகவே இருந்தார்கள். படித்தவர்கள், அறிவுள்ளவர்கள், சிந்தனையாளர்கள், ஆய்வாளர்கள் குறைவாகவும், சாமானிய மக்கள் அதிகமாகவும் இருந்தார்கள்.

நபீ பெருமான் அவர்கள் அவர்களுக்கு விளங்கும் பாணியிலேயே தங்களின் கொள்கைப் பிரச்சாரம் செய்திருக்க வேண்டும். விளங்காத பாணியில் செய்திருக்க முடியாது.

அவர்கள் அந்த மக்களை மலைக்கு அழைத்து அவர்கள் மலை உச்சியில் நின்று கொண்டு கலிமாப் பிரகடனம் செய்ததேன்? கீழே நின்று சொன்னால் அனைவருக்கும் கேட்காதென்பதினாலேயே மலை மீதேறிச் சொன்னார்கள். இதை விளங்காமலேயே முன்னர் வாழ்ந்தவர்களிற் சிலர் இருந்தனர். இப்போதும் சிலர் உள்ளனர். இவர்கள் தமது வாதத்திற்கு ஆதாரமாக إِفْشَاءُ سِرِّ الرُّبُوْبِيَّةِ كُفْرٌ என்ற வசனத்தைக் கூறுகின்றார்கள். இதன் பொருள் றப்புடைய - அல்லாஹ்வின் இரகசியத்தை வெளிப்படுத்துதல் “குப்ர்” நிராகரிப்பாகும் என்பதாகும். இது ஸூபீ மகான்களின் பேச்சு என்பதை நாமும் மறுக்கவில்லை. இரகசியம் என்பது அடிப்படை “தவ்ஹீத்” பற்றிய அறிவல்ல. அது அதற்கப்பால் “இல்ஹாம்”, “கஷ்பு” போன்ற அறிவுகளை மட்டுமே குறிக்கும். தவிர திருக்கலிமாவோடு தொடர்பான, “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பான அறிவைக் குறிக்காது. அவற்றைக் குறிக்குமென்றிருந்தால் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மலைமீதேறி, படித்த, படிக்காத அனைவரையும் அழைத்துச் சொல்லியிருக்கத் தேவையில்லை.

இன்னுமொரு விடயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். நான் மேலே சொன்னது போல் ஸூபீகள் அல்லாத “ஷரீஆ” என்ற வரம்போடு நிற்கின்ற பிரசித்தி பெற்ற அறிஞர்களிற் சிலர் பயந்ததினாலேயே “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற ஞானம் பேசுவதை தடை செய்ததும், அவர்கள் பேசாமல் இருந்ததுமாகும். வேறு காரணத்திற்காக அல்ல. இதை உலமாஉகள் உள்ளிட்ட அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு பயந்த முன்னேர் பின்வருமாறும் பயங்கர வேலையொன்று செய்துள்ளார்கள். இது கூட பயத்தினால் செய்தார்களேயன்றி இஸ்லாம் மார்க்கத்தில் இத்தகைய அறிவு ஞானத்தை பேசுவதற்கு எந்த ஒரு தடையும் திருக்குர்ஆனிலும் கூறப்படவில்லை. ஹதீதுகளிலும் கூறப்படவில்லை.

‎كَلِّمِ النَّاسَ عَلَى قَدْرِ عُقُوْلِهِمْ

“மக்களுடன் அவர்களின் புத்திக்கு ஏற்றவாறு பேசுங்கள்” என்ற பெருமானாரின் அல்லது “ஆரிபீன்” ஞானிகளின் அறிவுரையை ஆதாரமாக வைத்துக் கொண்டு “வஹ்ததுல் வுஜூத்” பேசுவது கூடாதென்போர் மூளையை சற்று சலவை செய்ய வேண்டும். அல்லது தமக்கு மூளைக் கோளாறு உண்டு என்பதைப் புரிந்து மௌனிகளாயிருக்க வேண்டும்.

மேற்கண்ட இவ்வசனம் எவரால் சொல்லப்பட்டதாயினும் அதை சிந்தனை செய்து ஆய்வு செய்தால் மக்களின் புத்திக்கேற்ப பேசுங்கள் என்று கூறியுள்ளார்களேயன்றி لا تُكَلِّمْ என்ற வசனத்தைப் பயன்படுத்தி பேச வேண்டாம் என்று கூறவில்லை.

