People's Voice

People's Voice கசத்தாலும் சொல்வது உண்மை!

அமெரிக்காவுடன் நாம் எந்தவொரு ஒப்பந்தமும் செய்யவில்லை, டிரம்ப் எப்போதும் கோழைத்தனமாகப் பின்வாங்குகிறார்🚨-டொனால்ட் ரம்ப் வ...
11/06/2026

அமெரிக்காவுடன் நாம் எந்தவொரு ஒப்பந்தமும் செய்யவில்லை, டிரம்ப் எப்போதும் கோழைத்தனமாகப் பின்வாங்குகிறார்🚨

-டொனால்ட் ரம்ப் வெளியிட்ட செய்தியை ஈரான் மறுதலித்துள்ளது!

இன்று இரவு ஈரான் மீது தாக்குதல் நடத்தும் தனது அச்சுறுத்தலில் இருந்து டிரம்ப் பின்வாங்கியதைக் கேலி செய்து, ஈரான் தகவல் வெளியிட்டுள்ளது.

“டிரம்ப் எப்போதும் கோழைத்தனமாகப் பின்வாங்குகிறார்' (Trump Always Chickens Out) என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான ராணுவத் தாக்குதல் அச்சுறுத்தலில் இருந்து பின்வாங்கியதை அடுத்து, அமெரிக்காவுடன் எந்தவொரு ஒப்பந்தமும் செய்யவில்லை என்று ஈரான் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.

ஈரான் செய்தி ஊடகங்கள் டிரம்பின் இந்த திடீர் பின்வாங்கலை "TACO" (Trump Always Chickens Out - டிரம்ப் எப்போதும் கோழைத்தனமாகப் பின்வாங்குகிறார்) என்று சமூக வலைத்தளங்களில் கடுமையாகக் கேலி செய்து வருகின்றன.

ஈரான் தனது நிபந்தனைகளுக்குப் பணியவில்லை என்றால், அதன் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார்.

ஆனால், தாக்குதல் நடத்தவிருந்த சில மணி நேரங்களுக்கு முன்பு, ஈரானுடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், உயர்மட்ட ஈரானியத் தலைமை அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறி டிரம்ப் தாக்குதல் திட்டத்தை ரத்து செய்தார்.

டிரம்பின் இந்த அறிவிப்பை ஈரானின் அரசு மற்றும் ராணுவத் தரப்பு முழுமையாக மறுத்துள்ளது. அமெரிக்கா தனக்குத்தானே பேச்சுவார்த்தை நடத்திக் கொள்வதாக ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர்கள் விமர்சித்துள்ளனர்.

ஈரானின் இசுலாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) சார்ந்த தஸ்னிம் செய்தி நிறுவனம் (Tasnim News), டிரம்ப் மீண்டும் தங்களுக்குப் பயந்து பின்வாங்கிவிட்டார் என்றும், ஈரான் மீண்டும் அவரை "TACO" செய்யக் கட்டாயப்படுத்தியுள்ளது என்றும் பதிவிட்டுள்ளது.

அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்த முயன்றால், அதன் விளைவாக ஏற்படும் போர் ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் சாம்பலாக்கும் என்று ஈரானிய ஆயுதப் படைகளின் மத்திய கட்டளைத் தளபதி அலி அப்துல்லாஹி எச்சரித்துள்ளார்.

