09/18/2025
பாரதியின் பரசிவ வெள்ளம் - கவிதை விளக்கம்
🔆🔆🔆
“உள்ளத்து உள்ளது கவிதை – இன்பம்
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
தெரிந்து உரைப்பது கவிதை.”
என்பார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. உள்ளத்தால் உணர்ந்து அறிந்த உண்மையை இன்பச் சுவை பொங்கத் தெளிவான தமிழில் எடுத்துரைப்பதில் வல்லவன் பாரதி. அறிவிலே தெளிவு மட்டுமன்றி, நெஞ்சிலே உறுதியும் இடைவிடாத இறைநினைப்பும் கொண்ட மகா சித்தன் அவன். கடவுள் உணர்விலே சிறந்து விளங்கும் அவனது கவிதைகளில் கவின்மிகுந்த கலைஞானத்துடன் அருள்மிகுந்த மெய்ஞ்ஞானமும் மிளிர்வதைக் காணலாம்.
“ஒன்று பிரமம் உளது உண்மை; அஃது உன் உணர்வு” என்று முழங்கும் வேதாந்த சிங்கமான பாரதி, எங்கெங்கும் நிறைந்து பாயும் உள்ளுணர்வாகவே இறைவனைக் கண்டான். தான் கண்டுணர்ந்த கடவுளை உலக மக்கள் யாவரும் அனுபவித்து வாழ்வதற்கான வழியை எடுத்து ஓத வேண்டும் என்னும் மிகப்பெரிய விருப்பம் அவன் நெஞ்சில் எழுந்தது. அந்த ஆர்வத்தில் பிறந்த ஆரமுதமாக எழில் மிகுந்த இக்கவிதை உதித்தது.
பரசிவ வெள்ளம் என்னும் இக்கவிதை பாரதியின் கடவுள் உணர்வைத் தனியே எடுத்துக் காட்டும் கண்ணாடி; தான் கண்ட இன்பம் பெறுக இவ்வையகம் என்று அருள்கொண்டு எழுந்த மகாகவிஞனின் உள்ள ஓவியம்; வேதாந்தமாக விரித்துப் பொருள் உணர வல்லவர்களின் மனத்துக்கு ஓர் அற்புத அருள்விருந்து.
வேதாந்தத்தின் சாரத்தை உள்ளடக்கிய இக்கவிதையின் பொருளை நான் உணர்ந்தவாறு இப்பதிவில் விளக்கி இருக்கிறேன். பதிவைப் படித்துக் கருத்துரைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
👇
https://www.imayavaramban.com/parasiva-vellam/
🙏