Imayavaramban

Imayavaramban Poet, Writer

பழந்தமிழ் இலக்கியங்களைப் பற்றியும் சமய தத்துவங்களைப் பற்றியும் நான் அறிந்தவற்றைக் கட்டுரையாகவும் கவிதை நடையிலும் தமிழன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்.

ஓஷோ திருத்தசாங்கம் - ஓஷோ புகழ் பாடும் வெண்பா மாலைகவிதைகள் : இமயவரம்பன் 🔆தசாங்கம் என்றால் என்னதசாங்கம் (தசம் + அங்கம்) என...
04/18/2025

ஓஷோ திருத்தசாங்கம்
- ஓஷோ புகழ் பாடும் வெண்பா மாலை

கவிதைகள் : இமயவரம்பன்

🔆
தசாங்கம் என்றால் என்ன

தசாங்கம் (தசம் + அங்கம்) என்பது தமிழ் இலக்கிய வகைகளில் ஒன்று. தசம் = பத்து; அங்கம் = உறுப்பு. பத்துப் பாடல்களைக் கொண்ட இந்த வகைக் கவிதைகள் ஒவ்வொன்றிலும், முதலிரண்டு அடிகளில் கிளியை விளித்துத் தலைவனின் திருநாமம், நாடு போன்ற அங்கங்கள் எவை என்று கேட்கப்படுகிறது; கடைசி இரண்டு அடிகளில், கிளி விடை அளிக்கிறது. பெரும்பாலும் தசாங்கங்கள் வெண்பா என்னும் பாவகையில் அமைந்திருக்கும்.

🔆
📖 To read “ஓஷோ திருத்தசாங்கம் - கவிதையும் பொருளும்” - Please visit - https://www.imayavaramban.com/osho-dasangam/
🙏
#ஓஷோ #வெண்பா

ஓஷோ திருத்தசாங்கம் - ஓஷோ என்று அழைக்கப்படும் பகவான் ஶ்ரீ ரஜனீஷ் அவர்களின் புகழ் பாடும் தசாங்கத் தமிழ் மாலை.

📖 Kolaru Pathigam: A Hymn of Divine Assurance I’m delighted to share my book, Kolaru Pathigam: A Hymn of Divine Assuranc...
04/12/2025

📖 Kolaru Pathigam: A Hymn of Divine Assurance

I’m delighted to share my book, Kolaru Pathigam: A Hymn of Divine Assurance, a heartfelt journey into one of Saivism’s most revered hymns by Tirugnāna Sambandar. This book offers an English translation and deep commentary on the Kolaru Pathigam—a sacred garland of verses that invokes Lord Siva’s grace to shield us from life’s challenges, from celestial influences to worldly trials.

What’s Inside?
✴️Verse-by-verse insights into the hymn’s spiritual power and poetic beauty

✴️Stories of Sambandar’s divine miracles and 7th-century Tamil Nadu

✴️Reflections on faith, protection, and the eternal bond with Siva

Whether you’re a devotee, a lover of Tamil literature, or seeking spiritual inspiration, this book is a bridge to divine peace and wisdom. I poured my heart into this work, and I’d love to hear your thoughts!

📖 Download it FREE as a PDF on my website: [Link in first comment]

🙏Please read, share, and let me know your feedback in the comments.

அழகின்ப மயிலோனே! - திருச்செந்தூர் முருகன் துதி🌸🌸🌸🌸🌸🌸🌸(சந்த விருத்தம் - தனதான தனதான தனதான தனதான… தனதான தனதான தனதான)🌸🌸🌸🌸🌸🌸...
04/08/2025

அழகின்ப மயிலோனே! - திருச்செந்தூர் முருகன் துதி
🌸🌸🌸🌸🌸🌸🌸
(சந்த விருத்தம் -
தனதான தனதான தனதான தனதான
… தனதான தனதான தனதான)
🌸🌸🌸🌸🌸🌸🌸
நிலையற்ற நிலவாழ்வில் நிதிதேடி நிதமோடி
… நெறியற்று விழுகின்ற - நிலைமாற
நலிவுற்ற இதயத்தில் மலரன்ன பதம்வைத்து
… நலமிக்க உனதன்பு - தருவாயே!
மலையொத்த மரமாகி எதிர்நின்ற ஒருசூரன்
… வடிவத்தை அழிவித்த - வடிவேலா!
அலைசிந்து கடலோரம் வளர்செந்தில் நகர்மேவி
… அருள்சிந்தும் அழகின்ப - மயிலோனே!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