“வஹ்ததுல் வுஜூத்” பேசுகின்ற நானும், என்னுடனிருக்கின்ற தியாகிகளான உலமாஉகளும் சிறு பிள்ளைகளுக்கு அவர்கள் விளங்கும் பாணியிலும், படித்தவர்களுக்கு அவர்கள் விளங்கும் பாயிணிலும், படிக்காதவர்களுக்கு அவர்கள் விளங்கும் பாயிணிலுமே பேசி வருகிறோம். அழகாகச் சொல்கிறோம். அப்பமென்றால் புட்டுக் காட்ட வேண்டுமா? என்று கேட்பார்கள். ஆனால் நாங்களோ அப்பத்தை புட்டே காட்டுகிறோம். அது கூட விளங்கவில்லையென்றால் அவர்கள் “நஸீப்” நற்பாக்கியம் இல்லாதவர்களேயாவர்.

பிரசித்தி பெற்ற “ஷரீஆ”வின் அறிஞர்களிற் பலர் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை பயத்தால் மறுப்பது போலும், மறைப்பது போலும் இன்னும் திருக்குர்ஆன் வசனங்களில் 29 வசனங்களையும் மூடி மறைக்கிறார்கள். ஏன்? பயத்தினால்தான், அவற்றை அடுத்த தொடரில் எழுதுவேன்.

“அல் பர்கதுல் பரீத்” எனும் எனது சிறிய நூலில் திருக்கலிமாவின் பொருள் இதுதான் என்று சுருதிப் பிரமாணம் கொண்டும், யுக்திப் பிரமாணம் கொண்டும் நிறுவி எழுதியுள்ளேன். இந்நூலை திரும்பத் திரும்ப வாசித்து சத்தியத்தை அறிந்து கொள்ளுமாறும், விளங்காது போனால் இறைஞானத் துறையில் அனுபவமுள்ள அறிஞர்ளுடன் இணைந்து வாசிக்குமாறும் அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன்.

தொடரும்....

‎الفرقد الفريد فى شرح كلمة التوحيد

தொடர் 02

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் #மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

நான் எழுதி அண்மையில் வெளியிட்ட இந்நூலின் துணை நூல்கள் மூன்று. ஒன்று – அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு ஹாதித் தகலைன் அப்துர் றஹ்மான் லக்னவீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய “கலிமதுல் ஹக்” எனும் நூல்.

இரண்டு - குத்புல் வாஸிலீன், றயீஸுல் மஜாதீப் அஷ்ஷெய்கு அப்துல் காதிர் அஸ்ஸூபீ, அல் ஹைதர்ஆபாதீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “அல்ஹகீகா” எனும் நூல்.

மூன்று - ஷெய்குல் இஸ்லாம், அல் இமாமுன் நிஹ்ரீர் பக்றுத்தீன் அர் றாஸீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “லவாமிஉல் பையினாத்” எனும் நூல்.

‎(السّيّد الشّيخ هَادِى الثَّقَلَين عبد الرحمن اللّكنوي رضي الله عنه) كلمة الحقّ

இந்நூலை தற்போது எந்த நாட்டிலும் எடுக்க முடியாதுள்ளது. தமிழ் நாட்டிலும், கேரளாவிலுமுள்ள நூலகங்களிலும், புத்தக விற்பனை நிலையங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. இவ்விரு மாநில உலமாஉகளிடம் விசாரித்த போது இப்படியொரு நூலின் பெயரைக் கூட தாம் கேள்விப்படவில்லை என்று அவர்கள் சொன்னார்கள். எனினும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் ஹழ்றத் மட்டும் அப்படியொரு “கிதாப்” இருப்பது தனக்குத் தெரியுமென்று கூறியுள்ளார்கள். வேறு விபரம் அவருக்குத் தெரியவில்லையாம்.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந் நூலில் அக்காலத்தில் ஒரு சில பிரதிகள் மட்டுமே அச்சிட்டு எழுதிய அந்த மகான் தனது “முரீது” சிஷ்யர்களுக்கு மட்டும் கொடுத்திருக்கலாம், அந்தப் பிரதிகள் அவர்களின் “முரீது” சிஷ்யர்களுக்கிடையிலேயே இருந்து வெளியுலகுக்கு வராமல் மறைந்திருக்கலாம்.

சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் இஸ்லாமிய அறிஞர்களாலும், “ஆரிபீன்” இறைஞானிகளாலும் எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான நூல்கள் அறபு நாடுகளிலுள்ள நூலகங்களில் கையெழுத்துப் பிரதிகளாகவே இருப்பதாக அறிய முடிகிறது.

