Jaffnagate

Jaffnagate Convey true news to from all over the world and keep people updated with trending news.

அக்கரைப்பற்றில்  நேற்று காலையில் பனி மூட்டமாக   உள்ளது
07/03/2025

அக்கரைப்பற்றில் நேற்று காலையில் பனி மூட்டமாக உள்ளது

📷 செம்மணியின் இரண்டாம் கட்ட எட்டாம் நாள் அகழ்வு : இதுவரை 40 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
07/03/2025

📷 செம்மணியின் இரண்டாம் கட்ட எட்டாம் நாள் அகழ்வு : இதுவரை 40 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த கனடாவில் வசித்த இராஜரட்ணம் சுமதி (வயது 59) பெண்ணொருவர் வீதி விபத்...
07/03/2025

கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த கனடாவில் வசித்த இராஜரட்ணம் சுமதி (வயது 59) பெண்ணொருவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் சென்று கொடிகாமம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் , துவிச்சக்கர வண்டியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானார்.

விபத்தில் படுகாயமடைந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பெரும் சோகத்தை ஏற்படுத்திய இழப்புமுல்லைத்தீவில் கோயில் கேணியில் தவறி விழுந்து மாணவிகள் இருவர் உயிரிழப்பு.ஆழ்ந்த அனுதாபங்...
06/01/2025

பெரும் சோகத்தை ஏற்படுத்திய இழப்பு

முல்லைத்தீவில் கோயில் கேணியில் தவறி விழுந்து மாணவிகள் இருவர் உயிரிழப்பு.
ஆழ்ந்த அனுதாபங்கள்

குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் இன்றையதினம் (01.06.2025) படம் எடுக்க சென்ற இரு மாணவிகள் தவறி விழுந்த நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு மாணவிகளும். பூதன்வயல், மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்விகற்கும் வித்தியானந்த கல்லூரி மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

🔴வவுனியாவில் கோரவிபத்து: கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது.🔴கணவன் உய...
05/26/2025

🔴வவுனியாவில் கோரவிபத்து: கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது.
🔴கணவன் உயிரிழப்பு, மனைவி, மகன், மாமனார் படுகாயம்

05/15/2025

நாம் கடக்கும் ஒவ்வொரு நொடியும் அவதனமாக கடந்து செல்ல வேண்டும்.
அது வீதியாக இருந்தாலும் சரி வாழ்க்கையாக இருந்தாலும் சரி

யாழில் 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போன அம்மனின் சேலை.!யாழ்ப்பாணம் புங்குடுதீவு கண்ணகை அம்பாளுக்கு சாற்றிய சேலை 9 இலட்சம் ர...
05/14/2025

யாழில் 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போன அம்மனின் சேலை.!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு கண்ணகை அம்பாளுக்கு சாற்றிய சேலை 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்தில் தீர்த்த உற்சவமானது நேற்று முன்தினம்(12-05-2025) வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது அம்பாளின் சேலைகள் ஏலத்தில் விடப்பட்டன. இந்நிலையில் ஒரு சேலை ஒன்பது இலட்சம் ரூபாய் ஏலம் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

🔴💔வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு...!!!!????வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்...
03/04/2025

🔴💔வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு...!!!!????

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக் கொள்வது....?

வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,

நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள்.

திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்,

அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.

உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்,

ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது

இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??

துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..

நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:

"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,

ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும்,

இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும், இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ

ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,

இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,

இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இரும்புவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..

பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..

இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..

தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர்,

உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்....!!!!

#ஒரு #இந்த #இந்த

யாழ்ப்பாணத்துக்கும் திருச்சிக்கும் இடையிலான விமான சேவையை   (இண்டிகோ) எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது மதிய...
03/04/2025

யாழ்ப்பாணத்துக்கும் திருச்சிக்கும் இடையிலான விமான சேவையை (இண்டிகோ) எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது

மதியம் 12.55 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானம் 1.55 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடையும்

மீண்டும் மதியம் 2.55 மணிக்கு யாழ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு மாலை 3.50 மணிக்கு திருச்சி விமான நிலையம்சென்றடையும்.