- இமயவரம்பன்

தமிழ்த்தாய் திருப்பள்ளியெழுச்சி🌻🌻🌻🌻🌻🌻🌻🌻1.பனிமலர் விரிந்திடப் பரிதியும் எழுந்தான்,.. படர்பொருள் ஒளிர்ந்திடச் சுடர்மழை பொழ...
04/08/2025

தமிழ்த்தாய் திருப்பள்ளியெழுச்சி
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

1.
பனிமலர் விரிந்திடப் பரிதியும் எழுந்தான்,.. படர்பொருள் ஒளிர்ந்திடச் சுடர்மழை பொழிந்தான்,
தனியெழில் மிகுந்தவள் நிகரிலள் எனவே.. தாயுனை வழுத்திடப் பாவலர் விரைந்தார்,
நினைவெனும் வெளிதனில் நிறைந்திடும் அமுதே!.. நிதம்நிதம் புதுக்கிடும் நவையறு பொருளே!
நனிவளம் பெருகிடும் நயமிகு மொழியே!.. நற்றமி ழே!பள்ளி யெழுந்தரு ளாயே.

(பரிதி = சூரியன்;
வழுத்திட = வாழ்த்திட;
புதுக்கிடும் = புதுப்பித்துக் கொள்ளும்;
நவை அறு = குற்றமற்ற;
நனி வளம் = மிகுதியான வளம்)

🌸

2.
ஒருகையில் குறளுமற் றொருகையில் நாலும்.. உருவளர் சிலம்பணிந்(து) ஒலிசெயும் காலும்
மருவறு மருங்கினில் மணியுடன் திகழும்.. வடிவுறு நலந்திகழ் கவின்பெரு மொழியே!
மருவிய துயில்விடுத்(து) எழில்விழி திறப்பாய்!.. மறுபடி பழமையின் நலம்பெறச் சிறப்பாய்!
மருளுறும் உலகினுக்(கு) அறிவொளி அளிப்பாய்!.. வளத்தமி ழே!பள்ளி எழுந்தரு ளாயே!

(நால் = நாலடியார்;
உருவளர் = அழகிய;
சிலம்பு = சிலப்பதிகாரம்;
மருவறு = ஒப்பற்ற;
மருங்கு = இடை;
மணி = மணிமேகலை;
மருவிய = இணைந்த;
மருள் = மயக்கம்/அறியாமை)

🌸

3.
கடிமலர்ப் பொதிகைவாழ் தென்றலில் மிதந்தாய்!.. களிமிகுந்(து) அலற்றுவண்(டு) ஒலியிடைத் திகழ்ந்தாய்!
முடியுடை மூவர்வான் முழவுடன் எழுந்தாய்!.. முழங்கிசைப் பாணர்தம் யாழுற முரன்றாய்!
கடலலைச் சுருளொடும் இசைந்தொளிர்ந்(து) ஒலிப்பாய்!.. கனிவெழும் கிளியின்வாய் மொழியென இனிப்பாய்!
தொடைகெழு கவிதையின் அடிதொறும் ஒளிர்வாய்!.. சுடர்த்தமி ழே!பள்ளி யெழுந்தரு ளாயே!

(கடி மலர் = வாசனை மிக்க மலர்;
அலற்றும் = ரீங்காரம் இடும்;
முரன்றாய் = ஒலித்தாய்;
தொடை கெழு = சிறப்பாக யாக்கப்பட்ட)

🌸

4.
விளங்கொளி விசும்பினில் இளங்குயில் இசைக்க,.. விளைந்திடும் ஒலிப்புனல் புவித்தலம் நிறைக்கும்;
களங்கறு கவிநடை பயின்றிட விழைந்தே.. கவினுறு குருகினம் நினதரு கணையும்;
உளங்கிளர் அமுதமே! உணர்வுறும் ஒளியே!.. உயர்வற உயர்நலம் உடைத்திரு மொழியே!
வளங்கிளர் மலரடி உலகினர் வணங்க.. வருந்தமி ழே!பள்ளி யெழுந்தரு ளாயே!