ஸ்பெயினில் பிறந்து சிரியா - டமஸ்கஸ் தலை நகரில் வாழ்ந்து மறைந்தவர்களும், 900 நூல்களுக்கு மேற்பட்ட நூல்கள் எழுதியவர்களும், “வஹ்ததுல் வுஜூத்” என்ற பெயரில் இறைஞானத்தை வெளிப்படுத்தியவர்களுமான அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு, ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய பல நூல்கள் இன்றுவரை அச்சிடப்படாமல் கெய்ரோ - மிஸ்ர் நாட்டிலுள்ள நூலகங்களில் கையெழுத்துப் பிரதிகளாகவே இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இவ்வாறு இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய பல்லாயிரம் அறிஞர்களினதும், ஸூபீ மகான்களினதும், இறை ஞானிகளினதும் ஆக்கங்கள் கையெழுத்துப் பிரதிகளாகவே இன்று வரை அறபு நாடுகளிலுள்ள நூலகங்களில் உள்ளன. ஸூபிஸ நூல்களுக்கு முஸ்லிம்களிடம் பரவலான ஆதரவு இல்லாமற் போனதால் ஸூபிஸ ஞானக் கலை மங்கி மறைந்து போகத் தொடங்கிற்று.

இக்கலை மங்கி மறைந்ததற்கு இன்னுமொரு காரணம் உண்டு. ஹிஜ்ரீ 300 காலப்பகுதியில் வாழ்ந்த இமாம் மன்சூர் ஹல்லாஜ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் இறைஞான உச்சக்கட்ட தத்துவமான أنا الحقُّ நான்தான் மெய்ப்பொருள் - இறைவன் என்று சொன்ன போது அவர்கள் சித்திரைவதை செய்து கொல்லப்பட்ட வரலாறு இஸ்லாமிய உலகம் அறிந்த ஒன்றேயாகும்.

இந்த வரலாற்றை அறிந்த அவர்களுக்குப் பின் தோன்றிய இறைஞானிகளிற் பலர் இறைஞானத்தை பகிரங்கமாகச் சொல்வதைத் தவிர்த்து மிக நெருங்கிய ஒரு சிலருக்கு மட்டும் காதுக்குள் சொல்லலானார்கள்.

இமாம் ஹல்லாஜ் அவர்கள் கொல்லப்பட்ட சம காலத்தில் வாழ்ந்த “ஸெய்யிதுத் தாயிபா” ஸூபீகளின் தலைவர் என்று ஸூபீ மகான்களாலேயே பட்டம் சூட்டப்பட்ட இமாம் இறைஞானி ஜுனைத் அல் பக்தாதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஹல்லாஜ் கொல்லப்பட்ட பின் இறைஞானம் பகிரங்கமாகப் பேசுவதை முற்றாக கைவிட்டு வீட்டில் ஒதுங்கிக் கொண்டார்கள். பின்வரும் வரிகளைப் பாருங்கள்.

‎وقد كان الحسن البصـري، وكذلك الجنيد والشّبلي وغيرُهم لا يُقَرِّرُوْنَ علمَ التّوحيد إلّا فى قُعُورِ بُيوتِهم بعد غَلْقِ أبوابهم وجَعلِ مَفاتيحِها تحتَ وَرِكِهم، ويقولون أَتُحِبُّون أن تُرمى الصحابةُ والتابعون الّذين أخذنا عنهم هذا العلمَ بالزندقة بُهتانا وظُلما،
‎(اليواقيت، ج 1، ص 17)

இறைஞானிகளான ஹஸனுல் பஸரீ, ஜுனைத் பக்தாதீ, அபூ பக்ர் ஷிப்லீ ஆகியோரும், இன்னுமிவர்கள் போன்ற இறைஞானிகளிற் பலரும் “தவ்ஹீத்” தொடர்பான அகமியங்கள் பேச விரும்பினால் தமது வீடுகளிலுள்ள உட்கதவுகளைப் பூட்டி அவற்றின் திறப்புகளைத் தமது தொடைகளுக்குக் கீழ் வைத்துக் கொண்டே பேசுவார்கள். இதற்கு இவர்கள் காரணமும் சொல்வார்கள். அதாவது நாங்கள் இந்த அறிவை நபீ தோழர்களிடமிருந்தும், தாபியீன்களிடமிருந்தும் பெற்றோம். அத்தகைய நபீ தோழர்களையும், “தாபிஊன்” அவர்களைத் தொடர்ந்தவர்களையும் பொய்யாகவும், அநீதியாகவும் “சிந்தீக்” - காபிர், முர்தத்-என்று இழித்துரைக்கப்படுவதை நீங்கள் விரும்புகின்றீர்களா? என்று கேட்பார்கள்.