அமெரிக்க-ஈரான் மோதலால் ஹோர்மூஸ் நீரிணை பகுதியிலான கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, உலகளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அக்கரைப்பற்றில் சிறப்பான முறையில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தினம்🚨உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 2026.06.09 அன்று...
11/06/2026

அக்கரைப்பற்றில் சிறப்பான முறையில் நடைபெற்ற
உலக சுற்றுச்சூழல் தினம்🚨

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 2026.06.09 அன்று அக்கறைப்பற்று ஆதாவுல்லாஹ் அரங்கில் நடைபெற்ற விழாவில் தேசிய காங்கிரஸ் தலைவரும் அக்கறைப்பற்று மாநகர முதல்வருமான கௌரவ ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அக்கறைப்பற்று மாநகர சபை, வலயக் கல்வி அலுவலகம், பிரதேச செயலகம், சர்வோதயம் மற்றும் யுனிசெப் ஆகிய நிறுவனங்களின் இணைந்த ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கறைப்பற்று பிரதேச சபை தவிசாளர், அக்கறைப்பற்று மாநகர சபை உறுப்பினர்கள் அக்கறைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி, அக்கறைப்பற்று வலயக்கல்வி ஆசிரியர்கள் மாணவர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது உரையாற்றிய தேசிய காங்கிரஸ் தலைவர், “இயற்கை வளங்களை பாதுகாப்பது இன்று உலக மக்களின் மிக முக்கியமான பொறுப்பாக மாறியுள்ளது. காலநிலை மாற்றம், அதிக வெப்பம், வெள்ளப்பெருக்கு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற சவால்களை உலகம் எதிர்கொண்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

மேலும், “இயற்கை என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல. இறைவன் மனித வாழ்க்கைக்காக படைத்த அருட்கொடையாகும். மரங்கள், ஆறுகள், குளங்கள், மழை, நிலம், மிருகங்கள் அனைத்தும் மனித வாழ்வின் அடிப்படைகளாகும். அவற்றை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்” என்றும் குறிப்பிட்டார்.

மாணவர்களை நோக்கி உரையாற்றிய அவர், “நாளைய உலகம் உங்களுடையது. எதிர்கால சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இன்றைய மாணவர் சமூகத்திடமே உள்ளது. எமது முன்னோர்கள் எமக்கு இயற்கை வளமிக்க உலகத்தை வழங்கினர். அதைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

குப்பை முகாமைத்துவம், மரநடுகை, நீர்வள பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவு உற்பத்தி ஆகியவற்றின் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் உலகம் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தாலும், உணவு பாதுகாப்பும் இயற்கை வளங்களும் மனித வாழ்வின் அடிப்படை தேவைகளாகவே தொடரும் என தெரிவித்தார்.

இறுதியாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை பாடசாலைகள், வீடுகள் மற்றும் சமூக மட்டங்களில் தொடர்ந்து முன்னெடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வானது அனைத்து நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் தேசிய காங்கிரஸ் தலைவர் அக்கறைப்பற்று மாநகர சபை முதல்வர் ஏ எல் எம் அதாவுல்லா அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

゚viralシ

இன்றைய ஈரான் மீதான தாக்குதலை இரத்துச் செய்கிறேன் என்று அறிவித்தார் டொனால்ட் ட்ரம்🚨ஈரானுடனான பேச்சுவார்த்தைகள், ஈரானியத் ...
11/06/2026

இன்றைய ஈரான் மீதான தாக்குதலை இரத்துச் செய்கிறேன் என்று அறிவித்தார் டொனால்ட் ட்ரம்🚨

ஈரானுடனான பேச்சுவார்த்தைகள், ஈரானியத் தலைமையின் மிக உயர்ந்த மட்டத்தை எட்டி ஒப்புதல் பெற்றதைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிரான திட்டமிடப்பட்ட இராணுவத் தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், புதன்கிழமை மாலை ஈரானுக்கு எதிராகத் தாக்குதல்களையும் குண்டுவீச்சுகளையும் நடத்த அமெரிக்கா தயாராகி வந்ததாகவும், ஆனால் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை கைவிடப்பட்டதாகவும் டிரம்ப் கூறினார்.

அமெரிக்கா, இஸ்ரேல், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், துருக்கி, பாகிஸ்தான், பஹ்ரைன், குவைத் மற்றும் எகிப்து உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினராலும் முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் கலந்துரையாடல்களும் இறுதி அம்சங்களும் அங்கீகரிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான நேரம் மற்றும் இடம் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று டிரம்ப் கூறினார்.

