People's Voice

People's Voice குரலற்ற மக்களின் குரல்!

பெரும்பெரும் கட்டடங்களும் விமான நிலையமும், மைதானங்களும், துறைமுகங்களும் அபிவிருத்திக்கும் உண்டாக்கி திறப்பு விழா நடத்த ந...
13/08/2025

பெரும்பெரும் கட்டடங்களும் விமான நிலையமும், மைதானங்களும், துறைமுகங்களும் அபிவிருத்திக்கும் உண்டாக்கி திறப்பு விழா நடத்த நேரமில்லாமல் வேலைய செய்த அரசியல்வாதிகளின் வரிசையில்,

155 பஸ் ரூட்டுக்கும், தண்ணீர் டெப்புக்கும் ரிபன் வெட்டி திறப்பு நடாத்தும் அதிசயங்களும் மிளிர்கிறது!


எல்லைமீறும் ஆபத்து!அதிகரிக்கும் இஸ்ரேலியர்களின் ஆதிக்கம்!!சர்ஃபிங் தொடர்பான உபகரணங்கள் விற்கும் ஒரு கடை “சுப்ரீம் சர்ஃப்...
12/08/2025

எல்லைமீறும் ஆபத்து!
அதிகரிக்கும் இஸ்ரேலியர்களின் ஆதிக்கம்!!

சர்ஃபிங் தொடர்பான உபகரணங்கள் விற்கும் ஒரு கடை “சுப்ரீம் சர்ஃப்” என்னும் பெயரில் அருகம்பேயில் திறக்கப்பட்டது, இது சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துள்ள இஸ்ரேலியர் ஒருவருக்கு சொந்தமானது.

எமது நாட்டின் குடிவரவு மற்றும் அதனோடு தொடர்புடைய சட்டங்களை மீறி இந்த வியாபாரத்தின் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை சுரண்டி இலங்கையிலிருந்து பணத்தை உழைத்து வெளியில் கொண்டு செல்லப்படுகிறது.

மேலும் அதிலுள்ள இன்னுமொரு முரண்பாடு என்னவென்றால், அவர்கள் அவர்களுடைய கடையில் இஸ்ரேலியர்களுக்கு மட்டுமே 40% கழிவினையும் வழங்குகிறார்கள். சில ஆயிரம் டாலர்களுக்கு ஆசைப்பட்டு அதனைப்பெற்று மகிழ்ச்சியடையும் சில உள்நாட்டவர்களும் இவர்களுக்கு ஆதரவளிக்கிறார்கள்.

இலங்கையில் பொத்துவில் அருகம்பேயின் தற்போதைய கள யதார்த்தம் இதுதான். இதனால் இப்போது இலங்கைக்கு எவ்வித பாதிப்பையும் வழங்குவதில்லை போலத்தான் இருக்கும். ஆனால்,

இலங்கை கலாச்சாரம், இலங்கை மரபுகள், எதுவும் இப்போது அருகம்பே கடற்கரையில் இல்லை. இதற்கு காரணம் உள்நாட்டு துரோகிகள் மட்டுமல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இப்போதைய மற்றும் முன்னைய அரசாங்கங்களும் இதனை ஆதரிக்கின்றது.

அதுமட்டுமன்றி இன்றைய அரசாங்கம் இந்த குற்றவாளிகளுக்கு விசா இல்லாமல் நாட்டுக்கு வருவதை அனுமதிப்பது அவர்கள் இலங்கையில் தங்கள் குற்றச் செயல்களை மேலும் விரிவுபடுத்த வழியை ஏற்படுத்தும்.

இதனை இன்னுமின்னும் அமைதி காத்து, இஸ்ரேலியர்களின் ஆதிக்கத்தை உயர்த்திக்கொண்டே இருக்கிறார்கள் அரசாங்கம்!

கடைசில் கஷ்டப்படப்போவது முழு நாடும்தான் என்பதை மறக்கவோ மறுக்கவோ முடியாது!

