News Studio தமிழ்

News Studio தமிழ் Earn money from your mobile without investment.! Don't miss. download the mobile app to start earning today!

Pi is a new digital currency developed by Stanford PhDs, with over 10 million members worldwide. π Pi crypto currency is the next Revolution in the world. To claim your Pi, follow this link https://minepi.com/abiravan and use my username (ABIRAVAN) as your invitation code.

14/02/2024

அரச துறையின் ஆற்றலை அதிகரிக்க இந்தியா இலங்கை கூட்டு முயற்சியில் வேலைத்திட்டம்
-----------------------------------------------------------------------------------

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையில் அரச துறையின் ஆற்றலை அதிகரிக்கும் வேலைத்திட்டமொன்று இந்தியா மற்றும் இலங்கையின் கூட்டு முயற்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை புதிய துறைகள் ஊடாக வலுப்படுத்துவதற்கு இரு நாட்டுத் தலைவர்களும் இணக்கம் வெளியிட்டிருந்தனர்.

இந்தியா - இலங்கை கூட்டு முயற்சியின் ஊடாக அரச துறையின் திறனை கட்டியெழுப்புவதற்காக அரச நிறுவன கட்டமைப்பை நவீனமயப்படுத்துவதுடன், செயற்திறனுடன் முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் லால், இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடல்களை இலங்கையில் முன்னெடுத்திருந்தார்.

அந்த கலந்துரையாடல்களின் விளைவாக, இலங்கையில் இருந்து உயர்மட்டக் குழுவொன்று இந்தியாவுக்குச் சென்று பொருத்தமான திறன் அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டத்தை தயாரித்திருந்தது.

அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்புடைய இந்திய நிறுவனங்களுடன் மேலதிக கலந்துரையாடல்களை நடத்த தீர்மானித்துள்ளது.

அதன்படி கடந்த 12ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்த குறித்த குழுவினர் எதிர்வரும் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தியா நல்லாட்சி தேசிய மையத்தில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் 12 அரச நிறுவனங்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வகையில் டிஜிட்டல் கொள்முதல் உள்ளிட்ட அரசின் பிரதான சேவைகளுக்காக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

டிஜிட்டல்மயமாக்கலை செயற்படுத்தல், புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அரச ஊழியர்களின் திறன் மேம்பாடு, ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், உணவுகளின் நடுநிலையான விலைப் பொறிமுறை உள்ளிட்ட பல பிரிவுகளுடன் தொடர்புடைய நிறுவனங்களின் திறனை அபிவிருத்தி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

14/02/2024

கொலை குற்றம் சாட்டப்பட்டவர் ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலையில்!

-----------------------------------------------------------------------------

இந்தோனேசியாவின் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்புகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், வாக்கெண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது 75 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாகவும் அதில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட பாதுகாப்பு அமைச்சர் பிரபோவோ சுபியன்டோ முன்னிலையில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், இந்தோனேசியாவின் சர்ச்சைக்குரிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜொக்கொ விடோடோவின் கொள்கைகளை முன்கொண்டு செல்லவுள்ளதாக பிரபோவோ சுபியன்டோ உறுதியளித்துள்ளார்.

முன்னாள் அரசாங்கத்தின் பத்து வருட ஆட்சியில் இந்தோனேசிய பொருளாதாரம் எதிர்பாராத வளர்ச்சியடைந்துள்ளது.

இதன்காரணமாக இந்தோனேசியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்ய எதிர்பார்த்துள்ளனர்.

எனினும் கடந்த காலங்களில் இந்தோனேசியாவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர் என்பதால் பாதுகாப்பு அமைச்சர் பிரபோவோ சுபியன்டோ ஜனாதிபதியாவது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கரிசனை வெளியிட்டுள்ளனர்.