(விளங்கொளி = ஒளி விளங்கும்;
விசும்பு = வானம்;
ஒலிப் புனல் = ஒலி வெள்ளம்;
களங்கறு = களங்கம் இல்லாத/ குற்றமற்ற;
குருகினம் = அன்னப் பறவைகள்;
அணையும் = நெருங்கி வரும்;
உளம் கிளர் = உள்ளத்தில் இன்பக் கிளர்ச்சி அளிக்கும்;
உயர்வற = தன்னை விட உயர்வானது ஒன்று இல்லாத;
வளம் கிளர் = வளம் மிகுந்த)

🌸

5.
அணிமிகு கவிமொழிந்(து) அறநெறி வளர்க்க, .. அகம்நிறை பரிவெனும் அமுதினை அளிக்க,
இணையறு நினபுகழ் திசைதொறும் சிறக்க,.. இருநிலம் முழுதுன திளநலம் வியக்கப்
பிணிநிகர் மடமையை மனத்தினில் விலக்கப்.. பிரிவினை வளர்த்திடும் சிறுமையும் அழிக்கத்
துணிவெழும் மணிமொழி இனிதுற உரைப்பாய்.. சுவைத்தமி ழே,பள்ளி யெழுந்தரு ளாயே!

(நினபுகழ் = நின(து) புகழ்; உன் புகழ்;
இருநிலம் = பெரியதான இந்த நில உலகம்;
இளநலம் = இளமை நலம்;
பிணி நிகர் = நோய் போன்று நம்மைப் பிடித்து வாட்டும்)

🌸
🙏

- இமயவரம்பன்

#தமிழ்ப்புத்தாண்டு #தமிழ்த்தாய்

✴️ Divine Assurance - A Commentary on Kōḷaṟu Padhigam  ✴️My upcoming book—at a glance!  Explore the sacred Tamil hymn Kō...
03/24/2025

✴️ Divine Assurance - A Commentary on Kōḷaṟu Padhigam ✴️
My upcoming book—at a glance!

Explore the sacred Tamil hymn Kōḷaṟu Padhigam, an 11-verse masterpiece by Saint Tirugnāna Sambandar that shields devotees from all harm.

What’s Inside:
✴️Verse-by-Verse Insight: English translations and rich commentary on all 11 verses.
✴️ Saivism’s Legacy: Historical and spiritual roots of this divine tradition.
✴️ Siva & Umā’s Glory: Celebrating their celestial beauty and grace.
✴️ Poetic & Musical Splendor: Brilliance of the lyrics, vibrancy of music, and a promise of eternal blessings.

A table of contents attached. Stay tuned for updates!

மைசூர் ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்தில் இந்த வாரம் நாங்கள் பார்த்த ஒரு நாரை ஜோடிA stork couple we saw at the Mysore Rang...
02/28/2025

மைசூர் ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்தில் இந்த வாரம் நாங்கள் பார்த்த ஒரு நாரை ஜோடி

A stork couple we saw at the Mysore Ranganathittu bird sanctuary this week

Photo by Imayavaramban

பொன்னியின் செல்வன் போற்றும் பழந்தமிழ்ப் பாடல்கள் - ஆய்வுக் கட்டுரை☀️ ☀️☀️அமரர் கல்கி அவர்கள் உலகிற்கு அளித்த பொன்னியின் ...
02/27/2025

பொன்னியின் செல்வன் போற்றும் பழந்தமிழ்ப் பாடல்கள் - ஆய்வுக் கட்டுரை
☀️ ☀️☀️

அமரர் கல்கி அவர்கள் உலகிற்கு அளித்த பொன்னியின் செல்வன் என்னும் நூல், காதல், வீரம், தியாகம் போன்ற மாண்புகளை உயிரோட்டமாக அளிக்கும் அற்புதமான காவியம். அத்தகைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த காவியத்தில் பொதிந்திருக்கும் பக்திச் சுவைமிக்க செந்தமிழ்ப் பாடல்களும் நீதியைப் போதிக்கும் பொருள் நிறைந்த செய்யுள்களும் ஏராளம்.

