People's Voice

People's Voice கசத்தாலும் சொல்வது உண்மை!

ஒலுவில் - களியோடை ஆற்று பகுதியில் குழந்தையொன்று கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது வேண்டுமென்று உருவாக்கப்பட்ட கட்டுக்கதை! ...
30/09/2025

ஒலுவில் - களியோடை ஆற்று பகுதியில் குழந்தையொன்று கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது வேண்டுமென்று உருவாக்கப்பட்ட கட்டுக்கதை!

குழந்தையின் தாய் - தந்தை கைது,
விசாரணையில் பல விடயங்கள் அம்பலம்!

ஒலுவில் - களியோடை ஆற்றை அண்டிய பகுதியில், கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் பெற்றோரை, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குழந்தையின் தந்தை ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், தாய் நிந்தவூரை பிரதேசத்தவர் எனவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தார்கள்.

தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் 17 வயதையுடையவர்கள் எனவும், அவர்களுக்கு திருமணமாகாத நிலையிலேயே, இந்தக் குழந்தை பிறந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.

குழந்தையின் தாயும் தந்தையும் காதலித்து வந்த நிலையில், தந்தையின் உறவினர்கள், இவர்களின் காதலுக்கு எதிர்ப்பை தெரிவித்து வந்ததாக அறிய முடிகிறது. இவ்வாறான நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) குறித்த பெண் தனது வீட்டில் சிசுவைப் பிரசவித்துள்ளார்.

இவ்விடயத்தை அறிந்து கொண்ட குழந்தையின் தந்தை, அவரின் காதலியின் வீடு சென்று; "எனது குழந்தையை நான் வளர்க்கிறேன் தாருங்கள்" என்று பெற்றுக்கொண்டு வந்துள்ளார் என, விசாரணைகளில் தெரிய வந்துள்ளது என்று, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, குழந்தையின் தந்தை -அவரின் சின்னம்மா (தாயின் சிறிய சகோதரி) ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, களியோடை ஆற்றுப் பகுதியில் கைவிடப்பட்டுள்ள பெண் குழந்தையொன்றைக் கண்டெடுத்துள்ளேன்; உங்களுக்கும் பெண் குழந்தை இல்லை. எனவே, இந்தக் குழந்தையை வளர்ப்பீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு அவரின் சின்னம்மாவும் சம்மதித்துள்ளார்.

இந்த நிலையில், குழந்தையின் தொப்புள்கொடி வெட்டப்பட்ட பகுதிக்கு, முறையாக சிகிச்சையளிக்கப்படாமையினாலும், அந்த இடத்திலிருந்து இரத்தம் கசிந்ததாலும், ஒலுவில் வைத்தியசாலைக்கு அந்தக் குழந்தையை அவர்கள் கொண்டு சென்றனர்.

குறித்த அந்த தந்தை தனது சின்னம்மாவிடம் சொன்ன அந்தப் பொய்யின் காரணமாகவே, 'குழந்தையொன்று ஒலுவில் - களியோடை ஆற்றை அண்டிய பகுதியில், நபரொருவரால் கண்டெடுக்கப்பட்டதாக' கதை பரவியது.

எனவே ஆற்றங்கரையில் குழந்தையோன்று அவ்வாறு கண்டெடுக்கப்படவில்லை என்பதே உண்மை.

இந்தப் பின்னணியில்தான், குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோரை, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்து, தற்போது -அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

முன்னராக, குறித்த குழந்தை, ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவியொருவருடையதாக இருக்கலாம் என - சமூக ஊடகங்களில் சிலர் அபாண்டமாக எழுதியிருந்தனர். அவ்வாறு எழுதப்பட்டமையைக் கண்டித்து, அந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், சமூக ஊடகத்தில் பதிவொன்றை இட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், அவ்வாறு எழுதியவர்கள் மற்றும் அதனை பகிர்ந்தவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.


உற்பத்திக்கு தேவையான சோளன் பற்றாக்குறையால் திரிபோசா மாவுக்கான உற்பத்தி தற்காலிக இடைநிறுத்தம்!
30/09/2025

உற்பத்திக்கு தேவையான சோளன் பற்றாக்குறையால் திரிபோசா மாவுக்கான உற்பத்தி தற்காலிக இடைநிறுத்தம்!

29/09/2025

இலங்கை தேயிலை கின்னஸ் உலக சாதனை மற்றும் நோபல் பரிசைப் பெற்றுள்ளது!

படித்தவர்களை கொண்ட அரசாங்கத்தின் அமைச்சர்
சுனில் ஹந்துன்னெத்தி உலகிற்கு கூறுகிறார்!