ஜனநாயக சார்பு செயற்பாட்டாளர்களை கடத்தி கொலை செய்தார் என்ற அடிப்படையில் பிரபோவோ சுபியன்டோவிற்கு அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

14/02/2024

பொருளாதார நெருக்கடியால் 3 சதவீதமான மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளில் இருந்து முற்றாக விலகியுள்ளனர்.
--------------------------------------------------------

நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி நிலைமையால் மாணவ சமூகத்தின் 3 சதவீதமானனோர் கற்றல் நடவடிக்கைகளில் இருந்து முற்றாக விலகியுள்ளதாக தேசிய தொகைமதிப்பு மற்று புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலை மாணவர்களில் 54.9 சதவீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய தொகைமதிப்பு மற்று புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 53.2 சதவீதமானோர், பாடசாலைக்கான புதிய உபகரணங்களை கொள்வனவு செய்வதை முற்றிம் நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 44 சதவீதமான மாணவர்கள் புதிய பாடசாலை சீருடைகளுக்கான செலவை குறைத்துள்ளதாகவும் தேசிய தொகைமதிப்பு மற்று புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், 40.6 வீத மாணவர்கள் மேலதிக வகுப்புகளில் பங்கேற்பதை நிறுத்தியுள்ளனர்.

அவர்களில், 28.1 சதவீதமானோர். மேலதிக வகுப்புகளை இணையவழி மூலம் மேற்கொள்வதாக தேசிய தொகைமதிப்பு மற்று புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14/02/2024

ஹரக் கட்டாவை தப்பிக்க வைக்க குற்றப்புலானய்வு திணைக்கள அதிகாரிகளின் வங்கிக் கணக்குகளில் பெருந்தொகையான பணம் வைப்பு
--------------------------------------------------------



ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தக்கவை தப்பிக் வைக்க முயற்சித்தமை தொடர்பில் குற்றப்புலானய்வு திணைக்களத்தின் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர், முன்னாள் பணிப்பாளர் மற்றும் முன்னாள் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு எதிராக பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து ஹரக் கட்டாவையும் குடு சலிந்துவையும் தப்பிக்க வைக்க திட்டமிட்டமை தொடர்பில் 34 அதிகாரிகளிடம் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பான முன்னேற்றம் குறித்து கோட்டை நீதவான் திலின கமகேவிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

குறித்த அதிகாரிகளின் வங்கிக்கணக்கு மற்றும் தொலைபேசி அழைப்பு தொடர்பான அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் இதன்போது நீதிமன்றுக்கு அறியப்படுத்தப்பட்டது.

அத்துடன், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பிரதி காவல்துறைமா அதிபர், முன்னாள் பணிப்பாளர் மற்றும் பொது முறைப்பாட்டு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி ஆகியோரின் வங்கிக்கணக்கு மற்றும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பான அறிக்கைகளை பெற்றுக் கொள்வதற்கு நீதிமன்றிடமிருந்து உத்தரவொன்றும் கோரப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்துடன் தொடர்புடைய 34 அதிகாரிகளின் வங்கிக் கணக்கு மற்றும் தொலைபேசி அழைப்பு தொடர்பான அறிக்கைகளை ஆராய்ந்தபோது, சந்தேகத்துக்கிடமாக கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர்கள் வேறு வழிகளில் பணம் ஈட்டியுள்ளார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் எனவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

14/02/2024

பெருந்தோட்ட மக்களை வலுப்படுத்த சமூக ஒப்பந்தம் கைச்சாத்து

-----------------------------------------------------------------

பெருந்தோட்ட மக்களின் சமூக பொருளாதார அரசியல் கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பில், சமூக உடன்படிக்கை ஒன்று இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பெருந்தோட்ட துறை மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார, சமூக ரீதியாக அபிவிருத்தி, அரசியல் பிரச்சினைகள் மற்றும் உட்கட்டமைப்பு துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் இணக்கப்பாட்டுடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத்தில் வாழும் மக்களுக்கு பயிர்ச்செய்கை நில உரிமை மற்றும் வீட்டுரிமைகளை வழங்கப்படும்.

அதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் ஜனாதிபதி செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

இந்த உடன்படிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், வி.இராதாகிருஷ்ணன், எம்.வேலுகுமார், எம்.உதயகுமார் மற்றும் சுஜித் சஞ்ஜய பெரேரா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர்கள் மூவர் பதவி விலகல்----------------------------------------...
13/02/2024

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர்கள் மூவர் பதவி விலகல்
----------------------------------------------------------------

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர்கள் மூவர் பதவி விலகியுள்ளனர்.

தரமற்ற தடுப்பூசி இறக்குமதி விவகாரத்தில் இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணைகளின் காரணமாக இவ்வாறான பதவி விலகல்கள் இடம்பெற்று வருவதாக அறியமுடிகிறது.