பொன்னியின் செல்வன் நூலில் வரும் தேவாரப் பாடல்களும் வைணவப் பாசுரங்களும் படிப்பவர் நெஞ்சில் இறையன்பைத் தோற்றுவித்து அருள்கடலில் திளைக்கச் செய்பவை. சிலப்பதிகாரப் பாடல்கள் இசை அழகைக் காட்டி மிளிர்ந்து நிற்கும். ஆங்காங்கே முத்துக்கள் போலப் பதிந்திருக்கும் திருக்குறள் வெண்பாக்கள் அழகுற ஒளிரும்.

அவ்வாறு ‘பொன்னியின் செல்வன்’ என்னும் பொன் நூலில் அமைந்த செந்தமிழ்ப் பாடல்களில் சிலவற்றைப் பொருளுடன் இப்பதிவில் காணலாம்.

பொன்னியின் செல்வன் போற்றும் பழந்தமிழ்ப் பாடல்கள் - கல்கியின் காவியத்தில் மின்னுகின்ற தேவாரத் திவ்வியப் பிரபந...

சிவாய நம 🙏
02/27/2025

சிவாய நம 🙏

சித்தம் சிவமாய்ச் சுடராதோ
🌸🌸🌸

(தானா தனனா தனதானா)

பற்றும் பிறவித் துயர்தீரப்
… பற்பக் கழலின் நிழல்நாடிக்

கற்றுட் கனியும் தமிழாலே
… கற்றைச் சடைதன் புகழ்பாடி

நற்றக் கரமைந்(து) இனிதோதி
… நட்டத் தரசின் அருள்கூடிச்

சிற்றம் பலமே தொழுவார்க்குச்
… சித்தம் சிவமாய்ச் சுடராதோ.

🌸🌸🌸
சொற்பொருள்:
———————-
பற்பம் = பத்மம் = தாமரை;
கற்றுட் கனியும் = கற்று உள் கனியும்;
நற்றக்கரம் = நன்று + அக்கரம் - நன்று என்பது நற்று என்று வலித்தலாயிற்று;
அக்கரம் ஐந்து = “நமச்சிவாய” என்னும் ஐந்து எழுத்துகள் அமைந்த மந்திரம்;
நட்டம் = நடனம்;
நட்டத்து அரசு = நடராஜர்;
சிவமாய்ச் சுடர்தல் = சிவமாகிய ஒளி நிறைந்து இருத்தல்

- இமயவரம்பன்

🙏
#சந்தவிருத்தம் #திருச்சிற்றம்பலம்

02/24/2025

சந்தவசந்தம் கூகுள் குழுமத்தின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரும் பன்மொழி வித்தகருமான கவிஞர் குருநாதன் ரமணி அவர்களின் மறைவுக்கு எழுதிய இரங்கற்பா:

(கட்டளைக் கலித்துறை)

வான்சென் றடைந்ததுன் வண்புகழ், வண்டுணும் மாமலரின்
தேன்சென் றடைந்ததுன் செய்யுள் இனிமையச் செங்கதிரைத்
தான்சென் றடைந்ததுன் தாவில்மெய்ஞ் ஞானம் தழலினையுன்
ஊன்சென் றடைந்தவப் போதில் இரமணி ஒண்கவியே.

பதம் பிரித்து:

வான் சென்று அடைந்தது உன் வண்புகழ்,
வண்டு உ(ண்)ணும் மாமலரின் தேன் சென்று அடைந்தது உன் செய்யுள் இனிமை,
அச்செங்கதிரைத் தான் சென்று அடைந்தது உன் தாவில் மெய்ஞ்ஞானம்,
தழலினை உன் ஊன் சென்று அடைந்த அப் போதில், இரமணி ஒண்கவியே!