📷 எல்லை தாண்டும் இந்திய இழுவை மடிகளை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ் தீவக மீனவ அமைப்புகள் இணைந்து யாழில் போராட்டம் : யாழ் இ...
02/27/2025

📷 எல்லை தாண்டும் இந்திய இழுவை மடிகளை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ் தீவக மீனவ அமைப்புகள் இணைந்து யாழில் போராட்டம் : யாழ் இந்தியத் துணைத் தூதரத்துக்கு முன்னால் கடும் பாதுகாப்பு

முகநூல் பாவிப்பவர்கள் அவதானம் இங்கிலாந்து அண்ரசனிடம்  29 இலட்சத்தை இழந்த யாழ் வாசி...முகநூலில் ஏற்பட்ட நட்பு நண்பர் பரிச...
02/27/2025

முகநூல் பாவிப்பவர்கள் அவதானம் இங்கிலாந்து அண்ரசனிடம் 29 இலட்சத்தை இழந்த யாழ் வாசி...

முகநூலில் ஏற்பட்ட நட்பு நண்பர் பரிசுத்தொகை ஒன்றை பெற்றிருப்பதாக தெரிவித்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருடம் சுமார் 29 இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டுள்ளது

குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கையில் பேஸ்புக்கில் மாக் என்பவருடன் நட்பு வேண்டுகோள் வந்தது அதன் மூலம் அவர் என்னுடன் நட்பாகினார்.

இவர் எனது வாட்ஸ் அப் இலக்கத்தை வாங்கி அதனூடாகவும் வாட்ஸ் அப்பில் என்னுடன் தொடர்பு கொண்டார். 2024 மே 31 ல் எனது முகவரியை கேட்டார்.

முதலில் நான் இவருக்கு முகவரியை வழங்கவில்லை. பின்னர் தனது பிறந்தநாளை என்னுடன் கொண்டாட இருப்பதாகவும் எனக்கு ஒரு பரிசுப்பொதி அனுப்ப இருப்பதாகவும் அதற்கு எனது முகவரி தேவை எனக் கேட்டார்.

இதனடிப்படையில் நான் எனது முகவரியை What's app ல் அனுப்பினேன்.

மே மாதம் 31 மாலையில் எனக்கு டெல்டா கொரியர் சேர்விஸ் எனும் நிறுவனத்தினூடாக பொதி அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஜுன் 1 ம் திகதி கொழும்பில் இருந்து தகவல் வரும் என தகவல் அனுப்பினார்.

பின்னர் கொழும்பு டெலிவரி ஏஜன்ட் என்று ஒருவர் மெசேஜ் அனுப்பினார். CLEARANCE FEE 95000/- அனுப்பும்படி கூறினார்.

இதற்கு நான் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறினேன். அப்போது முதலில் பொதி சம்மந்தமாக முதலில் கதைத்த மார்க் சிமித் என்பவர் எவ்வளவு பணம் இருக்கிறது என தொடர்பு கொண்டு கேட்டார்.

நான் பணம் இல்லை எனக் கூறினேன். பின்னர் 35000/- ரூபா வங்கிக்கு அனுப்ப சொல்லி வங்கி இலக்கத்தை தந்தனர் பின்னர் 40000 ரூபா போடும்படி சொன்னார்.

இதனடிப்படையில் 03/06/2024 ரூபாய் 40000 ஐ வங்கி கணக்கில் வைப்பிலிட்டேன்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிற்பதாகவும் பொதி ஸ்கான் பண்ணபடுவதாகவும் கூறினார்.

மேலும் பொறிக்குள் DOLLERS இருப்பதாகவும் அது ஒரு பெரிய தொகை என்றும் கூறி தான் அனுப்பும் வங்கிக்கணக்கு பணம் அனுப்பும் படியும் இல்லாவிடில் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டி வரும் எனவும் பயமுறுத்தினார்.