இதேவேளை, தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசி இறக்குமதி தொடர்பான வழக்குடன் தொடர்புடைய சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோக பிரிவின் பிரதானிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால், மருந்து விநியோகத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவை பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜேயசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவ விநியோகப் பிரிவை எடுத்துக்கொண்டால் அந்தப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம், பணிப்பாளர், பிரதி பணிப்பாளர், உதவி பணிப்பாளர்கள் உள்ளிட்ட ஆறு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் நால்வர் பதவியை இராஜிநாமா செய்துள்ளார்கள். பணியாளர் பதவிகளுக்கு இருக்கும் தேவைப்பாடும் மருந்து விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையில் வெற்றிடமாகவுள்ள பதவிகளுக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்படவுமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையிலேயே தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணப்பாளர்களும் இவ்வாறு பதவி விலகியுள்ளனர்.

இணையவழி பாதுகாப்பு சட்டத்தை திருத்தம் செய்யத் தீர்மானம்------------------------------------------------------------இணையவ...
13/02/2024

இணையவழி பாதுகாப்பு சட்டத்தை திருத்தம் செய்யத் தீர்மானம்
------------------------------------------------------------
இணையவழி பாதுகாப்பு சட்டத்தை திருத்தம் செய்வதற்கு சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைஞர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இணையவழி பாதுகாப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டதுடன், தற்போது குறித்த சட்டத்தின் ஏற்பாடுகள் அமுலில் உள்ளன.

குறித்த சட்டமூலம் நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தின்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கமைய, மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளமையால் துறைசார் நிபுணர்கள் சமர்ப்பித்துள்ள திருத்த முன்மொழிவுகளை குறித்த சட்டமூலத்தில் உள்ளடக்க இயலாமல் போயுள்ளது.

எனவே, குறித்த திருத்த முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ள துறைசார் நிபுணர்களுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி அடையாளம் காணப்பட்டுள்ள திருத்தங்களின் அடிப்படையில் இணையவழி பாதுகாப்பு சட்டத்தை திருத்தம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த திருத்தத்துக்காக சட்டமூலமொன்றை தயாரிக்குமாறுச சட்டவரைஞர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சோதனை நடவடிக்கையின்போது பொலிஸார் மீது தாக்குதல் – இருவர் கைது-----------------------------------------------------------...
13/02/2024

சோதனை நடவடிக்கையின்போது பொலிஸார் மீது தாக்குதல் – இருவர் கைது
------------------------------------------------------------
பாணந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றை சோதனையிட முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட நால்வர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாணந்துறை வலய போக்குவரத்து பிரிவு உத்தியோகத்தர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவருமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், இன்று அதிகாலை பாணந்துறை வலான பாலத்திற்கு அருகில் வாகன சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன்போது, மொரட்டுவையில் இருந்து பாணந்துறை நோக்கி மூன்று பேருடன் பயணித்த மோட்டார் சைக்கிளொன்றை சோதனையிட்டபோது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர், இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை கைதுசெய்ததாகவும், மற்றைய நபர் தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான நான்கு பேரும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகநபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சுகாதார தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பை முன்னிட்டு முப்படையினர் கடமையில்------------------------------------------...
13/02/2024

சுகாதார தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பை முன்னிட்டு முப்படையினர் கடமையில்
----------------------------------------------------------------
மருத்துவர்கள் தவிர்ந்த 72 சுகாதார தொழிற்சங்கத்தினர் சுகயீன விடுமுறையை அறிவித்து முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பின் காரணமாக வைத்தியசாலைகளின் நோயாளர் உதவிப் பணிகளுக்காக சுமார் ஆயிரத்து 200 முப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சினால் பாதுகாப்பு அமைச்சிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடளாவிய ரீதியிலுள்ள 48 வைத்தியசாலைகளின் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக 900க்கும் அதிகமான இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.

அத்துடன், 200க்கும் மேற்பட்ட வான்படை மற்றும் கடற்படை சிப்பாய்களும் வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு உதவியாக அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், தேவைக்கு ஏற்றவாறு மேலதிக படையினரை வைத்தியசாலைகளுக்கு அனுப்பவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் சுகாதார பணியாளர்கள் சேவையில் ஈடுபட்டு வருவதாக சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வைத்தியர்கள் அல்லாத 72 சுகாதார தொழிற்சங்கங்களை சேர்ந்த சுகாதார பணியாளர்கள் இன்று காலை 6 மணிமுதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35 ஆயிரம் ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி குறித்த 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பல தடவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.