இதன் சுருக்கம் என்னவெனில் (அவ்லியாஉகள், இறைஞானிகள், “தவ்ஹீத்” உடைய அறிவையும், ஸூபிஸ ஞானத்தையும் பெற்றது நபீ தோழர்களினதும், தாபியீன்களினதும் வழியாகவேயாகும். அத்தகைய மகான்களிடமிருந்து நாங்கள் பெற்ற அறிவை பகிரங்கமாகச் சொல்லும் போது பொறாமைக் காரர்களும், அறிவிலிகளும் அந்த மகான்களை ஏசுகிறார்கள். கீழ்த்தரமாகப் பேசுகிறார்கள். இதை நாங்கள் விரும்பவில்லை என்று காரணம் கூறியுள்ளார்கள்) என்பதாகும்.
அல்யவாகீத், பக்கம் 17,
பாகம் 01, ஆசிரியர்: அஷ்ஷஃறானீ

இமாம் ஹஸனுல் பஸரீ, இமாம் ஜுனைத், இமாம் ஷிப்லீ போன்றோர் மேற்கண்டவாறு கூறியிருப்பதால் “தவ்ஹீத்” ஞானம், “வஹ்ததுல் வுஜூத்” ஞானம், ஸூபிஸ ஞானம் போன்ற இறை தத்துவங்களை வெளிப்படையாகக் கூறுவது பழை என்பது கருத்தல்ல. அவ்வாறு அவர்கள் செய்தது அவர்களின் பேணுதலையும், அவர்களுக்கு ஏற்பட்ட அச்சத்தையுமே காட்டுகிறது.

பின்வரும் வரிகளையும் வாசித்துப் பாருங்கள்.

‎ وكان سيّدي عليُّ الوفا رضي الله عنه إذا سُئل لِمَ رَمَزَ القومُ كلامَهم؟ يقول اِفْهَمُوْا هذا المثالَ، تَعْلَمُوْا سبَبَ رَمَزِهِمْ،
‎ وذلك أنّ الدنيا غَابَةٌ، ونُفُوْسُ الْمَحْجُوْبِيْنَ عَنْ حَقَائِقِ الْحَقِّ الْمُبِيْنِ مِنْ أَهْلِهَا كَالسِّبَاعِ وَالْوُحُوْشِ الْكَوَاسِرِ، وَالْعَارِفُ بَيْنَهُمْ كإِنْسَانٍ دَخَلَ لَيْلًا إِلَى تِلْكَ الْغَابَةِ، وَهُوَ حَسَنُ الْقِرَائَةِ وَالصَّوْتِ، فَلَمَّا أَحَسَّ بِمَا فِيْهَا مِنَ السِّبَاعِ الْكَوَاسِرِ اِخْتَفَى فِى بَطْنِ شَجَرَةٍ وَلَمْ يَجْهَرْ بِالْقُرْآنِ يَتَغَنَّى بِهِ هُنَاكَ حَذَرًا مِنْهُمْ، أَلَيْسَ يَدُلُّ اِخْتِفَائُهُ عَنْهُمْ وَعَدَمُ رَفْعِ صَوْتِهِ بِالْقُرْآنِ عَلَى أَنَّهُ عَلِيْمٌ حَكِيْمٌ، إِذْ لَوْ تَرَائَى لَهُمْ، أَوْ أَسْمَعَهُمْ صَوْتَهُ وَقِرَائَتَهُ لَمْ يَهْتَدُوْا بِهِ وَلَمْ يَفْهَمُوْا عَنْهُ وَسَارَعُوْا إِلَى تَمْزِيْقِ جَسَدِهِ وَأَكْلِ لَحْمِهِ، وَكَانَ هُوَ الْمُلْقِيَ لِنَفْسِهِ إِلَى التَّهْلُكَةِ، وَذَلِكَ حَرَامٌ،