இருப்பினும், இந்த ஒப்பந்தம் முழுமையாக இறுதி செய்யப்படும் வரை தற்போது நடைமுறையில் உள்ள கடற்படை முற்றுகை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

゚viralシ

களத்திற்கு வருகிறாரா ரணில்?🚨நீண்டநாள் கழித்து ரணில் தலைமையில் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு!ஐக்கிய தேசியக் கட...
11/06/2026

களத்திற்கு வருகிறாரா ரணில்?🚨

நீண்டநாள் கழித்து ரணில் தலைமையில் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு!

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று (11) பிற்பகல் நடைபெற்றது.

கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் பலரின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு மற்றும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்சி அமைப்பை மீண்டும் வலுப்படுத்துவதற்கும், அதனை மறுசீரமைப்பதற்கும் செயல்படுத்தப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து பல முக்கிய ஆலோசனைகளும் கருத்துகளும் இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஏனைய அரசியல் கட்சிகள், சக்திகள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் எதிர்காலத்தில் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது குறித்தும் செயற்குழு உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனித்தனியாகச் செயல்படுவதை விடுத்து, பல்வேறு சக்திகளை ஒன்றிணைத்து எதிர்கால அரசியல் சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், கட்சியின் ஒழுக்க விதிகளுக்கு முரணாகச் செயல்பட்ட உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்த விபரங்களைக் கட்சியின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி தலதா அத்துகோரள செயற்குழுவிடம் சமர்ப்பித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

゚viralシ

இந்த நேரத்தில் திசைகாட்டி அரசு மட்டும் இல்லாதிருந்தால், மனிதர்கள் பசியால் இறந்திருப்பார்கள்.🚨“தேசிய மக்கள் சக்தி அரசாங்க...
11/06/2026

இந்த நேரத்தில் திசைகாட்டி அரசு மட்டும் இல்லாதிருந்தால், மனிதர்கள் பசியால் இறந்திருப்பார்கள்.🚨

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியில் இல்லாவிட்டால், இந்நாட்டு மக்கள் பசியால் இறக்க நேரிட்டிருக்கும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இன்று உலகின் பல நாடுகளில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த உலகளாவிய நெருக்கடிகள் தமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வெளிப்புறக் காரணிகளால் ஏற்படுகின்றன என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கு சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, உலகில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக பல நாடுகளில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதாகவும், இலங்கையும் அந்த நிலைமையின் தாக்கங்களுக்கும் பாதிப்புகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் ஜகத் மனுவர்ண மேலும் குறிப்பிட்டுள்ளார்.”

゚viralシ

ஈரான் நாட்டின் மீது இன்று இரவு மிகக் கடுமையான தாக்குதலை நடத்தப்படும்🚨அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்!அவரது ட்ரூத் வலை...
11/06/2026

ஈரான் நாட்டின் மீது இன்று இரவு மிகக் கடுமையான
தாக்குதலை நடத்தப்படும்🚨

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்!

அவரது ட்ரூத் வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அப்பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

"ஈரானின் கடற்படை, விமானப்படை, ராடார் கட்டமைப்பு, விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு மற்றும் பிற அனைத்து பாதுகாப்பு வடிவங்களும், அவற்றின் பெரும்பாலான தாக்குதல் திறன்களும் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டன. இவ்வாறானதொரு பின்னணியில், அமெரிக்கா இன்று இரவு ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதலை நடத்தும்.