இந்தநிலையில், நேற்றையதினம் நிதியமைச்சின் அதிகாரிகளுடன், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்படாத நிலையில், இன்றைய தினம் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக, வைத்தியசாலைகளுக்கு வருகை தந்த நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியதுடன், மருந்துகளை பெறமுடியாத நிலையில், வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர்.

ஐரோப்பிய ஒன்றிய தூதுவருடன்  தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர சந்திப்பு----------------------------------------------------...
13/02/2024

ஐரோப்பிய ஒன்றிய தூதுவருடன் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர சந்திப்பு
----------------------------------------------------------------
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் திருமதி காமென் மொரெனோ (Carmen Moreno) அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) பிற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் நடப்பு அரசியல் நிலைமை பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், ஜனநாயகத்தை பாதுகாத்தலைப்போன்றே தேர்தல்களை பிற்போடுதல் பற்றியும் கவனத்திற்கு இலக்காக்கப்பட்டது.

அத்துடன் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் (Online Safety bill) பற்றியும் இந்த உரையாடலின்போது கவனத்திற்கு இலக்காக்கப்பட்டதோடு இருதரப்பினருக்கும் இடையில் உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ளல் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை பிரதிநிதிகள் குழுமத்தின் பிரதிப் பிரதானி லார்ஸ் பிறெடால் (Lars Bredal), தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் தோழர் விஜித ஹேரத் ஆகியோரும் பங்கேற்றனர்.

1400 பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் முன்னணி நிறுவனம்------------------------------------------------------------------...
12/02/2024

1400 பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் முன்னணி நிறுவனம்
-------------------------------------------------------------------

குறைந்த கட்டண தனியார் விமான சேவையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று, அரியானா மாநிலம், குர்காவோன் பகுதியை தலைமையிடமாக கொண்ட ஸ்பைஸ்ஜெட் (SpiceJet).

புது டெல்லி மற்றும் ஐதராபாத் நகரங்களை தளமாக கொண்டு 60 இந்திய நகரங்களையும், 13 சர்வதேச நகரங்களையும் இணைக்கிறது ஸ்பைஸ்ஜெட்.

30 விமானங்களை கொண்டு சேவையாற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் சுமார் 9,000 பணியாளர்கள் பணி புரிகின்றனர். கடந்த சில மாதங்களாக இந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க முடியாமல் தவித்து வந்தது.

ஜனவரி மாத சம்பளம் பல ஊழியர்களுக்கு தற்போது வரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஸ்பைஸ்ஜெட் தனது ஊழியர்களில் 15 சதவீதம் பேரை பணிநீக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த உத்தரவு சுமார் 1,400 பணியாளர்களை பாதிக்கும் என தெரிகிறது. இது தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்திருப்பதாவது,

அநாவசிய செலவுகளை குறைக்கும் விதமாக பல நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம். இதன் மூலம் மனித வளம் முறையாக பயன்படுத்தப்படவும், வருவாயை அதிகரிக்கவும், இந்திய வான்வெளி போக்குவரத்து துறையில் முன்னே செல்லவும் நிறுவனம் முயன்று வருகிறது.

இந்த பணிநீக்க நடவடிக்கையின் மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.100 கோடி வரை சேமிக்க முடியுமென அவர் கூறினார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்த விபத்து  - கொள்கலன் சாரதி குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் 5 மணி நேர வ...
12/02/2024

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்த விபத்து - கொள்கலன் சாரதி குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் 5 மணி நேர வாக்குமூலம்
----------------------------------------------------------------------------

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்த விபத்து குறித்து கொள்கலன் சாரதியிடம் இன்று (12) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் 5 மணி நேர வாக்குமூலம் பெறப்பட்டது.

விபத்து இடம்பெற்ற விதம் சந்தேகத்திற்குரியதாக இருப்பதால், விபத்து குறித்து முறையான விசாரணை நடத்துமாறு கோரி சனத் நிஷாந்தவின் மனைவி திருமதி சாமரி பிரியங்கா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கமைய குறித்த விபத்து தொடர்பில் தற்போது குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சனத் நிஷாந்தவின் கார் மோதிய கொள்கலன் சாரதி சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Address

Kosti

Alerts

Be the first to know and let us send you an email when News Studio தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share