‎ فَافْهَمُوْا هَذَا الْمِثَالَ، قولوا لمن يَعْتَرِضُ على العارفين فى رَمْزِهم لكلامهم، قد أنزل الله على محمد صلّى الله عليه وسلّم فَوَاتِحَ سُوَرٍ كَثِيْرَةٍ من القرآن مرموزةٍ، وقال تعالى وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ أي بِقِرَائَتِكَ وَلَا تُخَافِتْ بها، فَأَمَرَهُ أن لا يَجْهَرَ بالقرآن حيث يَسْمَعُهُ الْجَهَلَةُ الْمُنْكِرُوْنَ، فَيَسُبُّوْنَ بِجَهْلِهِمْ مَنْ لَا يَجُوْزُ سَبُّهُ وَلَا يُخْفِيْهِ عَمَّنْ يؤمن به، فكما لم يدلّ إخفاء النبي صلى الله عليه وسلم قرائتَه عن الجاهلين المنكرين على بطلان قرائته، ولا قَدَحٍ فى صِحَّتِها، كذلك لا بد إخفاء العارفين كلامَهم عنِ المجادلين بغير علم على بطلانه ومخالفته للشريعة، فافهم،
அறபு வரிகளின் சுருக்கமான விளக்கம்:

இறைஞானிகள் இறைஞான உச்சக்கட்ட அகமியங்களை அனைவரும் விளங்கும் பாணியில் சொல்லாமல் சிலேடையாகவும், ஜாடையாகவும் ஒரு சிலர் மட்டும் விளங்கும் பாணியிலும் சொல்வதுண்டு. அதாவது பலர் சொல்லியுமுள்ளார்கள். அவர்கள் ஏன் அவ்வாறு சொன்னார்கள்? அவ்வாறு சொல்வதற்கு ஆதாரமுண்டா? என்பது தொடர்பான செய்திதான் பின்வரும் செய்தியாகும்.

(அஸ்ஸெய்யித் அலீ இப்னு வபா றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் பின்வருமாறு கேட்கப்பட்டது.

இறைஞானகளிற் சிலர் இறை அகமியங்களை அனைவரும் விளங்கும் பாணியில் தெளிவாகச் சொல்லாமல் சிலேடையாகவும், ஜாடையாகவும் சொன்னதேன்?

விடை:

நான் சொல்லும் உதாரணத்தை சரியாக விளங்கிக் கொண்டால் இறைஞானிகள் அவ்வாறு செய்ததற்கான காரணத்தைப் புரிந்து கொள்ளலாம்.

இவ்வுலகம் என்பது ஒரு பயங்கரக் காடு என்று வைத்துக் கொள். இறை அகமியம் தெரியாதவர்கள் அக்காட்டில் வாழும் பயங்கர மிருகங்களான சிங்கம், கரடி, புலி போன்றவர்களாவர்.

குறித்த விலங்குகளுக்கு மத்தியில் வாழும் இறைஞான மகான் ஒரு நாள் அந்த பயங்கர மிருகங்கள் வாழும் காட்டிற்கு இரவில் போனார். அவர்கள் அழகிய குரலும், அழகிய ஓதலுமுள்ளவர். அவரால் ஓதாமலிருக்க முடியாது. ஆயினும் பயங்கர அக்காட்டுக்குச் சென்றவர் அங்குள்ள பயங்கர மிருகங்களைக் கண்ட போது தற்பாதுகாப்புக் கருதி ஒரு மரத்தடியில் மறைந்து கொண்டு ஓதாமலும், சத்தமில்லாமலும் இருந்தார்.

அவர் இவ்வாறு செய்தது அவர் அறிவுள்ளவரும், புத்தியுள்ளவரும் என்பதற்கு ஆதாரமாகுமா? அல்லது அறிவில்லாத மடையன் என்பதற்கு ஆதாரமாகுமா? என்று கேட்ட அலீ இப்னு வபா அவர்கள். இல்லை சத்தியமாக இல்லை. அவர் அறிவும், புத்தியும் உள்ளவர்தான் என்று அவர்களே பதில் கூறிவிட்டு பின்வருமாறு கூறியுள்ளார்கள். அவன் அவ்வாறு மறைந்திருக்காமல் தன்னைக் காட்டிக் கொண்டு தனது சத்தத்தையும் உயர்த்திக் கொண்டிருந்தாராயின் அக்காட்டு மிருகங்கள் அவரைக் கீறிக் கிழித்து அவனைக் கொன்று சாப்பிட்டு முடித்துவிடும். இவன் தன்னைத் தானே அழிவில் தள்ளியவனாகிவிடுவான். இது “ஹறாம்”. அதாவது ஒருவன் தனது அறியாமையால் தன்னைத் தானே அழிவில் தள்ளுவது மார்க்கத்தில் விலக்கப்பட்டதாகும்.