அதுமட்டுமன்றி, வெகுதொலைவில் இல்லாத எதிர்காலத்தில் ஒரு கட்டத்தில், நாம் ஈரானின் கார்க் தீவு மற்றும் பிற எண்ணெய் உள்கட்டமைப்பு மையங்களைக் கைப்பற்றுவோம். அத்துடன், வெனிசுலாவுடன் நாம் கையாள்வதைப் போலவே ஈரானின் ஒட்டுமொத்த எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளின் முழுமையான கட்டுப்பாட்டையும் எங்கள் வசம் எடுத்துக்கொள்வோம். இந்த நடைமுறை வெனிசுலா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் மிகச் சிறந்த முறையில் பலனளித்து வருகின்றது." என்று அவர் தெரிவித்துள்ளார்.

வெகு தொலைவில் இல்லாத எதிர்காலத்தில், ஈரானின் முக்கிய கார்க் தீவு (Kharg Island) மற்றும் பிற எண்ணெய் உள்கட்டமைப்பு பகுதிகளை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் என்றும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.

வெனிசுவேலாவுடன் அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கையைப் போலவே, ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளின் முழுமையான கட்டுப்பாட்டையும் அமெரிக்கா ஏற்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில நாட்களாக பரஸ்பரத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. அமெரிக்க துருப்புகள் நிலைகொண்டுள்ள பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகிலுள்ள பண்டார் அப்பாஸ், சிரிக் மற்றும் குவெஷ்ம் தீவு ஆகிய பகுதிகளில் அமெரிக்கா ஏற்கனவே வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்தது.

ஏப்ரல் தொடக்கத்தில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம், நிரந்தர அமைதி உடன்படிக்கைக்கு ஈரான் மறுத்ததால் முடிவுக்கு வந்துள்ளதாக ட்ரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திடீர் இராணுவ நடவடிக்கை அறிவிப்பால் உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையிலும், சர்வதேச அரசியலிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேலில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் ஏப்ரல் மே மாதங்களில் அனுப்பிய பல மில்லியன் ரூபாய்கள் ஹேக் செய்யப்பட்டதா?🚨வேலைக்காக இஸ...
11/06/2026

இஸ்ரேலில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் ஏப்ரல் மே மாதங்களில் அனுப்பிய பல மில்லியன் ரூபாய்கள் ஹேக் செய்யப்பட்டதா?🚨

வேலைக்காக இஸ்ரேல் சென்றிருந்த இலங்கை இளைஞர்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அனுப்பிய பல மில்லியன் ரூபாய்கள் திருடப்பட்டுள்ளதா என நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக கேள்வி எழுப்பினார்.

நாட்டின் ஒரு முன்னணி அரச வங்கியின் அறிவுறுத்தலின் பேரில், தொழிலாளர்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் குளோபல் ரெமிட் என்ற நிறுவனம் மூலம் இந்தப் பணத்தை இலங்கைக்கு அனுப்பியிருந்ததாக அவர் வெளிப்படுத்தினார்.

இன்று (11) நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கையை வெளியிட்ட திரு. டி.வி. சனகா, ஒரு சராசரி தொழிலாளி மாதத்திற்கு சுமார் $3,000 அனுப்புவதாக மேலும் கூறினார்.

அனுப்பிய பணம் வந்து சேரவில்லை என்பதை அறிந்த தொழிலாளர்கள் தூதரகத்தில் புகார் அளித்துள்ளனர், ஆனால் இது தொடர்பாக இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

குளோபல் ரெமிட் என்ற நிறுவனம் மூலம் பணத்தை அனுப்புமாறு அறிவுறுத்திய இலங்கை அரச வங்கிக்குச் சென்றபோது, ​​தன்னைத் தூதரகத்திற்குச் செல்லுமாறு கூறியதாகவும், தூதரகத்திற்குச் சென்றபோது வங்கிக்குச் செல்லுமாறு கூறப்பட்டதாகவும், இதனால் பணத்தை அனுப்பிய தொழிலாளர்களுக்குப் பெரும் சிரமம் ஏற்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம் சாட்டினார்.

பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் உழைக்கும் அப்பாவி இளைஞர்களும் யுவதிகளும் அனுப்பிய இந்தப் பணம், ஜனதா விமுக்தி பெரமுனவின் ஹேக்கர்களின் கைகளுக்குச் சென்றதா? அல்லது அது அரசாங்கத்தின் ஹேக்கர்களின் கைகளுக்குச் சென்றதா? பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் உழைக்கும் அப்பாவி இளைஞர்களும் யுவதிகளும்தான் அந்தப் பணத்தை அனுப்பினார்களா என்பதில் கடும் சந்தேகம் நிலவுவதாக டி.வி. சனகா மேலும் கூறினார்.

NewsHub

゚viralシ

30 ஆண்டுகள் போராடிய தாய் வெற்றி!🚨சொத்துக்காக தாயை ஏமாற்ற முயன்ற மகனுக்கு நீதிமன்றம் கொடுத்த அதிரடி பதில்!மிரிஹான பகுதியி...
11/06/2026

30 ஆண்டுகள் போராடிய தாய் வெற்றி!🚨

சொத்துக்காக தாயை ஏமாற்ற முயன்ற மகனுக்கு நீதிமன்றம் கொடுத்த அதிரடி பதில்!

மிரிஹான பகுதியில் வசிக்கும் வயோதிபத் தாய் ஒருவர், தனது சொந்த வீட்டின் உரிமையை மீட்டெடுக்க கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக மேற்கொண்ட சட்டப் போராட்டத்தில் இறுதியாக வெற்றி பெற்றுள்ளார்.

சொத்துக்காக பெற்ற தாயையே ஏமாற்ற முயன்ற மகனின் மேல்முறையீட்டை நிராகரித்த நீதிமன்றம், வீட்டின் உண்மையான உரிமையாளர் தாயே என உறுதிப்படுத்தியுள்ளது.

தகவல்களின்படி, குறித்த தாய் 1987ஆம் ஆண்டு வங்கிக் கடன் பெறும் தேவைக்காக மட்டுமே தனது வீட்டை தற்காலிகமாக மகனின் பெயருக்கு மாற்றியிருந்தார். கடன் செலுத்தப்பட்ட பின்னர் வீட்டை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், பின்னர் மகன் வீட்டை தாயிடம் திருப்பிக் கொடுக்க மறுத்ததுடன், அந்தச் சொத்தை தாயிடமிருந்து பணம் கொடுத்து வாங்கியதாகக் கூறி உரிமை கோரியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தாய், 1997ஆம் ஆண்டு நீதிமன்றத்தை நாடியிருந்தார்.

இந்த வழக்கு பல ஆண்டுகளாக மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் வரை சென்றது. இறுதியில் தலைமை நீதியரசர் உள்ளிட்ட நீதிபதிகள் அடங்கிய அமர்வு, வழக்கின் அனைத்து ஆதாரங்களையும் ஆராய்ந்து மகனின் வாதங்களை நிராகரித்துள்ளது.

தாய் வாங்கிய சொத்து என்பதும், அது குடும்ப தேவைகளுக்காக மட்டுமே மகனின் பெயருக்கு மாற்றப்பட்டிருந்தது என்பதும் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டதால், வீட்டின் உரிமை முழுமையாக தாய்க்கே சொந்தமானது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த சட்டப் போராட்டத்தின் முடிவில், தாயார் தனது உரிமையை மீட்டுள்ளதுடன், பெற்றோரின் நம்பிக்கையை துரோகம் செய்யும் எவருக்கும் சட்டம் முன் தப்பிக்க முடியாது என்பதையும் இந்த தீர்ப்பு மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டியுள்ளது.

゚viralシ

நாய்கள் இரண்டை கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக 67 வயது முதியவர் கைது🚨நீர்கொழும்பு (Negombo) பகுதியில் தனது பராமரிப்பில் ...
11/06/2026

நாய்கள் இரண்டை கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக 67 வயது முதியவர் கைது🚨

நீர்கொழும்பு (Negombo) பகுதியில் தனது பராமரிப்பில் இருந்த இரண்டு நாய்களைக் கொடூரமான முறையில் நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 67 வயதுடைய முதியவர் ஒருவரை புதன்கிழமை (10) காவல்துறை கைது செய்துள்ளது.