(தாவில் = குற்றமற்ற; ஒண்கவியே = சுடர்மிகுந்த கவிஞரே)

- இமயவரம்பன்

“கோளறு பதிகம் - விளக்கவுரை” என்னும் எனது நூல் அமேசானின் கனடா தளத்தின் சிறந்த மற்றும் அதிகம் விற்பனை ஆகும் இந்துமத நூல்கள...
02/16/2025

“கோளறு பதிகம் - விளக்கவுரை” என்னும் எனது நூல் அமேசானின் கனடா தளத்தின் சிறந்த மற்றும் அதிகம் விற்பனை ஆகும் இந்துமத நூல்களின் பட்டியலில் 4-ஆம் இடத்தில் உள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

திருஞானசம்பந்தர் பாடிய கோளறு பதிகம், கற்பவர் நெஞ்சில் கவலை ஒழித்துக் களிப்பளித்துத் தெளிவேற்றும்; நாள்தோறும் படிப்பவர்களைப் பஞ்ச பூதங்களும் அஞ்சி வணங்கிடும். 'கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்த சொல் மாலை' என்று போற்றப்படும் இந்தக் கோளறு பதிகத்துக்குப் பொருளும் விளக்கமும் அளிக்கும் திருவருட்பேறு எனக்குக் கிட்டியதை எண்ணி உள்ளம் நெகிழ்கிறேன். உலகில் உள்ளோர் அனைவரும் சிவானந்த வெள்ளத்தில் மூழ்கித் திளைப்பதற்கு இந்தப் புத்தகம் துணைசெய்ய எல்லாம் வல்ல இறைவனின் திருக்கழல்களைப் பற்றி வேண்டுகிறேன்.

அன்புடன்,
இரா. இமயவரம்பன்
website: www.imayavaramban.com
email: contactme@imayavaramban.சொம்

இந்தப் புத்தகத்தில் இடம்பெறும் சில சுவையான கருத்துகளைக் கீழே உள்ள குறுந்தலைப்புகளில் காணலாம் :

☀️திருநாவுகரசருக்கும் சம்பந்தருக்கும் இடையே எழுந்த உரையாடல் மற்றும் கோளறு பதிகம் பிறந்த கதை
☀️இறைவனின் திருவடிகளில் சமர்ப்பிப்பதற்கு ஏற்ற மலர் எது?
☀️சங்கரன் என்ற திருநாமத்திற்கும் கோளறு பதிகத்துக்கும் உள்ள சம்பந்தம்
☀️நவக்கிரகங்களின் சரித்திரங்கள்
திருநீற்றின் பெருமை
☀️‘முருகு’ என்னும் சொல்லின் மகிமை
☀️சிவபெருமானின் எட்டு வீரத் திருச்செயல்களும் அவற்றைக் கோளறு பதிகப் பாடல்கள் போற்றுகின்ற சிறப்பும்
☀️சம்பந்தரை முருகக் கடவுளின் அவதாரமாகப் பார்த்த அருணகிரியார்
☀️ஞானப்பால் உண்ட குழந்தையும் திருஞானசம்பந்தர் என்னும் பெயர் அமைந்த கதையும்
☀️‘அழகு’ என்னும் சொல்லுக்குத் தமிழில் உள்ள 29 பெயர்கள்
☀️மறைஞான ஞான முனிவர் என்று சம்பந்தர் போற்றப்படக் காரணம்
☀️‘ஆணை’ என்னும் சொல்லின் சிறப்பு
☀️'திருஞானசம்பந்தர் வெண்பா மாலை' - திருஞான சம்பந்தருக்கு அந்தாதியாக நான் அணிவித்த வெண்பா மாலை

இந்நூல் மென்னூலாகக் கிடைக்குமிடம் : https://linktr.ee/kolarupathigam

🙏

I'm happy to announce that my Tamil book 'கோளறு பதிகம் - விளக்கவுரை' (Kōḷaṟu Pathigam - Vilakkavurai) is currently an Amazon Canada bestseller at 4th position in Hinduism! A huge thank you to everyone who has picked up a copy! The book is a commentary on Kōḷaṟu Pathigam, a set of hymns composed in praise of Lord Siva by the Poet-Saint Thirugnāṉa Sambandar.