தொடரும்....

அல்பர்கதுல் பரீத் பீ ஷர்ஹி கலிமதித் தவ்ஹீத்”
தொடர்_03
‎الفرقد الفريد فى شرح كلمة التوحيد

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் #மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

கண்ணியத்திற்குரிய உலமாஉகளின் கவனத்திற்கு!

நான் எழுதி றபீஉனில் அவ்வல் 12ம் இரவு காத்தான்குடி 05 பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலில் நடைபெற்ற “ஸலவாத்” மஜ்லிஸ் நிகழ்வின் போது வெளியிட்ட “அல்பர்கதுல் பரீத் பீ ஷர்ஹி கலிமதித் தவ்ஹீத்” என்ற அறபு நூலின் தமிழாக்கமும், விளக்கமும் மிகவிரைவில் நான் எழுதி வெளியிடவிருக்கும் 2000 பக்கங்களுக்கும் அதிக பக்கங்கள் கொண்ட “அல்கிப்ரீதுல் அஹ்மர்” எனும் நூலில் இடம் பெறும்.

உலமாஉகளுக்கு நான் கூறும் பணிவான ஆலோசனையும், அறிவுரையும் என்னவெனில் நான் எழுதியுள்ள இந்நூலில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் என்னுடையவையல்ல. நான் பெயர் குறிப்பிட்டு மேலே கூறிய மூன்று நூல்களிலும் அவற்றின் ஆசிரியர்கள் எழுதிய கருத்துக்களேயாகும். அவர்கள் கூறியுள்ள கருத்துக்களை அலசி ஆய்வு செய்தால், திருக்கலிமாவுக்கு நாம் சொல்லிக் கொண்டிருக்கும் “வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு நாயன் யாருமில்லை” என்ற கருத்து முற்றிலும் பிழை என்பது ஆதாரங்கள் மூலம் தெளிவாகும்.

தமிழ் நாட்டில் “நெல்லிக்குப்பம்” என்று ஓர் ஊர் உண்டு. அவ் ஊரிலுள்ள அஷ்ஷெய்கு அப்துர் றஹ்மான் ஆலிம் என்பவர் திருக்கலிமாவின் உண்மையான, எதார்த்தமான பொருளைப் புரிந்து கொள்ளும் நோக்கத்தோடு தமிழ் நாடு முழுவதும் அலைந்து பல நூறு தரமான உலமாஉகளைச் சந்தித்தார். அவர்களில் எவரும் இவரின் அறிவுத் தாகத்தை தீர்க்கவில்லையாதலால் “லக்னோ” எனும் ஊரில் “கறாமத்” அற்புதமுள்ள ஒரு “காமில்” சம்பூரணம் பெற்ற ஒரு மகான் இருக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரைச் சந்திப்பதற்காக “லக்னோ” சென்றார்கள் நெல்லிக்குப்பம் சின்ன அப்துர் றஹ்மான் அவர்கள்.

லக்னோ நகரிலுள்ள “காமில்”, ஹாதித் தகலைன் - هَادِى الثَّقَلَيْنِ “மனு, ஜின்களை நல்வழிப்படுத்தும் மகான்” அஷ்ஷெய்கு அப்துர் றஹ்மான் றஹிமஹுல்லாஹ் அவர்களை சின்ன அப்துர் றஹ்மான் சந்தித்து அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி சில காலம் அங்கேயே தங்கியிருந்து அவர்களிடமிருந்து திருக்கலிமாவின் சரியான பொருளைக் கற்றார்கள். இவர்களுக்கு - சின்ன அப்துர் றஹ்மான் அவர்களுக்கு ஏற்பட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் கொடுத்து அவருக்கு தெளிவை ஏற்படுத்தினார்கள். இறுதியில் இவர்களுக்கு “பைஅத்” எனும் ஞானதீட்சையும் வழங்கி அவர்கள் அறபு மொழியில் எழுதிய “கலிமதுல் ஹக்” எனும் நூலில் ஒரு பிரதியும் கொடுத்து நெல்லிக்குப்பம் அனுப்பி வைத்தார்கள்.