நகலெடுக்கப்பட்டது - Tassy Dahlan



மகிந்தவுக்கு சிலை வைத்து கௌரவிக்க வேண்டும்! திலித் ஜயவீர வலியுறுத்தல்.முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை ரத்துச் ...
12/08/2025

மகிந்தவுக்கு சிலை வைத்து கௌரவிக்க வேண்டும்!
திலித் ஜயவீர வலியுறுத்தல்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை ரத்துச் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானம் மகிந்த ராஜபக்சவை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திலித் ஜயவீர குற்றம் சாட்டியுள்ளார்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர மேற்கண்ட கருத்தை முன்வைத்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், யுத்தத்தை வெற்றி கொண்ட மகிந்த ராஜபக்சவை இழிவுபடுத்துவதும், அவமானப்படுத்துவதுமே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அதற்காகவே முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை ரத்துச் செய்யும் தீர்மானத்தை முன்னெடுத்துள்ளார்கள். ராஜபக்ச குடும்பத்தின் பேராசை குறித்து நான் பல தடவைகள் விமர்சித்துள்ளேன்.

ஆனாலும் மகிந்த ராஜபக்ச என்பவர் சிலை வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய, கௌரவிக்கப்பட வேண்டிய ஒரு வீரர்.

அரசாங்கம் உங்களது வீரனை வெளியில் போடப் போகின்றோம் என்று தொடர்ச்சியாக அவரை அவமானப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது.

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்துச் செய்வதன் மூலம் எவ்வளவு தொகையை மிச்சப்படுத்த முடியும் என்ற கணக்கு விபரங்களை பகிரங்கப்படுத்த அரசாங்கம் தயாரா? அது தொடர்பான உண்மைத் தகவல்களை வெளியிடுவார்களா என்றும் திலித் ஜயவீர கேள்வியெழுப்பியுள்ளார்.


12/08/2025

தேர்தலுக்கு முன்னர் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு பாடசாலை அமைப்போம் என்றார்கள்,

இப்போது ஆட்சிக்கு வந்து 1500க்கும் அதிகமான பாடசாலைகளை மூடப்போகிறோம் என்கிறார்கள்!

இதுதான் மேடைக்கும்,
களத்திற்கும் இடையிலான வித்தியாசம்!

பொய்யர்களும் அவர்தம் ஆதரவாளர்களும் வாழ்க!

12/08/2025

பொத்துவில் பிரதேச சபை இஸ்ரேலிய சபாத் இல்லம் தொடர்பாக ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றிவிட்டது என்பதையும் உடனடியாக அதனை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் விஜித்த ஹேரத்திடம் கூறுங்கள்!

- தவிசாளர் முசாரப்பின் அதிரடி!

12/08/2025

இணையத்தளங்கள் மூலம் பொருட்கள் சேவைகளை ஓர்டர் செய்வதில் மிகவும் நிதானமாகவும் கவனமாகவும் இருங்கள்!

-hands

சுற்றுலாப் பயணிகளுக்கு லைசன்ஸ் வழங்கும் அரசின் முடிவுக்கு நாமல் ராஜபக்‌ஷ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்!சுற்றுலாப் பயணிகளுக்...
12/08/2025

சுற்றுலாப் பயணிகளுக்கு லைசன்ஸ் வழங்கும் அரசின் முடிவுக்கு நாமல் ராஜபக்‌ஷ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்!

சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டுக்குள் வந்தவுடன் வாகனம் ஓட்டுவதற்கான அனுமதி வழங்கும் அரசின் முடிவுக்கு, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ச கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இந்தக் கொள்கை, சுற்றுலாத் துறையின் முக்கிய பங்குதாரர்களுடன் கலந்தாலோசிக்காமல் அறிவிக்கப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ச கூறினார். போக்குவரத்து மற்றும் வழிகாட்டி சேவைகளை நம்பி வாழும் ஆயிரக்கணக்கானோர் இந்தத் துறையில் உள்ளனர்.

தற்போதுள்ள ஒப்பந்தங்களின்படி, இலங்கை ஏற்கனவே சர்வதேச ஓட்டுநர் உரிமைகளை அங்கீகரிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். எனவே, வாகனம் ஓட்டும் சிறப்புரிமை அத்தகைய உரிமம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் அண்மையில் தான் மேற்கொண்ட பயணங்களின்போது, இந்த நடவடிக்கை சுற்றுலாத் துறையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அஞ்சும் ஊழியர்களிடமிருந்து ஏராளமான புகார்களைப் பெற்றதாக ராஜபக்ச தெரிவித்தார்.

எனவே, இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு விரிவான கலந்தாலோசனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.


12/08/2025

மன்னாரில் நடு இரவிலும் தொடரும் போராட்டம்!

காற்றாலை அமைப்பதற்கு எதிராக கடந்த பத்து நாட்களாக மன்னார் மக்கள் எதிர்ப்பு போராட்டத்தை நடாத்தி வருகின்றனர்.

