
21/08/2025
ஏறத்தாழ 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்னெல்லாம் கர்நாடக மாநிலத்தில் மைசூரில் இருந்து தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திற்கு அன்றாடம் வந்து செல்கின்ற இந்த மைசூர் பேருந்தில் Mysore Biscuit "மைசூர் பிஸ்கட்" பாக்கெட்டுகளை வாங்கி வைத்துக் கொண்டு வருவார்கள்.
ஈரோடு-மைசூர் நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்று 20 ரூபாய் நோட்டைக் காட்டி கையசைத்தோமென்றால், பேருந்தை நிறுத்தி பணத்தைப் பெற்றுக்கொண்டு மைசூர் பிஸ்கட் பாக்கெட்டுகளை கொடுப்பார்களாம்.
பாருங்கள் இது போன்ற நிகழ்வுகள் கதைகளாகக் கூட எங்குமே பதிவு செய்யப்படாமல் அப்படியே மறைந்து விடுகிறது.
சத்தியமங்கலம், அரசூர், கோபிச்செட்டிப்பாளையம் போன்ற பகுதிகளில் நாள்தோறும் நடைபெற்றுக்கொண்டிருந்த ஒன்றுதான். ஆனால் தற்போது இது நின்றுவிட்டது.