பின்னர் ரூபாய் 1 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவை வங்கியில் வைப்பிலிடச்சொன்னார். அடுத்த நாள் பொதிக்கு INSURANCE COVERAGE இல்லை அதற்கு ரூபா 48ஆயிரம் வைப்பிலிடச் சொன்னார்.

இவை அனைத்தையும் நான் இவர்கள் தந்த கணக்கிற்கு வைப்பிலிட்ட பின்னர் எனது பெயரில் பொதி வந்தால் பெரிய பிரச்சினை என்றார்கள்.

தை மாதம் 07 ம் திகதி மார்க் அண்டர்சன் தொடர்பு கொண்டார். அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

லண்டனில் இருந்து கொழும்பு வந்து வேலை செய்வதாக கூறினார். ரூபா இருபது லட்சம் வங்கியில் வைப்பிலிட்டால் 24 மணி நேரத்துக்குள் பொதியை வழங்குவதாக கூறினார்.

இதற்கு ஆதாரமாக தனது பாஸ்போர்ட் போட்டோவை அனுப்பி வைத்தார்.அதனை நம்பி அவர் சொன்ன வங்கி கணக்கிற்கு நான் இருந்து லட்சம் ரூபாவை வைப்பிலிட்டேன்.

பின்னர்.Airport delivery charge என கூறி ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் வைப்பிலிடச்சொன்னார் அதையும் வைப்பிலிட்டேன்.

தற்போது மேலும் ஒருவர் பொதியை தருவதாக கூறி மேலும் 30 லட்சம் ரூபாயினை கேட்டு மிரட்டுகின்றனர்

என்னை இந்த பொதி வருகிறது என கூறி இதுவரை 29 லட்சத்து இருபதாயிரம் ரூபாயினை மோசடி செய்து மேலும் என்னை பணம் தர சொல்லி மிரட்டுகின்றனர்.

என்னைத் தொடர்புகொண்ட இலக்கங்கள் மற்றும் வங்கியில் வைப்பிலிட்ட விபரங்கள் என அனைத்தும் என்னிடம் உள்ளது. எனவே மேற்படி மோசடி தொடர்பில் விசாரணை நடாத்தி இழந்த எனது பணத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

குறித்த விடையம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவித்துள்ள நிலையில் சகல ஆவணங்களுடனும் முறைப்பாடு வழங்குவதற்காக வருகை தருமாறு தெரிவித்ததாக தெரிவித்தார்

வியாழக்கிழமை 20/02/2025 மதியம் 12.00 மணிஎதிர்வரும் 23.02.2025 க்கு பின்னர் வங்கக்கடலில் உருவாகவுள்ள காற்றுச்சுழற்சியின் ...
02/20/2025

வியாழக்கிழமை 20/02/2025 மதியம் 12.00 மணி

எதிர்வரும் 23.02.2025 க்கு பின்னர் வங்கக்கடலில் உருவாகவுள்ள காற்றுச்சுழற்சியின் காரணமாக பெப்ருவரி 25 தொடக்கம் மார்ச் 02 வரை நாடு முழுவதும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக பெப்ருவரி 27, 28 மார்ச் 01 ஆகிய தேதிகளில் வடக்கு கிழக்கில் கனமழை பெய்யக் கூடும். இது இவ்வாண்டில் பெய்கின்ற இரண்டாவது கனமழையாக அமையும் என்று ECMWF தரவுகள் காட்டுகின்றன.

எனவே பெரும்போக விதைப்பினைத் தாமதமாக மேற்கொண்டு அறுவடைக்காகக் காத்திருப்போர் மற்றும் ஏனைய விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இவ்விடயத்தை கருத்தில் கொள்ளவும்.

(இயற்கை கணப்பொழுதில் மாறக்கூடியது)

-சுயாந்தன்.

Address

West

Alerts

Be the first to know and let us send you an email when Jaffnagate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jaffnagate:

Share

Category