நெல்லிக்குப்பம் மீண்ட அஷ்ஷெய்கு சின்ன அப்துர் றஹ்மான் றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் ஷெய்கு அவர்கள் கொடுத்த அறபு நூலை ஆய்வு செய்து அந்த நூலை தமிழில் மொழியாக்கம் செய்ய விரும்பினார்கள். ஆயினும் அந்த நூல் முழுவதையும் மொழியாக்கம் செய்ய அவர்களால் முடியாமற் போயிற்று. எனினும் அந்த நூலில் தங்களுக்கு விளங்கிய விடயங்களை மட்டும் மொழியாக்கம் செய்து “முஸ்லிம் அத்வைத மூல மொழி” என்று அதற்குப் பெயரிட்டு நூலாக வெளியாக்கினார்கள்.

அவர்களின் முஸ்லிம் அத்வைத மூல மொழி எனும் நூல் இன்று அச்சில் உள்ளது. எனினும் இந்நூல் தமிழ் நாட்டில் சில நூலகங்களிலும், சில புத்தகக் கடைகளிலுமே வாங்க முடியும். இது கூட தேடித்தான் எடுக்க வேண்டும்.

தரமான ஓர் ஆலிம் - மார்க்க அறிஞன் இந்நூலையோ, நான் எழுதி வெளியிட்ட “அல்பர்கதுல் பரீத் பீ ஷர்ஹி கலிமதித் தவ்ஹீத்” என்ற நூலையோ திரும்பத் திரும்ப வாசித்தாராயின் அவர் திருக்கலிமாவை சரியாக விளங்கிய அறிவுச் சீமானாகிவிடுவார். நான் கீழ் மாடியில் நின்று பேசினால் அவர் மேல் மாடியில் நின்று ஆயிரம் ஒலி பெருக்கி மூலம் திருக்கலிமாப் பிரகடனம் செய்யவும் துணிந்து விடுவார். பரந்து விரிந்த இப்புவியில் வாழும் 300 கோடி முஸ்லிம்களில் திருக்கலிமாவின் சரியான கருத்தை விளங்கியவர் 50 ஆயிரம் பேர் இருப்பார்களா? என்று நான் சந்தேகப் படுகிறேன்.

எம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் வாழ்ந்த நூற்றாண்டும், அதையடுத்த இரண்டு நூற்றாண்டுகளுமே திருக்கலிமாவின் பொருளில் ஊடுருவல் செய்யப்படாத காலங்களாகும். அதன்பின் கலிமாவின் பொருளில் புரட்டல், ஊடுருவல் ஏற்பட்டுவிட்டன.

இதையே நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்
‎خَيْرُ الْقُرُوْنِ قَرْنِيْ، ثُمَّ الَّذِيْنَ يَلُوْنَهُمْ، ثُمَّ الَّذِيْنَ يَلُوْنَهُمْ، ثُمَّ يَفْشُو الْكَذِبُ،

என்று கூறினார்கள்.

நூற்றாண்டுகளிற் சிறந்தது எனது நூற்றாண்டு. சிறப்பில் அதையடுத்தது அடுத்த நூற்றாண்டு. அதையடுத்தது அடுத்த நூற்றாண்டு என்று நபீ பெருமான் அலைஹிஸ்லாது வஸ்ஸலாம் மூன்று நூற்றாண்டுகள் - 300 ஆண்டுகள் சிறந்ததென்றும், அதன் பிறகு பொய் பரவுமென்றும் அருளினார்கள்.

இந்த நபீ மொழி மூலம் நபீ மணி அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் வாழ்ந்த நூற்றாண்டிலும், அதையடுத்த இரண்டு நூற்றாண்டுகளிலும் - 300 வருடங்களிலும் பொய் பரவவில்லையென்றால் எதில் பொய் பரவவில்லை என்று விளங்கிக் கொள்ள வேண்டும். உலக விடயத்தில் பொய் பரவவில்லையா? அல்லது மார்க்க விடயத்தில் பொய் பரவவில்லையா? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

பெருமானார் அவர்கள் பொதுவாகத்தான் சென்னார்களேயன்றி என்ன விடயத்தில் பொய் பரவவில்லையென்று ஒரு விடயம் குறித்து அவர்கள் சொல்லவில்லை. இந்நிலையில் உலக விடயத்தில் பொய் பரவவில்லை என்று சொன்னார்களா? அல்லது மார்க்க விடயத்தில் பொய் பரவவில்லை என்று சொன்னார்களா? என்பது குறித்து நபீ மொழியில் விளங்கப்படவுமில்லை.