நீர் கொழும்பு, கடல் தெரு (Sea Street) பகுதியில் உள்ள அவரது வீட்டில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகக் காவல்துறைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சமயத்தில், அந்த விலங்குகளின் வாய்கள் கயிறுகளால் கட்டப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

தற்போது அந்த நாய்கள் பாதுகாப்பாகக் காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு, ஆரோக்கியமான நிலையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

சந்தேக நபர் இன்று (11) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இச்சம்பவம் குறித்து நீர்கொழும்பு காவல்துறை தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

゚viralシ

சுரேஸ் சாலேவுக்கு ஆதரவான சத்தியாக்கிரக போராட்டம் இன்னும் ஓரிரு நாட்கள் தொடர்ந்திருந்தால் ஜூலை 09 போல தப்பி ஓடும்வரை  தாக...
11/06/2026

சுரேஸ் சாலேவுக்கு ஆதரவான சத்தியாக்கிரக போராட்டம் இன்னும் ஓரிரு நாட்கள் தொடர்ந்திருந்தால் ஜூலை 09 போல தப்பி ஓடும்வரை தாக்கப்பட்டிருப்பார்கள்🚨

கைது செய்யப்பட்ட முன்னாள் அரச புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலேவுக்காக பெட்டாவில் நடத்தப்பட்ட சத்தியாகிரகம் மேலும் தொடர்ந்திருந்தால், ஜூலை 9 அன்று நடந்தது போலவே அங்கு கூடியிருந்தவர்கள் தப்பி ஓடும் வரை தாக்கப்பட்டிருப்பார்கள் என்று தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜாதிகத் மனுவர்ண, நாடாளுமன்றத்தில் கூறினார்.

பெட்டாவில் நடைபெற்ற சத்தியாகிரகம் ஒரு காற்புள்ளியுடன் முடிவடையாமல், ஒரு முற்றுப்புள்ளியுடன் முடிவடைந்ததாகவும், சத்தியாகிரகத்தில் கூடியிருந்தவர்களைத் தாக்க மக்கள் வருவதை தாம் ஏற்கனவே அறிந்ததாகவும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

"இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் அவர்கள் அங்கே அமர்ந்திருந்தால், ஜூலை 9 அன்று போல் பெட்டாவை விட்டு ஓடும் வரை போராட வேண்டியிருந்திருக்கும்," என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

சுரேஷ் சாலே கிட்டத்தட்ட 100 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது அமைதியாக இருந்தவர்கள், தற்போதைய விசாரணைகளைக் கண்டு இப்போது கொந்தளித்து அழுதுகொண்டிருக்கிறார்கள் என்று அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

ஈஸ்டர் தாக்குதல்களால் இந்த நாட்டின் முஸ்லிம் மக்கள் கடுமையான மன மற்றும் சமூக அழுத்தத்திற்கு உள்ளானபோது அவர்களுக்காகக் குரல் எழுப்பாத எதிர்க்கட்சியில் உள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இப்போது இப்படி நடந்துகொள்வது வெட்கக்கேடானது என்றும் அவர் கூறினார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் மற்றும் மத்திய வங்கிப் பத்திர மோசடி தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மிகவும் ஒழுங்காகவும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலும் நடைபெற்று வருவதால், மக்கள் அதன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று திரு. மனுவர்ணா கேட்டுக்கொண்டார்.

கடந்த காலத்தில் மக்களை ஒடுக்கிய வரலாற்றை மக்கள் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்றும், அரசாங்கம் தனது கடமையின்படி நீதியை வழங்குவதில் உறுதியாக உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

゚viralシ

Address

Riyadh

Alerts

Be the first to know and let us send you an email when People's Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share