Sambandar’s Kōḷaṟu Pathigam is much more than a Prayer or Praise. It is an assurance of Lord Siva's blessing which is always there, waiting for us to open up our hearts for Him. It assures us that His presence in our hearts will ward off any evil effects of the planets and other forces impacting our lives. It also assures us that the contemplation of His Divine form will enrich our lives with goodness that prevails all the time.

The book is available at https://linktr.ee/kolarupathigam

I'm happy to announce that my Tamil book 'கோளறு பதிகம் - விளக்கவுரை' (Kōḷaṟu Pathigam - Vilakkavurai)  is currently an A...
02/16/2025

I'm happy to announce that my Tamil book 'கோளறு பதிகம் - விளக்கவுரை' (Kōḷaṟu Pathigam - Vilakkavurai) is currently an Amazon Canada bestseller at 4th position in Hinduism! A huge thank you to everyone who has picked up a copy! The book is a commentary on Kōḷaṟu Pathigam, a set of hymns composed in praise of Lord Siva by the Poet-Saint Thirugnāṉa Sambandar.

Sambandar’s Kōḷaṟu Pathigam is much more than a Prayer or Praise. It is an assurance of Lord Siva's blessing which is always there, waiting for us to open up our hearts for Him. It assures us that His presence in our hearts will ward off any evil effects of the planets and other forces impacting our lives. It also assures us that the contemplation of His Divine form will enrich our lives with goodness that prevails all the time.

The book is available at https://linktr.ee/kolarupathigam

இலந்தையார் திருத்தசாங்கம் 🪷🪷🪷🪷🪷படம் 1: கவிவேழம் இலந்தை சு. இராமசாமி ஐயா அவர்களின் தமிழ்த்தொண்டைப் போற்றி அடியேன் எழுதிய ...
02/12/2025

இலந்தையார் திருத்தசாங்கம்
🪷🪷🪷🪷🪷
படம் 1: கவிவேழம் இலந்தை சு. இராமசாமி ஐயா அவர்களின் தமிழ்த்தொண்டைப் போற்றி அடியேன் எழுதிய திருத்தசாங்கம்

படம் 2: இத்தசாங்கத்தைப் பாராட்டிய இலந்தையாரின் அன்பான பாராட்டுப் பதிவு

🙏

அன்புடன்
இமயவரம்பன்

ஆதி பகவன் அருகன் அடி பரவு நெஞ்சே - சமண சமயக் கடவுள் வாழ்த்து(அறுசீர் ஆசிரிய விருத்தம்)🪷 🪷 🪷கார்மிகு வினையை வெல்லும்… கதி...
02/04/2025

ஆதி பகவன் அருகன் அடி பரவு நெஞ்சே - சமண சமயக் கடவுள் வாழ்த்து
(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

🪷 🪷 🪷
கார்மிகு வினையை வெல்லும்
… கதிரொளிர் அசோகின் நீழல்
ஏர்மிகு குடைமூன் றின்கீழ்
… இலங்குமா சனத்தி ருந்தான்
பார்மிகும் அருளோன் ஆதி
… பகவன்வா லறிவன் தீதில்
சீர்மிகும் அருகன் செம்பொன்
… திருவடி பரவு நெஞ்சே!
🪷🪷🪷

சொற்பொருள்:
-------------
கார் மிகு வினை = அறியாமை என்னும் கறைமிகுந்த வினை;
அசோகின் நீழல் = அசோக மர நிழலில்
ஏர் மிகு = அழகு விளங்கும்;
குடை மூன்று = முக்குடைகள்;
இலங்குமா சனத்தி ருந்தான் = இலங்கும் ஆசனத்து இருந்தான் = (சிறந்து) விளங்கும் ஆசனத்தில் அமர்ந்தான்
பார் மிகும் = உலகில் நிறைந்து விளங்கும்;
வாலறிவன் = தூய அறிவுடையோன்;
பரவு = புகழ்வாய்

🙏🙏🙏
- இமயவரம்பன்

Address

Boston, MA

Website

https://linktr.ee/imayavaramban

Alerts

Be the first to know and let us send you an email when Imayavaramban posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Imayavaramban:

Share