Jaffnagate

Jaffnagate Convey true news to from all over the world and keep people updated with trending news.

*2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் இலங்கையில் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது*, இது *பில்லுகள் மற்றும் பரிமாற்ற சட்ட திருத...
08/21/2025

*2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் இலங்கையில் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது*, இது *பில்லுகள் மற்றும் பரிமாற்ற சட்ட திருத்தம் எண்.13* என அழைக்கப்படுகிறது. இந்த சட்டத்தின் கீழ், போதுமான நிதியில்லாமல் செக் வழங்குவது குற்றமாகக் கருதப்படுகிறது.

முக்கிய குற்றச்சாட்டுகள்:

- செக் வழங்கும் போது கணக்கில் போதுமான நிதி இல்லாதிருத்தல்
- அதிகரிக்கப்பட்ட ஓவர்டிராஃப்ட் வரம்பை மீறி செக் வழங்குதல்
- மூடப்பட்ட கணக்கிலிருந்து செக் வழங்குதல்
- நியாயமான காரணமின்றி செக் பணம் செலுத்துவதை நிறுத்துதல்

விதிக்கப்பட்ட தண்டனைகள்:

- செக் தொகைக்கு சமமான அபராதம்
- அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை
- அல்லது மேற்சொன்ன இரண்டும்

இந்த சட்டம், வணிக சமூகத்தை பாதுகாக்கவும், நிதி ஒழுங்கை மேம்படுத்தவும், வணிக துறையில் நம்பிக்கையை உறுதிப்படுத்தவும் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின் கீழ், செக் வழங்கும் போது கணக்கில் போதுமான நிதி இருப்பதை உறுதிப்படுத்துவது அவசியமாகிறது.

*குறிப்பு:* இந்த சட்டத்தின் முழுமையான விவரங்களை அறிய, இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ வர்த்தமானி வெளியீடுகளைப் பார்க்கலாம்.
https://mawratanews.lk/news/parliament-to-enforce-jail-terms-and-fines-for-bouncing-cheques-under-new-legal-amendment/

💥காசோலை மோசடிகாரர்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி | இரண்டு வருட பிணையில்லா சிறை தண்டணையும்,அபராதமும் விதிக்கும் சட்டத்தி...
07/27/2025

💥காசோலை மோசடிகாரர்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி | இரண்டு வருட பிணையில்லா சிறை தண்டணையும்,அபராதமும் விதிக்கும் சட்டத்திருத்தம் இலங்கை பாராளுமன்றத்தில் இயற்ற அரசு முடிவு!

அக்கரைப்பற்றில்  நேற்று காலையில் பனி மூட்டமாக   உள்ளது
07/03/2025

அக்கரைப்பற்றில் நேற்று காலையில் பனி மூட்டமாக உள்ளது

📷 செம்மணியின் இரண்டாம் கட்ட எட்டாம் நாள் அகழ்வு : இதுவரை 40 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
07/03/2025

📷 செம்மணியின் இரண்டாம் கட்ட எட்டாம் நாள் அகழ்வு : இதுவரை 40 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த கனடாவில் வசித்த இராஜரட்ணம் சுமதி (வயது 59) பெண்ணொருவர் வீதி விபத்...
07/03/2025

கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த கனடாவில் வசித்த இராஜரட்ணம் சுமதி (வயது 59) பெண்ணொருவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் சென்று கொடிகாமம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் , துவிச்சக்கர வண்டியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானார்.

விபத்தில் படுகாயமடைந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பெரும் சோகத்தை ஏற்படுத்திய இழப்புமுல்லைத்தீவில் கோயில் கேணியில் தவறி விழுந்து மாணவிகள் இருவர் உயிரிழப்பு.ஆழ்ந்த அனுதாபங்...
06/01/2025

பெரும் சோகத்தை ஏற்படுத்திய இழப்பு

முல்லைத்தீவில் கோயில் கேணியில் தவறி விழுந்து மாணவிகள் இருவர் உயிரிழப்பு.
ஆழ்ந்த அனுதாபங்கள்

குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் இன்றையதினம் (01.06.2025) படம் எடுக்க சென்ற இரு மாணவிகள் தவறி விழுந்த நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு மாணவிகளும். பூதன்வயல், மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்விகற்கும் வித்தியானந்த கல்லூரி மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

🔴வவுனியாவில் கோரவிபத்து: கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது.🔴கணவன் உய...
05/26/2025

🔴வவுனியாவில் கோரவிபத்து: கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது.
🔴கணவன் உயிரிழப்பு, மனைவி, மகன், மாமனார் படுகாயம்

05/15/2025

நாம் கடக்கும் ஒவ்வொரு நொடியும் அவதனமாக கடந்து செல்ல வேண்டும்.
அது வீதியாக இருந்தாலும் சரி வாழ்க்கையாக இருந்தாலும் சரி

யாழில் 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போன அம்மனின் சேலை.!யாழ்ப்பாணம் புங்குடுதீவு கண்ணகை அம்பாளுக்கு சாற்றிய சேலை 9 இலட்சம் ர...
05/14/2025

யாழில் 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போன அம்மனின் சேலை.!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு கண்ணகை அம்பாளுக்கு சாற்றிய சேலை 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்தில் தீர்த்த உற்சவமானது நேற்று முன்தினம்(12-05-2025) வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது அம்பாளின் சேலைகள் ஏலத்தில் விடப்பட்டன. இந்நிலையில் ஒரு சேலை ஒன்பது இலட்சம் ரூபாய் ஏலம் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

🔴💔வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு...!!!!????வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்...
03/04/2025

🔴💔வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு...!!!!????

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக் கொள்வது....?

வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,

நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள்.

திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்,

அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.

உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்,

ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது

இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??

துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..

நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:

"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,

ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும்,

இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும், இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ

ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,

இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,

இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இரும்புவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..

பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..

இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..

தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர்,

உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்....!!!!

#ஒரு #இந்த #இந்த

யாழ்ப்பாணத்துக்கும் திருச்சிக்கும் இடையிலான விமான சேவையை   (இண்டிகோ) எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது மதிய...
03/04/2025

யாழ்ப்பாணத்துக்கும் திருச்சிக்கும் இடையிலான விமான சேவையை (இண்டிகோ) எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது

மதியம் 12.55 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானம் 1.55 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடையும்

மீண்டும் மதியம் 2.55 மணிக்கு யாழ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு மாலை 3.50 மணிக்கு திருச்சி விமான நிலையம்சென்றடையும்.

📷 எல்லை தாண்டும் இந்திய இழுவை மடிகளை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ் தீவக மீனவ அமைப்புகள் இணைந்து யாழில் போராட்டம் : யாழ் இ...
02/27/2025

📷 எல்லை தாண்டும் இந்திய இழுவை மடிகளை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ் தீவக மீனவ அமைப்புகள் இணைந்து யாழில் போராட்டம் : யாழ் இந்தியத் துணைத் தூதரத்துக்கு முன்னால் கடும் பாதுகாப்பு

Address

West

Alerts

Be the first to know and let us send you an email when Jaffnagate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jaffnagate:

Share

Category