எனவே, இவ்விடத்தில் மார்க்க விடயத்தில் பொய் பரவவில்லை என்றுதான் நாம் பொருள் கொள்ள வேண்டும். உலக விடயத்தில் என்று பொருள் கொள்ள முடியாது. அது பற்றி நபீ பெருமான் அவர்கள் சொல்லத் தேவையுமில்லை.

எனவே, நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பொய் பரவாத 300 வருடங்கள் என்று குறிப்பிட்டது மார்க்கத்தில் பொய் பரவாக்காலமென்பதையே குறிக்கும்.

நபீகளார் குறித்த 300 ஆண்டுகளும் திருக்கலிமாவில் பொய் பரவாக் காலம் என்று நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது திருக்கலிமாவின் வசனமான “லா இலாஹ இல்லல்லாஹ்” என்பதற்கு “அல்லாஹ் அல்லாத எந்த ஓர் “இலாஹ்” நாயனும் இல்லை” என்ற பொருள்தான் இருந்து வந்ததேயன்றி எவரும் இதற்கு மாறான பொருள் சொல்லவில்லை. இவ்வாறு பொருள் சொல்வது என்ன விளக்கத்தை தருமென்றால் “அல்லாஹ்வான “இலாஹ்” நாயன் உண்டு” என்ற பொருளைத் தரும்.

திருக்கலிமாவான “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனத்தின் மேலே நான் எழுதிய நேரடிப் பொருளான “அல்லாஹ் அல்லாத எந்த ஓர் “இலாஹ்” நாயனும் - தெய்வமும் இல்லை” என்று திருக்கலிமாவுக்கு பொருள் கொண்டால் இன்று உலகில் வணங்கப்படுகின்ற யாவும் அல்லாஹ் தானானவை என்றல்லவா சொல்ல வேண்டியும், நம்ப வேண்டியும் வரும் என்று பயந்தததினால்தான் முன்னோர்களிற் சிலர் திசையை மாற்றி பொய்யான - இல்லாத வலிந்துரைப் பொருள் கொண்டு “வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு நாயனோ, தெய்வமோ இல்லை” என்று மாற்றிக் கொண்டார்கள். இதற்குக் காரணம் அவர்களுக்கு ஏற்பட்ட பயமே தவிர திருக்கலிமாவின் பொருள் அவர்கள் சொல்வது போலில்லை. உண்மையான பொருளை அவர்கள் விளங்காமலேயே இருந்தார்கள் என்று சொல்லவுமில்லை.

நான் எழுதி வெளியிட்டுள்ள “அல்பர்கதுல் பரீத் பீ ஷர்ஹி கலிமதித் தவ்ஹீத்” என்ற திருக்கலிமா விளக்க நூலில் எனது சொந்தக் கருத்து ஒன்றுமே இல்லை. இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் யாவும் மேலே நான் பெயர் குறித்த மூன்று மகான்களின் கருத்துக்களேதான்.

இச்சிறிய நூலும், இன்னும் சில மாதங்களில் வெளிவரவுள்ள 2000 பக்கங்களுக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட “அல்கிப்ரீதுல் அஹ்மர்” என்ற நூலும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை சுருதிப் பிரமாணங்கள், மற்றும் யுக்திப் பிரமாணங்கள் மூலம் நிறுவி எழுதப்பட்ட நூல்களாகும். அண்மையில் வெளியிட்ட “அல்பர்கதுல் பரீத்” எனும் நூலில் திருக்கலிமாவுக்குரிய விளக்கத்தை மட்டுமே எழுதியுள்ளேன்.

உலமாஉகளில் யாராவது இந்நூலில் பிழை இருக்கக் கண்டால் அப்பிழை குறித்து எனக்கு அறிவிக்குமாறும், அல்லது எனது நூலை மறுத்து ஆதாரங்களுடன் அது பிழையென்று ஓர் நூல் எழுதி நிறுவுமாறும் அன்பாய் கேட்டுக் கொள்கிறேன். இஸ்லாம் கூறும் இவ்வழியை விட்டு மொட்டைக் கடிதம் எழுதுவதையும், வெள்ளிக்கிழமை “குத்பா” பிரசங்கத்தின்போது எனது நூல் பற்றி தாறுமாறாய்ப் பேசுவதையும் தவிர்க்குமாறும் அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்நூல் கிடைக்காத உலமாஉகள் தமது முகவரியை எமது அலுவலகத்திற்கு அனுப்பி பிரதியை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.

முற்றும்.

Address

Medina
00966

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஏகத்துவ மெய்ஞானம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category