இலங்கை தேயிலை வாரியம் மற்றும் கொழும்பு தேயிலை வணிகர்கள் சங்கம் ஏற்பாடு செய்த வருடாந்திர ‘சிலோன் ஸ்பெஷல் எஸ்டேட் டீ’ தொண்டு ஏலத்தில், உலகில் இதுவரை விற்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த தேயிலைக்கான நோபல் பரிசை இலங்கையின் புதிய விதானகண்டா சிலோன் பிளாக் டீ (FFExSp) அதிகாரப்பூர்வமாக வென்றுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெட்டி அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (29) நடைபெற்ற விழாவிற்குப் பிறகு ஊடகங்களுக்குப் பேட்டியளித்தபோது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். குறித்த இந்த கருத்தானது அரசியல் மட்டத்தில் பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு முக்கியமான பொறுப்பில் இருக்கும் அமைச்சர் விடயங்களை முறையாக ஆராயாமல் பொறுப்பற்ற முறையில் பேசி, சிலோன் தேயிலை பற்றிய மிக முக்கியமான தகவலை கேலி செய்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கைக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, ஜப்பானில் நடந்த உலக கண்காட்சியான ஒசாகாவுடன் இணைந்து நடத்தப்பட்ட ஏலத்தில் ஒரு கிலோகிராம் புதிய விதானகண்டா FFExSp கருப்பு தேயிலை 125,000 ஜப்பானிய யென் (தோராயமாக US$860) என்ற சாதனை விலையைப் பெற்றுள்ளது.

இந்த குறிப்பிடத்தக்க சாதனை, சிலோன் தேயிலையின் விதிவிலக்கான தரம், பாரம்பரியம் மற்றும் உற்பத்தி சிறப்பிற்கு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

2023 ஆம் ஆண்டு கொழும்பு தேயிலை ஏலத்தில் புதிய விதானகந்த தேயிலை தொழிற்சாலை அதன் OP1 தர தேயிலைக்கு சாதனை விலையை ஈட்டியது. இதனால் கின்னஸ் உலக சாதனைக்கு விண்ணப்பிக்க இது ஒரு வாய்ப்பாகவும் அமையலாம்.

ஆனால் அமைச்சர் சுனில் ஹந்துன்னெட்டி, எந்தப் பொறுப்புமின்றி, இதை சமீபத்தில் ஜப்பானில் நோபல் பரிசு பெற்றதாக கூறுகிறார்.

தேயிலை விற்பனை சாதனைக்கு நோபல் பரிசா? நோபல் பரிசு என்பது என்ன? எதற்காக வழங்கப்படும்? என்பதுபற்றி அடிப்படை அறிவுகூட இல்லாமல் இந்தக்கருத்தை அவர் கூறியிருக்கின்றார்.

நோபல் பரிசு வழங்கப்படுவது இயற்பியல், வேதியியல், மருத்துவம்/உடலியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றிற்காகவே.

உலகின் மிக விலையுயர்ந்த தேயிலைக்கான சாதனையை அமைப்பது ஒரு வணிக மற்றும் விவசாய சாதனை என்றாலும், அது கின்னஸ் உலக சாதனை போன்ற அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சாதனையாகும், ஆனால் அது நோபல் பரிசுகள் வழங்கப்படும் அறிவியல், இலக்கியம் அல்லது சமூக-அமைதித் துறைகளுக்குப் பொருந்தாது.


29/09/2025

மன்னாரில் அரசுக்கெதிராக திரண்ட மாபெரும் மக்கள் கூட்டமும் எதிர்ப்புப் போராட்டமும்!


28/09/2025

வாழும் வரலாறு,
முன்னாள் அமைச்சர், முதல்வர்,
ஏ எல் எம் அதாவுல்லாஹ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Happy Birthday தலைவா 🎂🥳

Are SIYA MEME 😂
28/09/2025

Are SIYA MEME 😂

ஆற்றோரம் அநாதரவாக கிடந்த குழந்தை!ஒலுவில் அஷ்ரப் நகர் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தை ஒன்று ஆற்...
28/09/2025

ஆற்றோரம் அநாதரவாக கிடந்த குழந்தை!

ஒலுவில் அஷ்ரப் நகர் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தை ஒன்று ஆற்றோரம் அநாதரவாக விடப்பட்டுள்ளது.

மீன்பிடிக்க சென்ற ஒருவர் குழந்தையை ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தற்பொழுது குழந்தை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

27/09/2025

Breaking News 🚨

இந்தியாவின் தமிழ்நாட்டில் சோகம்!
நடிகர் விஜயின் தமிழ்நாட்டு பேரணியில் கூட்டநெரிசல்,
சுமார் 30 பேர் மரணம்!

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (டிவிகே) தலைமை நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்யின் பேரணி பாரிய சோகத்தில் முடிவுற்றது, இதில் சில குழந்தைகள் உட்பட குறைந்தது 29 பேர் மரணமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விஜய்யின் பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கான நடிகர்-அரசியல்வாதி ஆதரவாளர்கள் அந்த இடத்தில் கூடியதால், கூட்ட நெரிசல் போன்ற சூழ்நிலை ஏற்பட்டது. ஊடக அறிக்கைகளின்படி, விஜய் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது கூட்டம் பெருகி, கட்டுப்படுத்த முடியாததாகிவிட்டது.

நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, சுமார் 7.45 மணிக்கு, கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் நடந்த 'வெளிச்சம் வெளியிடு' ('வெளிச்சம் இருக்கட்டும்') நிகழ்வில் ஏராளமான மக்கள் திரண்டு, தடுப்புகளை அப்புறப்படுத்தினர். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பில், குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டனர், மேலும் அங்கு இருந்த தன்னார்வலர்கள் மற்றும் காவல்துறையினர் எதையும் செய்ய முடிவதற்கு முன்பே பலர் மிதிக்கப்பட்டனர்.

கட்சித் தொழிலாளர்கள் மற்றும் ஒரு சில குழந்தைகள் உட்பட பலர் மயக்கமடைந்து கீழே விழுந்தனர், இதனால் விஜய் தனது பேச்சை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பொறியியல் துறையில் சிரேஷ்ட பேராசிரியராக பதவி உயர்வு பெறும் முதலாவது முஸ்லீம் பேராசிரியர்,அக்கரைப்பற்று அப்துல் மஜீத் முச...
27/09/2025

பொறியியல் துறையில் சிரேஷ்ட பேராசிரியராக
பதவி உயர்வு பெறும் முதலாவது முஸ்லீம் பேராசிரியர்,

அக்கரைப்பற்று அப்துல் மஜீத் முசாதிக் சேர்!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீட பேராசிரியரும் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவருமான மதிப்பிற்குரிய AM. முஸாதிக் அவர்கள் கடந்த 2024 நவம்பர் முதலாம் திகதி அமுலாகிய வகையில் சிரேஷ்ட பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

மேலும் எமது நாட்டில் பொறியியல் துறையில் சிரேஷ்ட பேராசிரியராகப் பதவி உயர்வு பெறும் முதலாவது முஸ்லிம் பொறியியல் பேராசிரியர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொறியியல்/ எந்திரவியல் துறையில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய அனுபவம், பலதரப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டமை மற்றும் துறைசார் அனுபவங்களூடான சமூகப் பங்களிப்பு போன்ற இன்னோரன்ன சேவைகளுக்காக எமது சமூகம் சார்பாக மனதார வாழ்த்துகின்றோம்.

தன்மீது அவதூறு பரப்பும் விதமாகக் கருத்து வெளியிட்டதாகக் கூறி, பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவுக்கு எ...
27/09/2025

தன்மீது அவதூறு பரப்பும் விதமாகக் கருத்து வெளியிட்டதாகக் கூறி, பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவுக்கு எதிராக இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச, சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.

சட்ட நடவடிக்கைக்கான காரணம்: பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, நாட்டில் "போதைப்பொருள் அச்சுறுத்தலுக்குப் பின்னால்" நாமல் ராஜபக்‌ஷ இருப்பதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 10 ஆம் திகதி நாமல் ராஜபக்‌சவின் சார்பில் சட்டத்தரணி சங்க கருணாரத்ன, பிரதி அமைச்சரிடம் இருந்து 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி சட்டக் கடிதம் அனுப்பினார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, சுனில் வட்டகலவின் சார்பில் சட்டத்தரணி மஞ்சுல பாலசூரியா, நாமல் ராஜபக்‌சவிடம் இருந்து 200 கோடி) ரூபா நஷ்டஈடு கோரி கடந்த 22ஆம் திகதி பதில் அறிவிப்புக் கடிதத்தை வெளியிட்டார்.

இந்த பின்னணியில் இந்த அவதூறு குற்றச்சாட்டுகளை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது என்று வலியுறுத்திய நாமல் ராஜபக்‌ஷ, நேற்று தாம் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

27/09/2025

இந்த உரையைத்தான் மாலிமாவ சகோதரங்கள் அனுரவின் உரையைன்று போற்றியும் புகழ்ந்தும் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறார்கள்,

ஒரு நாட்டின் ஜனாதிபதியின் உரைகூட உண்மையானதாக இல்லாமல் வேறொருவரின் வசனத்தை அப்படியே பிரதிபண்ணி எடுத்து பயன்படுத்தியிருப்பது பரவாயில்லை என்று எடுத்துக்கொண்டாலும்,

அதனைப் போற்றிப் புகழ்ந்து பாராட்டி தம்பட்டம்
அடித்துக்கொள்வது எவ்வளவு பெரிய முட்டுத்தனம்?


27/09/2025

“பௌத்த நாடு! - இப்போது இது ஒரு LGBTQ நாடாக மாறிவிட்டது.”

ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கும் அநுரவின் அரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட அர்ச்சுணா எம்பி!


Address

Riyadh

Alerts

Be the first to know and let us send you an email when People's Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share