இரவு பகல் பாராது போராடும் மக்கள், நள்ளிரவிலும் நடு வீதியில் அமர்ந்து மன்னாருக்குள் காற்றாடி உபகரணங்களை விசேட பாதுகாப்புடன் கொண்டுவந்த கணரக வாகனங்களையும் திருப்பி அனுப்பினர்!


மீகொட பகுதியில் துப்பாக்கிச்சூடு!முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மரணம்!!மீகொடவில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்...
12/08/2025

மீகொட பகுதியில் துப்பாக்கிச்சூடு!
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மரணம்!!

மீகொடவில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் அந்தப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

"ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவ, மீகொடவில் உள்ள அட்டிகல்லே சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த மர்ம நபர்களால் சுடப்பட்டார்" என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய விசாரணை நடந்து வருகிறது.


பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) அருண ஜெயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை (NCM) எதிர்க்...
12/08/2025

பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) அருண ஜெயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை (NCM) எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்ற சபாநாயகரிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரேரணை நேற்று சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டிருந்தாலும், சபாநாயகர் பொலன்னறுவையில் இருந்ததால் அது இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் துணைப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகரவின் ஈடுபாடு மற்றும் நலன் முரண்பாடு குறித்து கடுமையான கவலைகளைக் காரணம் காட்டி, அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்க்கட்சி முடிவு செய்தது.

ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய முக்கிய சம்பவங்களின் போது, வவுணதீவு காவல்துறையினர் கொலைகள் மற்றும் சாய்ந்தமருது குண்டுவெடிப்பு உள்ளிட்ட முக்கிய சம்பவங்களின் போது, பாதுகாப்புப் படை (கிழக்கு) தளபதியாக ஜெயசேகரவின் பங்கு குறித்து இந்த பிரேரணை எச்சரிக்கையை எழுப்புகிறது. குண்டுவெடிப்புகளுக்கு முன்னதாக இந்த இரண்டு சம்பவங்களும் முக்கியமான தருணங்களாகக் கருதப்படுகின்றன.

தற்போது பாதுகாப்பு அமைச்சில் சக்திவாய்ந்த பதவியை வகிக்கும் ஜெயசேகர, நடந்துகொண்டிருக்கும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ள துணை அதிகாரிகள் அல்லது சாட்சிகளை பாதிக்கக்கூடும், இதனால் பாரபட்சமற்ற தன்மை ஆபத்தில் ஆழ்த்தப்படலாம் என்பதால், நலன் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அது கூறுகிறது.

ஜெயசேகரவை அவரது அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு இந்த பிரேரணை பாராளுமன்றத்தை வலியுறுத்துகிறது, அவர் பதவியில் இருக்கும் வரை விசாரணை செயல்பாட்டில் பொதுமக்கள் மற்றும் நிறுவன நம்பிக்கையை மீட்டெடுக்க முடியாது என்று வாதிடுகிறது.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலான அருண ஜெயசேகர, நவம்பர் 2024 இல் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார், பின்னர் பாதுகாப்பு பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது!


தேசிய ரீதியில் சுமார் 185 முஸ்லிம் பாடசாலைகளின் மாணவர்கள் இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியிருந்தனர், இதில் எ...
12/08/2025

தேசிய ரீதியில் சுமார் 185 முஸ்லிம் பாடசாலைகளின் மாணவர்கள் இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்,

இதில் எல்லா பாடங்களிலும் Aசித்தி (9A) பெற்ற முஸ்லிம் பாடசாலைகளின் வரிசைப்படுத்தலில் அக்கரைப்பற்று அல் முனவ்வறா கனிஷ்ட கல்லூரி தேசிய ரீதியாக 9ம் இடத்தையும், மாகாண ரீதியாக 3ம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்தில் மாத்திரம் பல்வேறு நிபந்தனைகளுடன் நாட்டில் கஞ்சா செடியை பயிரிட ஏழு வெளிநாட்...
12/08/2025

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்தில் மாத்திரம் பல்வேறு நிபந்தனைகளுடன் நாட்டில் கஞ்சா செடியை பயிரிட ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை முதலீட்டு சபையின் ஊடாக இந்த முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

மீரிகம பிரதேசத்தில் இதற்காக தற்போது 64 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இந்த கஞ்சா பயிரிடப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கஞ்சா பயிரிடும் முதலீட்டாளர்களிடம் 20 லட்சம் பிணை தொகை அறவிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Address

Riyadh

Alerts

Be the first to know and let us send you an email when People's Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share